Saturday, October 7, 2017


தீருமா தெரு விலங்குகள் பிரச்னை?

By சுப. உதயகுமாரன் | Published on : 07th October 2017 01:07 AM



அன்பும், அரவணைப்புமின்றி ஏராளமான நாய்கள், பூனைகள், பன்றிகள், கழுதைகள், மாடுகள் போன்ற விலங்குகள் தெரு விலங்குகளாக அலைந்து திரிகின்றன. தேவையில்லா விலங்குகளை கொண்டுபோய் ஒப்படைப்பதற்கு சரணாலயங்கள் ஏதும் இங்கே இல்லை. 

கைவிடப்பட்ட ஆதரவற்ற விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் வாய்ப்பும், வசதியும், பொருளாதார பலமும், மனப்பக்குவமும் நம்மில் பலருக்கும் இல்லை என்பதும் உண்மை.

இதன் விளைவாக, தெரு விலங்குகள் பெரும் பிரச்னையாக மாறிவிட்டிருக்கின்றன. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், சென்னையிலிருந்து பேருந்தில் வந்திறங்கி அதிகாலை நேரத்தில் திருநெல்வேலியில் வசித்த என் தங்கையின் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். 

சற்று நேரத்தில் என் பின்னால் சுமார் இருபது தெரு நாய்கள் பலமாக குரைத்தவாறே பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.
ஓடித் தப்பிக்க முயற்சி செய்தால் பிரச்னை விபரீதமாகிவிடும் என்பது எனக்குத் தெரியும். இமையமலைப் பயணம் ஒன்றின்போது தன்னைத் துரத்தியக் குரங்குகளை எதிர்த்துநின்று விரட்டிய சுவாமி விவேகானந்தரின் அனுபவம்தான் என் நினைவுக்கு வந்தது. 

ஆனால் நான் சுவாமி விவேகானந்தர் அல்ல; அவரது துணிச்சலும், சாதுரியமும் எனக்கு இருக்கவில்லை. நான் ஓடவுமில்லை, நிற்கவுமில்லை, கையிலிருந்த பையை மட்டும் கால்களைச் சுற்றி சுழற்றியவாறு எந்தவொரு நான்குகால் தோழரும் வந்து என் கால்களைக் கவ்விவிடாதபடிக் காத்துக்கொண்டு மெதுவாக நடந்து சென்று தப்பித்தேன்.

என்னைக் கலவரமடையச் செய்த அந்த அனுபவம், இப்போதும் எந்த ஊருக்குச் சென்றாலும் தெரு விலங்குப் பிரச்னையை நினைவூட்டுகிறது.
சில மாதங்களுக்கு முன்னால் மேதா பட்கர், கவிதா கிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்களோடு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகருக்குச் சென்றபோது, ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் அந்தக் கடும் குளிரிலும் ஆங்காங்கே அலைந்து திரிவதையும், படுத்துக்கிடப்பதையும் கண்ணுற்றேன்.
இது ஒரு பெரும் பிரச்னையாக இருப்பதாகவும், உள்ளாட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உள்ளூர் மக்கள் குறைபட்டுக் கொண்டனர்.

தெரு நாய்களைவிட, தெருப் பூனைகளைவிட பெரும் பிரச்னையாக இருப்பவை பன்றிகளும், மாடுகளும்தான். பன்றிகள் பொது சுகாதாரத்துக்குப் பெரும் கேடு விளைவித்து, நோய்களைப் பரப்புகின்றன.
பன்றிகளை வளர்ப்பவர்கள் ஒரு வளாகத்தில் விட்டு, உரிய உணவு கொடுத்து முறைப்படி வளர்ப்பதற்கு பதிலாக, பொது இடங்களில், சாக்கடை பகுதிகளில், நீர்நிலை ஓரங்களில் மேயவிட்டு, எந்தச் செலவுமில்லாமல் வளர்த்தெடுக்கிறார்கள். 

அந்தப் பன்றிகளுக்கும் ஓரளவு எடை கூடியதும் அவற்றை பெரும் லாபத்துக்கு விற்றுவிடுகிறார்கள். மிகக் குறைந்த முதலீட்டில், பொதுமக்கள் செலவில், பெரும் லாபம் சம்பாதிக்கும் தொழிலாக இந்த பன்றி வளர்ப்புத் தொழில் இருக்கிறது.

இதுபோலவே நாடெங்கும் மாடுகளும் வளர்க்கப்படுகின்றன. மாடுகளை விலைக்கு வாங்கி நகர்ப்புறங்களில், சாலைகளில் விட்டு விடுகிறார்கள். அவை செடி கொடிகள், குப்பைக் கூளங்கள், சுவரொட்டிகள் என கிடைப்பதைத் தின்று, சாக்கடைத் தண்ணீரைப் பருகி, சாலைகளில் படுத்துறங்கி வாழ்கின்றன. 

இவற்றின் உரிமையாளர்கள் பாலைக் கறந்தெடுக்கும் வேலையையும், தெருவில் திரியும் மாடுகளை யாரும் ஓட்டிச் செல்லாமல் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்கும் வேலையையும் மட்டுமே செய்கிறார்கள்.
பழைய காலங்களில் தங்கள் வயல்களில் இறங்கி மேய்ந்து பயிர்களை பாழ்படுத்தும் தெரு மாடுகளைப் பிடித்து வயலுக்கு சொந்தக்காரர்கள் உள்ளாட்சி அமைப்புகள் நடத்திய 'பவுண்டு'களில் கட்டிப்போட்டு விடுவார்கள். மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை பல இடங்களிலும் தேடுவார்கள். 

இறுதியில் அவை பவுண்டில் அடைக்கப்பட்டிருப்பதை அறிந்து அங்கு சென்று உரிய தண்டனைத் தொகையைக் கட்டி மாடுகளை மீட்டுச் செல்வார்கள். இப்போது அந்த அமைப்பே இல்லை. தூத்துக்குடியிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி கிழக்குக் கடற்கரை சாலையில் பயணம் செய்தால் ஆயிரக்கணக்கான தெருமாடுகளை நாம் பார்க்க முடிகிறது.

இந்தத் தெரு விலங்குகளால் பெரும் அவலங்கள் நிகழ்கின்றன. பன்றிகள், மாடுகளால் பயங்கரமான சாலை விபத்துகள், உயிரிழப்புகள் நடக்கின்றன. தெரு நாய்கள் கடித்து சிறு குழந்தைகள் பலியாவது, வெறிநோய் பரவுவது என பெரும் பிரச்னைகள் எழுகின்றன. 

பாதிப்புகளுக்குள்ளாகும் மக்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிப்பது, அவற்றுக்கான மருந்துகள், பொருட்கள் வாங்குவது என ஏராளமானப் பொருட்செலவும் அரசுக்கு உருவாகிறது.

இந்தத் தெரு விலங்குப் பிரச்னையை எப்படி மேலாண்மை செய்வது? பொது இடங்களில் மாடுகள், பன்றிகள், கழுதைகள் திரியும் வழக்கத்தை முற்றிலுமாகத் தடை செய்தாக வேண்டும். 

ஒரு காலக்கெடு விதித்து அதற்குள் இந்த விலங்குகளை அப்புறப்படுத்தக் கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகும் பொது இடங்களில் மாடுகள், பன்றிகள், கழுதைகள் நடமாடிக் கொண்டிருந்தால், அவற்றை வளர்ப்பவர்களுக்கு பெருந்தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். மேலும், அந்த விலங்குகளை பறிமுதல் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விட வேண்டும்.

நமது நாட்டில் எலிகள், பெருச்சாளிகள் அதிகமான எண்ணிக்கையில் வாழ்வதால், இவற்றை கட்டுக்குள் வைத்திருக்க தெருப் பூனைகள் ஓரளவு உதவுகின்றன. பூனைக்கடி, வெறிநோய் போன்ற பிரச்னைகள் இருந்தாலும், தெரு நாய்கள் போன்ற பெரும் நெருக்கடி பூனைகளால் எழுவதில்லை.
தெரு நாய்களை எப்படிக் கையாள்வது என்பதுதான் ஒரு பெரும் தேசியப் பிரச்னையாக முகிழ்த்து நிற்கிறது. தெரு நாய்களைப் பொருத்தவரை, நமக்கு மூன்று தெரிவுகள் உள்ளன. ஒன்று, சரணாலயங்கள் அமைத்து அவற்றைப் பராமரிப்பது. 

உலகம் முழுவதும் ஏறத்தாழ 50 கோடி நாய்கள் வாழ்கின்றன என்றும், அவற்றுள் 80 விழுக்காடு தெரு நாய்களாக அலைந்து திரிகின்றன என்றும் ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. 

அப்படியானால், இந்தியா முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான நாய்களை எப்படி சரணாலயங்களில் வைத்துப் பாதுகாக்க முடியும்? அவற்றுக்குத் தேவையான இடம், உணவு, மருந்து, மருத்துவர்கள், பராமரிப்பு போன்றவற்றை எப்படி உருவாக்க முடியும்? இது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று.

இரண்டாவது தெரிவு, தெரு நாய்களைக் கொன்றொழிப்பது. முன்பெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களை கண்ணிவைத்துப் பிடித்து, வண்டிகளில் ஏற்றிச்சென்று, அடித்துக் கொல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. 

அது முற்றிலும் தவறான, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கொடூரச் செயல். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்லவே? நாய்களுக்கும் பிற விலங்குகளுக்கும் வாழும் உரிமை இருக்கிறதே?

ஆடு, மாடுகளை உணவாகக் கொள்வதுபோல, நாய்களைப் பிடித்து வடகிழக்கு மாநிலங்களுக்கு உணவாக அனுப்பலாம் என்று சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். சைவ உணவுக்காரர்களான என் போன்றோருக்கு அதுவும் ஏற்புடையது அல்ல. 

மிருகங்களை கடவுள்களின் வாகனங்களாகவும், தெய்வங்களாகவும் வழிபடுகிறவர்கள் பரவலான மிருகக் கொலையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மூன்றாவது தெரிவு, தெரு நாய்களுக்கு இனவிருத்திக் கட்டுப்பாடு சிகிச்சை அளித்து, வெறிநோய் தடுப்பூசி போட்டு அவற்றை அப்படியே தெருக்களில் மீண்டும் விட்டுவிடுவது. 

இந்தத் தெரிவு தெருநாய் பிரச்னையை உடனடியாகத் தீர்த்துவிடாது என்றாலும், அதன் வீரியத்தைக் கொஞ்சம் தணித்து, நாளடைவில் பிரச்னையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கும். இந்தத் தீர்வுதான் இப்போதைக்கு சரியானதும், சட்டரீதியானதுமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

தெரு விலங்குகளை சாதாரண மக்கள் தத்தெடுத்து வளர்ப்பதற்கு நாட்டின் பொருளாதாரம் வலுவானதாக இருக்க வேண்டும். தனக்கேச் சோறு இல்லாத ஒரு குடும்பம், தெரு விலங்குகளை தத்தெடுக்க முடியாது. 

