Sunday, July 22, 2018


திரும்பவும் வருமா திருவிழாக்கள்?

By கிருங்கை சேதுபதி | Published on : 21st July 2018 11:13 AM |



பருவந்தோறும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளப் பாரில் உள்ளோர் எடுக்கும் முயற்சிகள் விழாக்கள் ஆகின்றன. விழித்திருந்து கொண்டாடுவதாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துகிற விழைவாகவும் இவை அமைவது வழக்கம்.
எத்துணை பெருநகரமாக மதுரை இருந்தபோதிலும் இன்றைக்கும் அங்கே விழாக்கள் நாள்தோறும் நடந்தவண்ணம் இருப்பதைப் பார்க்கலாம். இவ்வாறே வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகரங்கள் பலவும் திகழ்கின்றன.
விழாக்காலங்களில், வெளியூர்களிலிருந்து வந்து இப்பகுதியில் இருக்கலாம். ஆனால், இங்கே இருந்து வேற்றூர்களுக்குப் புலம்பெயர்வது கூடாது என்ற கொள்கை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்திருக்கிறது. அப்படியே தொழில் நிமித்தமாகவோ, தேவை கருதியோ, செல்ல நேரிட்டாலும் பொழுதுக்குள் இல்லந் திரும்புவதை இயல்பாகவும் இலக்கணமாகவும் வைத்திருக்கின்றன நமது ஊர்கள். இப்பண்பும் பழக்கமும் இன்றளவும் ஊர்கள்தோறும் நடைமுறையில் இருப்பதைப் பார்க்கலாம்.

ஊர்களில் விழாத் தொடக்கத்தைக் காப்புக் கட்டு' என்று சொல்வதுண்டு. காப்புக் கட்டிவிட்டால், விழா முடியும் வரை ஊர்மக்கள் ஊரிலேயே இருத்தல் வேண்டும் என்பது பொதுவிதி. அதில் உணவுக் கட்டுப்பாடு, ஒழுக்கக் கட்டுப்பாடு முதலியவற்றை நடைமுறைப்படுத்த, உள்ளூர்த் தெய்வத்தை முன்னிறுத்திச் செயல்படுவதுண்டு.

ஊர் நலனுக்காக உயிர் துறந்த மாவீரனை நினைவுபடுத்துவதாகவோ, மழை தெய்வமாகிய மாரியம்மனை அல்லது ஐயனார், கருப்பர் உள்ளிட்ட காவல் தெய்வங்களைக் கொண்டாடுவதாகவோ - தெய்வத்தை முன்னிறுத்திய திருவிழாக்கள் சிற்றூர்களில் நடத்தப்படுவதைப் பார்க்கலாம்.
ஊருக்குக் காவல் தெய்வம் என்று ஒன்று இருந்தாலும் பலரும் பலவிதமாக வழிபாடு நிகழ்த்திக் கொள்ளப் பல்வேறு தெய்வங்கள் ஊர் தோறும் இருக்கத்தான் செய்யும். அதனால், ஊர்ப் பொதுவிழாக்களில் அவ்வூர்த் தெய்வங்கள் உறையும் மாடங்கள் தோறும் புதுப்பிக்கப் பெற்று, அந்தந்தத் தெய்வங்களுக்கு ஏற்ப, பூசனைகள் செலுத்தப்படுவது பண்டைக் காலம் முதலே நடைமுறையிலுள்ளவை.

அதன் காரணமாக, தெருக்களை ஒழுங்கு செய்வது, ஊருணி, தெப்பக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை மராமத்துச் செய்வது, பொது இடங்களைத் தூய்மைப்படுத்துவது என்று பொது நிலையிலும், வீடுகளைத் தூய்மைப்படுத்திச் செப்பம் செய்து புதுக்குவது என்று தனி நிலையிலும் நடைபெறுகின்றன. இவ்வாறு தம்மையும், தம் இல்லத்தையும், ஊரையும் புதுப்பித்துக்கொள்ள, இத்தகு விழாக்கள் இடமளிக்கின்றன.
குறிப்பாக, தேரோட்டம், தெப்பத் திருவிழா உள்ளிட்டவை, தெய்வத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டாலும், அவை ஊர்நலனைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பெற்றிருக்கின்றன. வீடுகளைத் தூய்மைப்படுத்தித் தெருவில் கொட்டும் நிலை இதனால் தவிர்க்கப்படுகிறது. தேரோடும் வீதிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதோடு, அவை பள்ளம் மேடுகளின்றிப் பரமாரிக்கப்படுகின்றன. மழைநீர்ச் சேகரிப்பு மையமாக இருக்கின்ற தெப்பக்குளம் முறைப்படி மராமத்துச் செய்யப்படுகிறது. உண்ணும் நீர் எடுக்கும் ஊருணிகளில் இருந்து கரகம் எடுக்கப்படுவது வழக்கம். 

எனவே, அதன் வழி அவ்வூருணியின் தூய்மை பேணப்படுகிறது. முளைப்பாரி என்னும் முளைப்பாலிகை வளர்ப்பு, பயிர்க்காப்பின் முன்னோடியாக அமைவதைப்பார்க்கலாம். நவதானியங்களை முளைக்கவிட்டு, விழா நாள்களில் கூடியிருந்து பெண்கள் கும்மியும், ஆண்கள் கோலாட்டமும் ஆடிப் பாடி மகிழ்வர். முளைப்பாலிகை வளர்கிற விதத்தை வைத்தே ஊரில் நடக்கப்போகும் நல்ல, தீய நிமித்தங்களை கணித்துக் கூறும் பெரியவர்கள் ஊரில் இருப்பர். இத்தகு விழாக்களில், அருளாடிகள் முன்னர், தத்தம் மனக்குறைகளையும் இல்லக்குறைகளையும் எடுத்துச் சொல்லித் தீர்வு காணுகிற நடைமுறைகளும் உண்டு.

