Sunday, December 31, 2017

சென்னையில் வசிக்கும் முதியோருக்கே இலவசப் பேருந்து பயணச்சீட்டு

By  சென்னை,  |   Published on : 31st December 2017 02:14 AM 
Buspass
சென்னையில் வசிக்கும் முதியோருக்கு மட்டுமே இலவச பேருந்துப் பயணச்சீட்டு வழங்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.
 சென்னை மாநகர போக்குவரத்துக் கழக குளிர் சாதன வசதிகள் இல்லாத அனைத்து பேருந்துகளிலும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்துப் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இதில், மாதந்தோறும் ஒருவருக்கு 10 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. மாநகரப் பேருந்து நடத்துநரிடம், இந்த டோக்கன்களை கொடுத்து, கட்டணம் இல்லாமல் தாங்கள் விரும்பும் இடத்துக்கு முதியோர் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தால் சென்னையில் 1.93 லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முதியோருக்கு பயணச்சீட்டு வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்து முதியோர்கள் அவதியடைந்து வருகின்றனர்.


 அதேபோல அடையாறு, பெசன்ட்நகர், கிண்டி போன்ற பகுதிகளில் உள்ள மாதாந்திர பயணச்சீட்டு வழங்கும் கவுன்ட்டர்களில் இலவச பேருந்துப் பயணச்சீட்டை வாங்குவதற்காக முதியோர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருப்பதால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.


 மாதத்தின் கடைசி 10 நாட்களில் மட்டும் தான் முதியோருக்கான இலவசப் பேருந்து பயணச்சீட்டுகள் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால், அந்த குறிப்பிட்ட நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதை தவிர்ப்பதற்காக மாதம் முழுவதும் இத்தகைய பேருந்துப் பயணச்சீட்டுக்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியோர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.


 இது குறித்து விளக்கமளித்து மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியது:
 சென்னை மாநகராட்சி மற்றும் அதன் எல்லைப் பகுதியில் வசிக்கும் முதியோருக்கு மட்டுமே இலவச பேருந்துப் பயணச்சீட்டு வழங்கப்படும். இத்திட்டத்தில் முதியவர் ஒருவருக்கு 3 மாதத்துக்கான 30 டோக்கன்கள் வழங்கப்படும். அந்தப் பயணச்சீட்டை குறிப்பிட்ட மாதத்துக்கு அந்தப் பயனாளி பயன்படுத்திக்கொள்ளலாம். பயணச்சீட்டுகள் காலாவதியாகும் ஒரு வாரத்துக்குள் அடுத்த காலாண்டுக்கான பயணச்சீட்டு டோக்கன்களை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆண்டு முழுவதும் எந்தவித காலக்கெடுவும் வைக்காமல் மாதத்தில் அனைத்து வேலை நாட்களிலும் இந்தப் பயணச்சீட்டு வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கான பயண அட்டை, வேலைக்குச் செல்வோருக்கான மாதாந்திர பயண அட்டை என பல்வேறு பயண அட்டைகளை வழங்கி வருகிறோம். ஆனால் இலவசப் பயணச்சீட்டைப் பயன்படுத்தும் முதியோர்கள், அதை பெறுவதற்கு கடைசி மூன்று நாட்களில் அதிகமாக வருகின்றனர். அதேவேளையில் இந்த நாள்களில் ஒரு நாளைக்கு குறைந்தது மாதாந்திர மற்றும் இலவச பயணச்சீட்டு பெறுவதற்கு பயணச்சீட்டு கவுன்ட்டர்களுக்கு 900 பேர் வருகின்றனர். இதனால் நீண்ட வரிசையில் முதியோர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு முதியோர்கள், ஒவ்வொரு காலாண்டின் கடைசி மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து அடுத்த காலாண்டுக்குரிய 30 டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.

கொள்கையாவது கோட்பாடாவது...!

By ஆசிரியர்  |   Published on : 30th December 2017 01:34 AM  | 

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான இன்னொரு வழக்கிலும் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார். லாலு பிரசாதைப் பொருத்தவரை, ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறைச்சாலை அவருக்குப் புதியதொன்றுமல்ல. மூன்றாவது முறையாக அவர் இந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

1997-இல் பூதாகரமாக வெடித்த மாட்டுத் தீவன ஊழலில் லாலு பிரசாத் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஊழலின் பின்னணியில்தான் அவர் 1997-இல் முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.


மாட்டுத் தீவனம் வாங்கியதாகப் பொய்க்கணக்கு எழுதி அரசுக் கருவூலத்திலிருந்து பணத்தை மடைமாற்றம் செய்தார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. 2013-இல் சாய்பாஸா மாவட்ட அரசுக் கருவூலத்திலிருந்து ரூ.37 கோடி பணம் முறைகேடாக எடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அதன் காரணமாக, தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்திருக்கிறார். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது என்றாலும்கூட மேல்முறையீட்டில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
அவர்மீது தொடரப்பட்டிருக்கும் ஆறு வழக்குகளில் இரண்டாவது வழக்கிலும் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தேவ்கர் அரசுக் கருவூலத்திலிருந்து 1994 - 1996-க்கு இடைப்பட்ட இரண்டாண்டுகளில் ரூ.84.50 லட்சம் முறைகேடாகப் பணம் மடைமாற்றப்பட்ட வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்னும் இதேபோன்ற நான்கு வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றன.
இந்திய குற்றவியல் சட்டத்தின்படி ஒரே குற்றத்திற்காக ஒருவரை இரண்டு முறை தண்டிக்க முடியாது. இந்தச் சட்டப்பிரிவைக் காரணம் காட்டி, வெவ்வேறு அரசுக் கருவூலங்களிலிருந்து முறைகேடாகப் பணம் பெற்றதற்காகத் தண்டிக்கப்படுவது, தனக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் பாதுகாப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் லாலு பிரசாத் வாதிட்டுப் பார்த்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. ஒரேமாதிரியான வழக்காக இருந்தாலும், கையாண்ட வழிமுறை ஒன்றாகவே இருந்தாலும் அவை வெவ்வேறு பரிமாற்றங்கள் தொடர்பானவை என்பதால் அவரது வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதனால் இனி உள்ள நான்கு வழக்குகளிலும்கூட அவர் தண்டனை பெறக்கூடும்.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டது எந்தவித அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருப்பதால் ஏனைய வழக்குகளிலும் வேறுவிதமான தீர்ப்பு வழங்கப்படும் என்று யாரும் கருதவில்லை. அதேநேரத்தில், வியப்பும் வேதனையும் ஏற்படுத்துவதெல்லாம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலஅவகாசம்.


1997-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 20 ஆண்டுகள் கடந்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டு லாலு பிரசாத் தனது முதல்வர் பதவியைத் துறந்து இப்போது தண்டிக்கப்பட்டிருக்கும் கால இடைவெளியில் ஒரு தலைமுறையே மாறிவிட்டிருக்கிறது. இந்தியாவின் நீதி பரிபாலன முறையில் காணப்படும் இந்த ஆமை வேகமும் மெத்தனமும்தான் இந்திய ஜனநாயக அமைப்பின்மீதான நம்பிக்கையைச் சிதைக்கிறது.
இப்போது நாடாளுமன்ற-சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு வழக்குகளை உடனடியாக விசாரித்துத் தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு ஒத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அமைச்சர்கள் மீதும் பொறுப்பான பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் மீதும் எழுப்பப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் அல்லது முறைகேடுகளை விசாரிப்பதிலான தாமதத்தைக் குறைப்பதற்கு இதுவரை எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை.


தேவையில்லாத நடைமுறைகள், இழுத்தடிக்கப்படும் வழக்கு விசாரணை, போதுமான ஊழியர்கள் இல்லாததால் நீதிமன்றங்களின் செயல்பாட்டுக் குறைவு ஆகியவை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் நீதித்துறையின் செயல்பாடுகளைத் தடம் புரள வைத்து விடுகின்றன. இதெல்லாம் நமது ஆட்சியாளர்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும்கூட, அதை மாற்றியமைக்கவோ இதற்குத் தீர்வு காணவோ அவர்கள் யாருமே தயாராக இல்லை.
ஓம்பிரகாஷ் சௌதாலா, ஜெயலலிதா, லாலு பிரசாத் என்று பல முதல்வர்களும் கட்சித் தலைவர்களும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றிருக்கிறார்கள். ஊழல் நிரூபிக்கப்பட்டும்கூட எந்த ஓர் அரசியல் தலைவரின் செல்வாக்கிலும் சரிவு ஏற்பட்டதாகவோ வருங்காலம் பாதிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. கிரிமினல் குற்றவாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதும், அவர்கள் தலைமையில் அரசியல் கட்சிகள் இயங்குவதும் விசித்திரமாக இருக்கிறது.


லாலு பிரசாதைப் பொருத்தவரை, அரசியல் தூய்மையாளர்கள் என்று கருதப்படும் ஜெயபிரகாஷ் நாராயண், கர்பூரிதாக்குர் ஆகியோரின் சீடர் என்று அறியப்பட்டு அரசியல் களம் கண்டவர். சமூக நீதிப் போராளி என்று தன்னை வர்ணித்துக் கொள்பவர். அப்படிப்பட்ட ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுகிறார் என்றால், கொள்கை, கோட்பாடு என்பதெல்லாம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கப் பயன்படும் வெற்று கோஷங்கள் மட்டும்தானா?


அவரது லஞ்சமும், ஊழலும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டும்கூட, அவரது அரசியல் செல்வாக்கில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொன்னால் வாக்காளர்கள் லஞ்சம் ஊழலை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பொருளா?
பொங்கல் பரிசு தொகுப்பு 10 லட்சம் பேர் ஏமாற்றம்

Added : டிச 31, 2017 02:39





பொங்கல் பரிசு அறிவிப்பால், 10 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள், தமிழக அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், அரிசி, சர்க்கரை, காவலர், எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டு ஆகிய பிரிவுகளில் இருந்த, ரேஷன் கார்டுகள், தற்போது, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதது என, பிரிக்கப்பட்டு உள்ளன.

இருப்பினும், மேற்கண்ட கார்டுகளுக்கு, வழக்கம் போல், அதே பிரிவில், ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.பொங்கலை முன்னிட்டு, முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகள், காவலர் கார்டுகள் உட்பட, 1.84 கோடி அரிசி கார்டுகளுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு துண்டு ஆகிய பரிசு தொகுப்பை, அரசு அறிவித்துள்ளது. இதனால், சர்க்கரை கார்டுதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:தி.மு.க., ஆட்சியில், பாரபட்சமின்றி, அனைத்து கார்டுகளுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதிகாரிகள், நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சில ஆண்டுகளாக, 10 லட்சம் சர்க்கரை கார்டுகளுக்கு, பொங்கல் பரிசு வழங்குவதில்லை. அந்த கார்டு வைத்திருப்பவர்களிலும், பலர் ஏழைகளாக உள்ளனர். எனவே, சர்க்கரை கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரேஷன் கடைகளில், முறைகேட்டை தடுக்க, தற்போது, ரேஷன் பொருட்கள் விற்பனை விபரம், எஸ்.எம்.எஸ்., செய்தி வாயிலாக, சம்பந்தப்பட்ட கார்டுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், பொங்கல் பரிசு வினியோக விபரமும், எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்பட உள்ளது.