இன்னும் ஐந்து ஆண்டு காலத்தில் தெரு விலங்குகளே இல்லாத இந்தியாவை உருவாக்க, மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
அரசுககள் மட்டுமல்லாது, பொதுச் சமூகம், தொண்டு நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.



Four persons get bail in medical college graft case
New Delhi, Oct 6 An alleged hawala operator and three others were today granted bail by a Delhi court in connection with a medical college corruption case.

The court gave the relief to alleged hawala operator Ram Dev Saraswat, middleman Biswanath Aggarwala, Lucknow-based medical college chairman B P Yadav and his son Palash Yadav, who were arrested along with former Chhattisgarh High Court judge Ishrat Masroor Quddusi.

The four accused were grated bail on a personal bond of Rs one lakh each with a surety of the like amount.

Quddusi, who has also served as a judge in Orissa High Court, was granted bail on September 27 by the court which observed that he had deep roots in society.

The case lodged by the CBI alleged that the accused tried to settle a matter relating to Prasad Institute of Medical Sciences, Lucknow which was debarred from admitting new students due to sub-standard facilities.

While allowing their bail pleas, Special CBI Judge Manoj Jain directed all of them to surrender their passports within three days and not come in contact with any prosecution witnesses directly or indirectly.

It also directed them to join the investigation as and when required.

Seeking the relief for Saraswat, his counsel Vijay Aggarwal claimed that he has nothing to do with the conspiracy and has already spent over two weeks in custody.

B P Yadav and Palash, through their counsel S K Sharma, also sought the relief on the grounds of parity and contended that they were victims of circumstances.

Prasad Institute of Medical Sciences is one of the 46 colleges debarred by the Medical Council of India (MCI).

The court had earlier granted interim bail to Bhawana Pandey, the lone woman accused in the case, for treatment of her four-year-old son who is suffering from autism.

While granting bail to Quddusi, the court had considered that he had an unblemished track record as a high court judge for 17 years and there was no question of his non-cooperation with the probe agency.

The CBI had opposed the bail pleas on the ground that they might tamper with evidence and influence important witnesses in the case.

According to the CBI, the arrests were made on September 20 after search operations at eight locations, including the residence of Quddusi in Greater Kailash area of South Delhi, as also in Bhubaneswar and Lucknow.

The CBI had alleged they were not cooperating in the probe and had to be quizzed regarding similar cases involving medical colleges debarred by the government from admitting students due to sub-standard facilities.

The probe agency has alleged that Quddusi had obtained an instalment of gratification from B P Yadav and it needed to investigate how it was paid.

It has alleged that Rs 1.86 crore were recovered and "a larger nexus needed to be considered as 46 colleges were debarred".
நன்மை தரும் நவோதயா

By ம. வெங்கடேசன் | Published on : 07th October 2017 01:06 AM |

நகர்ப்புற, வசதிபடைத்த மாணவர்களுக்கு எப்படித் தரமான கல்வி கிடைக்கிறதோ அதே தரமான, நவீன கல்வி ஏழை கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில் 1986-இல் ஆரம்பிக்கப்பட்டதுதான் நவோதயா பள்ளி. 

இப்பள்ளியில் மட்டும்தான் 75 சதவீதம் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. மீதம் உள்ள 25 சதவீதம் நகர்ப்புற மாணவர்களுக்கு இடம் அளிக்கப்படுகிறது. தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டுமுறையில் தலித் மாணவர்கள் 15 சதவீதமும், பழங்குடியின மாணவர்கள் 7.5 சதவீதமும் சேர்க்கப்படுகிறார்கள். மூன்றில் ஒரு பங்கு மகளிர்க்கு இடம் அளிக்கப்படுகிறது. 

உதாரணத்திற்கு நவோதயா பள்ளியில் 6-ஆம் வகுப்பில் 2013-14இல் கிராமப்புற மாணவர்கள் 29,796 பேரும், நகர்ப்புற மாணவர்கள் 8,365 பேரும், 2014-15இல் கிராமப்புற மாணவர்கள் 30,841 பேரும், நகர்ப்புற மாணவர்கள் 8,641 பேரும், 2015-16இல் கிராமப்புற மாணவர்கள் 31,272 பேரும், நகர்ப்புற மாணவர்கள் 8,874 பேரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 

அதேபோல் நவோதயா பள்ளியில் கடந்த மூன்று வருடத்தில் 6-ஆம் வகுப்பில் சேர்ந்த தலித், பழங்குடியின மாணவர்களின் பட்டியலை எடுத்துக் கொள்வோம். 

2013-14இல் தலித் மாணவர்கள் 9,673 பேரும், பழங்குடியின மாணவர்கள் 7,346 பேரும், 2014-15இல் தலித் மாணவர்கள் 9,953 பேரும், பழங்குடியின மாணவர்கள் 7,829 பேரும், 2015-16இல் தலித் மாணவர்கள் 10,073 பேரும், பழங்குடியின மாணவர்கள் 8,079 பேரும் சேர்ந்திருக்கிறார்கள்.
அதாவது வருடத்திற்கு 18,000 தலித், பழங்குடியின மாணவர்கள் சேர்கின்றனர். தலித் அல்லாத மாணவர்கள் வருடத்திற்கு 22,000 பேர் சேர்கின்றனர். இதைக் கணக்கிடும்போது தலித், பழங்குடியின மாணவர்களே அதிக அளவில் சேர்கின்றனர். 

இதில் கிராமப்புற தலித், பழங்குடியின மாணவர்களும் அதிக அளவில் உள்ளனர் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
நவோதயா பள்ளி உண்டு உறைவிடப் பள்ளி. இங்கு 6-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புவரை சி.பி.எஸ்.இ. முறையில் பாடம் நடத்தப்படுகிறது. பள்ளிக்கட்டணத்தைப் பொருத்தவரை மிகமிக குறைவு. அதாவது தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கட்டணத்துக்கும் அதே பாடத்திட்டத்தை நடத்துகிற நவோதயா பள்ளிக் கட்டணத்துக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். 

ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் தலித், பழங்குடியின மாணவர்களுக்கும் பள்ளிக் கட்டணம் இலவசம். இவர்களுக்கு சத்துள்ள உணவு, பள்ளிச்சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், எழுதுபொருள்கள், புத்தகப்பை, படுக்கைவிரிப்பு, தலையணை, மருத்துவச் செலவு போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
பல்வேறு போட்டிகளில், நிகழ்வுகளில் கலந்துகொள்ள செல்லும் மாணவர்களின் பயணச் செலவாக ஒருநாளைக்கு ரூ.150 வழங்குகிறது இப்பள்ளி. கழிப்பறை உபயோகப் பொருட்கள் செலவுக்கு மட்டுமே ஒரு மாணவருக்கு வருடத்திற்கு ரூ.1,000 செலவழிக்கிறது என்றால் மாணவர்களின் சுகாதாரத்தில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது நவோதயா பள்ளி என்பதை புரிந்துகொள்ளலாம். 

தலித்துகளுக்கு, பழங்குடியின மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் சி.பி.எஸ்.இ. தரத்திலான கல்வியையும் சேர்த்து இவ்வளவையும் இலவசமாக தரத்துடன் வழங்கும் நவோதயா பள்ளியை எதற்காக எதிர்க்க வேண்டும்?
இந்தியா முழுவதும் 598 நவோதயா பள்ளிகள் இயங்கிவருகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நவோதயா பள்ளி எந்த மாவட்டத்தில் தலித் மற்றும் பழங்குடியினர் அதிகமாக இருக்கிறார்களோ அங்கு அவர்களைக் கருத்தில் கொண்டு கூடுதலாக மற்றொரு பள்ளியையும் ஆரம்பித்திருக்கிறது. 

இதுவரை கூடுதலாக தலித் மாணவர்களுக்கு 10 பள்ளியையும், பழங்குடியினருக்கு 10 பள்ளிகளையும் நவோதயா நடத்திவருகிறது.
நாடு முழுவதும் நவோதயா பள்ளிகளில் 2,47,153 மாணவர்கள் படித்துக்கொண்டு வருகிறார்கள். (31-3-2016 வரை) இதில் தலித் மாணவர்கள் 62,204 பேர் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது 25.77 சதவீதம். பழங்குடியின மாணவர்கள் 47,073 பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது 19.05 சதவீதம்.

தலித் மாணவர்களும் பழங்குடியின மாணவர்களும் மொத்தம் 1,09,277 பேர் படித்துகொண்டிருக்கிறார்கள். அதாவது 44.84% பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள் பள்ளிக் கட்டணம் இல்லாமல்.
அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு தலித்துகளுக்கு 15 சதவீதம்தான். பழங்குடியினருக்கு 7.5 சதவீதம்தான். ஆனால் நவோதயா அதையும்விட கூடுதலாக தலித்துகளுக்கு 25.77 சதவீதமும் பழங்குடியினருக்கு 19.05 சதவீதமும் கொடுத்திருக்கிறது. இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு பாராட்டியிருக்கிறது.
புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளிகளில் 30.94 சதவீதம் தலித்துகள் பயில்கிறார்கள். அகில இந்திய இட ஒதுக்கீடு தலித்துகளுக்கு 15 சதவீதம்தான். அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக தலித்துகள் படித்து வருகின்றனர்.
2016-இல் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.21. நவோதயா பள்ளியின் சதவீதம் 98.83. தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 83.05. நவோதயா பள்ளியின் சதவீதம் 96.70.
ஆக தலித், பழங்குடியின மாணவர்களும் பெரும்பான்மையாக பத்தாம், பனிரெண்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்பதை ஊகிக்க முடிகிறது. இது மற்ற பள்ளிகளைவிட அதிகம்.

நவோதயா பள்ளிகளில் தலித், பழங்குடியின மாணவர்களே அதிகம் பயன்பெறுகிறார்கள் என்பதற்கு இதைவிட ஆதாரம் இருக்க முடியாது.
அண்ணல் அம்பேத்கரின் நோக்கம் தலித், பழங்குடி மக்கள் கல்வி கற்று அரசியல் அதிகாரத்தைப் பெறவேண்டும் என்பதுதான். அதற்காகவே மக்கள் கல்விக் கழகம், சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் போன்றவற்றை நிறுவி நவீன கல்வியை அதிக அளவில் தலித், பழங்குடியின மாணவர்களுக்கு அளிக்கச் செய்தார். 

அண்ணல் அம்பேத்கரின் கனவைத்தான் நவோதயா பள்ளிகள் நிறைவேற்றி வருகின்றன.
வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோலைத் தூர வீசுபவரா நீங்கள்? அப்படியானால் இதைப் படியுங்கள்!