பொதுவாக, தமிழர்கள் முதற்பொருள்களாகக் கருதிப்போற்றும் நிலத்தையும் பொழுதையும் முன்னிலைப்படுத்தியே இத்தகு விழாக்கள் ஊர் தோறும் எடுக்கப்படுகின்றன. பொதுவாய், முழுநிலவு தோன்றும் பெளர்ணமி நாட்களில் இவ்விழாக்கள் அமைவதைப் பார்க்கலாம். பொழுதுபோக்கு என்பது பிரதானமாக அல்லாமல் பொதுமைப்பண்பையும் ஒருமையுணர்வையும் ஊட்டி, உற்சாகத்தை வளர்க்கும் ஒரு முயற்சியாக அமைவது விழா. தமிழர்களின் தனிப்பெரும்பண்பாகிய விருந்தோம்பல், இதில் தலைமையிடம் பெறுகிறது. சுற்றமும் நட்பும் கூடி, மனம் விட்டுப்பேசி மகிழ்ந்து கொண்டாடுகிற இவ்விழாவில் சான்றோர்கள் அழைக்கப்பெற்றுச் சிந்தனைப் பரிமாற்றம் செய்துகொள்வதும், கலைஞர்கள் வரவேற்கப்பெற்றுக் கலைவளர்க்கும் நிகழ்வுகள் அரங்கேற்றம் பெறுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.

எடுத்ததற்கெல்லாம் நீதிமன்றம் ஏகாமலும், தற்காப்புக்கும் பொதுக்காப்புக்கும் காவல்துறையிடம் முறையிடாமலும் தன்னளவில் பாதுகாத்துக்கொள்ளத் தக்கதோர் முறைமையாக ஊர்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள இவ்விழாக்கள் வழிகோலியிருக்கின்றன.
அறம் பிழையாமையே பேரறமாக, ஊர்ச்சான்றோர்களால் போற்றப் பட்டிருப்பதையும் அவ்வாறு பிறழ்ந்தோர்க்கு அறமே கூற்றம் ஆகியதையும் கூறும் நாட்டுப்புறக்கதைகளும் பாடல்களும் இன்னும் அச்சேறாது அந்தந்தப் பகுதி மக்களால் பாட்டாகவும், கூத்தாகவும் பேச்சு வழக்காகவும் நினைவுகூரப்படுகின்றன.

ஊர் வளர்ச்சிக்கும் பொதுமைக்கும் மன்னர்களால் கொண்டுவரப்பெற்ற பெருந்தெய்வ வழிபாட்டை விடவும் சிறுதெய்வ வழிபாட்டுக்குப் பல்வேறு சிறப்பு இயல்புகள் உண்டு. தெய்வத்தில் சிறிது பெரிது என்பதெல்லாம் கொண்டாடப்படும் முறைமையில் அமைகிறது. பல ஊர்களில் பெருந்தெய்வவழிபாட்டுநிலை குறைந்து தோன்றினாலும் சிறுதெய்வ வழிபாடுகள் நிற்பதில்லை. அதன் நீட்சியான திருவிழாக்களும் நிற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஊர் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் இத்தகு விழாக்களே இன்றியமையாதவை எனக்கருதுகிற போக்கும் இருக்கின்றன. எனவே, அந்தந்தக் காலங்களில் எல்லா ஊர்களின் திருவிழாக்களும் முறைமை தவறாமல் நடக்கின்றன.

இவைபோக, கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப, கலைஇலக்கிய விழாக்களைக் கொண்டாடும் முறைமையும் நடைமுறையில் உள்ளது. காலத்தேவையை முன்னிறுத்தித் தொடங்கப்பெற்ற கம்பன் கழகங்கள், இளங்கோவடிகள் மன்றங்கள், திருக்குறள் அமைப்புகள், திருமுறை விழாக்கள் தலைமுறைகள்தோறும் தக்க ஒழுகலாறுகளை மக்கள் முன் கொண்டு சென்றதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. பள்ளிக் கல்வி கூடப் பெற முடியாத நிலையில் வாழும் மக்களுக்குப் பல்கலைக்கழகங்கள் போல் இத்தகு இலக்கிய அமைப்புகள் வழங்கிய கலைஇலக்கிய அறிவால் செழித்த தலைமுறையினர் நம் கவனத்திற்கு உரியவர்கள்.

இத்தகைய பின்புலங்களோடு எடுக்கப்பெற்றுவரும் திருவிழாக்கள் பலவும் இப்போது உள்ளீடற்ற நிலையில் மிகுதியும் ஆரவாரத்தன்மை கொண்டதாக மலிந்துவருவது கவலைக்குரியதாகிறது. சிறிய பெரிய திரை ஊடகங்களின் கவர்ச்சியினால் பல இடங்களில் பண்பாட்டு நிகழ்வுகள் மரபழிந்து சிதைவுக்கு ஆட்படுவதையும் பார்க்க முடிகிறது. அதனால், கரகம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கூத்து உள்ளிட்ட பல கிராமியக் கலைகள் பேணப்படாது அழிந்து வருகின்றன. ஆர்வமொடு பயிலுகிற இளந்தலைமுறை இல்லாது போனதால் மூத்த கலைஞர்களும் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். அண்டை மாநிலங்களில் பேணப்படுகிற பண்டைக்கலைகளைப்போல் தமிழகத்திற்கே உரிய கலைச்சுவடுகள் இனி இல்லாது போய்விடுமோ என்று கவலை கொள்கிறது மனம்.
பெருகிவரும் மக்கள்தொகை, அருகிவரும் வான்மழை, சிதைந்துவரும் வேளாண்தொழில் உள்ளிட்ட காரணங்களால் புலம்பெயர்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட கிராம மக்கள் இன்றளவும் தாம் பிறந்த ஊர்களை மறக்காமல் வந்து இருந்து விழாக்கள் எடுத்துக் கொண்டாடிவருகிறார்கள். ஆனபோதும் அவ்விழாக்களில் பழமை மரபுகள் பாதிக்குமேல் காணாமல் போய்விட்டன.

முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை முதலான மரபார்ந்த தாவரங்கள் நிறைந்த நந்தவனங்கள் இப்போது அருகிவிட்டன. அக்காலத்தில், உள்ளூர்களில் விளைந்து விழாக்களுக்கு உயிர்ப்பூட்டிய தென்னோலைகளும், வாழைமரங்களும், தோரணங்களுக்குரிய மாவிலைகளும், இன்னபிற இயற்கைப்பொருள்களும் இன்று அதிக அளவில் விலைகொடுத்து வாங்கி நடப்படுகின்றன. அக்கம்பக்கத்துச் சிற்றூர்களில் விளையும் பல பொருள்களையும் கடைபரத்திப் போடும் சிறுவியாபாரிகளின் கடைகளைக் காணோம். 

