Saturday, October 7, 2017


'சிக்சர்' அடித்த வெள்ளாடு

Advertisement
'சிக்சர்' அடித்த வெள்ளாடு
கோபி: இலை வியாபாரியின் வெள்ளாடு, ஒரே சமயத்தில் ஆறு குட்டிகளை ஈன்றது.
ஈரோடு மாவட்டம், சுண்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜன், 40; இலை வியாபாரி. இவர் நான்கு வெள்ளாடுகள் வளர்க்கிறார். அதில் ஒரு ஆடு சினையாக இருந்தது. இது, நேற்று மதியம், ஆறு குட்டிகளை ஈன்றது.

நாகராஜன் கூறுகையில், ''இதுவரை நான் வளர்த்த ஆடுகள் அதிகபட்சம், நான்கு குட்டிகள் போட்டுள்ளன. ''தற்போது, ஆறு குட்டிகளை ஈன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறு குட்டிகளும் கிடாய் என்பது மற்றொரு ஆச்சரியம். அனைத்து குட்டிகளும் நலமாக உள்ளன,'' என்றார்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024