By கார்த்திகா வாசுதேவன் | Published on : 06th October 2017 04:33 PM




உலக மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். உலகில் வாழைப்பழம் உண்ணாத மக்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு உலகின் எந்த மூலையிலும் மலிவாகக் கிடைக்கக் கூடிய பழம் வாழைப்பழம். அதில் பல வகைகள் உண்டு. நாட்டுக்கு நாடு வாழைப்பழத்தின் வகைகள் மாறுபட்டாலும் அதனால் விளையும் பயன்கள் சற்றேறக்குறைய ஒன்றே! உலகின் மற்றெல்லா பழ வகைகளைக் காட்டிலும் கைக்குழந்தைகளுக்கும் கூட கொடுத்துப் பழக்கக் கூடிய அளவுக்கு எளிதில் செரிமானம் ஆகக் கூடியது வாழைப்பழம் ஒன்றே. எனவே தான் வாழைப்பழம் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அன்றாட அம்சங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

பொதுவாக வாழைப்பழம் சாப்பிடும் போது, நாம் வழக்கமாக என்ன செய்வோம்? பழைத்தை உரித்துச் சாப்பிட்டு விட்டு, தோலை தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவோம். இது காலம், காலமாக நாம் பின்பற்றி வரும் பழக்கம். ஆனால் பல ஆண்டுகளாகவே தாவரவியல் விஞ்ஞானிகளும் மக்களிடம் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று என்ன தெரியுமா? வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்களுக்கு சற்றும் குறையாது அதன் தோலிலும் கூட மனித உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்யத்துக்கும் தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. எனவே, வாழையைப் பொருத்தவரை அதன் தோலையும் சேர்த்து உண்பதே நல்லது. என்பது தான்.

உண்மையிலேயே தங்களது உடல் ஆரோக்யத்தில் அக்கறையுள்ள பல மனிதர்கள், வாழைப்பழம் உண்ணும் போது தோலையும் சேர்த்து உண்பதை நாம் எங்கேனும் அகஸ்மாத்தாய் கண்டிருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் நாம் அந்தச் செயலில் இருக்கும் நிஜத்தை ஆராயாமல், அப்படி உண்பவர்களை ‘இத்தனை கஞ்சத் தனமா? பாருங்கள் பழத்தோடு சேர்த்து தோலைக் கூட விடாமல் உண்கிறார்களே! என்று கேலி செய்து சிரித்திருப்போம். அது தவறு. அவர்கள் உண்பது தான் சரியான முறை என்கிறார்கள் விஞ்ஞானிகளும் உணவியல் வல்லுனர்களும்.

அடப்போங்க சார்... வாழைப்பழத்தோலை எல்லாம் உண்ண முடியாது என்பீர்களானால், தோலை உண்ணக்கூட வேண்டாம், அதில் அதைக் காட்டிலும் மேலான விளைவுகள் கிடைக்கக் கூடுமெனில் அதைத் தவிர்ப்பானேன்! அதையாவது முயற்சி செய்து பார்க்கலாமில்லையா?

அது எப்படி என்கிறீர்களா? இதோ இப்படித்தான்;

வாழைப்பழத்தோலை எதற்கெல்லாம் உபயோகப் படுத்தலாம் என்று நீங்களும் தெரிந்து கொண்டால் அது உங்களுக்கே எளிதாகப் புரியும்.

பற்களை வெண்மையாக்க...

வாழைப்பழத் தோலை சிறு துண்டுகளாக்கி குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்கு உங்கள் பற்களில் தேய்த்துக் கழுவி வாருங்கள். வெகு விரைவிலேயே உங்கள் பற்கள் முன்பை விட வெண்மையாக மாறுவதை நீங்களே கண்கூடாகக் காண முடியும். ஏனெனில் வாழைப்பழத்தோல் மிகச்சிறந்த ஒயிட்னராக (வெண்மையாக்கி) செயல்படக்கூடியது.

சருமத்திலுள்ள மருக்களைப் போக்க...

வாழைப்பழத் தோலை தொடர்ந்து சருமத்தில் மருக்கள், பருக்கள், சுருக்கங்கள் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் வெகு விரைவிலேயே அவையெல்லாம் மறைந்து சருமம் பளபளப்பாக மாறி விடும். அதோடு மட்டுமல்ல மீண்டும் அந்த இடங்களில் மருக்களோ, பருக்களோ, சுருக்கங்களோ வராமல் தடுக்கவும் வாழைப்பழத்தோல் உதவுகிறது.

வாழைப்பழம் எப்போதுமே மனித உடலின் உள்ளுறுப்புகளின் ஆரோக்யத்தில் மட்டுமல்ல சரும ஆரோக்யத்திலும் கூடப் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. சருமத்தில் பிரச்னை உள்ள இடங்களில் வாழைப்பழத்தோலைத் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து மென்மையாகக் கழுவித் துடைக்க வேண்டும். சீக்கிரமே சருமம் நாம் விரும்பும் வண்ணம் மாறத் தொடங்கும், அது வரை தொடர்ந்து மேற்சொன்ன வழிமுறையைத் தொடர வேண்டும். தினம் தோறும் அதைச் செய்து வரும் போது சீக்கிரமே நீங்கள் விரும்பும் பலனை அடையலாம்.

சருமம் வறண்டு போகாமல் தடுக்க...

அது மட்டுமல்ல; வாழைப்பழத்தோலை முட்டையின் மஞ்சள் கருவுடன் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் தேய்த்து 5 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால் முகச் சருமம் விரைவில் வறண்டு போகாமல் தவிர்க்கலாம்.

சொரியாசிஸ்க்கு சிறந்த நிவாரணம்...

வாழைப்பழத்தோலுக்கு ஈரத்தன்மையைத் தக்க வைத்துக்கொள்ளும் திறன் உண்டென்பதால் சொரியாசிஸ் உள்ளிட்ட சருமவியாதியால் அவதிப் படுபவர்களின் சிரமத்தைக் குறைக்க உதவுகிறது. வாழைப்பழத்தோலை அரைத்து சொரியாசிஸ் பாதிப்புள்ள சருமப் பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஆற விட்டால் அந்தப் பகுதியில் அரிப்பு நீங்கி நிவாரணம் கிடைக்கும்.

புற ஊதாக் கதிர்களிலிருந்து காக்க...

கண்களை புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காக்க வாழைப்பழத்தோல் உதவுகிறது. சூரிய ஒளியில் சில நிமிடங்கள் வைத்து எடுத்த வாழைப்பழத்தோலை எடுத்து கண் இமைகளின் மேல் தேய்த்தால் கண் புரை நோய் பாதிப்பைத் தவிர்க்கலாம் என்பது மருத்துவ ஆய்வில் முன்பே நிரூபணமானதாகக் கூறப்படுகிறது.

வாழைப்பழம் குறித்த சில முக்கிய டிப்ஸ்கள்...

5 நாள் பரோலில் சென்னை வந்தார் சசிகலா
By DIN | Published on : 07th October 2017 04:43 AM



பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் இருந்து காரில் சென்னை வந்தார் சசிகலா.

பெங்களூரு சிறையிலிருந்து 7 மாதங்களுக்கு பிறகு, 5 நாள்கள் பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா, வெள்ளிக்கிழமை இரவு கார் மூலம் சென்னை வந்தார். அவருடன் டிடிவி. தினகரன் உடன் வந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியாவின் இல்லத்தில் சசிகலா தங்குகிறார்.

பரோல் காலத்தில் அரசியல்ரீதியான சந்திப்புகளை நடத்தவோ, ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதோ கூடாது என சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கணவரை மருத்துவமனையில் சந்திப்பது, இல்லத்துக்கு திரும்புவது ஆகியவற்றை மட்டுமே மேற்கொள்ள வேண்டுமெனவும் பரோல் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் கடந்த பிப். 15-ஆம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரகம்- கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் அக்டோபர் 4-இல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தனது கணவர் நடராஜனைச் சந்திப்பதற்காக சிறையில் இருந்து செல்ல 15 நாள்கள் பரோல் வழங்குமாறு தனது வழக்குரைஞர் மூலம் சிறைக் கண்காணிப்பாளர் எம்.சோமசேகரிடம் சசிகலாஅக். 2-இல் மனு செய்திருந்தார்.

இதையடுத்து, நடராஜனின் உடல்நிலை குறித்து அரசு மருத்துவரின் அதிகாரப்பூர்வ சான்று உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படாததால், அந்த மனுவுக்குப் பதிலாக புதிய மனுவைத் தாக்கல் செய்யுமாறு சிறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதை தொடர்ந்து, உரிய சான்றுகள், பிரமாணப் பத்திரங்களுடன் புதிய மனு அக். 4-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதை பரிசீலித்த சிறைக் கண்காணிப்பாளர் சோமசேகர், சட்டத் துறையின் ஆலோசனை, தமிழக காவல் துறையின் தடையில்லாச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, நிபந்தனைகளுடன் சசிகலாவுக்கு அக். 7 முதல் 11-ஆம் தேதி வரையில் 5 நாள்கள் பரோல் அளித்து வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, நண்பகல் 2.53 மணிக்கு சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, அங்கு தயார் நிலையில் காத்திருந்த காரில் ஏறி சென்னைக்குப் பயணமானார். அவரை வரவேற்று, அதிமுக(அம்மா அணி) துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், இளவரசியின் மகன் விவேக், அவரது மனைவி கீர்த்தனா உள்ளிட்டோர் அழைத்துச் சென்றனர்.

மேலும், சசிகலாவைக் காண அவரது ஆதரவாளர்களும் சிறைக்கு வெளியே திரண்டிருந்தனர். 

நிபந்தனைகள் என்ன?

* பரோல் காலத்தில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் செல்ல மட்டுமே சசிகலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள(சென்னை) இடத்தில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும்.
* மருத்துவமனை அல்லது வீட்டில் எந்தவொரு பார்வையாளரையும் சந்திப்பதை ஊக்குவிக்கக் கூடாது.
* பரோல் காலத்தில் எந்தவித அரசியல் அல்லது இதர பொது செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது அல்லது கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது. காட்சி, அச்சு ஊடகங்களுடன் உரையாடக் கூடாது என்று சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

* சென்னைக்குச் செல்லவும், பெங்களூருக்குத் திரும்பவும் தலா ஒரு நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால், அக். 12-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சசிகலா மீண்டும் சிறையில் சரணடைய வேண்டும் என்று சிறைத் துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.



அதிகரிக்கும் 'ஆன்-லைன்' மோசடி: பண்டிகைக் காலம்; மோசடி அமோகம்! எச்சரிக்கையாக இருக்க அறிவுரை
பதிவு செய்த நாள்
அக் 07,2017 01:52



கோவை;பண்டிகை காலத்தை பயன்படுத்தி, பொதுமக்களின் வங்கிக் கணக்கில்உள்ள பணத்தை, 'ஆன்-லைன்' மோசடி செய்து அபகரிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன; இதுபோன்ற மோசடி நபர்களிடம் கவனமாக இருக்க, 'சைபர் க்ரைம்' போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.கோவை மாநகரில், கடந்த சில ஆண்டுகளாக, 'ஆன்-லைன்' மோசடிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. நடப்பாண்டு ஒன்பது மாதங்களில், 'ஆன்-லைன்' மோசடி தொடர்பாக, 265க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன.
'ஆன்-லைன்' மோசடி சம்பவங்கள் அதிகரிப்பை தொடர்ந்து, வங்கிளுக்கு, 'சைபர் க்ரைம்' போலீசார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.அதில், 'வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல்போன் எண்களை ரகசியமாக காக்க வேண்டும்; வங்கி, 'சாப்ட்வேரி'ல் நுழைந்து, வாடிக்கையாளர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய குறியீடு எண் அனுப்ப முடியாதவாறு, தொழில்நுட்ப பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளனர்.