பயனைவிடவும் கவர்ச்சி மிகக்கொண்ட பன்னாட்டுப் பொருள்களின் விற்பனைக்கூடங்களே இப்போது திருவிழாத்தெருக்களை விழுங்கிவருகின்றன. மூச்சுத்திணறி நிழல் கிடைக்காதா என அனலேறிக் கனல்கிறது கிராமத்துக் காற்று. பல நாட்கள் சாதாரணத் தெருவிளக்குகளும் இன்றிக் கிடக்கும் பல சிற்றூர்கள் இந்த விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில், மின்விளக்கு அலங்காரங்களால் கண் கூசுமளவிற்கு ஒளிர்கின்றன.

ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் மிக்க ஆட்டபாட்டங்கள் நடத்தப்படுவதோடு நிறைவடைந்துவிடுகிற விழாக்களில் உயிர்ப்பில்லை; ஊர்களில் நீர் இல்லை; உறவுகளில் ஈரமில்லை; வழிபாட்டு நிலையில் பக்தியில்லை.
இயற்கைபேணலைக் கைவிடாது அகமும் புறமும் தூய்மையுறப் பழந்தமிழ் மரபோடு விழாக்கள் நடத்துகிற காலம் விரைவில் வருமென, நம்பிக்கை இழக்காமல் காத்திருக்கின்றன நமது ஊர்கள்.

உடைந்த நாற்காலிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு

Added : ஜூலை 21, 2018 23:30

சென்னை: நாற்காலி உடைந்த பிரச்னையில், விற்பனை நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த, அன்னாமாத்யூ தாக்கல் செய்தமனு:ஆழ்வார்பேட்டை, டி.டி.கே., சாலையில் உள்ள, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து, சுழலும் நாற்காலி வாங்கினேன். இரண்டு மாதத்தில், நாற்காலி கால் உடைந்ததால், பயன்படுத்த முடியவில்லை விற்பனை நிறுவனத்திற்கு தெரிவித்தேன். அந்நிறுவன ஊழியர்கள், 'இதை சரிசெய்ய முடியாது; புதிய நாற்காலி மாற்றி தருகிறோம்' என்றனர்.ஆனால், தரவில்லை மன உளைச்சலுக்கு ஆளானேன். நாற்காலி தொகையுடன், 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.வழக்கு விசாரணையில், 'நாற்காலி பழுது நீக்க ஊழியர்கள் சென்றும், மனுதாரர் அனுமதிக்கவில்லை. சேவை யில் குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, விற்பனை நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கில், நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா பிறப்பித்த உத்தரவில், 'விற்பனை நிறுவனம் நியாயமற்ற வர்த்தகம் செய்துள்ளது. 'மனுதாரருக்கு, நாற்காலி தொகையை, திரும்ப வழங்குவதுடன், 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5,000 ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
அரசு டாக்டர்கள் செப்., 21ல் ஒருநாள் வேலை நிறுத்தம்

Added : ஜூலை 22, 2018 01:51

திண்டுக்கல்: மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி, அரசு டாக்டர்கள், செப்., 21ல், ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவர், செந்தில் தெரிவித்தார்.திண்டுக்கல்லில், அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடந்தது. புறக்கணிப்புமாநில தலைவர், செந்தில் கூறியதாவது:மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம், பதவி உயர்வு, படி வழங்க வலியுறுத்தி, ஆக., 1 முதல், அனைத்து மாவட்டங்களிலும், கறுப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கையை வலியுறுத்துவோம். ஆகஸ்ட் மூன்றாவது வாரம், பணி புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடுவோம்.இதை, செப்., 1ல் தீவிரப்படுத்தி, நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை புறக்கணிப்பு, ஆப்பரேஷன் நிறுத்தம் என, படிப்படியாக ஈடுபடுவோம்.இதற்குள் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், செப்., 21ம் தேதி, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வோம். அரசு, மாவட்ட, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, 20 ஆயிரம் பேர் இதில் ஈடுபடுவர்.ஓய்வு பெறுகிறோம்எம்.பி.பி.எஸ்., முடித்து பணியில் சேரும் போது, ஒரே மாதிரியான ஊதியம்தான் வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசில், ஸ்பெஷாலிட்டி முடித்தவர்களுக்கு, 5,௦௦௦ முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை அதிகம் கிடைக்கிறது. 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பள வித்தியாசத்தில் ஓய்வு பெறுகிறோம். எனவே, உரிமைக்காக போராடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவகங்கை அருகே பஞ்சம் : கிழங்கு சாப்பிடும் மக்கள்

Added : ஜூலை 21, 2018 23:47

சிவகங்கை: சிவகங்கை அருகே, மூன்றாண்டாக பஞ்சம் நிலவுவதால், ஒரு வேளை உணவாக கிராம மக்கள் கொட்டிக்கிழங்கை சாப்பிடுகின்றனர்.இடையமேலுார் ஊராட்சி வேலாங்கப்பட்டியில், 500 பேர் வசிக்கின்றனர். விவசாயிகளாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் உள்ளனர். மூன்று ஆண்டுகளாக மழை இல்லாததால் வறட்சி நிலவுகிறது. இதனால் ஒரு தரப்பினர், 100 நாள் வேலைத் திட்டத்தை நம்பியே உள்ளனர்.வேலை, ஊதியம் முறையாக கிடைக்காததால் சிரமப்படுகின்றனர். குடும்பத்திற்கு, 20 கிலோ மட்டுமே ரேஷன் அரிசி கொடுப்பதால், போதவில்லை. இதனால் ஒருவேளை உணவுக்காக கொட்டிக் கிழங்கை சமைத்து சாப்பிடுகின்றனர். இதற்காக அவர்கள் கண்மாய், வயல்களை தேடிச் சென்று, கிழங்கை தோண்டி எடுக்கின்றனர்.கிராம பெண்கள் கூறியதாவது:தொடர் வறட்சியால், விவசாய பணிகளே இல்லாமல் போனது. இதனால், கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. 100 நாள் வேலையும் சரியாக கிடைப்பதில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன், பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், கொட்டிக் கிழங்கை தான் உணவாக சாப்பிட்டனர். தற்போது அதேநிலை திரும்பியுள்ளது. இக்கிழங்கு சத்துகள் நிறைந்தது.உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால், பசி ஏற்படாது. குழந்தைகளுக்கும் கொடுக்கிறோம். ஒரு சில கண்மாய், வயல்களில் மட்டுமே கொட்டிக்கிழங்கு கிடைக்கும். இடையமேலுார் மம்மரகால் கண்மாயில் கிழங்கு விளைந்துள்ளதால் தோண்டி எடுக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.
ஏழு மாத குழந்தை பலாத்காரம்: இளைஞனுக்கு தூக்கு

