Friday, March 27, 2020

முடி திருத்துவோர் அரசுக்கு கோரிக்கை

Added : மார் 26, 2020 21:50

சென்னை :'அடுத்தவர்களை நம்பி வாழும், எங்களின் வாழ்வாதாரத்தை காத்திட, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்' என, தமிழ்நாடு முடி திருத்தும் அழகு கலை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, முதல்வருக்கு அச்சங்கம் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழகத்தில் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்கள், அடுத்தவர்களை நம்பி வாழ்பவர்கள். மக்களோடு இணைந்து பணியாற்றும், அவர்களது தொழில், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை, கடை வாடகை பிரச்னையோடு, அன்றாடம் தொழில் செய்தால் தான் வருமானம் வரும். தற்போது, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால், வருமானம் இல்லாமல் தவிக்கிறோம். எனவே, முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட, நல உதவி திட்டத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

மறதியும் தேவைதான்!

மறதியும் தேவைதான்!  நிவாற்றல் மிகவும் தேவைதான்; ஆனால், நிம்மதியான வாழ்க்கைக்கு மறதியும் தேவைதான் என்பதைப் பற்றி... மறதியும் தேவைதான் முனைவர...