'வங்கிகளில் இருந்து பேசுவதாக மொபைல்போன் எண்ணுக்கு யாராவது தொடர்பு கொண்டால், ஒருபோதும் 'ஏ.டி.எம்' மற்றும் 'கிரெடிட்' கார்டு விபரங்களை தெரிவிக்க கூடாது' என, பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.இருந்தும், வாடிக்கையாளர்களிடம் போனில் பேசும் மோசடி நபர்கள், அவர்களிடம் ரகசிய குறியீடு எண்களை பெற்று பணம் எடுக்கும் சம்பவங்கள் குறையவில்லை.
இந்நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களிடம் வங்கி அதிகாரிகள் போல் பேசி, மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நாள்தோறும், பல்லாயிரம் பேருக்கு, இதுபோன்ற மோசடி போன் அழைப்புகள் வந்து கொண்டுள்ளன.'ஆன்-லைன்' மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, 'சைபர் கிரைம்' போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மாநகர சைபர் க்ரைம் போலீசார் கூறியதாவது:பண்டிகை காலங்களில், பொதுமக்களின் வங்கி கணக்குகளில் அதிகளவு பணம் இருக்கும். அதை அபகரிக்கும் திட்டத்தில், 'ஆன்-லைன்' மோசடிகள் அதிகரிக்கிறது. வங்கிகளில் இருந்து, ஒருபோதும் வாடிக்கையாளர்களின் ரகசிய குறியீடு எண்களையோ, ஏ.டி.எம்., பின் எண்களையோ கேட்க மாட்டார்கள்.

இதனால், யாரேனும் போனில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு, ஏ.டி.எம்., 'கிரெடிட்' கார்டு குறித்து தகவல்களை கேட்டால், சைபர் க்ரைம் போலீசாருக்கும், வங்கிக்கும் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். சந்தேக நபர்கள் குறித்தும் புகார் அளிக்கலாம். வங்கிகளுக்கும் 'ஆன்-லைன்' மோசடி தடுப்பு தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'ஸ்கிம்மர்' இயந்திரம் எச்சரிக்கை!சமீபத்தில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம்., கார்டு ரகசியங்களை 'ஸ்கிம்மர்' இயந்திரத்தை பயன்படுத்தி மோசடி செய்த பெட்ரோல் பங்க் ஊழியர்களை 'சைபர் க்ரைம்' போலீசார் கைது செய்தனர். இதேபோன்று பெரிய அளவிலான ஓட்டல்கள், துணி கடைகள், பெட்ரோல் பங்க்குகளில் 'ஸ்கிம்மர்' இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால், இதுபோன்ற இடங்களில் ஊழியர்களிடம் ஏ.டி.எம்., கார்டுகளை கொடுக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீபாவளிக்கு சர்வதேச, 'ஸ்வீட்' அறிமுகம் : மரபு சுவையில் தின்பண்டங்கள் தீபாவளிக்கு தயாராகும்

பதிவு செய்த நாள்
அக் 06,2017 23:27


'பருப்பு இல்லாத கல்யாணமா... இனிப்பு இல்லாத தீபாவளியா' என, முன்னோர் கூறுவதுண்டு. தீபாவளி என்பது, பண்டிகைகளின் ராணி என்பதால், பல நாட்களுக்கு முன்பிருந்தே, 'கவுன்ட் டவுண்' ஆரம்பமாகி விடும். முன்பெல்லாம், தீபாவளிக்கு, 15 நாட்களுக்கு முன்பே பெண்கள் தயாராகி விடுவர். இனிப்பு, கார வகைகளுக்கான மாவு வகைகளை தயாரிக்க ஆரம்பித்து விடுவர். தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன், ஒவ்வொருவர் வீடுகளிலும் எண்ணெய், வெண்ணெய் வாசம் மூக்கை துளைக்கும். பூந்தி லட்டு, ரவா லட்டு, பாதுஷா, அசோகா, ஜாங்கிரி, ஜிலேபி, மைசூர்பாகு, தேங்காய் பர்பி, அதிரசம், சோமாஸ், கோதுமை அல்வா என, 'ஸ்வீட்' வகைகள் தயாராகி விடும். முறுக்கு, கை முறுக்கு, பேடா, காராசேவ், மிக்சர், தட்டை, கார பூந்தி, ஓமப்பொடி ஆகிய கார வகைகளும், சமையல் அறையில் அலங்கரிக்கும். இவற்றை தயார் செய்து, உறவு - நட்பு வட்டாரத்தில் வினியோகித்து, பெண்கள் தங்களின் கைவண்ணத்தை, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வர். இந்த நிகழ்வு எல்லாம் முடிந்த காலம் என்றாகி விட்டது. தற்போது, ரெடிமேட் ஆடைகள் போல, ரெடிமேட் பலகாரம் வந்தாச்சு... தீபாவளிக்கு, 'கிப்ட்' வரும் ஸ்வீட், கார வகைகளை பிரித்து, தட்டில் அழகுபடுத்தி, அக்கம், பக்கம் வீடுகளுக்கு வினியோகிப்பது, 'பேஷன்' ஆகிவிட்டது.

மக்களின் மாற்றத்திற்கு ஏற்ப தமிழகத்தில், ஏராளமான இனிப்பகங்கள் புற்றீசலாக பெருகி விட்டன. மக்களின் ரசனைக்கு ஏற்ப, ஒவ்வொரு தீபாவளிக்கும் புதிய, புதிய ஸ்வீட் வகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஆவினில் அசத்தல்
தமிழக அரசின் ஆவின் நிறுவனமும், தீபாவளி ஸ்வீட் வகைகள் குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:இந்த தீபாவளிக்காக சாக்லெட் பர்பி, நட்ஸ் அல்வா; முந்திரி அல்வா, முந்திரி பர்பி ஆகியவை, 250 கிராம், 175 ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளோம். 

பாதாம் அல்வா, முந்திரி கேக், 250 கிராம், 250 ரூபாய்; பாதாம் பர்பி, 250 கிராம் 200 ரூபாய்க்கும் அறிமுகம் செய்துள்ளோம். அடுத்த சில நாட்களில், கருப்பட்டி அல்வா உள்ளிட்ட சில இனிப்பு வகைகள் அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த தீபாவளியின்போது, உறவினர்கள், நண்பர்களுக்கு, 'கிப்ட்' வழங்கும் வகையில், எடை அளவு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாசிபான் ருசிக்கலாம் : தீபாவளி புதிய வரவு குறித்து, அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், ஸ்ரீனிவாச ராஜா கூறியதாவது:தீபாவளிக்கு முன் பாரம்பரிய இனிப்பு, கார வகைகள் ஆதிக்கம் செலுத்தியது. அதன் பின், 'டிரை புரூட்ஸ்' ஸ்வீட்களுக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது, சர்வதேச அளவிலான இனிப்புகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜெர்மன் இனிப்பு வகையான, 'மாசிபான்' தீபாவளிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, ஸ்வீட் பிரியர்களுக்கு விருந்தாக அமையும். மேலும், உடல் நலத்திற்கு ஏற்ற பாதாம், டிரைபுரூட், பழச்சாறுகளால் ஆனா ஸ்வீட்கள், சுகர் இல்லாத ஸ்வீட்கள் இந்த ஆண்டு, 'ஸ்பெஷல்' மேலும், பல விதமான, 'கிப்ட்' ஸ்வீட் பாக்ஸ்கள் பல வண்ணங்களில், பல்வேறு விதங்களில் அறிமுகம் செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.**

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் சிறப்பு ஸ்வீட், கார வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர், எம்.முரளி கூறியதாவது:
ஆண்டு தோறும் தீபாவளியை முன்னிட்டு, பாரம்பரிய இனிப்பு, கார வகைகளை நாங்கள் அறிமுகம் செய்து வருகிறோம். இந்த தீபாவளிக்கு, 'பட்சணம்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளோம்.

இதில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் மைசூர்பாகு, பாதுஷா, சோன்பப்படி, பாம்பே அல்வா, ரவா லட்டு, அதிரசம், மிக்சர், கைமுறுக்கு, உப்பு, இனிப்பு சீடை உள்ளிட்டவை இடம் பெறும். இதனுடன், தீபாவளி லேகியம், கங்கா தீர்த்தம் மற்றும் சுவாமி பிரசாதமும் வழங்கப்படும்.

மேலும், வால்நட் பைட், கேஷ்யூ பைட், சிட்டிஸ், கருப்பட்டி லட்டு, கருப்பட்டி கேக், எள்ளு லட்டு, தேங்காய் லட்டு, டிரைபுரூட்ஸ் லட்டு, மாலாடு, முந்திரி லட்டு ஆகியவை தீபாவளி, சிறப்பு ஸ்வீட் வகைகளில் இடம் பெறும்.தீபாவளிக்கு, 100 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரையிலான, 'கிப்ட் பாக்ஸ்'களை அறிமுகம் செய்துள்ளோம்.

மொத்தம், 150 இனிப்பு வகைகளும், 75 கார வகைகளும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் சுவை அறிந்து வாங்குவதற்காக அனைத்து கடைகளிலும், 'சாம்பிள்' வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளிக்கு ருசிக்க வெள்ளியணை அதிரசம் 

கடந்த, 75 ஆண்டுகளுக்கு முன் வெள்ளியணையில் கோபால் நாயுடு என்பவர் அதிரசம் விற்பனையை துவக்கி வைத்தார். இன்று, 25க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் அதிரசம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
கரூரில் இருந்து திண்டுக்கல் செல்பவர்கள், வெள்ளியணையில் வாகனங்களை நிறுத்தி, அதிரசம் வாங்கிச் செல்வதைப் பார்க்கலாம். கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட உள்ளூர் தேவைகளுக்குப் போக, வெளியூர் விற்பனைக்காகவும் அதிரசம் தயாரித்து அனுப்பப்படுகிறது.

கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், வெள்ளியணை அதிரசம் கட்டாயம் பரிமாறப்படும். மேலும், கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் கூடும் வாரச்சந்தைகளில் வெள்ளியணை அதிரசம் களைகட்டும்.