Added : ஜூலை 21, 2018 23:23

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், ஏழு மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த, 19 வயது இளைஞனுக்கு, துாக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜஸ்தானில், பா.ஜ.,வைச் சேர்ந்த, வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார்.இந்த மாநிலத்தில், மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, துாக்கு தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அது சட்டமாக்கப்பட்டது. இந்நிலையில், சிகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர், தங்கள், ஏழு மாத குழந்தையை, உறவினர் வீட்டில் விட்டு, வெளியே சென்றனர். மீண்டும் குழந்தையை அழைத்து செல்ல வந்தபோது, பக்கத்து வீட்டு நபர், குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக கூறினர். அப்போது, உறவினரின் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள மைதானத்தில், குழந்தை அழுதபடி இருந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அதை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தில், அந்த குழந்தை, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானது தெரிய வந்தது.இதையடுத்து, இந்த கொடூரத்தை செய்த, 19 வயது இளைஞனை, போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், அவன் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனது.இந்த வழக்கை, 13 விசாரணைகளில் முடித்த, சிறப்பு கோர்ட், குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ராஜஸ்தானில், பாலியல் பலாத்கார குற்றங்களுக்கான புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், முதல் முறையாக இந்த வழக்கில் தான் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், கடந்த ஆண்டு டிசம்பரில், ம.பி., மாநிலத்தில் இதே போன்ற சட்டம் இயற்றப்பட்டது. மைனர்களை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, நம் நாட்டில் இதுவரை, மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆச்சரியப்பட வைக்கும் 'அடடே...' அஞ்சலகம்!

Added : ஜூலை 22, 2018 02:20




க்ணிங்... க்ணிங்...' என, சைக்கிள் மணி ஓசை முன்னே வர, அதில் 'சார்...போஸ்ட்' என, வீடு தேடி வந்து கடிதம் கொடுத்து செல்லும் தபால்காரரின் நினைவலைகளை கொண்டிராத கிராமத்து சாலைகளும், வீதிகளும் இருந்திருக்கவே முடியாது.

மெத்த படித்தவர்கள் நிறைந்த நகர்ப்புறங்களை காட்டிலும், படிப்பறிவு குறைந்தவர்கள் நிறைந்த கிராமப்புறங்களில் உள்ள அஞ்சலகங்களுக்கு மவுசும், மதிப்பும் அதிகம்.எழுத, படிக்க தெரியாத பெரியவர்களின் வீடு தேடிச்சென்று, கடிதத்தையும், மணியார்டரையும் கொண்டு சேர்க்கும் தபால்காரர்களுக்கு என்றுமே தனி மதிப்புதான்.அந்த வரிசையில், அவிநாசி அருகே, போத்தம்பாளையத்தில், 10க்கு 5 என்ற சிறிய கட்டடத்தில், இயங்கி வரும் போத்தம்பாளையம் துணை அஞ்சலகத்தின் சேவை, விழிகளை விரிக்க செய்கிறது.

''இந்த போஸ்ட் ஆபிஸ், 1959ல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆரம்பிக்கப்பட்டதுங்க. 1981ல், தான் இந்த கட்டடத்துக்கு மாற்றப்பட்டது; இது, தபால் துறையின் சொந்த கட்டடம்'' என, அறிமுகம் கொடுத்தார், கிளை அஞ்சல் அலுவலர் காளியப்பன்.

பகுதி நேரம் மட்டுமே செயல்படும் கிராமப்புற கிளை அஞ்சல் அலுவலர்களுக்கு பணி மாறுதல் இல்லை என்பதால், 37 ஆண்டுகளாக அதே அஞ்சலகத்தில், காளியப்பன் பணிபுரிகிறார். அவருக்கு துணையாக, 22 ஆண்டுகளாக வரதராஜன் என்பவர், தபால்காரராக பணிபுரிகிறார் என்பது கூடுதல் தகவல்.

'குட்டி' அஞ்சலகம் தான்... ! ஆனாலும், சுத்தமாக, வைத்திருக்கிறார்கள். அஞ்சலகம் அமைந்துள்ள சூழல், அங்கே சில நிமிடம் நின்று, அஞ்சலகத்தை கவனிக்க துாண்டுகிறது.''இந்த அஞ்சலகத்தை, சுற்றியுள்ள கிராமத்து மக்களில், 700க்கும் மேற்பட்டோர் சேமிப்பு கணக்கு துவக்கி, தங்கள் உழைப்பின் ஒரு பகுதியை சிறுகச்சிறுக சேமித்து வருகின்றனர். இதுவரை, ஒரு கோடி ரூபாய் வரை முதலீடும் திரட்டப்பட்டு, மெயின் ஆபீசில் சேர்க்கப்பட்டுள்ளது,'' என பெருமிதப்பட்டு கொண்ட காளியப்பன், ''இனியும், கையெழுத்து போட தெரியாத பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

