Sunday, March 1, 2020

மின் சிக்கனம் அவசியம் வெயிலால் கட்டணம் எகிறும்

Added : பிப் 29, 2020 23:52

வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வீடுகளில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வில்லை எனில், அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும்.

தமிழக மின் வாரியம், 2 கோடி வீடுகளுக்கு, 100 யூனிட் இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. அதற்கு மேல் மின்சாரம் சென்றால், முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இலவசம் மற்றும் மானிய மின்சாரத்திற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்கு கிறது. கோடை காலத்தில், வீடுகளில் வழக்கத்தை விட, மின் பயன்பாடு அதிகம் இருக்கும். மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 'ஸ்டேடிக்' என்ற, மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதில், முந்தைய மீட்டர்கள் போல இல்லாமல், மின் பயன்பாடு துல்லியமாக பதிவாகிறது. உதாரணமாக, 'சுவிட்ச் ஆன்' செய்து விட்டு, 'டிவி'யை இயக்கவில்லை என்றாலும், அதற்கான மின் பயன்பாடு, மீட்டரில் பதிவாகும்.மேலும், மின் ஊழியர்களும், குறித்த காலத்தில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க வருவதில்லை. இதனால், வீடுகளில் மின்சாரத்தை சிக்கனமாகவும், கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக, அதிக மின் கட்டணத்தில் இருந்து தப்பிக்கலாம். இல்லையெனில், வழக்கத்தை விட, மின் கட்டணம் அதிகம் வந்து விட்டதாக கூறி, மின் வாரிய அலுவலகங்களுக்கு அலைய வேண்டி இருக்கும். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024