குறிப்பாக, தீபாவளி பண்டிகையின்போது, வெள்ளியணை அதிரசத்தை பொதுமக்கள் ஆர்டர் செய்து வாங்கிச் செல்வர். தீபாவளி வரும் அக்., 18ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, வெள்ளியணை அதிரசத்துக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து, அதிரசம் தயாரிப்பாளர்கள் கூறியதாவது:

காவிரி மற்றும் அமராவதி ஆற்று தண்ணீர் காரணமாக வெள்ளியணையில் தயாரிக்கப்படும் அதிரசத்துக்கு தனிச் சுவை கிடைக்கிறது. அதிரசத்தில் வெள்ளை சர்க்கரை சேர்ப்பதில்லை.
அச்சு வெல்லம் மட்டும்தான் பயன்படுத்துகிறோம். எனவே, இதை சர்க்கரை நோயாளிகளும் கூட அளவாக சாப்பிடலாம். பச்சரிசி, அச்சு வெல்லம், ஏலக்காய் மற்றும் சீரகம் கலந்த கலவையில், கால்சியம் உள்ளது. இதனால், எலும்பு பாதிக்கப்பட்டவர்கள் அதிரசம் சாப்பிட வேண்டும் என, டாக்டர்களே கூறுகின்றனர்.

பச்சரிசியை தண்ணீரில் ஊற வைத்து, பிறகு காய வைத்து கிரைண்டரில் அரைத்து மாவு தயாரிக்கிறோம். பிறகு, அச்சு வெல்லத்தை பாவு காய்ச்சி இரண்டையும் சேர்த்து ஏலக்காய் மற்றும் சீரகம் கலந்து அதிரசம் தயார் செய்யப்படுகிறது. இதற்கு கடலை எண்ணெய்தான் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை, மறுமுறை பயன்படுத்துவது கிடையாது.

வழக்கமாக எண்ணெய்யில் பொரித்து எடுக்கப்படும் பலகாரங்களில், எண்ணெய் அதிகளவில் இருக்கும். ஆனால், வெள்ளியணையில் தயார் செய்யப்படும் அதிரசத்தில் அவ்வளவாக எண்ணெய் இருக்காது. 50 நாட்கள் வரை, அதிரசம் கெடாமல் இருக்கும். எண்ணெய் வாடை வராது. தீபாவளி பண்டிகைக்காக ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
துணை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் இன்று நிறைவு

பதிவு செய்த நாள்06அக்
2017
23:00

சென்னை: துணை மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங், இன்று நிறைவடைகிறது.பி.எஸ்சி., நர்சிங்.,- பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது. இந்த படிப்புகளுக்கு, அரசு மருத்துவப் கல்லுாரிகளில் உள்ள, 538 இடங்களும் நிரம்பின.அரசு ஒதுக்கீடு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 7,843 இடங்களில், 6,817 நிரம்பின; 1,026 இடங்கள் காலியாக உள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங், இன்று நிறைவடைகிறது. 'மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தேதி, விரைவில் அறிவிக்கப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

'சிக்சர்' அடித்த வெள்ளாடு

Advertisement
'சிக்சர்' அடித்த வெள்ளாடு
கோபி: இலை வியாபாரியின் வெள்ளாடு, ஒரே சமயத்தில் ஆறு குட்டிகளை ஈன்றது.
ஈரோடு மாவட்டம், சுண்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜன், 40; இலை வியாபாரி. இவர் நான்கு வெள்ளாடுகள் வளர்க்கிறார். அதில் ஒரு ஆடு சினையாக இருந்தது. இது, நேற்று மதியம், ஆறு குட்டிகளை ஈன்றது.

நாகராஜன் கூறுகையில், ''இதுவரை நான் வளர்த்த ஆடுகள் அதிகபட்சம், நான்கு குட்டிகள் போட்டுள்ளன. ''தற்போது, ஆறு குட்டிகளை ஈன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறு குட்டிகளும் கிடாய் என்பது மற்றொரு ஆச்சரியம். அனைத்து குட்டிகளும் நலமாக உள்ளன,'' என்றார்.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர், நர்ஸ் நியமிக்க ஆய்வு

சேலம்: டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில், அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்க ஆய்வு நடந்து வருகிறது.
சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஒரு வாரத்தில், குழந்தைகள் உட்பட, 15 பேர், டெங்கு காய்ச்சலால், உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை, போதிய மருத்துவ வசதி இல்லாமை, சுகாதாரம் மற்றும் நிர்வாக சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சேலம் அரசு மருத்துவமனையில், நோய் தடுப்பு நடவடிக்கை பெரும் சவாலாக உள்ளது.

இது குறித்து, சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. அதன் எதிரொலியாக, சென்னை, தேசிய ஊரக சுகாதார நல திட்ட இணை இயக்குனர் உமா, சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது:

ஆரம்ப சுகாதார நிலையங்களில், டெங்குவை தடுப்பதற்கான களப்பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன. அங்கு, தேவையான டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளனர். அரசு மருத்துவ மனைகள், மருத்துவக் கல்லுாரிகளில் போதுமான டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்க, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஊரக மருத்துவத் துறை மற்றும் மருத்துவக் கல்வி நிர்வாகத்துடன், தமிழ்நாடு நோய் தடுப்பு கழகமும் இணைந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. 

இதன் மூலம், மருந்து, மாத்திரை உட்பட தேவையான வசதி செய்து கொடுக்கப்படும்.
தனியார் மருத்துவமனைகள், காய்ச்சல் பாதித்த குழந்தைகளுக்கு, வெளிப்புற நோயாளியாக சிகிச்சை அளிக்கக் கூடாது. உள் நோயாளியாக அனுமதிக்க வேண்டும். 

அதை விட, காய்ச்சல் வந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நாட வேண்டும் என்ற விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். தவறு செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை பாயும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லூரிகளில் விரைவில் ஆய்வு

பதிவு செய்த நாள்06அக்
2017
21:50

மதுரை: மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்.,சீட் எண்ணிக்கையை, 250 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய உள்ளது.

மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லுாரிகளில் ஆண்டுதோறும் தலா, 150, எம்.பி.பி.எஸ்., சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. இவ்விரு கல்லுாரிகள் பழமையானதாக இருப்பதால், கல்லுாரியை மேம்படுத்தி, மாணவர் எண்ணிக்கையை, 250 ஆக உயர்த்த, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடுதல் சீட்கள் ஒதுக்கீட்டிற்கு அனுமதிகோரி, மத்திய சுகாதாரத்துறை, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கல்லுாரிகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு, கல்லுாரியில், 250 மாணவர்களுக்கான நவீன வகுப்பறை, நுாலகம், கூடுதல் விடுதி கட்டடம், பேராசிரியர்கள் இருப்பு விபரங்களை வழங்க, கவுன்சில் உத்தரவிட்டது.

அதன்படி, இரு கல்லுாரிகளும் விபரங்களை கவுன்சிலுக்கு வழங்கியிருந்தனர். இந்நிலையில், கல்லுாரிகளில் வசதிகள் விபரம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அனுமதி கடிதத்துடன் ஆஜராக இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.

இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை வழங்கிய அனுமதி கடிதம், கல்லுாரி கட்டமைப்பு வசதிகள் குறித்த விபரத்தை, மருத்துவ கல்வி இயக்குனரக துணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் கல்லுாரி கண்காணிப்பு அதிகாரிகள்,நேற்று மத்திய அரசின் அனுமதி கடிதத்தை பெற்று, இந்திய மருத்துவ கவுன்சிலில் ஒப்படைத்தனர். இதையடுத்து, 'விரைவில் கல்லுாரிகளில் ஆய்வு நடத்தப்படும்' என, கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு 29 இடங்களில் முன்பதிவு 13ம் தேதி முதல் செயல்படும்

சென்னை: ''தீபாவளி சிறப்பு பஸ்களுக்கான, 29 பிரத்யேக முன் பதிவு மையங்கள், 13ம் தேதி முதல் செயல்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தீபாவளி பஸ்கள் இயக்கம் குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்கூறியதாவது: தீபாவளி பண்டிகை, 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக, சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து, 15, 16, 17ம் தேதிகளில், வழக்கமான பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். மூன்று நாட்களில், சென்னையில் இருந்து, மொத்தம், 11 ஆயிரத்து, 645 பஸ்கள்; மற்ற ஊர்களில் இருந்து, 11 ஆயிரத்து, 111 பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் நெரிசலை தவிர்க்க, ஐந்து இடங்களில் சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. 300 கி.மீ., தொலைவுக்கு அதிகமாக உள்ள ஊர்களுக்கு, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின்,www.tnstc.in என்ற இணையதளத்தில், டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதற்காக, 13ம் தேதி முதல், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில், 26, தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையத்தில் இரண்டு, பூந்தமல்லி பஸ் நிலையத்தில் ஒன்று என, 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படும். தீபாவளி முடிந்து, 19, 20, 21ம் தேதிகளில், சென்னைக்கு, 3,794 சிறப்பு பஸ்களும், மற்ற ஊர்களுக்கு, 7,043 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? : ஆந்திரா செல்லும் பஸ்கள், அண்ணாநகர் மேற்கு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, செங்குன்றம் வழியாக செல்லும்

கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும், புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் வரை செல்லும் பஸ்கள், சைதாப்பேட்டை நீதிமன்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்படும்

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்ப கோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பஸ்களும், தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

வேலுார் வழியாக ஆற்காடு, ஆரணி, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் ஓசூர் செல்லும் பஸ்கள், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

இந்த ஊர்களுக்கு, 15, 16, 17ம் தேதிகளில், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில் முன்பதிவு செய்தவர்கள், அந்தந்த பஸ் நிலையங்களுக்கு சென்று பயணிக்க வேண்டும்

இணைப்பு பஸ்கள் : தீபாவளி சிறப்பு பஸ் நிலையங்களுக்கு, மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், அனைத்து பகுதிகளில் இருந்தும் இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேட்டில் இருந்து எந்த ஊருக்கு பஸ்? : மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, துாத்துக்குடி, திருச்செந்துார், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்துார், எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

பெருங்களத்துார் செல்லாது : பஸ்களின் இருக்கைகள் பூர்த்தியானால், தாம்பரம், பெருங்களத்துார் செல்லாமல், மதுரவாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுப்பாதை வழியாக வண்டலுார் செல்லும். எனவே, பயணியர், பெருங்களத்துாரில் காத்திருக்க வேண்டாம். தாம்பரம், பெருங்களத்துாரில் இருந்து புறப்படும் வகையில் முன்பதிவு செய்த பயணியர், 
ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் சென்று பயணிக்கலாம்.