- நமது நிருபர் -
ரஜினி முடிவுக்காக காத்திருக்கும் கமல்

Added : டிச 31, 2017 01:39 | 



  அரசியல் பிரவேசம் தொடர்பாக, ரஜினியின் இன்றைய அறிவிப்பிற்காக, நடிகர் கமல் காத்திருக்கிறார். அதைப் பொறுத்தே, அவரது வியூகங்கள் அமையும் என, தெரிகிறது.
நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக, அவரது ரசிகர்கள், பல ஆண்டாக காத்திருக்கின்றனர். இந்த சூழலில், அரசியல் கட்சி துவங்கப் போவதாக, கமல் அறிவித்தார். அரசியல் கருத்துக்களை, சமூக வலைதளங்களில் உதிர்க்கத் துவங்கினார். அதற்கு, அ.தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், 'புத்தாண்டில், தமிழக சுற்றுப்பயணம் செய்த பின், அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பேன்' என, நவ., 7ல் அறிவித்தார். பின், அமெரிக்காவுக்கு சென்றுவிட்ட அவர், அரசியல் கருத்துக்கள் எதுவும் கூறாமல், படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். இந்த சூழலில், சென்னையில், ஐந்து நாட்களாக ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, தன் அரசியல் பிரவேசம் குறித்து, இன்று அறிவிப்பதாக கூறியுள்ளார். அது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, அமெரிக்காவில் இருக்கும் கமல், ரஜினியின் முடிவுக்காக காத்திருக்கிறார். அவரது முடிவை பொறுத்தே, தமிழக சுற்றுப்பயணம் மற்றும் இதர அரசியல் விவகாரங்களில், கமலின் முடிவுகள் அமையும் என, தெரிகிறது.


- நமது நிருபர் -
ரஜினி துவக்குவது கட்சி அல்ல., பேரவை ? இன்று அறிவிப்பு

Updated : டிச 31, 2017 00:07 | Added : டிச 30, 2017 20:46 



  சென்னை: நடிகர் ரஜினி இன்று கட்சி துவக்குவாரா ? அல்லது பேரவை துவக்கி மக்கள் சேவை செய்ய போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் பேரவை என்ற பெயரில் தனி இயக்கம் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது இன்று (டிச.,31). பத்திரிகையாளர்களை கூட்டி இதை அறிவிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ரஜினி தொடர்ந்து பல கட்டங்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். ரசிகர்களுடன் இணைந்து போட்டோவும் எடுத்து கொள்கிறார்.
கடந்த சந்திப்பின் போது போர் வரும் போது பார்க்கலாம் என்றார். இந்த வார சந்திப்பில் , " அரசியலில் நான் ஏற்கனவே இருக்கிறேன். யுத்தத்திற்கு போவது முக்கியமல்ல, ஜெயிக்கனும், இதற்கு வியூகம் முக்கியம்." வரும் 31 ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றார். இதனால் ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மன்ற நிர்வாகி கருத்து

ரஜினியின் அடுத்த மூவ் எப்படி இருக்கும் என்பதை தென்மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ரஜினி ரசிகர்களின் கருத்தை கேட்டு வருகிறார். மக்களிடம் நெருங்கி பழக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என ரசிகர்களிடம் கேட்டார். முதலில் பேரவை துவக்கி அதை இயக்கமாக மாற்றி , கீழ்மட்டம் வரை நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் மக்கள் பிரச்சனையை தீர்க்க அவர் பணியாற்ற வேண்டும். மக்கள் மனங்களில் இடம் பிடித்த பின்னர் அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனை ரஜினி ஏற்று கொண்டதாக தெரிகிறது.எனவே இன்று (31ம் தேதி ) முதலில் பேரவை துவக்குவது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அரசியல் கட்சியாக மாற்றுவது பற்றி அவர் பின்னர் அறிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தனிக்கட்சி ஆரம்பிக்காமல் இயக்கத்தை ஆரம்பித்து மக்களிடம் களப்பணி ஆற்றுவார். அதன் பிறகு அரசியல் பிரவேசம் இருக்கும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராக, அப்பலோ நிர்வாகம் 2 வாரம் அவகாசம் கோரியுள்ளது. #75dayinHospital #jeyalalithaa 
 
 விசாரணை ஆணையத்தில் ஆஜராக 2 வாரம் அவகாசம் கோரியது அப்பலோ நிர்வாகம்
சென்னை, 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.5 அன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை தொடங்கினார்.

ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் யார் வேண்டுமானாலும் அளிக்கலாம் என அவர் அறிவித்திருந்த நிலையில் ஜெ.தீபா, மாதவன் உள்ளிட்டோரும் , திமுக திருப்பரங்குன்றம் வேட்பாளர் சரவணன் உள்ளிட்டோரும் தகவல்களை அளித்தனர். இது தவிர ஆயிரக்கணக்கானோர் தகவல் அளித்துள்ளனர்.நூற்றுக்கணக்கானோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர்.

 விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஜன. 2ம் தேதி ஆவணங்கள் தாக்கல் செய்யுமாறு,  சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராக 2 வாரம் அவகாசம் அப்பல்லோ நிர்வாகம் கோரியுள்ளது. #inquirycommission #ApolloHospital, #75dayinHospital #jeyalalithaa
மின் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் முடிவெட்டும் கட்டணம் நாளை முதல் உயர்வு முடிதிருத்துவோர் நலச்சங்கம் அறிவிப்பு. 
 
 
சென்னை,

 முடிவெட்டும் கட்டணம் நாளை முதல் உயர்வு

தமிழ்நாடு முடிதிருத்தும் அழகுகலை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்க மாநிலத்தலைவர் வெ.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மின்கட்டண உயர்வு, கடை வாடகை உயர்வு, அழகு சாதன பொருட்கள் விலை உயர்வு, மழை பாதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, வார்தா–ஒகி புயல் போன்ற சூழ்நிலைகளால் முடிவெட்டும் கட்டணத்தை உயர்த்தவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளோம். எனவே 1–ந்தேதி (நாளை) முதல் இந்த கட்டண உயர்வை எங்கள் நிலையறிந்து மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உயர்த்தப்பட்ட முடிவெட்டும் கட்டணம் வருமாறு:– (அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம் உள்ளது)

வகைகள் – ஏசி வசதி இல்லாத கடை – ஏசி வசதி உள்ள கடை 

முடிவெட்டுதல் :– 110 (100) – 120 (110)

புதுமாதிரி முடி வெட்டுதல் :– 150 (120) – 175 (150)

முகமழித்தல் :– 60 (50) – 100 (75)

சிறப்பு முகமழித்தல் :– 75 (60) – 100 (75)

சிறுவர்களுக்கு முடிவெட்டுதல் :– 100 (90) – 120 (100)

சிறுமிகளுக்கு முடிவெட்டுதல் :– 110 (100) – 130 (110)

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
புத்தாண்டு கொண்டாட வரும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

புத்தாண்டு கொண்டாட வரும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
 
மாமல்லபுரம் கடற்கரைக்கு புத்தாண்டு கொண்டாட வரும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி அளித்தார். 
 
மாமல்லபுரம், 

மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவற்றின் இயக்குனர்கள், உரிமையாளர்களை அழைத்து தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் தலைமையில் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பிறகு புத்தாண்டு பிறப்பு நள்ளிரவு அன்று ஓட்டல் நிர்வாகத்தினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் விளக்கி கூறினார்.
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சாக்கில் சுற்றுலா வரும் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களில் இரவு 12 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்க கூடாது. கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. குறிப்பாக கடற்கரை நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உள்ளவர்கள் இரவு 12 மணிக்கு மேல், அறைகளைவிட்டு வெளியே வர கூடாது. பின்புறம் உள்ள கடற்கரை பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு புத்தாண்டு கொண்டாட வரும் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்கள் தரும் உணவு பண்டங்களை வாங்கக்கூடாது. மாமல்லபுரம் கடற்கரை சாலை, ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாடத்தின்போது மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்
குற்ற செயல்களை கண்டுபிடிக்கும் வகையில் சாதாரண உடையிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் 10 தற்காலிக சோதனை சாவடிகள் மூலம் வாகன தணிக்கை செய்யப்படும்.

இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, மாமல்லபுரம் ஓட்டல்கள் சங்க நிர்வாகிகள் சண்முகானந்தன், கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, December 30, 2017

No decision on engineering passouts via correspondence mode: HRD minister Prakash Javadekar

By Express News Service  |   Published: 29th December 2017 08:38 PM  |  
 
Union Minister Prakash Javadekar (File | PTI)
NEW DELHI: The Centre has not yet taken a view on the validity of degrees of thousands of engineers who passed out through distance learning mode even as the apex court last month had declared degrees granted by four universities invalid.

The Supreme Court, in early November, while hearing a case on the validity of engineering programme offered via correspondence from four deemed universities had said that engineering degrees granted through correspondence secured from 2001 onwards were invalid.
The Universities included JRN Rajasthan Vidyapeeth, Institute of Advanced Studies in Education in Rajasthan, Allahabad Agricultural Institute and Vinayaka Mission's Research Foundation in Tamil Nadu.

The court, while asking students who took admission between 2001 and 2005 to revive their degree by undergoing a fresh examination by the All India Council for Technical Education, those who passed out after 2005 were offered no such option.

On being asked, whether the government has taken a view on the validity of those passed out from other institutes in the country, the Union Human Resources Development minister Prakash Javadekar today said the “matter is still under consideration.”

He was interacting with media persons on the achievements of his ministry in the year 2017.
Sources in the ministry said that over last few weeks, over 40 representations have come from different people who have asked the government to clarify its stance on the issue as thousands of people who have qualified as engineers since 2001 and are working in various organisations are now facing difficulty.

“In many cases, employers are putting question marks on their qualification and are threatening to remove them—so they are a harrowed lot,” a source in the ministry said.
The Supreme Court had cancelled the degrees on the grounds that the course offered by deemed universities via correspondence had not been approved by the AICTE.
It had also restrained all deemed universities across the country from continuing any distance learning courses from the 2018-19 without prior approval of the regulatory authorities.

DNB doctors express disappointment over removal of a clause for introducing single PG Board from the National Medical Commission Bill

By Sumi Sukanya dutta  |  Express News Service  |   Published: 29th December 2017 08:58 PM  |  

Image used for representational purpose.
NEW DELHI: Thousands of doctors across the country have expressed shock and disappointment over the removal of a clause for a single post graduate degree from the National Medical Commission Bill that was tabled in the Lok Sabha today.

The NMC bill, being introduced to overhaul the medical education in the country and replace the medical education regulator Medical Council of India, had earlier mentioned the merger of the Post-Graduation Board and the National Board of examination in the draft version.

But the clause has been dropped from the current version that was tabled in the parliament. While PG Board, under the MCI, awards MD/ MS (Doctor in medicine, Doctor in Science) degree to MBBS doctors, the NBE, under the Union Health and Family Welfare ministry, awards DNB (Diplomate of National Board), another post-graduation qualification but often considered inferior to MD/MS.
“India’s is the only country in the world that offers two types of PG qualifications to doctors and DNB doctors are always treated as inferior because they train at big speciality hospitals as opposed to MD/MS doctors who are attached with a medical college,” a senior member of the Association of DNB doctors told this newspaper.

