Sunday, March 1, 2020

தர்பூசணி விளைச்சல் அமோகம்: கிலோ ரூ. 10 க்கு விற்பனை

Added : பிப் 29, 2020 23:40

சென்னை:தமிழகத்தில் தர்பூசணி பழங்களின் விளைச்சல் அதி கரித்துள்ளதால், கிலோ, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், தர் பூசணி பழங்கள் பயிரிடப் படுகின்றன. முன்னர் கோடைக்காலத்தில் மட்டுமே கிடைத்து வந்த தர்பூசணி, தற்போது, ஆண்டு முழுவதும் விளைகிறது. கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், தர்பூசணி விளைச்சல் களைக்கட்ட துவங்கியுள்ளது. அங்கு அறுவடை செய்யப்பட்டும் தர்பூசணி பழங்கள், லாரிகள், டிராக்டர் கள் வாயிலாக, சென்னை கோயம்பேடு உள்பட, மாநிலம் முழுவதும் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு வருகின்றன. விவசாயிகள், சாலை ஓரங்களில் வாகனங்களிலும், பிளாட்பாரங்களிலும் வைத்து, தர்பூசணி பழங்களை விற்பனை செய்ய துவங்கி உள்ளனர். சென்னையில், கிலோ தர்பூசணி, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, பெரிய அளவிலான ஒரு பழம், 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்று, சுவைக்க துவங்கி உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024