புகாருக்கு...? : வரும், 15 முதல், 17ம் தேதி வரை, கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்துார் வழியாக செல்லாமல், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதுார் - - செங்கல்பட்டு வழியாக சென்றால், நெரிசல் இன்றி பயணிக்கலாம்.
பஸ்களின் இயக்கம் குறித்த விபரங்கள் மற்றும் புகார்களுக்கு, 044 -- 2479 4709 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


காய்ச்சலை மறைத்தால் டாக்டர்களுக்கு சிறை
பதிவு செய்த நாள்06அக்
2017
19:30

'நோயாளிகளிடம், எந்த வகை காய்ச்சல் என்பதை தெரிவிக்காத டாக்டர்களுக்கு, பொது சுகாதார சட்டப்படி, ஆறு மாத சிறை தண்டனை அளிக்கலாம்' என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில், டெங்கு, பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல், மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. காய்ச்சலில் பாதிக்கப்பட்டு, இந்தாண்டு, 100 பேர் வரை உயிர் இழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், சிகிச்சை பெறுவோருக்கு, எந்த வகை காய்ச்சல் பாதிப்பு உள்ளது என்ற தகவலை, டாக்டர்கள் மறைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், இளங்கோ கூறியதாவது:

தமிழக பொது சுகாதாரச் சட்டம், 1939ல், உருவாக்கப்பட்டது. அந்த சட்ட பிரிவு, 52, 62, 83ன்படி, தொற்று நோய்களை தடுத்தல், நோய் தாக்கம் குறித்தும், தொற்று நோய் எந்த அளவு பாதித்துள்ளது என்பது குறித்தும், பொதுமக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்.

இது போன்ற தகவல்களை தெரிவிக்காத டாக்டர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் மீது வழக்கு தொடரலாம். அவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதமும், ஆறு மாதம் வரை சிறை தண்டனையும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
கொடூர குற்றங்களில் சமரசம் செய்தாலும் வழக்கு தொடரும்'

பதிவு செய்த நாள்06அக்
2017
20:39

புதுடில்லி: 'கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில், பாதிக்கப்பட்டவரும், குற்றஞ் சாட்டப்பட்டவரும் சமரசம் செய்தாலும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத்தில், நில அபகரிப்பு தொடர்பாக, நான்கு பேர் மீதான வழக்கில், சமரசம் செய்து கொண்டதால், வழக்கை வாபஸ் பெறுவதாக கூறப்பட்டதை, குஜராத் உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து, விசாரணை தொடரும் என, அறிவித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த உத்தரவு: நில அபகரிப்பு என்பது, பொருளாதார குற்றம். இது, இரு தரப்பை மட்டும் பாதிக்கவில்லை; ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே பாதிக்கும்.
கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில், இரு தரப்பும் சமரசம் செய்து கொள்வதால், பிரச்னை முடிந்து விடாது; இது, சமூகத்தை பாதிக்கும் பிரச்னை.

அதனால், இது போன்ற பெருங்குற்றங்களில், சமரசம் செய்தாலும், வழக்கின் விசாரணை தொடரும். அதன்படி, நில அபகரிப்பு வழக்கில், குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தீபாவளிக்கான பஸ் முன்பதிவு மையங்கள் திறப்பு எப்போது?
பதிவு செய்த நாள்06அக்
2017
18:57

சென்னை: தீபாவளிக்கு இன்னும், 11 நாட்களே உள்ள நிலையில், அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கான முன்பதிவு கவுன்டர்கள் திறக்கப்படாதது, பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி பண்டிகை, வரும், 18ல், கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, 15 முதல், 17ம் தேதி வரை, தினமும், 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதற்கான, சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள், இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், சொந்த ஊர் செல்ல விரும்பும் தென் மாவட்ட பயணியர், பயணம் குறித்து தெளிவான முடிவு எடுக்க முடியாமலும், எந்த நாட்களில் விடுப்பு எடுப்பது என, தெரியாமலும் தவித்து வருகின்றனர். எனவே, 'பயணியர் பயன்பெறும் வகையில், ௧௦ நாட்களுக்கு முன், சிறப்பு முன்பதிவு மையங்களை திறக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், போக்குவரத்து துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். முன்பதிவு மையங்கள் அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.

சிறப்பு பஸ்கள் : சென்னையில் இருந்து, தினமும், 2,275 பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும், 15 முதல், 17ம் தேதி வரை, தினமும், 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகை முடிந்ததும், 18ம் தேதி முதல், இதுபோல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

சென்னையில் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், சின்னமலை, அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி என, ஐந்து இடங்களில், சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
வீடுகளில், 490 யூனிட் மின்சாரம்: ஆய்வு நடத்த வாரியம் உத்தரவு
பதிவு செய்த நாள்07அக்
2017
00:54




இரு மாதங்களில், 490 யூனிட் மின்சாரம் பதிவாகியுள்ள வீடுகளை ஆய்வு செய்யுமாறு, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், இரு மாதங்களுக்கு, 500 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, மானிய விலையில் வழங்குகிறது. இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, அரசு வழங்குகிறது.

மின் பயன்பாடு கணக்கு எடுக்க செல்லும் சில ஊழியர்கள், வீட்டு உரிமையாளர்களுடன் சேர்ந்து, மின் பயன்பாட்டை, குறைத்து கணக்கு எடுப்பதாக, மின் வாரியத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் பயன்பாடு குறைத்து எழுதுவதாக புகார் வந்ததை அடுத்து, ஆய்வு நடத்துமாறு, பிரிவு அலுவலக உதவி பொறியாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. அவர்கள்,'பிசி'யாக இருப்பதால், அதில் கவனம் செலுத்தவில்லை.

பல வீடுகளில், ஒவ்வொரு முறையும், 480 யூனிட் - 490 யூனிட் மின்சாரம் பதிவு செய்வது தொடர்பாக, தகுந்த ஆதாரங்களுடன் புகார்கள் வருகின்றன. அவ்வளவு துல்லியமாக மின்சார அளவை பார்த்து, பயன்படுத்த சாத்தியம் குறைவு. எனவே, தொடர்ந்து, 490 யூனிட் மின்சாரம் பதிவாகியுள்ள வீடுகளை கண்காணித்து, பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அவற்றின் விபரத்தை, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்கள், மாதம் தோறும், தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
இன்று என்ன புதுமை
பதிவு செய்த நாள்  06அக்
2017
23:16




புதுடில்லி: இன்றைய தேதியான 7.10.17க்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. இதை அப்படியே பின்னால் இருந்து திருப்பி எழுதினாலும் (7 10 17) ஒரே மாதிரி தான் வரும். இதை ஆங்கிலத்தில் "பாலின்டிரோம்' என்கின்றனர்.
ஒரு எண்ணையோ அல்லது எழுத்தையோ எழுதி, பின்னால் இருந்து படித்தாலும் மாறாமல் வருவது தான் "பாலின்டிரோமின்' சிறப்பு. தமிழில் "விகடகவி' என்ற வார்த்தையை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
இந்த நூற்றாண்டில் ஏழு இலக்கங்களை கொண்ட 26 தேதியும், எட்டு இலக்கங்களை கொண்ட 12 தேதியும்,மொத்தம் 38 "பாலின்டிரோம்' தேதிகள் வருகின்றன.
சசிகலாவுக்கு 4 நிபந்தனைகள்
சசிகலா என்ன செய்யக் கூடாது?

பெங்களூரு: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை பார்க்க அவசர கால பரோலில் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவுக்கு அதிகாரிகள் 4 கடும் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.

நிபந்தனைகள் விவரம் வருமாறு:

1. பரோல் காலத்தில் கணவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை மற்றும் பரோல் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வீட்டில் தான் இருக்க வேண்டும்.

2. மருத்துவமனை அல்லது வீட்டில் வெளியாட்கள் யாரையும் சந்திக்கக்கூடாது.




3. அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது. அரசியல் நடவடிக்கையில் ஈடுபட கூடாது

4. மீடியாக்களுக்கு பேட்டியளிக்கக்கூடாது.
சாதாரண பெட்ரோல் போட மறுப்பு : வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி

பதிவு செய்த நாள்06அக்
2017
23:58


சென்னையில், பெட்ரோல் பங்க்குகளில், சாதாரண பெட்ரோல் போட மறுப்பதாக, வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்க்குகளில், சாதாரணம் மற்றும் உயர்தரம் என, இரண்டு வகை பெட்ரோல் விற்கப்படுகிறது.

பங்க் உரிமையாளருக்கு, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 3.90 ரூபாய்; டீசலுக்கு, 2.50 ரூபாயை, எண்ணெய் நிறுவனங்கள் கமிஷனாக தருகின்றன. தற்போது, பல பங்க்குகளில், சாதாரண பெட்ரோல் விற்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: ஒரு லிட்டர் சாதாரண பெட்ரோல் விலை, 70 ரூபாயாக உள்ளது. இதை விட, உயர்தர பெட்ரோல் விலை, சற்று அதிகம். இதனால், சாதாரண பெட்ரோலை தான், பலரும் பயன்படுத்துவர். சமீபகாலமாக, சென்னை உட்பட, பல முக்கிய நகரங்களில் உள்ள பங்க்குகளில், சாதாரண பெட்ரோல் கேட்டால், உயர்தர பெட்ரோல் போட்டு கொள்ளுமாறு, ஊழியர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில், 'சாதாரண பெட்ரோல் இல்லை; உயர்தர பெட்ரோல் மட்டுமே உள்ளது' என, ஊழியர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, பங்க் உரிமையாளர்களிடம் புகார் அளித்தால், 'எங்களுக்கு வரும், பெட்ரோல் தான் தரப்படும்' என, அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். ஏற்கனவே, பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், சாதாரண பெட்ரோல் விற்காதது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.தமிழகத்தில், 4,850 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. தலா, ஒரு பங்க்கில், தினசரி, சராசரியாக, 5,000 லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையாகின்றன.

- நமது நிருபர் -
வித்யாசாகர் ராவ் விடைபெற்றார்; பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார்



தமிழ்நாட்டின் 30–வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் நேற்று பதவியேற்றார்.

அக்டோபர் 07 2017, 03:00 AM

தமிழ்நாட்டின் 30–வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் நேற்று பதவியேற்றார். சுதந்திரத்திற்குப்பிறகு இதுவரையில் 29 முழுநேர கவர்னர்களும், பொறுப்பு கவர்னர்களும் தமிழ்நாட்டை நிர்வகித்து இருக்கிறார்கள். ஆனால், இதுவரையில் பொறுப்பு கவர்னராக மட்டு மல்லாமல், மிகவும் பொறுப்புவாய்ந்த கவர்னராக இருந்த மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் யாரும் இவ்வளவு நாட்கள் பதவி வகிக்காதநிலையில், 13 மாதங்களுக்கும் மேலாக பொறுப்பு கவர்னர் பதவியில் இருந்திருக்கிறார். இதற்கு முன்பு கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தநிலையில், செப்டம்பர் மாதத்தில் மராட்டிய மாநில கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் கூடுதல் பொறுப்பாக தமிழகத்தின் கவர்னராகவும் பொறுப்பேற்றார். மராட்டிய மாநிலமும் பெரிய மாநிலம். தமிழ்நாடும் பெரிய மாநிலம் என்றாலும், மிகத்திறமையாக இருமாநிலங்களுக்கும் பறந்துவந்து சிறந்த நிர்வாகியாக செயல்பட்டார்.