எங்களிடம் நம்பிக்கையா பணத்தை கொடுத்துட்டு போறாங்க; அதை அவங்க சேமிப்புக் கணக்கில் வரவு வைத்து, அதற்குரிய ரசீதை, அவங்க கிட்ட சேர்த்துடறோம்'' என்கிறார் வெள்ளந்தியாக.'இ-மெயில், இன்டர்நெட், வாட்ஸ்-ஆப், டிவிட்டர் என, வளர்ந்துவிட்ட தொழிற்நுட்பத்தில், கடித போக்குவரத்தும், அஞ்சலக பயன்பாடும் அழிந்து போகுமா' என, கேட்டதற்கு, 'நிச்சயமாய் இல்லை' என, பட்டென்று பதில் கூறிய காளியப்பன், ''வளர்ந்துவிட்ட தொழிற்நுட்பத்தில் கடித போக்குவரத்து குறையலாம்; ஆனா, கிராமத்து மக்களின் சேமிப்பு, அஞ்சலகம் சார்ந்து தான் இருக்கும்,''
''இவங்கள தக்க வைக்க, அஞ்சலகங்களில் வேலை செய்றவங்க, வாடிக்கையாளர்களை தங்களின் உறவா நினைக்கனும்; அவங்களின் சேமிப்புக்கு ஊக்குவிப்பாக இருக்கனும். அப்படி செஞ்சா, கிராமத்து அஞ்சலங்கள் கூட, பொன் விழா, பவள விழா தாண்டி, ஆண்டாண்டு காலம் பயணிக்கும்,'' என்றார் கண்களில் நம்பிக்கை ஒளிர.
குளிரூட்டப்பட்ட பளபளக்கும் கண்ணாடி அறை, மிளிரும் பர்னிச்சர், 'டை' கட்டிக்கொண்டு, 'தமிலீங்கீஷ்' பேசும் விற்பனை பிரதிநிதிகள்... என, பகட்டாக, பெரு நகரங்களில் நிதி நிறுவனங்கள் நடந்து வரும் நிலையில், கிராமப்புறச்சூழலில், ஒரு சிறிய அறையில், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் டெபாசிட் பெற்று, இன்றளவும், மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள போத்தம்பாளையம் கிளை அஞ்சலகத்தை பாராட்டுவது சாலப்பொருத்தம்.
985 செவிலியர்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் தகவல்

Added : ஜூலை 22, 2018 01:59

புதுக்கோட்டை: ''தமிழகத்தில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில், 985 கிராம சுகாதார செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்,'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:தமிழகத்தில் தான், இரண்டு கிராம சுகாதார செவிலியர்களைக் கொண்டு, துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராம சுகாதார மையங்களில், 8,706 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதை, இரட்டிப்பாக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக, 985 கிராம சுகாதார செவிலியர்கள் புதியதாக நியமிக்கப்படஉள்ளனர். தமிழகத்தில், 16 மாவட்டங்களில் எய்ட்ஸ் நோய் இல்லை. மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் வைத்துள்ளோம். தமிழகத்தில், 1.89 லட்சம் பேருக்கு, எய்ட்ஸ் நோய் தாக்கம் உள்ளதாக வெளியான தகவல் தவறானது.இவ்வாறு, அவர்

தெரிவித்தார்.
உயர்கல்வி ஆராய்ச்சிகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் : யு.ஜி.சி., முன்னாள் துணை தலைவர் பேட்டி

Added : ஜூலை 22, 2018 00:33

மதுரை: "உயர் கல்வித்துறையில் ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்," என பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) முன்னாள் துணை தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:தேசிய அளவில் கல்வி தரத்தை மேம்படுத்த உயர்கல்வி ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.தமிழகம் உட்பட சில மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, பல்கலை திட்டங்களுக்கு யு.ஜி.சி., சார்பில் 100 சதவீதம் நிதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உயர்கல்வி ஆணையத்தில் நிதி அதிகாரம் எதுவும் இல்லை.பல்கலை திட்டங்களுக்கு 60:40 என்ற விகிதத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கிக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட சில முடிவுகளை மாநில அரசுகள் எதிர்க்கின்றன. மாநில அரசுகளிடம் கருத்து கேட்ட பின் தான் உயர்கல்வி ஆணையம் அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும்.பல்கலைகளில் தற்போது ஆராய்ச்சிகள் குறைந்து வருகின்றன. இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. உயர்கல்வியில் ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்க பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.உடன்பாடு இல்லை: மும்பை, டில்லி ஐ.ஐ.டி.,க்கள் உட்பட 6 கல்வி நிறுவனங்கள் தலைசிறந்த நிறுவனங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். இதில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்னும் துவங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை.தமிழகத்தில் 'நீட்' தேர்வு அவசியம். ஆனால் இத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரபட்சமின்றி அனைத்து மாணவர்களும் இத்தேர்வுக்கு தயாராகும் வகையில் தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். 'நீட்' தேர்வு எழுதிய தமிழ் மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற நீதிமன்றம் தீர்ப்பு சரியானதாக தெரியவில்லை. இதுபோன்ற வழக்குகளில் கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்க வேண்டும்.பல்வேறு நோய்களுக்கு தீர்வாக உள்ள 'ஸ்டெம்செல்' ஆய்வுகள் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் நடக்கின்றன. ஆனால் இந்தியாவில் இதுதொடர்பான ஆய்வுகள் வர்த்தக ரீதியில் நடக்கிறது. இதை முறைப்படுத்த வேண்டும், என்றார்.குஜராத் மத்திய ஆசிரியர் கல்வி நிறுவன துணைவேந்தர் கமலேஷ் ஜோஷிபுரா கூறுகையில், "மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி பொன் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவும், குஜராத் மத்திய ஆசிரியர் கல்வி நிறுவன படிப்புகள் இக்கல்லுாரியில் துவங்கவும் முயற்சி எடுக்கப்படும்," என்றார்.

யு.ஜி.சி., ஆலோசகர் வழக்கறிஞர் கோபிநாதன், சவுராஷ்டிரா கல்லுாரி தலைவர் ராம்தாஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஓலா, ஊபருக்கு மாற்றாக, 'தமிழ்நாடு ஆட்டோ'

Added : ஜூலை 21, 2018 23:45

பன்னாட்டு போக்குவரத்து நிறுவனங்களான, ஓலா, ஊபர் உள்ளிட்ட கால் டாக்சி நிறுவனங்களுக்கு மாற்றாக, உள்நாட்டு ஒருங்கிணைப்புடன், தன்னார்வலர்களால், 'தமிழ்நாடு ஆட்டோ' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், பன்னாட்டு போக்குவரத்து நிறுவனங்களான ஓலா, ஊபர் உட்பட, பல கால் டாக்சி நிறுவனங்கள் உள்ளன.

