Sunday, September 29, 2019

ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள் 'நீட்' மோசடி புரோக்கரிடம் சிக்கிய கதை

Added : செப் 28, 2019 23:34


தேனி:மருத்துவக்கல்லுாரிகளில் சேர மாணவர்களின் பெற்றோர் மோசடியான புரோக்கரிடம் சிக்கியது எப்படி என தகவல் வெளியாகி உள்ளது.'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட புகாரில் சிக்கிய மாணவர்கள் உதித் சூர்யா, பிரவின், ராகுல், அபிராமி, இர்பான் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை பிரிஸ்ட் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தனர். இரண்டாம் ஆண்டு செல்ல இருந்த நிலையில் இக்கல்லுாரிக்கு அரசு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் வெளியேறினர்.ஒரே கல்லுாரியில் இவர்கள் படித்ததாலும், அனுமதி ரத்தான பிரச்னையாலும் இவர்களின் தந்தையர் நண்பர்களாகினர். ஒரு மாணவரின் தந்தையை புரோக்கர் ஒருவர் நாடியுள்ளார். இவர் தனக்கு செல்வாக்கு உள்ளதாகவும், பணம் கொடுத்தால் மருத்துவக்கல்லுாரியில் 'சீட்' வாங்கி தருவதாகவும் கூறினார்.இதை நம்பி அனைவரும் முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிந்துள்ளது.

No comments:

Post a Comment

With 15k MBBS seats, K’taka now leads medical edu race

With 15k MBBS seats, K’taka now leads medical edu race  6 Govt Colleges File Appeals Seeking More  Sruthy Susan Ullas & Srinivasa M | TN...