Saturday, October 7, 2017

துணை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் இன்று நிறைவு

பதிவு செய்த நாள்06அக்
2017
23:00

சென்னை: துணை மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங், இன்று நிறைவடைகிறது.பி.எஸ்சி., நர்சிங்.,- பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது. இந்த படிப்புகளுக்கு, அரசு மருத்துவப் கல்லுாரிகளில் உள்ள, 538 இடங்களும் நிரம்பின.அரசு ஒதுக்கீடு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 7,843 இடங்களில், 6,817 நிரம்பின; 1,026 இடங்கள் காலியாக உள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங், இன்று நிறைவடைகிறது. 'மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தேதி, விரைவில் அறிவிக்கப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

The existing overbridge will continue to operate alongside the new bridge to help distribute passenger flow.

Southern Railway upgrades Tambaram station amenities at cost of Rs 24 crore The existing overbridge will continue to operate alongside the n...