 “While the health ministry, through a 2012 notification, had made it clear that both MS/MD and DNB doctors will be treated at par for all practical purposes, the discrimination will not end till there are two boards,” he said. “While the bill still talks about degree equivalence, it’s extremely disheartening that the merger clause has now been dropped.”

The association has about 30,000 members and it is now planning two write to the Prime Minister’s office and the health ministry to re-include the merger clause.

The association has also protested a recent MCI move to make it mandatory for DNB doctors to do three year senior residency in hospitals before they can start teaching at medical colleges. Doctors with MD/ MS degrees have no such compulsion.

The country produces 63,835 MBBS doctors but there are only 20,000 PG seats on offer. For about 15,000 doctors DNB is the route for getting specialisation, sources said.
The NMC bill, introduced in the Lok Sabha today, meanwhile aims to replace the MCI with a 25-Commission, with only five elected members. It is being formed to do away with “heavy handed regulatory control” over medical institutions and will also bring in a national licentiate examination at the end of MBBS course for doctors.

One of the mandates of the Commission is to ease the processes for colleges to manage undergraduate and postgraduate courses. Earlier, the MCI approval was needed for establishing, renewing, recognising and increasing seats in a UG course.
Under the new proposal, permissions would only be sought for establishment and recognition of medical colleges.

Pension Grievances

Continue college in less polluted Kolhapur: Bombay HC

THE ASIAN AGE.
Published : Dec 25, 2017, 5:07 am IST

The HC said that both Pune and Mumbai were more polluted than Kolhapur, and hence rejected the petition.


The Bombay High Court

Mumbai: The Bombay high court has rejected a petition filed by a medical student seeking a transfer from Kolhapur medical college to one of the colleges in Pune or Mumbai on grounds that she suffered from asthma and climate in Kolhapur was not conducive for her. Court held that both cities were more polluted than Kolhapur, which would only harm her. The student was 37th on the merit list for transfer to one of the nine vacant seats in colleges in Pune or Mumbai and had failed to secure one, hence the petition.

A division bench comprising of Justices B. R. Gavai and B. P. Colabawalla was hearing a writ petition filed by Janki Shende, a first year student of Government Medical College, Kolhapur, seeking a transfer in the open category to any of the five colleges she opted for in Pune or Mumbai due to health reasons. The petitioner prayed that since she had not managed a transfer, the court should direct the Director of Medical Education and Research (DMER) to do so. After hearing the petition and DMER’s reply, the court stated that authority had observed the criteria of merit and since the student was 37th in the list of merit for the nine vacant seats, there was nothing wrong in the state not giving her the desired transfer.

The HC said that both Pune and Mumbai were more polluted than Kolhapur, and hence rejected the petition.

Read more at Education Medical Dialogues: No Transfer for Medico on grounds of Pollution: High Court https://education.medicaldialogues.in/hc-rejects-petition-of-college-transfer-on-health-ground-declares-kolhapur-less-polluted/

24-yr-old techie acquitted of murder charge

By Express News Service  |   Published: 29th December 2017 02:49 AM  |  

CHENNAI: A Mahila Court in Chennai has acquitted a 24-year old B Tech graduate of the charge of murdering a 32-year-old post-graduate medical student at her apartment at Kilpauk two years ago.
The murder sent shock waves across the State.

Holding that the prosecution had failed to prove the case beyond reasonable doubt, the Mahila and Sessions Judge R N Manjula on Thursday acquitted Debanath Harindam, a native of Agartala in Tripura, also residing in the same apartment along with his doctor brother, who was working in a multi-specialty hospital in the city.

Debanath was a student of a private university at Maduravoyal and appeared for final exam in May in 2015. The victim, J Sathya, was a native of Perambalur pursuing her first year MS in Obstetrics and Gynaecology at Kilpauk Medical college. She was sharing the accommodation with her college senior at Kilpauk. Sathya’s husband, Eshu, also a doctor, lives in Perambalur town with his two children.

The victim’s room-mate, found her dead in the apartment on August 20, 2015. Kilpauk police arrested Debanath.
Passengers worry over railway portal safety

By B Anbuselvan | Express News Service | Published: 29th December 2017 02:45 AM |

Last Updated: 29th December 2017 07:52 AM

CHENNAI: The arrest of two persons, including a CBI assistant programmer, by officials of CBI in Delhi, for their alleged involvement in selling illegal software to travel agents to book ‘tatkal’ tickets faster through IRCTC website has left rail passengers worried over safety of their personal records, including Aadhaar details.

According to CBI sources, Ajay Garg, a software programmer for CBI since 2012 had allegedly sold illegal software to book ‘tatkal’ tickets faster in IRCTC website to hundreds of travel agents across the country. He was supported by a travel agent Anil Kumar Gupta, who was also nabbed by CBI on Wednesday.

During ticket booking, the software would enable user to bypass the IRCTC captcha and bank OTP. In addition, it will also reduce the time gap set by IRCTC for generating PNR numbers. Thus, making bookings possible within 20 to 30 seconds. Hundreds of tickets can be booked at one go, said sources.
While the incident had solved the mystery as to how travel agents are able to get tickets for a train, many rail passengers raised concerns over the safety of IRCTC website and details of crores of passengers.

“At a time when government was forcing tatkal ticket booking through IRCTC by closing counters, safety of website must be ensured. How can an external software make an influence in the website of national transporter ? asked S.Mohan Ram, a former member of zonal railway users consultative committee, Southern railway.

He said lakhs of passengers personal details including Aadhaar had been uploaded in the website. Passengers feel insecure over possible misuse of the records, he said.

CBI inquiry revealed that Ajay Garg was a former employee of IT wing at IRCTC. He had sound knowledge on the vulnerability of IRCTC portal and developed a fake software to exploit it.

Passengers suspect that such software would have been sold to many travel agents in Tamil Nadu, Kerala and Pondicherry too. Despite waiting lists over 100 in IRCTC website for a long distance train, travel agents are able to sell confirmed tickets for the same train for excess fares in several congested routes, including Chennai - Kolkata, Chennai - Santrakachi, Chennai - New Delhi, Chennai - Coimbatore and Chennai - Tirunelveli.

“Earlier, IRCTC earmarked two percent berths for select travel agents who helped to increase revenue through other business. It was scrapped after 2010. But, they continue to book tatkal tickets ahead of rail passengers. Though such incidents happened openly, railway officials, RPF and Vigilance wing of railways remain mute spectators,” said a member of DRUCC, on the condition of anonymity.

The trend of train tickets getting booked in less than a minute was observed by many rail users in 2008. Though the issue was taken up with railway officials, it fell only on deaf ears, say passengers. K Baskar, a former member of Divisional Railway users consultative committees, Chennai said that in 2009, during rail users consultative meeting at Chennai a group of members raised suspicion over tatkal bookings through website in less than a minute when even the older version of IRCTC website was too slow.

IRCTC officials denied any possibility of misuse of passenger details.
Clarification sought on validity of distance education degrees 

DH News Service, New Delhi, Dec 29 2017, 23:00 IST



Several employers and students have sought clarification from the HRD Ministry on the validity of the degrees in technical education granted by Indira Gandhi National Open University and others in distance education mode since 2001. File photo for representation

Several employers and students have sought clarification from the HRD Ministry on the validity of the degrees in technical education granted by Indira Gandhi National Open University and others in distance education mode since 2001.

The requests for clarification comes in wake of a recent Supreme Court verdict which suspended B tech degrees obtained by students from four deemed-to-be universities through various distance education programmes between 2001-2005.

In its verdict on a bunch of petitions, the apex court noted that the JRN Rajasthan Vidyapeeth, Udaipur, Rajasthan; Institute of Advanced Studies in Education, Sardarshahr, Rajasthan; Vinayaka Mission's Research Foundation and Allahabad Agricultural Institute, Uttar Pradesh had not taken prior approval from the All India Council for Technical Education (AICTE) to offer technical courses.

The court had held that the ex post facto approval granted to these four deemed-to-be-universities for their correspondence courses in engineering by the University Grants Commission (UGC) on the recommendation of the erstwhile Distance Education Council was "incorrect and illegal".

It cancelled all engineering degrees granted by the four deemed-to-be-universities beyond 2005, directing the AICTE to conduct a test for students who obtained their degrees from the four universities between 2001-2005.

"The HRD ministry has received request from several employers and the students groups for clarification on the apex court's verdict," official sources said.

While the employers have requested for a clarification on the validity of the engineering degrees obtained by their employees through distance education programmes of Ingnou and other institutions, students have sought clarification on the impact of the Supreme Court verdict on their engineering degrees that they obtained through open and distance education.

"The employers who have sought clarification includes some government organisations from various states," sources said.

A top HRD ministry official said the department concerned was going through the apex court's judgement to understand its larger implication.

"There are suggestions to seek the opinion of the Attorney General on the issue, besides seeking details from the UGC and other regulatory bodies. A final decision, however, is yet to be taken by the ministry in this regard," another official said.

சாங்கி விமான நிலையத்தில் புதிய துணைப் பேருந்துச் சேவை

சிங்கப்பூர்: கிழக்கு மேற்கு ரயில் பாதையின் கிழக்குப் பகுதியில் அடுத்த மாதம் ரயில் சேவைகளின் குறைவான செயல்பாட்டு நேரம் காரணமாக சாங்கி விமான நிலையப் பயணிகளுக்குப் புதிய துணைப் பேருந்துச் சேவை அறிமுகம் காணும்.

மூன்றாவது முனையத்தின் நுழைவாயில் 8-இலிருந்து பேருந்துச் சேவை புறப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்தார்.

வழக்கமான பொதுப் பேருந்துச் சேவைகளின் பேருந்துகள் பயன்படுத்தப்படுவதால், அவற்றில் பயணப்பெட்டிகளை வைப்பதற்குத் தனி இடங்கள் இல்லை. அதற்குப் பதிலாக, சக்கர நாற்காலி அல்லது குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பயணப் பெட்டிகளை வைக்கலாம் என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

இன்றுSMRT (1) தொடக்கம்: ரயில் பயணச் சலுகைக் கட்டணம்

SMRT (1)
இன்று முதல் வார நாட்களில் காலை 7.45 மணிக்கு முன்னர் பயணம் செய்யத் தொடங்கும்போது கட்டணங்கள் 50 காசு வரை குறையும்.
காலை உச்ச நேரத்துக்கு முந்திய இலவசப் பயணத் திட்டத்திற்குப் பதிலாக இந்தப் புதிய திட்டம் நடப்புக்கு வந்துள்ளது.

முந்திய திட்டத்தில் காலை 7.45 மணிக்கு முன்னர், குறிப்பிட்ட 18 ரயில் நிலையங்களைச் சென்றடையும் பயணிகள் மட்டுமே இலவசப் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது.
புதிய திட்டம் எல்லா ரயில் நிலையங்களுக்கும் பொருந்துமென பொதுப் போக்குவரத்து மன்றம் தெரிவித்தது.

அதன்மூலம் சுமார் 300,000 பயணிகள் பயனடைவர். ஒப்புநோக்க, முந்திய திட்டத்தின்மூலம் சுமார் 65 ஆயிரம் பயணிகள் பயனடைந்தனர்.
Fall only at the feet of God and parents, not mine, Rajini says

TIMES NEWS NETWORK

Chennai: Actor Rajinikanth praisedthe peopleof Madurai on Thursday in his address to a large gathering of his fans from the politically crucial constituency.