அவர் பொறுப்பேற்ற சிலநாட்களிலேயே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தும் தொடர்ந்து டிசம்பர் மாதம் 5–ந்தேதி மருத்துவமனையில் ஜெயலலிதா காலமானபிறகும், குழப்பம் மிகுந்த அரசியல் அலைகளுக்கு இடையே தமிழக நிர்வாகம் என்ற படகை மிகச்சிறந்த மாலுமியாக ஓட்டிச்சென்றார். முதலில் ஓ.பன்னீர்செல்வம், பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 6 மாதகாலத்திற்குள் பொறுப்பு கவர்னராக இருந்து 3 முதல்–அமைச்சர்களை பார்த்தவர். பல்கலைக்கழக வேந்தர் என்றமுறையில், பல்கலைக்கழகங்களை மிகச்சிறந்த முறையில் நிர்வ கித்தார். துணைவேந்தர்களை நியமனம் செய்யும்போது அவர்களை நேர்முகத்தேர்வுக்கு வரவழைத்து பின்னரே தேர்வுசெய்தார். கவர்னர் மாளிகையை ‘மக்கள் மாளிகை’ என்று சொல்லும்வகையில், பொதுமக்கள் தாராளமாக வந்து பார்க்க அனுமதி அளித்தார். கவர்னர் மாளிகையில் அவ்வையார், திருவள்ளூவர் சிலை அமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்தார். அவர் பொறுப்பு கவர்னராக இருந்து விடைபெற்றுச் சென்றாலும், தமிழகம் அவரை ஒருபோதும் மறக்காது.

இப்போது புதிய கவர்னராக அரசியலில் நீண்டநெடிய அனுபவம்பெற்ற, மிகவும் எளிமையான 77 வயதுள்ள பன்வாரிலால் புரோகித் நேற்று பதவியேற்றார். ‘அரசியல் பாகுபாடின்றி, அரசியல் சட்டப்படியே எந்த முடிவையும் எடுப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்’ என்ற அவரின் முதல் உறுதிமொழி அவர்மீது பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட பன்வாரிலாலுக்கு அரசியல் அத்துப் படியாக இருக்கும். ஏற்கனவே அசாம் மாநில கவர்னராகவும், மேகாலயா மாநில பொறுப்பு கவர்னராகவும் இருந்த பன்வாரிலால், கவர்னர் பதவியிலும் நல்ல அனுபவமிக்கவர். நாக்பூர், ஜபல்பூர், ராய்ப்பூர், போபால் ஆகிய இடங்களி லிருந்து வெளிவரும் ‘தி ஹிட்டாவாடா’ ஆங்கில பத்திரிகையில் ஆசிரியராக இருந்து அதன் தலைமை பொறுப்பையும் ஏற்று பத்திரிகை துறையிலும் நீண்டநெடிய அனுபவம் பெற்றிருக்கிறார். மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தின் பொறுப்பை ஏற்றுள்ள அவர்முன் பல கடமைகள் காத்திருக்கின்றன. டி.டி.வி.தின கரனின் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களுமான 11 எம்.எல்.ஏ.க்கள் ஏன் பதவிநீக்கம் செய்யப்படவில்லை? என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் சூழ்நிலையில், இந்த தீர்ப்பு வந்தபிறகு கவர்னருக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. பதவியேற்ற நாள்முதல் அவர் பெரும் சவால் களை சந்திக்க வேண்டியதிருக்கிறது. அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசில் ஒரு ஸ்திரத்தன் மையை ஏற்படுத்தவேண்டும். அரசியல் குழப்பங்களுக்கு ஒரு தீர்வுகாணவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பல்கலைக்கழக வேந்தர் என்றமுறையில், சில துணை வேந்தர்கள் நியமனம் உள்பட பல்கலைக்கழகங்களை சீரமைக்கும் பணியும் அவருக்காக காத்துக்கொண்டி ருக்கிறது. எதிர்க்கட்சியினரும் அவர்மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தமிழக அரசின் நிர்வாகத்தையும், தமிழகத்தையும் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி பன்வாரிலால் புரோகித் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.

Friday, October 6, 2017

வியாழக்கிழமையில் இவற்றைச் செய்தால் செல்வம் கொட்டுமாம்?

Published on : 05th October 2017 11:24 AM




நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானவர் குருபகவான். ஒருவருடைய ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார்.

குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா...உதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, வியாழ நோக்கம் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா என்பதைத் தான் முதலில் பார்ப்போம்.

குருப் பகவானை வைத்து தான் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை ஒருவருடைய ஜாதகத்தில் கணிக்கப்படும். தனகாரகன், சந்தானகாரகன், சுபகாரகன் இது போன்ற பெயர்கள் குருபகவானுக்கு உண்டு.

இத்தகைய குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த நாளில் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்து வந்தால், வீட்டில் செல்வம் அதிகரிக்கும். வியாழக்கிழமை என்ன செய்தால் செல்வம் அதிகரிக்கும் எனப் பார்ப்போம்...!

வியாழன் அன்று குருவை வணங்கி விரதம் இருக்கலாம். அன்றைய தினம் குருபகவானுக்கு உகந்த மஞ்சள் நிற மலர் அல்லது முல்லை மலரை வாங்கிச் சாற்றலாம். குருவுக்கு உகந்த கொண்டை கடலையை மாலையாகக் கட்டி போடலாம். மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து குருபகவானுக்குரிய ஸ்லோகங்களை சொல்லி வரலாம். இவ்வாறு ஒவ்வொரு வியாழனன்றும் தவறாது செய்து வருவோர் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வர் என்பது நிச்சயம்.

வேறு என்னென்ன செய்யலாம்? 

சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை படைத்து வணங்கி வந்தால், அதிர்ஷ்டமும், செல்வமும் வந்து சேரும்.

வியாழக்கிழமைகளில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்த பின், விளக்கேற்றி விஷ்ணு பகவானை வணங்க வேண்டும். அன்றைய தினம் மஞ்சள் நிற பொருட்களை தானம் வழங்கினால்,
செல்வமும், அதிர்ஷ்டமும் கொட்டும்.

வாழை மரத்திற்கு மஞ்சள் நிற இனிப்பு பலகாரம் எதையேனும் படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளைத் தானமாக வழங்கினால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாழனன்று இதைச் செய்ய வேண்டும்.

வியாழக்கிழமையில் வாழைப்பழத்தை தானம் வழங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும்.

அன்றைய தினம், மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணுவுக்குப் படைத்தால், விஷ்ணு பகவான் மகிழ்ந்து, வீட்டில் செல்வம் பெருகச் செய்வார்.

வியாழக்கிழமைகளில் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். இதனால் வீட்டில் தரித்திரம் நீங்கும். செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கும்.


தமிழகத்தின் 29வது ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித் பற்றிய 10 முக்கிய விஷயங்கள்
By DIN | Published on : 06th October 2017 11:01 AM |



சென்னை: தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தின் 29வது ஆளுநராக, பன்வாரிலால் புரோஹித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் ஆளும் அதிமுக தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி வரும் நிலையில், மாநிலத்துக்கு நிரந்தர ஆளுநராக புரோஹித் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தவர். இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், தமிழகத்தின் 29வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தின் ஆளுநராக இருந்த கே. ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. அவருக்குப் பதிலாக, மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதியன்று பொறுப்பேற்றார். அவர் ஓராண்டுக்கும் மேலாக பொறுப்பு ஆளுநராகவே தொடர்ந்து வந்தார்.

முதல்வர் ஜெயலலிதா மரணம், அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் நிலைமைகள் காரணமாக தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தன. இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார்.

இவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 10 விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

1. பன்வாரிலால் புரோஹித் மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர். 1977-ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இருந்து வருகிறார். 

2. 1978-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நாகபுரி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

3. அதன் பின், 1980-இல் நாகபுரி தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

4. கடந்த 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நாகபுரி தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 

5. ராணுவ அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார். 

6. 1996-ஆம் ஆண்டு மீண்டும் மக்களவை உறுப்பினரான புரோஹித், உள்துறை, ராணுவம், பொதுத் துறை குழுக்களின் உறுப்பினராகச் செயல்பட்டார்.

7. தீவிர அரசியல்வாதியாக இருந்த போதும் பத்திரிகையாளராகவும் பரிணமித்தவர் புரோஹித். நாகபுரி, ஜபல்பூர், போபால் போன்ற இடங்களில் இருந்து வெளிவரும் பத்திரிகையான "தி ஹிதவாடா' பத்திரிகையின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதனைச் சிறப்பான முறையில் வெளிக் கொண்டு வந்தார். நாகபுரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அந்தப் பத்திரிகை, புரோஹித் தலைமைப் பொறுப்பை ஏற்ற காலத்தில் மத்திய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முன்னணி பத்திரிகையாக விளங்கியது.

8. தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக, அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநராக புரோஹித் பொறுப்பு வகித்து வந்தார். கூடுதலாக மேகாலயாவின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்தார்.

9. மக்களவை உறுப்பினராக அவர் இரண்டு முறை இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும், ஒரு முறை பாஜக சார்பிலும் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

10. பாஜக மற்றும் காங்கிரஸ் என்று அடிக்கடி கட்சி மாறியதால் அவருக்கு எதிராக கடுமையான விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், ஆளுநர் என பல பொறுப்புகளை வகித்து அனுபவம் பெற்றுள்ள புரோஹித், தற்போது தமிழகத்தின் 29வது ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார்.
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா, எங்கேருந்து பஸ் ஏறலாம்... அரசின் ஸ்பெஷல் ஏற்பாடு! 

 சென்னை : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மொத்தம் 11, 645 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

சென்னையில் இருந்து 5 இடங்களில் பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அண்ணா நகர் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

ஈசிஆர் வழியாக புதுவை, கடலூர், சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள்சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும்.

விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்லும். வேலூர், ஆரணி, ஆற்காடு, ஒசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும். 

முன்பதிவு பேருந்தில் எங்கே ஏறலாம்? பிற ஊர்களுக்கான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை அவுட்டர் ரிங் ரோடு வழியாக வண்டலூரை சென்றடைந்து அங்கிருந்து ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்ற வழி செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கார் மற்றும் இதர வாகனங்களில் செல்லும் மக்கள் அக்டோபர் 15 முதல் 17 வரை தாம்பரம், பெருங்களத்தூர் வழியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் வழியாகச் சென்றால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.

