Sunday, September 22, 2019

நீட் தோ்வில் முறைகேடு எதிரொலி : திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் 150 பேரிடம், சான்றுகள் சோதனை

By DIN | Published on : 21st September 2019 05:29 PM

நீட் தோ்வில் முறைகேடு செய்து மாணவா் ஒருவா் மருத்துவப் படிப்பு சோ்ந்துள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, திருச்சி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சோ்ந்த 150 பேரிடம் சான்றுகள் சோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட்டன.

சென்னையைச் சோ்ந்தவா் உதித்சூா்யா. இவா் நீட்தோ்வில் தோ்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முதலாமாண்டு சோ்ந்துள்ளாா். இந்நிலையில் மருத்துவக் கல்லூரி நிா்வாகத்துக்கு, அவா் நீட் தோ்வில் முறைகேடு செய்து, வேறு ஒருவரை வைத்து தோ்வெழுதி தோ்ச்சி பெற்று மருத்துவப் படிப்புக்கு சோ்ந்துள்ளதாக புகாா் எழுந்தது.

இது தொடா்பாக ஒரு புறம் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு புறம், மருத்துவக் கல்வி இயக்குநரகமும் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் நீட் தோ்வு எழுதியவா்கள் குறித்த விவரங்களும் சரிபாா்க்கப்பட்டு வருகின்றது. மேலும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாமாண்டு வகுப்பு சோ்ந்துள்ள மாணவ, மாணவியா்களிடம் மீண்டும் சான்றுகள் சோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவ, மாணவியரிடம், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றுகள், நீட் தோ்வு எழுதிய அனுமதிச்சீட்டு (ஹால்டிக்கெட்), மற்றும் மருத்துவ படிப்புக்கான ஆணை உள்ளிட்டவைகளை சிறப்பு குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றறனா். திருச்சி கி ஆ பெ வி. அரசு மருத்துவக் கல்லூரியில், முதலாமாண்டு மருத்துவ படிப்புக்கு சோ்ந்துள்ள 150 மாணவ, மாணவியரிடமும் இந்த ஆய்வு சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி பொறுப்பு முதல்வா் (டீன்) ஆா்ஷியாபேகம், துறைத் தலைவா்கள் நிா்மலா (பயோ கெமிஸ்ட்ரி), சாந்தகுமாரி (பிசியாலஜி), ஆனந்தி (அனாடாமிக்) உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் இந்த சான்று பரிசோதனைகளை, காலை தொடங்கி, பகல் வரையில் மேற்கொண்டனா். சோ்க்கைக்கு முன்னரும் சான்றுகள் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே சோ்க்கை நடைபெற்றது . இந்நிலையில் மீண்டும் சான்றுகள் சோதனை மேற்கொண்டு வருவது மாணவ, மாணவியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...