It was the movie ‘Murattu Kaalai’ (1980), set in a village near Madurai, which catapultedthe actor tosuperstardom and paved the way for his political ambitions.

Rajinikanth said that the people of Madurai are known for their valour, in a possible referencetohisearlier speech asking fans to “be ready for war (election)”.

The ‘Kaala’ actor’s fans continued to fall at his feet on Thursday, the third day of the six-day photoshoot event. He pleaded with his fans to not do so, but his pleas fell on deaf ears.

“Fall only at the feet of God, mother and father. Do not fall at the feet of someone just because he has got wealth, fame and power,” said Rajinikanth before the photoshoot started on Thursday morning.

During his five-minute address to fans, Rajinikanth said, “When I was about 16 years old, I went to the 100th day celebration event of a Rajkumar-starrer in Bangalore. When I saw Rajkumar for the first time, I was filled with awe and I could not even see him as he was. Only scenes from his films were playing in my mind. I went and touched him in admiration. So, I can understand your enthusiasm.”

Rajinikanth told the weary fans, who had spent the night travelling to the city, “I wish to treat you to a mutton feast, but here at Raghavendra marriage hall, weonly serve vegetarian food. We will have a feast somesday at some other place.”

The actor met close to a thousand fans from Madurai, Virudhunagar, Salem and Namakkal districts on Thursday. He is scheduled to meet fans from Coimbatore, Tirupur, Erode and Vellore districts on Friday.


HERO WORSHIP? The ‘Kaala’ actor’s fans continue to fall at his feet, like this man on Thursday, despite him asking them not to do so

Bill tabled in LS to replace medical council of India

TIMES NEWS NETWORK

New Delhi: Amid protests by opposition members, health minister J P Nadda on Friday introduced a bill in the Lok Sabha to replace the apex medical education regulator-—Medical Council of India (MCI) — with a new body to bring in more transparency in its functioning.

Congress members protested the introduction of the National Medical Commission Bill, demanding that it be sent to the standing committee for a thorough scrutiny. However, Nadda clarified that the committee’s suggestions have already been incorporated.

Speaker Sumitra Mahajan told the opposition members that they should follow parliamentary procedures and give prior notice to air their disagreement with the bill’s introduction. The bill provides for constitution of four autonomous boards entrusted with conducting undergraduate and postgraduate medical education, assessment and accreditation of medical institutions and registration of practitioners under the national medical commission.

The bill states that the commission will have government-nominated chairman and members, and the board members will be selected by a search committee under the cabinet secretary.

There will be five elected and 12 ex-officio members in the panel. It also proposes a common entrance exam and licentiate exams which all medical graduates will have to clear to get practising licence. No permission would be needed to add new seats or start post-graduate courses, it says.

Sources said the bill is aimed at bringing reforms in medical education which has been under scrutiny for corruption and unethical practices.

The MCI has been in the news in the recent past for all the wrong reasons including allegations of corruption in allotment of medical seats in private colleges.
Former income tax DG gets clean chit in corruption case

TIMES NEWS NETWORK

Chennai: A former director general of income tax has been acquitted in a corruption case registered 12 years ago. Charged with helping a company escape withtax evasion tothetune of several lakhs, a special court for CBI cases here gave him a clean chit as the investigating agency could not master enough evidence.

N P Tripathy, who faced the charges when he was the commissioner of I-T, Chennai, recently retired as the director general of the department.

In September 2002, after conducting raids in the office and official residence of Tripathy, the CBI registered a case against him and five others associated with a private hospitality company for offences of criminal conspiracy, cheating and corruption under IPC and Prevention of Corruption Act, 1988.

The central agency alleged that when Tripathy was commissioner of I-T during 2000-01, he issued a certificate to the company enabling it tosellits properties attached by the department for pending tax dues to the tune of ₹73 lakh.

Originally, when the firm approached the department to provide a certificate to enable disposal of its properties, then joint commissioner concerned had recommended that such a certificate should not be granted as the company had to pay huge dues to the department.

Subsequently, the official concerned went on leave and Tripathy, given additional charge of theformer’s office, issued the certificate.

Special judge G Vijayalakshmi noted that the prosecution had failed to prove the guilt of the officer beyond reasonable doubt and acquitted him from all the charges.
After the state board, Anna univ sends out results through SMS es

TIMES NEWS NETWORK

Chennai: In an attempt to make semester scores easily accessible to students, Anna University for the first time has sent exam results through text messages.

More than five lakh students from nearly 530 colleges affiliated to the university took their semester exams during November and December. Nearly 15,000 examiners were involved in evaluating 42 lakh answer scripts.

Besides uploading the results on the official website, the controller of examination GV Uma in an official release said that subject-wise results were sent to registered cellphone numbers of students on Friday evening.

A similar attempt was made by the state school education department while releasing Class X and XII board exam results this year and the procedure was extended to Anna University.

Also, more than 1,400 students were caught for resorting to malpractice during the semester exam, the release added.
விடைபெறும் 2017: கவனம் ஈர்த்த நட்சத்திரங்கள்

Published : 29 Dec 2017 10:42 IST

க. நாகப்பன்




தமிழ் சினிமா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் திரையுலகுக்குப் புது நம்பிக்கையைக் கொண்டுவருகிறது; புது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. ஓராண்டில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 1,000-க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்தாலும் அதில் மிகச் சிலரே தங்கள் நடிப்பின் மூலம் மக்கள் அபிமானத்தைப் பெறுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டில் கவனம் ஈர்த்த திரை முகங்கள்.


விஜய் சேதுபதி


இந்த ஆண்டில் தெறிக்கவிட்ட மாஸ் நடிகர் விஜய் சேதுபதிதான். ‘விக்ரம் வேதா’ படத்தில் வடையைக் கையில் வைத்துக்கொண்டு கெத்தாகக் காவல் நிலையத்துக்குள் நுழையும் அந்த மாஸ் சீன் அவருக்கு மிகச் சரியாக எடுபட்டது. ரவுடிக்கான உடல் மொழியுடன் கம்பீரம் காட்டியது, உணர்வுபூர்வமான தருணங்களில் நெக்குருகியது, துரோகம் உணர்ந்து பழிதீர்த்தது என அழுத்தம் மிகுந்த கதாபாத்திர வார்ப்பில் விஜய் சேதுபதி மிளிர்ந்தார்.


கார்த்தி

வழக்கமான போலீஸ் ஹீரோவுக்கான அம்சங்களைத் தவிர்த்துவிட்டு, உண்மையான போலீஸ் அதிகாரியின் இயல்பை, குணநலனைப் பிரதிபலித்திருந்த விதத்தில் கச்சித நடிப்பை வழங்கி நல்ல முன்மாதிரியாகத் திகழ்ந்தார் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் தீரன் திருமாறன் ஐ.பி.எஸ்ஸாக நம்பவைத்த கார்த்தி.


விஜய்

‘மெர்சல்’ படத்தில் மேஜிக் நிபுணர், மருத்துவர், கிராமத்து இளைஞர் என மூன்று கதாபாத்திரங்களுக்கும் தேவையான வித்தியாசங்களை விரும்பி ஏற்றிருந்தார் விஜய். தோற்றம், நடிப்பு, ஆக்ஷன், வசன உச்சரிப்பு என அனைத்து அம்சங்களிலும் ரசிகர்களுக்குத் தேவையான நிறைவைக் கொடுத்தார்.


சத்யராஜ்

‘பாகுபலி 2’ -ல் கட்டப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் எல்லையற்ற பரிமாணங்களில் அசத்தினார். பிரபாஸுடன் கள்ளம் கபடமில்லாமல் பழகுவது, ராஜாமாதாவின் கட்டளைக்குப் பணிவது, ‘தவறு செய்துவிட்டாய் சிவகாமி’ எனச் சுட்டிக்காட்டுவது, பாகுபலியைக் கொன்ற பிறகும் அன்பைப் பொழிவது எனத் தனக்கான காட்சிகள் அத்தனையிலும் முத்திரை பதித்தார்.


ராஜ்கிரண்

ராஜ்கிரணைக் கிட்டத்தட்ட எல்லாக் கதாபாத்திரங்களிலும் பார்த்தாகிவிட்டது. இன்னும் என்னிடம் வியக்கத்தக்க விஷயங்கள் இருக்கின்றன என்று ‘ப.பாண்டி’யில் ரசிக்கவைத்தார். முன்னாள் காதலியை நினைத்து உருகி, அவரைத் தேடிச் செல்லும் பயணத்தில் மாறா அன்பில் திளைக்கும் கதாபாத்திரமாகவே தெரிந்தார்.


நயன்தாரா

நாயக பிம்பத்தைத் தூக்கி நிறுத்தும் சாகச அம்சம் அதிகமில்லாத ‘அறம்’ படத்தில் கதாபாத்திரத்துக்கான நடிப்பை மட்டும் தந்தார். சிறுமியை மீட்கப் போராடும்போது பெற்றோரின் உணர்வைத் தூண்டிவிடக் கூடாது என்பதற்காகத் தன் உணர்வைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் நயன்தாரா சிறுமி மீட்கப்பட்ட பிறகு உடைந்து அழும் அந்த ஒற்றை அழுகையால் பார்வையாளர்களை உலுக்கினார் மக்களின் ஆட்சியர் மதிவதனியாக களத்தில் நின்ற நயன்தாரா.


ஆன்ட்ரியா

தரமணி படம் முழுக்க ஆர்ப்பாட்டமில்லாத அழகான நடிப்பைக் கொடுத்தார் ஆன்ட்ரியா. தவறான கண்ணோட்டத்துடன் தன்னை அணுகும் மனிதர்களை அவர் எதிர்கொண்ட விதத்தில் பாராட்டை அள்ளினார். அம்மா, காதலி, ஐ.டி.யில் வேலை பார்க்கும் பெண் போன்ற எல்லாப் பரிமாணங்களிலும் சுயசார்போடும் சுயமரியாதையோடும் அதே நேரத்தில் கனிவோடும் உயர்ந்து நின்றார்.


அதிதி பாலன்

‘அருவி’ படத்தில் நம்ப முடியாத அளவுக்கு பிரமிக்க வைத்தார் அதிதி பாலன். குதூகலம், துயரம், ரவுத்திரம் என எதுவாக இருந்தாலும் தண்ணி பட்ட பாடு என்று எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டார். ஒரே பெண்ணைச் சுற்றி நடக்கும் கதையில் ஒட்டுமொத்த வலியையும் வலிமையையும் உணர்த்திய அதிதியின் நடிப்பில் இயல்பும் எளிமையும் இறுதிவரை இழையோடியது.


அனுஷ்கா

‘பாகுபலி 2’ படத்தில் ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரம் சரிவைச் சந்தித்தது என்றால் அனுஷ்கா கதாபாத்திரம் உயர்ந்து நின்றது. ‘கைதியாக வரமாட்டேன்’ என நாயகனிடம் சுயமரியாதையுடன் பேசுவது, ஒரு வரம் கேட்பது போல, பரிசு வேண்டும் எனக் கணவனை அரியாசனத்தில் அமரச் சொல்வது, கசப்பான அனுபவங்களையும் பக்குவமாக எதிர்கொள்வது, எல்லோரும் அஞ்சும் ரம்யாகிருஷ்ணனிடம் எதிர்த்து அறம் பேசுவது எனப் படம் முழுக்க ஜொலித்தார் அனுஷ்கா.