பீக் ஹவரில் வரத் தடை கனரக வாகனங்கள் அக்டோபர் 15 முதல் 17 வரை மதியம் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரையுள்ள பகுதிகளில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாள்தோறும் 6,825 பேருந்துகள் இயக்கப்படுகின்றன, தீபாவளிக்காக 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஊர் திரும்பவும் சிறப்பு பேருந்துகள் பிற ஊர்களில் தீபாவளி பண்டிகைக்காக 11,111பேருந்துகள் இயக்கப்படகின்றன. தீபாவளிக்குப் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை வர 3,794 பேருந்துகள் அக்டோபர் 19 முதல் 22 வரை இயக்கப்படுகின்றன. மற்ற ஊர்களுக்கு 7,443 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதிக கட்டணம் கூடாது பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்துகளில் நிச்சயம் பயணிகள் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. இவ்வாறு விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-vijayabhaskar-announced-special-buses-diwali/articlecontent-pf266365-297776.html
ஸ்டாலினை அணைத்த அமைச்சர்... கைகுலுக்கிய ஓ.பன்னீர்செல்வம்! கலகலத்த ஆளுநர் பதவியேற்பு விழா

எஸ்.மகேஷ்
கே.ஜெரோம்



ஆளுநர் பதவியேற்பு விழாவில் தமிழக அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அரவணைத்துக் கைகுலுக்கிய சம்பவத்தை அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் சிரித்துள்ளார். பிறகு இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். அடுத்து, அமைச்சர் ஒருவர், ஸ்டாலினை அணைத்தப்படி கைகுலுக்கியுள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இதுஎல்லாம் நடக்குமா என்று விழாவில் பங்கேற்ற அ.தி.மு.க-வினர் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.







அடுத்து, பா.ஜ.க-வைச் சேர்ந்த பெண் நிர்வாகி, ஸ்டாலினுக்குப் பின்இருக்கையில் அமர முயற்சிசெய்துள்ளார். அவரை, பின்னால் உள்ள இருக்கையில் அமரும்படி விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அடுத்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், முன் வரிசையில் அமர்ந்ததும், தி.மு.க-வினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து அவரும் பின் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி ஒருவர், தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரை, முன்வரிசையில் அமரும்படி சிக்னல் கொடுக்கப்பட்டது. அப்போது அவர், எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமருவதுதான் சாலச்சிறந்தது என்று அங்கிருந்து செல்லவில்லை. பதவியேற்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது, பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கிய நபரும், அ.தி.மு.க-வைச் சேர்ந்த நடிகர் விஜய்கார்த்திக் என்ற ஜெ.எம்.பஷீர் ஆகிய இருவரும் பூங்கொத்து கொடுத்தனர். ஆனால், மக்கள் பிரதிநிதிகளைத் தவிர மற்றவர்கள், ஆளுநருக்கு வாழ்த்துச் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் இருவருக்கும் மட்டும் எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று மற்றவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, விழாவில் பங்கேற்றவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
சசிகலாவுக்கு 5 நாள்கள் பரோல்! - விமானத்தில் சென்னை வருகிறார்

எஸ்.மகேஷ்




சசிகலாவுக்கு ஐந்து நாள்கள் பரோல் வழங்கி, கர்நாடக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை, விமானம்மூலம் சென்னை வருகிறார் சசிகலா.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரது கணவர் நடராசனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலழிந்துவிட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி, நடராசனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நடந்தது. தற்போது, அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவமனையில் அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், நடராசனைச் சந்திக்க வேண்டும் என்று சசிகலா, கர்நாடக சிறைத்துறையிடம் அனுமதி கேட்டார். 15 நாள்கள் பரோல் கேட்டு அவர் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் தொடர்பாக கர்நாடக சிறைத்துறையினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, விண்ணப்பத்தில் சில ஆவணங்கள் இணைக்கப்படாததால், பரோல் நிராகரிக்கப்பட்டது. அடுத்து, புதிய மனுவை சசிகலா நேற்று தாக்கல்செய்தார். சசிகலாவை பரோலில் அனுப்புவது தொடர்பாக, தமிழக காவல்துறைக்கு கர்நாடக சிறைத்துறை மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அதற்கு, இன்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

அதில், நடராசனின் உடல் நிலை, சட்டம் ஒழுங்குப் பிரச்னைகுறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகலாவுக்கு பரோல் வழங்க தமிழக காவல்துறையும் கிரீன் சிக்னல் கொடுத்தது. இந்த நிலையில், சசிகலாவுக்கு 5 நாள்கள் பரோல் வழங்கி கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா பரோல் கிடைத்துள்ளதால், மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக்கொண்டாடினர்.
கர்நாடகச் சிறைத்துறை சசிகலாவுக்கு 5 நாள்கள் பரோல் வழங்க அனுமதித்துள்ளது. அதோடு, கடும் நிபந்தனைகளும் விதித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். முதலில் போதிய ஆவணங்கள் இல்லை என்று பரோலை நிராகரித்தது சிறைத்துறை. அடுத்து, புதிய மனுவை அவர் தாக்கல் செய்தார். மனுவைப் பரிசீலித்த கர்நாடகச் சிறைத்துறை சசிகலாவுக்கு 5 நாள் பரோல் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி சசிகலாவை டி.டி.வி.தினகரன் மற்றும் அவரின் உறவினர்கள் சிறையில் சந்தித்தனர். அப்போது, சசிகலா, நடராசன் உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். பரோல் கிடைத்த மகிழ்ச்சி அவர் முகத்தில் இல்லையாம். சோகத்துடனே இருப்பதாக அவரைச் சந்தித்தவர்கள் தங்களுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சசிகலா ஆதரவாளர்கள் கூறுகையில், "சசிகலாவுக்கு பரோல் கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவரை வரவேற்கத் தயார்நிலையில் இருக்கிறோம். ஏழு மாதங்களுக்குப் பிறகு சசிகலா, சிறையிலிருந்து வெளியில்வருகிறார். அவருக்கு வழங்கப்பட்ட பரோல் அனுமதியில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நடராசனை மட்டும் சசிகலா சந்திக்கலாம். அதைத்தவிர, மற்ற யாரையும் அவர் சந்திக்க வேண்டும் என்றால் சிறைத்துறையின் அனுமதி பெற வேண்டும். குறிப்பாக உறவினர்களைக்கூட சசிகலா சந்திக்க வேண்டும் என்றால் அவருடன் வரும் காவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. மீடியாக்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது பரோலில் வரும் எல்லோருக்கும் பொதுவானதுதான்" என்றனர்.

சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலாவுக்கு 5 நாள் பரோலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசியல், மீடியாக்கள் போன்ற நடவடிக்கைகளில் பரோலில் வருபவர்கள் ஈடுபடக் கூடாது போன்ற சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் பரோல் ரத்து செய்யப்படும்" என்றனர்.

சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல்

சசிகலா, பரோல், பெங்களூரு சிறை,
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கிடைத்தது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவின் கணவர், நடராஜன், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, இரு தினங்களுக்கு முன், உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவரை பார்க்க, பரோல் கேட்டு, சிறை அதிகாரிகளிடம், சசிகலா விண்ணப்பித்தார். 

முதலில், 'முறையான ஆவணங்கள் இல்லை' என, அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக, உரிய ஆவணங்களுடன் மனு செய்தார். அதைத் தொடர்ந்து, கர்நாடக சிறை துறையினர், தமிழக காவல் துறையினரிடம், 'பரோல் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா' என, கேட்டனர். தமிழக காவல் துறை சார்பில், 'ஆட்சேபனையில்லை' என, தெரிவிக்கப்பட்டதுடன் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இது குறித்தும் உயர் அதிகாரிகளுடன் சிறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் சிறை நிர்வாகம் வழங்கியது. பரோல் கிடைத்ததால், இன்று மாலை அவர் சென்னை வர உள்ளார்.

Now Sukanya can continue pursuing MBBS free of cost


By Express News Service  |   Published: 06th October 2017 01:36 AM  |  

Sukanya
CHENNAI: A Dalit girl who was struggling to continue MBBS education in a  private deemed university has finally got a chance to finish the course.
The university management has allowed her to continue the course. G Sukanya’s plight about her inability to pay the fees because of her  father’s untimely demise was first reported by Express. It  subsequently caught the attention of TV news channels and social media users.
G Sukanya, a dalit student from Coimbatore district, had completed two years of MBBS in Sree Balaji Medical College in Chennai. But she was  not going to the college for last one-and-half years since she was unable to pay the fees after the untimely demise of her father. The family was left with no money since her father, a farmer, had already  sold the lands to pay the fee for the first two years.
On Wednesday, the college management informed Sukanya that she can continue the course free of cost.
Sukanya is ecstatic after hearing the news that she would be allowed  to continue the course and she need not think of the monetary issues. She had joined the college from Thursday.   Besides becoming a doctor, she wants to help students from rural areas and poor background.
Untimely demise
Her father who was a farmer had sold all his property for D45 lakh, which was the college  capitation fee. However, he expired after his daughter  completed first year

Keep your furry friends safe, happy this Diwali


By Express News Service  |   Published: 03rd October 2017 11:32 PM  |  

Cracker sounds terrify animals, they get extremely scared and disoriented. The loud noise result in them howling, barking, running around aimlessly, faster respiratory rate, excessive salivation, vomiting and destroying things. Debaleena Ghosh writes how we can help them through this
CHENNAI: In addition, dogs are also sensitive to vibrations caused by loud noises. This is also the time when the maximum number of lost pets and injured animals are reported. Here are few tips which you can follow to protect not only your own pets, but also street animals.
Complete their walking and feeding schedule before the fireworks start.
Don’t tie up your pets, as it can hurt them while trying to escape out of fear. Do not leave them in compounds or on the terrace. Keep your pet inside when fireworks are going off.
Keep windows shut and curtains drawn to mask sounds and flashes.
You can try ear muffs or cotton, or else cover their ears with a soft cloth when the fireworks start.
Dogs react in two ways to stress — either they escape or they hide. Make sure there are no open doors for them to escape. Provide your pet with a suitable safe spot where he can hide and do not disturb them when they are in their safe space.
Turn up the volume on the television or radio to help mask the sounds of fireworks.
Keep your pet distracted by playing with them or giving them treats.
Plan a holiday away from the city during this time to ensure your pet isn’t stressed.
Don’t keep crackers near your dog – your pooch will most likely sniff or lick cracker materials which can lead to toxicity problems.
Do not rebuke your pet for being scared. Don’t force your pets to be close to sounds that are frightening. You will only end up frightening your pet even more, which results in aggression.
Ensure that your pets are wearing identification tags bearing your contact number. It will be a deciding factor in getting back your pet if lost.
Use the ‘wrapping technique’ that will help reduce stress and relieve tension by stimulating blood circulation. This is a simple home trick where you can wrap your pet using any soft fabric that will cover his back and chest area like a figure ‘8’, ending with a knot (refer to picture).
Think about street animals who do not have the privilege of a home. The atrocities they are subjected leaves them burned and injured. Street dogs are more susceptible to the harmful effects of Diwali. Provide a safe and suitable shelter — basements, garages and balconies work. Keep a bowl of water and food for them that can be easily reached.

NewsToday 18.10.2024