வாகன சட்டம் : இவற்றுக்கு மக்களிடம் வரவேற்பு இருந்தாலும், இந்த நிறுவனங்கள், மோட்டார் வாகன சட்டத்தை மீறுவதாகவும், வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும், குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர்க்கும் நோக்கில், உள்நாட்டு ஒருங்கிணைப்புடன், 'தமிழ்நாடு ஆட்டோ' என்ற இணையதளத்தை, தன்னார்வலர்கள் அறிமுகம் செய்துள்ளனர். இது குறித்து, இணையதளத்தை உருவாக்கிய, சிவகாசியை சேர்ந்த மோகன்ராஜ் கூறியதாவது: 

தற்போது இயங்கும் கால் டாக்சி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் ரத்துக்கட்டணம், அபராத கட்டணம், நெரிசல் கட்டணம் என, பலவித கட்டணங்கள் வசூலிக்கின்றன. அதே நேரம், அதிக சம்பளம் தருவதாக ஆசைகாட்டும் நிறுவனங்கள், வேலையில் சேர்ந்தபின், இலக்கை நிர்ணயித்து, டிரைவர்களை ஓய்வின்றி டாக்சி ஓட்ட வைக்கின்றன.
புகைப்படம் : இதனால், பலர் வாகனங்களை விற்றுள்ளனர்; தற்கொலை செய்தும் உள்ளனர். இதை தடுக்க, 'சாப்ட்வேர்' இன்ஜினியரான நான், 'டிஎன் ஆட்டோ' என்ற இணையதள சேவையை உருவாக்கி உள்ளேன். இதில், வாகன உரிமையாளர்களிடம் பேசி, அவர்களின் கட்டண விபரம் மற்றும் வாகன புகைப்படத்தையும் வெளியிடுகிறேன். 

இதற்காக, 100 ரூபாய் மட்டுமே பதிவு கட்டணம் வசூலிக்கிறேன். வாடிக்கையாளர் அழைப்பை, நேரடியாக அவர்களிடம் அனுப்புகிறேன். இதற்காக, எந்த தொகையையும் நான் பிடிப்பதில்லை; வாடிக்கையாளர்களிடமும் எந்த கூடுதல் கட்டணமும் வசூலிப்பது இல்லை.இந்த இணையதளம், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இயங்கும். இதில், மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே இடம் பெறும். வாகன உரிமையாளர் குறித்த விபரங்களும், டிரைவரின் தொடர்பு எண்களும் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களின் தொலைபேசி எண்களும் இடம் பெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய இடங்கள், அதன் தனிச்சிறப்புக்களும் இடம் பெற்றிருக்கும்.மேலும் விபரங்களை, 99526 41127 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டும், tnauto.in@gmail.com என்ற, இ - மெயில் அல்லது www.tnauto.in என்ற, இணையதளம் வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- - நமது நிருபர் -
'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு

Added : ஜூலை 22, 2018 03:07 


புதுடில்லி: 'தனியார் நிறுவன போர்ட்டல்கள் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களிடம், ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவிற்கும், கூடுதலாக, 12 ரூபாய் மற்றும் வரித் தொகை வசூலிக்கப்படும்' என, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் அறிவித்துள்ளது.

வெளி மாநிலங்கள், வெளியூர்களுக்கு செல்லும் பயணியர், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் வெப்சைட்டை பயன்படுத்தி, 'ஆன்லைன்' முறையில், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.இது தவிர, ரயில் நிலையங்களில் இயங்கும் கவுன்டர்களுக்கு சென்று, 'ஆப்லைன்' முறையிலும், டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.'பேடிஎம், யாத்ரா, மேக்மை ட்ரிப்' போன்ற தனியார் நிறுவன போர்ட்டல்களை பயன்படுத்தியும், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், 'தனியார் நிறுவனங்கள் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால், ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவுக்கும், கூடுதலாக, 12 ரூபாய் மற்றும் வரி சேர்த்து வசூலிக்கப்படும்' என, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதை விட, கவுன்டர்களில் முன்பதிவு செய்தால், ரயில் டிக்கெட்டிற்கான செலவு குறையும் என, வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் பிறந்த நாள் விழா : மாவட்ட நிர்வாகிகள் புலம்பல்

Added : ஜூலை 21, 2018 23:17

விஜயகாந்த் பிறந்த நாளை பழையபடி கொண்டாடுவதற்கு, தே.மு.தி.க., தலைமை திட்டமிட்டு உள்ளதால், கட்சி நிர்வாகிகள், அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இலங்கை பிரச்னையை காரணம் காட்டி, தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, விஜயகாந்த் தவிர்த்து வந்தார். தே.மு.தி.க.,வை, 2005ல் துவங்கிய பின், தன் பிறந்த நாளை, 'வறுமை ஒழிப்பு' என்ற பெயரில், கொண்டாட துவங்கினார். இதற்காக, ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும், கட்சி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்கப்படும். அந்த பணத்தை பயன்படுத்தி, பொது மக்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். கட்சி தலைமை அலுவலகம் மற்றும் விஜயகாந்த் வீட்டில், தடபுடல் மட்டன் பிரியாணி விருந்தும் வழங்கப்படும். 

