Monday, January 20, 2020

சென்னை புத்தக காட்சி நாளையுடன் நிறைவடைகிறது: இதுவரை 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்



சென்னை

பபாசியின் புத்தகக் காட்சியை இதுவரை 10 லட்சம் பேர் வரை பார்வையிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 43-வது புத்தக காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 2 கோடி புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தக காட்சியை பார்வையிட தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

நடப்பாண்டில் குழந்தைகளுக்கான சிறுகதைகள், சரித்திர நாவல்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நூல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் புத்தக காட்சி நாளை (ஜனவரி 21) முடிவடைய உள்ளது. இதுவரை 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இன்னும் 2 நாட்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மேலும், புத்தக விற்பனையும் சுமார் ரூ.15 கோடியை தாண்டும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...