அருண் விஜய்

அருண் விஜய் சினிமாவுக்கு வந்து 22 வருடங்களைக் கடந்துவிட்டார். ‘குற்றம் 23’ அவர் நடித்த 20-வது படம். போலீஸ் அதிகாரிக்கான தோரணை, கம்பீரப் பார்வை, நிதானமான அணுகுமுறை எனத் தான் ஒரு ‘ஹீரோ மெட்டீரியல்’ என்பதை ‘குற்றம் 23’ படத்தில் வெளிப்படுத்திய நிதானமான நடிப்பின் மூலம் உரக்கச் சொன்னார்.


சந்தீப் கிஷன்

‘அக்கட தேச’த்தில் அறிமுகமாகி ‘யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இடம்பெயர்ந்தவர் சந்தீப் கிஷன். ‘மாநகரம்’ படத்தில் நகரத்து இளைஞனின் மனவோட்டத்தை அப்படியே பிரதிபலித்தார். இன்றைய தன்னம்பிக்கை இளைஞனுக்கான பக்கா ‘கேரக்டர் ஸ்கெட்ச்’. காதலி ரெஜினாவின் அலட்சியத்தைத் தாங்கும் பக்குவம், தவறைத் தட்டிக் கேட்கும்போது வெளிப்படும் கோப முகம் என அசல் நடிப்புக்கான களம் என்பதை உணர்ந்து ‘மாநகரம்’ படத்தில் சந்தீப் ஈர்த்தார்.


ராமதாஸ்

‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’ ஆகிய இரு படங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார் ராமதாஸ். ‘மாநகரம்’ படத்தில் நானும் ரவுடிதான் என நிரூபிப்பதற்காக அவர் எடுத்த முயற்சிகள் சொதப்பலில் முடிந்தாலும் அவர் கொடுத்த பில்டப்புகள் வெடித்துச் சிரிக்க வைத்தன. ‘மரகத நாணயம்’ படத்தில் சிறு கடத்தல்காரனாகவும், இறந்த பிறகு ஆவி புகுந்த கூடாகவும் இரட்டை வேடங்களில் பிரமாதப்படுத்தினார்.


ராஜகுமாரன்

சாந்தமே நிரம்பிய ஒரு ஜோக்கர் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு ‘கடுகு’ படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தின் மூலம் அர்த்தமுள்ள விடையைத் தந்தார் ராஜகுமாரன். வசனம் பேசுவதிலும் உச்சரிப்பிலும் கொஞ்சம் நிதானமும் தயக்கமும் இருந்ததே என்று யோசித்தால், அதுவே ராஜகுமாரனின் வெகுளித்தனமான கதாபாத்திரத்துக்கான இயல்பான மொழியாக உருப்பெற்று அவரது நடிப்பை ஈர்த்தது.


எம்.எஸ்.பாஸ்கர்

ஒரு கலைஞனுக்கான மிகப் பெரிய சவால், தனக்கான இலக்கை அடையும்வரை காத்திருப்பதே. அந்தக் காத்திருப்பு கைவரப்பெற்றதால் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் மைல் கல்லைத் தொட்டிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். சமூகத்தால், குடும்பத்தால் ஒதுக்கப்படும் ஒரு முதிய ஆணின் வலியை, சோதனையை, வேதனையை, ஆவேசத்துடன் அபாரமாக வெளிப்படுத்தினார்.

பிரசன்னா

கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில் பிரசன்னா இந்த ஆண்டு பிரகாசித்திருக்கிறார். ‘ப.பாண்டி’யில் அப்பாவின் வம்புகளால் தர்மசங்கடப்பட்ட பிரசன்னா, ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் எவ்வளவு மோசமான சூழலில் இருந்தாலும் கொஞ்சம் சிரிங்க பாஸ் என்று சிம்ஹாவைக் கடுப்பேற்றுவது, அடி வாங்கிக்கொண்டிருந்தபோதும் புன்னகையுடன் மிரட்டுவது என பலே நடிப்பை வழங்கினார்.


அமலாபால்

குறும்புப் பெண், அன்பான மனைவி, கூடா நட்பில் சிக்கித் தவிக்கும் அபலைப் பெண், சொல்ல முடியாமல் மருகி நிற்கும் கையறு நிலை, சந்தர்ப்பத்தைச் சமாளிக்கும் திறன் என ‘மைனா’வுக்குப் பிறகு ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் தனக்குக் கிடைத்திருக்கும் வலுவான கதாபாத்திரத்தில் பொருந்தி நடித்த அமலாபால், பார்வையாளர்களை அட போட வைத்தார்.


விதார்த்

கதாபாத்திரத்தின் இயல்பான வாழ்க்கை முறைக்கும் கதைக்களத்துக்கும் முக்கியத்துவம் தரும் நம்பிக்கைக்குரிய விதத்தில் தடம் பதித்தார் விதார்த். ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘குரங்கு பொம்மை’ படங்கள் அதற்கு சாட்சிகள். வணிக சினிமாவின் கட்டுப்பாடுகள் குறித்து கவலைப்படாமல் மக்களில் ஒருவராகத் தனித்து நின்று, இயல்பு மீறா நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.


எஸ்.ஜே.சூர்யா

‘ஸ்பைடர்’ படத்தில் பார்த்ததும் பயப்படுகிற மாதிரியான மிரட்டலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதும், பிணத்தின் அருகில் நின்று அழும் நபர்களைப் பார்த்துச் சிரிக்கும் குரூரமான பாத்திரத்தில் குறை வைக்காமல் நடித்தார் எஸ்.ஜே.சூர்யா. அவரின் பாத்திரப் படைப்பு விமர்சனத்துக்குட்பட்டதாக இருந்தாலும் நாயகன் மகேஷ்பாபுவைத் தாண்டியும் இவரது நடிப்பு பேசப்பட்டது.


பகத் ஃபாசில்

சினிமாவில் நடிகர்கள் சிலர் பக்கம் பக்கமாக வசனம் பேசி, தொண்டை வறள கருத்துச் சொல்லி ஸ்கோர் செய்வார்கள். ஆனால், அதெல்லாம் தேவையே இல்லை. எல்லாவற்றையும் அப்படியே தூக்கிச் சாப்பிடுவேன். நான் நடிகன்டா என்று விழிமொழியில் வியப்பை ஏற்படுத்தினார் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்த பகத் ஃபாசில். ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் தந்திர நடிப்புக்கு பகத் பளிச் உதாரணம்.


கவனம் பெறத் தவறியவர்கள்

போதிய களமும் கதாபாத்திரமும் அமைந்தும் கவனம் பெறத் தவறியவர்களின் பட்டியலில், விஜய் ஆண்டனி – ‘எமன்’, ‘அண்ணாதுரை’, ஜீவா – ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, விக்ரம் பிரபு – ‘சத்ரியன்’, ‘நெருப்புடா’, சிம்பு – ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, அதர்வா - ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’, ஜி.வி.பிரகாஷ் - ‘புரூஸ்லி’.


அசத்திய மேலும் சிலர்!

> நகைச்சுவை, காதல், குறும்புதான் தன் பலம் என நினைத்த சிவகார்த்திகேயன், ‘வேலைக்காரன்’ மூலம் தன் பாதையை தீர்மானித்திருக்கிறார். நீளமான வசனங்களை அசாதாரணமான திருத்தத்துடன் உச்சரித்து, பொறுப்புள்ள இளைஞனை கண்முன் நிறுத்தினார்.

> ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோ வைபவைவிட நடிப்பில் கவனம் ஈர்த்தார் விவேக் பிரசன்னா. அண்ணனின் நண்பனைக் காதலிக்கத் தொடங்கி, அந்த அவஸ்தையை அழகாகக் கடத்தி பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்தில் பாஸ்மார்க் வாங்கினார் இந்துஜா.

> இறந்துபோன பிறகு ரவுடியின் ஆவி உடலுக்குள் புகுந்துகொள்வதால் அதற்கேற்ப உடல்மொழியை மாற்றி சிறப்பாக நடித்தார் ‘மரகத நாணயம்’ நிக்கி கல்ராணி.

> அறிமுகப் படத்தில் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பைத் தந்து, தோற்றாலும் ஜெயித்தாலும் ‘மீசைய முறுக்கு’ எனச் சொல்லி இளைஞர்களைச் சுண்டி இழுத்தார் ‘ஹிப் ஹாப்’ ஆதி.

> வாய் நிறையச் சிரித்தே கொடூரக் கொலை புரிந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார் ‘குரங்கு பொம்மை’ இளங்கோ குமரவேல்.

> ‘நீ என்னை கொல்லப் போறதானே’ என்று வெகுளியும் வேதனையும் நிரம்ப உருக்கமான ஒரு கதையைச் சொல்லி உயிர் பலிக்கு சம்மதித்த ‘குரங்கு பொம்மை’ பாரதிராஜாவின் நடிப்பில் அப்படியொரு நம்பகம்.

> ‘அறம்’ படத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் கண்டு பதைபதைக்கும் பெற்றோர் கதாபாத்திரத்தில் ராமச்சந்திரன் துரைராஜும் சுனுலட்சுமியும் மனதைக் கரைத்தனர்.

> இமிடேட் செய்வது, நகைச்சுவை என்ற பெயரில் அதீத உணர்வுகளை வெளிப்படுத்துவது என எந்த ரிப்பீட்டும் இல்லாமல் ‘பண்டிகை’ படத்தில் உயிரைப் பணயம் வைத்துச் சண்டையிடும் குத்துச்சண்டை வீரராக கிருஷ்ணா பொருத்தமாக நடித்தார்.

‘நெடுஞ்சாலை’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக வந்த ஷிவதா ‘அதே கண்கள்' படத்தில் இரு விதமான பரிமாணங்களில் அதகளம் செய்தார்.

> ‘கருப்பன்’ படத்தில் அன்பின் அடர்த்தியிலும் கணவருடனான அந்நியோன்யத்திலும் ரசிக்கவைத்தார் தான்யா ரவிச்சந்திரன்.

> ‘நானும் மதுரைக்காரன்தான்டா’ என்று சத்தம் போடுவது, பஸ் ஏறி அடுத்த ஊருக்குச் சென்று வில்லன்களைப் புரட்டி எடுப்பது என்று வழக்கமான பாணியில் இருந்து விலகி, பாத்திரம் உணர்ந்து நடித்த ‘துப்பறிவாளன்’ விஷால் திரும்பியும் விரும்பியும் பார்க்கவைத்தார்.

> ‘வேலைக்காரன்’ படத்தில் மகனின் கனவு நனவாக உறுதுணை புரியும் அப்பாவாக, ‘பாம்பு சட்டை’ படத்தில் சாக்கடை அள்ளும் தொழிலாளியாக, ‘மாநகரம்’ படத்தில் திசை தெரியாமல் திணறும் ஆட்டோ ஓட்டுநராக என யதார்த்த நடிப்பில் முத்திரை பதித்தார் சார்லி.

> ‘இறுதிச்சுற்று’ படத்துக்குப் பிறகு அசால்ட் நடிப்புக்குப் பெயர் போனவராகத் திகழும் மாதவன் ‘விக்ரம் வேதா’வில் நேர்த்தியான நடிப்பால் ஈர்த்தார்.