இதுமட்டுமின்றி, கட்சி தலைமையிடம் நற்பெயர் பெறுவதற்காக, மாநில நிர்வாகிகளை வரவழைத்து, மாவட்ட செயலர்களும் பிறந்த நாளை கொண்டாடுவர். கட்சிக்கு, பணத்தை அள்ளி இறைத்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும், வெளியேறி விட்டனர். இந்நிலையில், சிகிச்சைக்காக, விஜயகாந்த், அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அடுத்த மாதம், அவர் சென்னை திரும்பவுள்ளார். விஜயகாந்தின் பிறந்த நாள், அடுத்த மாதம், 25ம் தேதி வருகிறது. பழையபடி, விஜயகாந்த் பிறந்த நாளை கொண்டாடி, மக்கள் மத்தியில், மீண்டும் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என, தே.மு.தி.க., தலைமை நிர்வாகிகள் கணக்கு போடுகின்றனர். இதற்காக, மாநில நிர்வாகிகள், மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர். விஜயகாந்த் நலம் பெற வேண்டி, கோவில்களில் நடக்கும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்கின்றனர். அதன்பின், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பேசுகின்றனர். மாநில நிர்வாகிகளின் நடவடிக்கையால், மாவட்ட நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: விஜயகாந்த் பிறந்த நாளுக்காக, சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள், அதிகளவில் வைக்க வேண்டும் என, கட்சி தலைமை, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக, மாவட்டங்களில், சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இப்போது, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்க வேண்டும் என்கின்றனர்.

சுவர் விளம்பரம் : எழுதுவதற்கே, பணம் இல்லாத போது, நலத்திட்ட உதவிகளை, எப்படி வழங்க முடியும் என, மாவட்ட நிர்வாகிகள் புலம்புகின்றனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

- நமது நிருபர் -
என்ன நடக்குதுன்னே தெரியலியே!ஆளும் கட்சியில் பரிதவிக்கும் தொண்டர்கள்
லோக்சபா தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், கட்சியில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல், அ.தி.மு.க., தொண்டர்கள் தவித்து வருகின்றனர்.

dinamalar 22.07.2018




லோக்சபா தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அனைத்து கட்சிகளும் துவக்கி விட்டன.தேசிய கட்சியான, பா.ஜ., சார்பில், அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும், பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக, நிர்வாகிகள் கூட்டம், மக்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது.

நடவடிக்கை இல்லை

தி.மு.க., சார்பிலும், ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் முறையாக நியமிக்கப்பட்டுள்ளனரா என, கட்சி தலைமை நியமித்துள்ள குழு, ஆய்வு செய்து வருகிறது.காங்., கட்சி சார்பில், சட்டசபை தொகுதி வாரியாக, நிர்வாகிகள்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் கட்சியே ஆரம்பிக்காத ரஜினியும், ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.


புதிதாக துவக்கப்பட்டுள்ள, மக்கள் நீதி மையம் சார்பில், பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. தினகரன் கட்சியில், லோக்சபா தொகுதி வாரியாக, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தவிர, அனைத்து கட்சிகளும், மறைமுகமாக மற்ற கட்சிகளுடன், கூட்டணி பேச்சுகளை துவக்கி உள்ளன. ஆனால், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள,

அ.தி.மு.க., எந்தவித நடவடிக்கையும் இல்லாமல், முடங்கி உள்ளது. கட்சியில், வழி காட்டிக் குழு அமைக்கப்படும் என, அறிவித்தனர்; நடவடிக்கை இல்லை.

தினகரன் கட்சிக்கு சென்றவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். காலியான பதவிகளுக்கு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.அணிகள் இணைந்த பின், பலர் பதவியை எதிர்பார்த்தனர். இதுவரை, எந்தபலனுமில்லை. மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் நிர்வாகிகள் கூட்டம், எதுவும் நடைபெறவில்லை. இதனால், கட்சியினர் சோர்ந்துஉள்ளனர்.

சமீபத்தில், கட்சி தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும், வழிகாட்டி குழு அமைக்கப்படும், புதிய நிர்வாகிகள் பட்டியல் வரும் என, கட்சியினர் எதிர்பார்த்தனர்.ஆனால், யார் ஆதரவாளர்களை நியமிப்பது என்பதில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பினருக்கும் இடையே, ஒருமித்த கருத்து ஏற்படாததால், அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன.

கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

உறுப்பினர் சேர்க்கையும் எதிர்பார்த்த அளவு இல்லை. ஏற்கனவே, 1.50 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறி வந்தோம். தற்போது, 90 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இன்னும், 60 லட்சம் பேரை சேர்க்க வேண்டி உள்ளது.இதற்கு கட்சி நிர்வாகிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள் பலர், கட்சி பதவியை எதிர்பார்த்தனர்.கட்சி தலைமை, எந்த முடிவும் எடுக்கமுடியாமல் திணறுவதால், பலர், சொந்த தொழிலை பார்க்க சென்று விட்டனர்.

ஆடி முடியட்டும்

அமைச்சர்கள், தங்கள் கோஷ்டியை மட்டும் வளர்க்க பார்க்கின்றனர். மற்றவர்களைகண்டுகொள்வதில்லை. கோஷ்டி பூசல் குறித்து, கட்சி தலைமையிடம் கூறினாலும், நடவடிக்கை இல்லை.பன்னீர்செல்வத்திற்கும், பழனிசாமிக்கும் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாக, தகவல்கள் வெளியாகின்றன.அவர்கள் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்தாலும், பழனிசாமி தரப்பினர், பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுவது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

அமைச்சர்கள் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதுவும், கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும், கட்சி தலைமை தயங்குகிறது.எம்.எல்.ஏ.,வாக இருப்பவர்கள், தினகரன் கட்சி பொறுப்பில் உள்ளனர். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில், கட்சி தலைமை உள்ளது. ஜெ., இருந்தால், இதுபோல் நடக்குமா?

அனைத்து கட்சிகளும், லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், எங்கள் கட்சியின் நிலை என்ன என்பதே தெரியவில்லை.இது குறித்து, கட்சி தலைமையிடம் கேட்டால், 'ஒரு வாரம் பொறுங்கள்' என்று மட்டும், பல மாதங் களாக பதில் சொல்லப்படுகிறது. தற்போது, 'ஆடி மாதம் முடியட்டும்' என்கின்றனர். மாதங்கள் கடந்தபடி உள்ளன.மாற்றம் எதுவும் இல்லை. இதே நிலை நீடித்தால், பதவியில் உள்ளவர்கள் மட்டுமே, கட்சியில் இருக்கும் சூழல் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர்
சேலம் மாவட்டத்தில் நிலஅதிர்வு

Added : ஜூலை 22, 2018 08:06




சேலம் : சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 7.50 மணியளவில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக மேட்டூர் அணை அருகே நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஓமலூர், தாரமங்கலம், கன்னங்குறிச்சி, தீவட்டிப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சில விநாடிகள் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையை சுற்றி உள்ள சில ஊர்களிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ள இந்த சமயத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் அச்சம் அடைய வைத்துள்ளது.
Ousted V-C took exams in MKU to clear law degree arrears


MADURAI, JULY 22, 2018 00:00 IST



P.P. Chellathurai 

Chellathurai insists he didn’t violate any rules; educationists express concern


Questions have been raised over the appropriateness of the recently-ousted Madurai Kamaraj University Vice-Chancellor, P.P. Chellathurai, having appeared for exams in the university, while holding office, to clear the arrears of a Bachelor of Law (B.L.) programme, for which he had enrolled in the early 1990s.

