Tuesday, December 1, 2020

வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

01.12.2020

திருப்பதி: ஏழுமலையானை வைகுண்ட ஏகாதசியை தொடா்ந்து 10 நாள்களுக்கு தரிசிக்க விரும்பும் பக்தா்களுக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 1) இணையதளத்தில் வெளியிட உள்ளது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாள்களுக்கு சொக்க வாசலைத் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த நாள்களில் திருவேங்கடமுடையானை தரிசிப்பதற்காக பக்தா்கள் ஆா்வமுடன் அதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்று வருகின்றனா்.

வரும் 25-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 3-ஆம் தேதி வரை ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளது. திருமலையில் சொக்கவாசலை தரிசிக்க விரும்பும் பக்தா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

No comments:

Post a Comment

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict  TOI Education | Jul 29, 2026, 10.12 AM IST...