> தமிழ் சினிமாவின் சித்தரிப்பில் பாலியல் தொழிலாளி எப்படி இருப்பார் என்று இதுவரை ஆகிவந்திருக்கும் கட்டமைப்பைத் தனது நடிப்பின் மூலம் ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ படத்தில் உடைத்தெறிந்தார் சாண்ட்ரா எமி.

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்...

By அருணன் கபிலன் | Published on : 29th December 2017 01:26 AM | 


 உலகில் எல்லா உயிரினங்களும் போராடியே வாழ்கின்றன. அவற்றின் போராட்டங்களில் முதன்மையானது உணவுக்காகத்தான். கானக வாழ்க்கையில் மற்ற உயிர்கள் தங்களுக்கான உணவை இயல்பாகவே பெற்றுவிடுகின்றன. ஆனால் மனிதர்களுடனான சமூக வாழ்வில் அவை உழைத்தோ, தேடியோதான் பெற முடிகிறது. மற்ற விலங்குகளுக்கு உணவு எளிதாகக் கிடைத்து விடுவதைப்போல மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை. ஒருநாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் மிகக்குறைவே. 

நகர வாழ்வில் மனிதர்கள் படும்பாடு அதிகம். அதிலும் உணவுக்காக அவர்கள் கையேந்தி நிற்பது கொடுமையிலும் கொடுமை. பச்சிளம் குழந்தைகளைக் கையிலேந்தி நிற்கிற தாய்மார்களிலிருந்து தொடங்கி சிறுவர்கள், பெண் பிள்ளைகள், முதிய வயதுடைய ஆண்களும் பெண்களும் உணவுக்காக பிச்சைபெற நிற்கிறார்கள்.


இந்தியாவில் 6 இலட்சத்து 30 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்றும், தற்போது 3 இலட்சத்து 72 ஆயிரமாக அவர்கள் குறைந்திருக்கிறார்கள் என்றும், பிச்சை எடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள், வீடுகளில் இருந்து விரட்டப்பட்டவர்கள் என்றும் ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது. இதில் 5,000 பேர் பட்டதாரிகள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.
பிச்சையெடுப்பதை ஒரு குற்றமாகக் கருதித் தண்டனை வழங்கும் நடைமுறைகளும் இந்தியாவில் உண்டு. அண்மையில் ஹைதராபாத் நகரத்தில் பிச்சையெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தில் மட்டும் சுமார் 6,000 பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.


இல்லாதவர்கள் கேட்கிற நிலைக்குப் பிச்சை என்று பெயர்; அது தர்மக் கணக்கில் சேரும். ஆனாலும் பிச்சையை இது ஆதரிப்பதாகக் கொள்ளுதல் கூடாது. ஈ என இரப்பது இழிவானதுதான் என்றாலும் ஈய மாட்டேன் என்று மறுப்பது அதனினும் இழிநிலைதானே என்று கேட்கிறது சங்கப்பாடல்.


பிச்சைக்கு முதற்காரணம் பசி என்றாலும் அதனுடைய மறுகாரணம் சோம்பல்தான். ''சோம்பேறியாக இருப்பது குற்றந்தான். பிச்சைக்கு வருவோரில் பலர் மிகவும் கெட்ட சோம்பேறிகள் என்பதும் உண்மைதான். ஆனால் பிச்சையென்று கேட்பவனுக்கு ஒரு பிடி அரிசி போடுவதே மேன்மை. வைது துரத்துதல் கீழ்மை. இதில் சந்தேகமில்லை'' என்று பாரதியார் பிச்சையை எதிர்ப்பதைவிடவும், அதை ஒழிப்பதையே முன்மொழிகிறார்.
அவர் வேறு ஒரு பிச்சையைக் குறித்தும் பேசுகிறார். ''பிச்சைக்காரன் மட்டும்தானா சோம்பேறி? பணம் வைத்துக் கொண்டு வயிறு நிறையத் தின்று தின்று யாதொரு தொழிலும் செய்யாமல் தூங்குவோரை நாம் சீர்திருத்திவிட்டு அதன் பிறகு ஏழைச் சோம்பேறிகளைச் சீர்திருத்தப் போவது விசேஷம். பொறாமையும் தன் வயிற்றை நிரப்பிப் பிற வயிற்றைக் கவனியாதிருத்தலும், திருட்டும் கொள்ளையும் அதிகாரமுடையவர்களும் பணக்காரர்களும் அதிகமாகச் செய்கிறார்கள். ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு. செல்வர் செய்யும் அநியாயம் அதிகம்'' என்று சினந்து சீறுகிறார் பாரதியார்.


அவர் உறுதியாகக் குறிப்பிடுவது, ''ஏழைகளே இல்லாமல் செய்வது உசிதம். ஒரு வயிற்று ஜீவனத்துக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது. அறிவுடையவர்கள் இப்போது பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும் கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள். ஏழைகளுக்கு முன்னைக் காட்டிலும் அதிகத் துன்பம் ஏற்பட்டு இருக்கினவேயன்றி ஏழைகளின் கஷ்டம் குறையவில்லை'' என்று கவலை கொள்கிறார்.
பொருள் இருப்பவர்களைச் செல்வர்கள் என்றும் அது இல்லாதவரை ஏழைகள் என்றும் பிச்சைக்காரர்கள் என்றும் கருதும் இந்தச் சமூகத்தில் இல்லாதவர்கள் உருவாவதற்குக் காரணம் இருப்பவர்களே எனக் குறிப்பிடும் பாரதியார் அதற்குப் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் இருந்து ஒரு கதையையும் சான்றாகக் காட்டுகிறார்.


ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த மூத்த குமாரனாகிய காயீன், தனது தம்பியாகிய ஆபேலை விரோதத்தின் காரணமாகக் கொன்றுவிட்டான். அப்போது கடவுள் காயீனை நோக்கி, 'உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?' என்று கேட்டபோது காயீன் சொன்ன பதில் நம்மை இன்றைய சூழலில் நிறுத்திப் பார்க்கிறது. காயீன் கடவுளைப் பார்த்துத் திருப்பிக் கேட்டான்: 'அவனைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் என்ன அவனுக்குக் காவலாளியா?'


''உலகத்து செல்வர் ஸகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கெடுத்துக் கொண்டு பெரும்பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா? என்று கேட்டால் அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள். அதற்கு நாங்களா பொறுப்பு? என்று கேட்கிறார்கள். நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா என்று கேட்கிறார்கள்'' என்று குறிப்பிடும் பாரதியார் மேற்சொன்ன காயீனின் பதிலோடு இதனை இணைத்துக் காட்டுகிறார்.


ஒரு மனிதனின் அதிக உடைமை மற்றொருவனிடமிருந்து திருடியது என்னும் பொருளில்தான் ப்ரூதோம் என்னும் பிரெஞ்சு ஞானி 'உடைமையாவது களவு' என்று குத்திக்காட்டுகிறார்.
தமிழ் இலக்கணம் பிறரிடம் ஒன்றைக் கேட்டுப் பெறுவதை ஈ, தா, கொடு என்னும் மூன்று சொற்களால் குறிப்பிடுகிறது. இந்த மூன்று சொற்களையும் நாம் பயன்படுத்துகிற நிலை வேறாக இருந்தாலும் அவை இன்றைய சமூகச் சூழலில் உள்ள நவீனப் பிச்சையைக் குறிப்பது வியப்பு.


ஈ என்று இரந்து கேட்டுப் பெறுவதும், தா என்று உரிமையோடு எடுத்துக் கொள்வதும், கொடு என்று அதிகாரத்தைக் காட்டிப் பறித்துக் கொள்வதும்- ஆகப் பிச்சையின் வேறு நிலைகள்தானே? ஊழலையும் இலஞ்சத்தையும்தான் அச்சொற்கள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றனவோ என்ற ஐயமும் தோன்றுகிறது. இந்தப் பிச்சை, தர்மம் என்பதற்கு எதிரான அதர்மமாக இன்றைக்கு உருவெடுத்திருக்கிறது எனலாம்.


திருவள்ளுவர் கடவுளையே பழிக்கும் விதமாக 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்' என்று குறிப்பிடுவது எந்தப் பிச்சையை என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது. பசிக்காக இரப்பவர்களைப் பார்த்து அவர் சினந்திருக்க மாட்டார். பொருள்வெறி கொண்டு கடமையைச் செய்வதற்காகக் கையூட்டை எதிர்பார்க்கும் கயமையைக் கண்டு பொங்கித்தான் 'இப்படி இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்' என்று குறிப்பிட்டு, படைத்தவனையே நொந்து, 'பரந்து கெடுக உலகியற்றியான்' என்று சபிக்கிறார் போலும். அந்தப் பிச்சை ஒழியுமா?
மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில்... புத்தாண்டு கொண்டாட்டம்! நாளை இரவு போக்குவரத்து மாற்றம்

Updated : டிச 30, 2017 01:08 | Added : டிச 30, 2017 01:07

நாளை மறுநாள், 2018ம் ஆண்டு பிறக்கிறது. சென்னை, மெரினா மற்றும் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரைகளில், நாளை இரவே, புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட துவங்கிவிடும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 டிச.,31ம் தேதி இரவு, 9:00 மணியில் இருந்து, சாலை தடுப்புகள் அமைத்து, கடற்கரை உட்புற சாலையில் வாகனங்கள் நுழையாமல் தடை செய்யப்படும்

 மெரினா கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகனங்கள், இரவு, 9:00 மணிக்கு மேல், கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் வெளியேற்றப்படும்

 காமராஜர் சாலையில், காந்தி சிலை - போர் நினைவு சின்னம் வரை, டிச.,31ம் தேதி, இரவு, 9:00 மணியில் இருந்து, 2:00 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது

 லாயிட்ஸ், பெசன்ட் சாலை, அயோத்தி நகர், சுங்குவார் தெரு, பாரதி சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை சந்திப்புகளில் தடுப்பு அமைத்து, வாகனங்கள், காமராஜர் சாலைக்குள் நுழையதாவாறு செய்யப்படும்

 ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா சந்திப்பில் இருந்து போர் நினைவு சின்னம் நோக்கி செல்லும் வாகனங்கள், இரவு, 9:00 மணி முதல், கொடிமர சாலை வழியாக திருப்பிவிடப்படும்

 டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, ஆடம்ஸ் சாலை, கொடிமரத்து சாலை, போர் நினைவு சின்னம் வழியாக செல்லும் வாகனங்கள், இரவு, 9:00 மணிக்கு மேல், காமராஜர் சாலையில் செல்ல அனுமதி கிடையாது

 அடையாறு காந்தி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், கச்சேரி சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மியூசிக் அகாடமி வழியாக அண்ணா சாலை செல்லலாம்

 காரணீஸ்வரர் சாலையில் செல்லும் வாகனங்கள், காமராஜர் சாலை நோக்கி செல்ல அனுமதிக்காமல், சாந்தோம் நெடுஞ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்

 எந்த வாகனங்களும், லுாப் சாலை வழியாக காமராஜர் சாலை செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. சீனிவாசப்புரம் சந்திப்பு வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும்

 பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள, 6வது அவென்யுவில், டிச.,31, இரவு, 9:00 மணி முதல் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது

 பெசன்ட் நகர், 6வது அவென்யு இணைப்பு சாலைகளான, 5வது அவென்யூ, 3 மற்றும் 4வது பிரதான சாலை, 16வது குறுக்குத் தெரு பகுதிகள் தடுக்கப்படும்... காந்தி சாலை, 7வது அவென்யு சந்திப்பில் இருந்து, வேளாங் கண்ணி சர்ச் செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வாகனங்களை எங்கே நிறுத்துவது?


ராணி மேரி கல்லுாரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலையில் ஒருபுறம், சேப்பாக்கம் ரயில்வே நிறுத்துமிடம், லாயிட்ஸ் சாலை, ரயில்வே நிறுத்துமிடம், டாக்டர் பெசன்ட் சாலையில் ஒரு புறம்... லாயிட்ஸ் சாலை, பெசன்ட் நகர், 4வது அவென்யு, பெசன்ட் நகர், 3 மற்றும், 4 வது பிரதான சாலை, பெசன்ட் நகர், 2 - 5 அவென்யு சாலைகளின் ஒருபுறம் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.

- நமது நிருபர் -
எம்.ஜி.ஆர்., போல் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்: ரஜினி

சென்னை: ''பணம், புகழ், பதவியை விட, எம்.ஜி.ஆரை போல் நல்ல குணத்தோடு வாழ்ந்து, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்,'' என, நடிகர் ரஜினி கூறியுள்ளார்.



சென்னையில், தன் ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, நேற்று நான்காவது நாளாக, கோவை, திருப்பூர், வேலுார் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.

ரசிகர்கள் மத்தியில், ரஜினி பேசியதாவது: இன்னும், இரண்டு நாளில் நல்ல விஷயம் நடக்க வேண்டும் என, ரசிகர்களாகிய உங்களுக்கு, நான் வாழ்த்து கூறுகிறேன். கோவை, எனக்கு மிகவும் முக்கியமான ஊர்.

என் குரு, சச்சிதானந்தர், மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர்.அவர் தான், எனக்கு மந்திர உபதேசம் செய்தார்.

அவர் சொல்லி தான், பாபா படம் எடுத்தேன். சச்சிதானந்தரின் குரு, அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி, ஆன்மிகத்தை பரப்பு என்றார்.இன்று, பல நாடுகளில் சச்சிதானந்தரின் ஆசிரமங்கள், ஆன்மிகத்தையும், யோகாவையும் கற்றுத் தருகின்றன. சச்சிதானந்தர் இறக்கும் போது, நான் தான் கடைசியாக, அவரை பார்த்தேன். அந்த பாக்கியம், எனக்கு கிடைத்த பெருமை. அதேபோல், தயானந்த சரஸ்வதியும், எனக்கு ஒருகுரு.

கோவை விமான நிலையம் வரும்போது, ஒரு சம்பவம், அப்போது, அண்ணாமலை படம் வெளியான நேரம்; குடும்ப நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக, நான் விமானத்தில் கோவை சென்றிருந்தேன்.உடன் சிவாஜியும் இருந்தார். விமான நிலையம் சென்றதும், ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து, 'வாழ்க' கோஷமிட்டனர். சிவாஜி உடன் இருக்கும்போது, எனக்கு சங்கடமாக இருந்தது.

ஆனால், சிவாஜி, என்னை தட்டிக் கொடுத்து, 'எங்கடா நழுவுற... வா முன்னாடி வா...

இது, .உன் காலம்; நன்றாக உழை; நல்ல படங்களை கொடு... என் காலம் போய் விட்டது' என்றார்.என் காரை முதலில் வரவழைத்து, என்னை அனுப்பி வைத்தார். நடிப்பை தாண்டி, நல்ல குணங்களை கொண்டவர், சிவாஜி.பணம், புகழால் மதிப்பு தான் வரும்; மரியாதை வராது. நல்ல குணாதிசயங்களை கொண்டதால் தான், எம்ஜிஆர்., இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

நாம் அனைவரும், நல்ல குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கோவை விமானநிலையம் சென்றபோது, என்னை சிலர் தடுத்து, 'இப்போது வெளியே வர வேண்டாம்; ஒரு நடிகர் வந்திருக்கிறார்.'அவரை பார்க்க, ஆயிரக்கணக் கான ரசிகர்கள் கூடியுள்ளனர். அவர் போன பின், நீங்கள் வரலாம்' என்றனர்.

அப்போது தான் சிவாஜி கூறியது, ஞாபகம் வந்தது. அந்தந்த காலத்தில் அனைத்தும் மாறும். மாற்றம் வருவதை, யாராலும் தடுக்க முடியாது. சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் மாற்றத்தை கொண்டு வரும். காலம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, ரஜினியிடம், 'தி.மு.க., உள்ளிட்ட திராவிட கட்சிகளை எதிர்த்து போட்டி இடுவீர்களா?' என, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். பதில் கூற, ரஜினி மறுத்து விட்டார்.
ராஜபாளையம் வணிகவரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : துப்புரவு ஊழியரிடம் ரூ. 25 ஆயிரம் பறிமுதல்

Added : டிச 30, 2017 05:26

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 


துப்புரவு ஊழியரிடமிருந்து ரூ. 25 ஆயிரம் பணமும், அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜபாளையம் டி.பி. மில்ஸ் ரோட்டில் வணிக வரித்துறை அலுவலகம் உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் முதல் 1 கோடி வரை வரவு செலவு செய்யும் சிறு, குறு நிறுவனங்களின் கணக்குகள் கீழ் தளத்தில் இயங்கும் அலுவலகத்திலும், ரூ. ஒரு கோடிக்கு மேல் வரவு செலவு செய்யும் பெரு நிறுவனங்களின் கணக்குகள் மாடியில் உள்ள அலுவலகத்திலும் தாக்கல் செய்யப் படுவது வழக்கம்.


வணிக நிறுவனங்கள், ஆண்டுக்கணக்கை டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை. செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தால், தாமத பதிவு என்ற பெயரில் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதனால் நேற்று பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கணக்குகளை சமர்ப்பிக்க வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட வரித்துறை அலுவலர்கள், பதிவு செய்து கொடுக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.


துப்புரவு ஊழியரிடம் ரூ.25 ஆயிரம் பறிமுதல்


இது குறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் டி.எஸ்.பி சீனிவாச பெருமாள் தலைமையில்அதிகாரிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட துணை ஆய்வு குழுவினர் வணிக வரித்துறை அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் துப்புரவு பணியாளர் செந்தில்நாதன் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 25 ஆயிரம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகவும், மேல் விசாரணை நடைபெறும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திடீர் சோதனையை அடுத்து கணக்குகள் பதிவு செய்யும் பணிகள் நிறுத்தப் பட்டன. கணக்குகளை தாக்கல் செய்ய வந்தவர்களிடம், செவ்வாய்க்கிழமையும் அபராதமின்றி தாக்கல் செய்யலாம் எனக்கூறி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
திருமலையில் கூட்ட நெரிசல் : பக்தர்கள் 10 பேர் காயம்

Added : டிச 30, 2017 04:24

திருப்பதி: திருமலையில், தரிசன வரிசையில் ஏற்பட்ட கூட்ட நெரிச்சலில் சிக்கி, பக்தர்கள், 10 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம், திருமலையில், வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை காண, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அனைவரும், புதன் நள்ளிரவு முதல், காத்திருப்பு அறைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்குள், வைகுண்டம், 1 மற்றும், 2ல் உள்ள, 64 காத்திருப்பு அறைகளும் நிறைந்து, நாராயணகிரி தோட்டத்தில், தரிசன வரிசையில் காத்திருக்க துவங்கினர். பக்தர்களின் வசதிக்காக, திருமலையை சுற்றி, 6 கி.மீ தொலைவிற்கு, வரிசை ஏற்படுத்தப்பட்டது.


பக்தர்கள், 32 மணிநேரத்திற்கு பின், நேற்று காலை, 8:00 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


தரிசன வரிசை நகர துவங்கிய பின், பக்தர்கள் முண்டியத்துச் செல்ல முயன்றதால், வெளிவட்ட சுற்றுச் சாலையில் ஏற்படுத்தப்பட்ட தரிசன வரிசையில், நேற்று காலை, 11:30 மணியளவில், கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


அவர்கள் அனைவரும், சிகிச்சைக்காக, அருகில் உள்ள, அஸ்வினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொங்கல் சிறப்பு பஸ்கள் அடுத்த வாரம் அறிவிப்பு

Added : டிச 30, 2017 04:46

சென்னை: 'பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் குறித்து, அடுத்த வாரம் அறிவிக்கப்படும்' என, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு, இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல, சிறப்பு பஸ், ரயில்களில் முன்பதிவு செய்ய, பயணியர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்து இயக்கப்படும், சிறப்பு பஸ்களுக்கான அறிவிப்பு, அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.


இது குறித்து அவர்கள் கூறியதாவது:


பொங்கல் பண்டிகை, ஜன., 14ல் கொண்டாடப்படுகிறது.இதற்காக, வரும், 11 முதல், 14ம் தேதி வரை, மாவட்ட தலைநகரங்களில் இருந்து வெளியூர் செல்லவும், 16 முதல், 19ம் தேதி வரை, மாவட்ட தலைநகரங்களுக்கும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து, வழக்கமாக இயக்கப்படும், 2,275 பஸ்களுடன், மூன்று நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக, 5,000 பஸ்கள் இயக்கப்படும்.


ஜன., 8 முதல், சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்படும். சென்னையில், பண்டிகை கால போக்குவரத்து நெரிசலை குறைக்க, அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி, கோயம்பேடு, சைதாப்பேட்டை, தாம்பரம் சானடோரியம் ஆகிய இடங்களில், சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, ஜன., 4 அல்லது 5ல், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


'லீவு'க்கு தடை


பண்டிகை நாட்களில், பஸ் சேவை பாதிக்காமல் இருக்க, ஓட்டுனர், நடத்துனர்கள், ஜன., 10 முதல், 17 வரை, விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
சர்க்கரையில்லா ஐஸ்கிரீம் அறிமுகம்! : ஆவின் நிறுவனத்தின் புத்தாண்டு 'ஸ்பெஷல்'

Added : டிச 30, 2017 04:46

ஆவின் நிறுவனம், புத்தாண்டை முன்னிட்டு, முட்டையில்லா கேக் விற்பனை, சர்க்கரை சேர்க்காத ஐஸ்கிரீம் போன்ற, புதிய பொருள்கள் விற்பனையில் இறங்கியுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான, ஆவின் நிறுவனம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை, விற்பனை செய்து வருகிறது.

ஆவினின் வருவாயை பெருக்கும் விதமாக, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, புத்தாண்டை முன்னிட்டு, குறைவான விலையில், முட்டையில்லா கேக் விற்பனையை, ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து, ஆவின் மேலாண்மை இயக்குனர் காமராஜ் கூறியதாவது: ஆவினின் வருவாயை பெருக்குவதற்காக, சிங்கப்பூருக்கு, இதுவரை, மூன்று கண்டெய்னர்களில், பால் ஏற்றுமதி செய்துள்ளோம். தற்போது, புத்தாண்டை முன்னிட்டு, முட்டை சேர்க்காத கேக், அறிமுகப்படுத்தி உள்ளோம். அந்த கேக் வகைகள், ஆவின் பாலகங்களில், 250 கிராம், 200 ரூபாய்; 500 கிராம், 350 ரூபாய்; 1 கிலோ, 700 ரூபாய் என, விற்பனை செய்யப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரை சேர்க்காத, ஐஸ் கிரீம், உணவக விற்பனைக்காக, 500 கிராம் பன்னீர், 400 கிராம் தயிர், ஆகியவையும் அறிமுகம் செய்ய உள்ளோம்.மேலும், சிங்கப்பூரில், ஆவின் நெய், பட்டர், தயிர், பால்கோவா போன்ற பொருட்களை, விற்பனை செய்வதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. ஆவின் பொருள்களை, சிங்கப்பூரில் விளம்பரப்படுத்த, தமிழ் வானொலியான, 'ரேடியோ ஜிங்கிள்' என்ற, வானொலியில் விளம்பரம் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர்
தெரிவித்தார்.

-நமது நிருபர்-
கோவில் திறப்பு நள்ளிரவில் இல்லை

Added : டிச 30, 2017 02:52



சென்னை: 'ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், நள்ளிரவில் நடை திறக்கப்படுவதில்லை' என, அறநிலையத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய அரசு, புத்தாண்டு பிறப்பை ஒட்டி, கோவில்களில் நள்ளிரவு நடை திறக்க உத்தரவிட்டது. அதற்கு, பக்தர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், ஆகம விதிகளுக்கு புறம்பாக இருப்பதால், புத்தாண்டு நடை திறப்பு கைவிடப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக, பகலி
ல் கூடுதல் நேரம் கோவில்கள் திறந்திருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி முழக்கம் பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி முழக்கம் பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
 
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என்ற பக்தி கோ‌ஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர். 
 
சென்னை, 

மார்கழி மாதம் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியும், சிவாலயங்களில் திருவாதிரையும் குறிப்பிடத்தக்க விழாக்களாக அமைந்துள்ளன. 108 திவ்யதேசங்களில், ‘பூலோக வைகுண்டம்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் மிக சிறப்புக்குரியதாக அமைந்துள்ளது.
108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில். பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த கோவில்களில் உள்ள பெருமாளை வழிபட்டு உள்ளனர். இந்த கோவிலில் மூலவர் வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார்.

இங்கு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19–ந் தேதி பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.
தொடர்ந்து நேற்று நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனமும், விஸ்வரூப தரிசனமும், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஏகாதசிக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கியது. சொர்க்கவாசல் வழியே பெருமாளை தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு 12 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.

பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்காக மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய காத்து நின்றனர். அதிகாலை 2.20 மணிக்கு ரூ.300 டிக்கெட் வைத்திருப்பவர்களும் கோவிலுக்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை 2.30 மணிக்கு மூலவர் பார்த்தசாரதி பெருமாள் தரிசனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முத்தங்கி ரத்தின அங்கி அலங்காரத்துடன் மகா மண்டபத்தில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளினார்.

அதிகாலை 4 மணிக்கு மேளதாளம் முழுங்க, வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களை உச்சரிக்க, நம்மாழ்வாரின் செந்தமிழ் வேதம் எனப்படும் திருவாய்மொழி பாசுரம் பாடப்பட்டன. இந்த பாசுரத்திற்கு இடையே உற்சவர் மகாமண்டபத்தில் இருந்து உள்பிரகாரத்தில் வலம் வந்தார். அதன்பின், தங்கவர்ணம் பூசப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சொர்க்கவாசல் கதவுகளுக்கு அருகே பெருமாள் வந்தார்.
சரியாக காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சி தந்தார். வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, பார்த்தசாரதி பெருமாள், திருவாய்மொழி மண்டபத்திலுள்ள மண்டபத்தில் புண்ணிய கோடி விமானத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி கோ‌ஷம் எழுப்பினர். நேற்று நள்ளிரவு 11.30 மணி வரை மூலவர் தரிசனம் நடந்தது. இரவு 12 மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
இன்று (சனிக்கிழமை) முதல் ஜனவரி 6–ந் தேதி வரை மாலை 6 மணிக்கும், 7–ந் தேதி காலை 9 மணிக்கும் சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. கோவிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில், அகண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

பக்தர்கள் பாதுகாப்புக்காக 4 மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள், அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவதுடன், கோவில் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு கீதை சுலோகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புஷ்ப அங்கி சேவையில் பக்தர்களுக்கு சீனிவாச பெருமாள் காட்சி அளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக வெளியே சென்றனர். இதையொட்டி பூமார் குழுவினரின் இன்னிசை, பஜனை, சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடந்தது. நாள் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ந.கங்காதரன் செய்திருந்தார்.
இதேபோல், தியாகராயநகரில் உள்ள திருமலை–திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். லட்டு, குங்குமம், கற்கண்டு மற்றும் ஆன்மிக புத்தகம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மயிலாப்பூர் கேசவபெருமாள் கோவில், கொடுங்கையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட சென்னையில் உள்ள பல பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை முதலே கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்களுக்கு ரூ.300 கட்டண தரிசனம் மற்றும் அனுமதி அட்டை (பாஸ்) வழங்கப்பட்டு இருந்தது. அனுமதி அட்டையில் வரவேண்டிய நேரம், எந்த வழியாக வரவேண்டும் போன்ற எந்த தகவலும் இல்லாததால் நுழைவு வாயிலில் இருந்த போலீசார் பக்தர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். நள்ளிரவு 2.30 மணிக்கு வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் வயதான பெண் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிகாலையில் பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

அதில் ஒரு சிலர் நரசிம்மர் சன்னதி கொடிமரம் அருகில் உள்ள வாசல் வழியாக வந்த அனுமதி அட்டை வைத்திருந்தவர்களிடம் அனுமதி அட்டையை வாங்கி கொண்டு உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்ற பக்தர்களிடம் அனுமதி அட்டை இல்லாததால் பலர் வெளியேற்றப்பட்டனர்.

வயதான பெண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய ஒவ்வொரு வாசலாக அலைக்கழிக்கப்பட்டனர். பார்த்தசாரதி பெருமாள் உள்பிரகாரத்தில் வரும்போது கூட்ட நெரிசலில் சிக்கி வயதான பல பெண் பக்தர்கள் பலர் தவறி கீழே விழுந்தனர். வரும்காலங்களிலாவது வயதான மற்றும் பெண் பக்தர்களுக்கு முறையான வசதியை அறநிலையத்துறை செய்துதர வேண்டும் என்று பெண் பக்தர் ஒருவர் கூறினார்.
செங்கல்பட்டு அருகே மீண்டும் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 
 
செங்கல்பட்டு அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
செங்கல்பட்டு, 

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக கூறப்பட்டது. இதையொட்டி கிராம மக்களை அச்சுறுத்தி வந்த அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், திருவடிச்சூலம், இருங்குன்றம்பள்ளி, அஞ்சூர், தைலாவரம், திருமணி உள்ளிட்ட பகுதிகளில் தானியங்கி கூண்டுகள் அமைத்தும், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும் கண்காணித்து வந்தனர்.

கடந்த 2014–ம் ஆண்டு தானியங்கி கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. வனத்துறை அதிகாரிகளும் அதை உறுதி செய்தனர்.
இதையடுத்து செங்கல்பட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் 5 அதிநவீன கூண்டுகள் மற்றும் தானியங்கி கேமராக்களை அமைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
2016–ம் ஆண்டிலும் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவானது. ஆனால் இதுநாள் வரை சிறுத்தையை பிடிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது காட்டுப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் மீண்டும் சிறுத்தை செங்கல்பட்டு அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளதாகவும், ஒரு சில இடங்களில் சிறுத்தையின் கால் தடம் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியை வனத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் எங்களால் நிம்மதியாக வாழமுடியும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

மேலும் சிறுத்தையை பிடிக்க பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கூண்டுகளையும், தானியங்கி கேமராக்களையும் மீண்டும் சிறுத்தை நடமாட்டமுள்ள பகுதிகளில் அமைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர் பூங்காவில் ஆன்–லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்படும் என்று பூங்கா துணை இயக்குனர் சுதா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 30, 2017, 04:15 AM

வண்டலூர்,


வண்டலூர் உயிரியல் பூங்கா துணை இயக்குனர் சுதா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் முறையாக ஆன்–லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

தற்போது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 1 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வருகிற 14, 15, 16 தேதிகளில் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5½ மணி வரை நுழைவுசீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நெருக்கடியின்றி நுழைவுச்சீட்டு பெறுவதற்காக 30 நுழைவுச்சீட்டு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் மற்றும் சமூக விரோத செயல்களை கண்காணிக்க பார்வையாளர்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை மற்றும் காவல் துறையை சார்ந்த பணியாளர்கள் சாதாரண உடையில் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பார்வையாளர்கள் கொண்டு வரும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதற்காக நாற்காலி, மேசை வசதியுடன் உணவு சாப்பிடும் இடம் ஒன்று நுழைவுவாயில் அருகாமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பூங்கா விலங்குகளுக்கு பார்வையாளர்கள் உணவளிப்பதை தவிர்க்கும் பொருட்டு விலங்கு இருப்பிட பகுதிகளுக்குள் உணவு பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் போன்றவற்றை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை.

இவற்றை பாதுகாத்து வைப்பதற்கு பொருட்கள் வைப்பறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக தற்பொழுது உள்ள வசதிகளுடன் மேலும் சுமார் 1,500 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கூடுதலாக வாகனம் நிறுத்தும் இடம் ஒன்று வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு தங்கு தடையின்றி சுத்தமான குடிநீர் கிடைக்க ஆங்காங்கே கூடுதலாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையின் போது பார்வையாளர்களின் வசதிக்காக காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்துத்துறை மற்றும் மின்சார வாரியம் போன்ற துறைகளை ஒருங்கிணைத்து வனத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து பாதிக்காத வகையில் பார்வையாளர்களை கட்டுப்படுத்தவும், வாகனங்களின் நெரிசலை ஒழுங்குபடுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா நிர்வாகத்திற்கு உதவுவதற்காக சென்னை, வேலூர் மற்றும் விழுப்புரம் வன மண்டலங்களில் இருந்து 130–க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

எதிர்பாராத தீ சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தீயணைப்பு பணியாளர்களுடன் தீயணைப்பு வாகனம் ஒன்று காணும் பொங்கல் அன்று தயார் நிலையில் நிறுத்திவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு எதிர்பாராத வகையில் ஏற்படும் உடல் நலக்குறைவு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக மருத்துவ குழு ஒன்று காணும் பொங்கல் அன்று ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை செய்யும் பொருட்டு மாநகர போக்குவரத்து மூலம் பல்வேறு வழித்தடங்களில் சுமார் 150–க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து பூங்கா நிர்வாகத்திற்கு உதவுவதற்காக 200–க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு மாணவர்கள், தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள், நாட்டு நலப்பணி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் மது, சிகரெட், கரும்பு மற்றும் பாலித்தீன் பைகளை பூங்காவினுள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. மேற்படி பொருட்களை கொண்டுவரும் பார்வையாளர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது உதவி இயக்குனர் எம்.சண்முகம் உடன் இருந்தார்.

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...