Besides the implications of a V-C sitting for exams in his own university, concerns have been raised whether the MKU could offer the B.L. degree anymore, since the Tamil Nadu Dr. Ambedkar Law University (TNALU) is now the only institution allowed to offer law courses in the State. The MKU stopped offering law courses after the TNLAU came into existence in 1997.

University officials said Mr. Chellathurai took the examination in May-June this year, following a 'one-time offer' made by the university last year — when he was holding office — to students of the 2008 and earlier batches to clear backlogs in accordance with the old syllabus. While the initial proposal was meant for undergraduate (UG), postgraduate (PG) and M.Phil students of the MKU and its affiliated colleges, it was later extended to B.L. and Masters of Law (M.L.) students too. A fee of Rs. 1,000 for UG courses and Rs. 2,000 for PG courses was charged, apart from an exam fee for each paper. Interestingly, while the exams were yet to be conducted for around 1,200 UG, PG and M.Phil students, who had applied to avail themselves of the offer around eight months ago, the university conducted exams for B.L. and M.L. candidates between May and June.

10 subjects

According to the office of the Controller of Examinations, three B.L. and two M.L. students took the exams on the university premises. Mr. Chellathurai wrote exams for around 10 subjects, an official said.

The university has completed the evaluation of these papers. However, the results have been withheld, following instructions from the Convenor's Committee (CC), which is presently looking after the MKU’s administration. “The CC, which included the Law Secretary and the Director of Legal Studies in Tamil Nadu, felt the necessity to analyse whether the MKU had the right to conduct these examinations for law courses,” a senior MKU official said.

R. Murali, secretary, Save MKU Coalition, one of the organisations that raised the issue with the CC, alleged that it was ‘academic indiscipline’ on the part of Mr. Chellathurai to take the exams. “Had his appointment not been set aside by the Madras High Court, he could have obtained a B.L. degree from the MKU, signed by himself. Is it not odd, to say the least?” he asked.

Defending the decision, Mr. Chellathurai said that the offer was made in the larger interest of the students. He stressed that there had been no violation of the rules, since the offer had been made to those who had enrolled in the MKU for law courses prior to the setting up of the TNALU.
WHY YOUR FISH IS FISHY

As states from Kerala to Nagaland crack down on formalin-laced fish, here are some murky truths about middlemen and the machli biz

Nishanth Chandran  ..times of india 22.07.2018

The fish you get served in most restaurants, or even what you buy from a nearby market or mall is almost definitely not fresh. Every year, for two months each, fishing is banned on the east and west coast. While the ban is in place on one coast, fish is transported there, and to other regions in the country, from the other coast mostly by train or road. Now, you know why the first few coaches of a train smell fishy.

At the earliest, it can reach its destination in 24 to 48 hours. But fresh fish, kept at room temperature, starts to rot in two hours. Refrigerated fish can stay good for three days. Hence, preserving fish becomes imperative.

Contrary to what most people believe, fishermen don’t contaminate their produce. It’s the middlemen who use formalin to prolong shelf life of fish. Most of us in the business know about this problem, and that’s why we set up a lab to test our fish.

After procuring it, the middlemen segregate fish, based on variety, cost, and the end consumer. The best produce goes to restaurants, then open markets, and the lowest category is sold to roadside fish mongers. You often see fish being sold on the beach and may assume that it’s fresh from the sea. It’s a gimmick. They are selling fish at least a few days old.

Let’s suppose a fisherman catches more fish on a Tuesday. But its demand peaks only during the weekend. So, the middleman quotes a rock bottom price and the fisherman has no choice but to sell. The middleman then stores the fish in a godown, and releases it only over the weekend.

Now, storing fish needs ice but it’s expensive. One kilo of fish needs double the ice to keep it fresh. Ice costs around Rs 3-4 per kg. And since it melts, it needs to be replaced approximately every eight hours. This works out to be costly for the middleman.

The other option is to hire a cold storage but that’s even more expensive. Formalin, on the other hand, is widely and cheaply available. A preservative for biological specimens, formalin keeps fish fresh for longer and a litre can cost as little as Rs 18. Formalin-laced fish looks fresher, especially the eyes, gills and scales.

Formalin is a 37% solution of formaldehyde, a classified human carcinogen. Fish preserved with formalin is unfit for human consumption. A 2015 research published in the British Medical Journal found that prolonged exposure to formalin — yes, it’s used to preserve bodies — puts funeral directors at a heightened risk for ALS, a neuro-degenerative disease.

In the fisheries business, we have seen that formalin is used more for preserving expensive fish, such as black pomfret and king fish. Cheaper ones, like threadfin and Indian mackerel, are less likely to be contaminated with this chemical.

— As told to Shobita Dhar Chandran is CEO of Tendercuts



CATCH 22

Middlemen hoard catch for weekends when demand is high

Ice is expensive and has to be replaced frequently

They use formalin which cost as little as Rs 18 a litre. Formalinlaced fish looks fresher

Mostly used to preserve expensive fish so buying cheaper varieties may be safer
Fake forwards new headache for doctors
Shobita.Dhar@timesgroup.com 22.07.2018

Kick off “Breast Cancer”… Avoid black bra in summer; Always cover your chest completely by your dupatta or scarf when you are under the sun… …Pass it to All the Ladies you Care for without Hesitating

This forward, pretending to be an advisory from the Tata Cancer Hospital, started doing the rounds on WhatsApp last week after actor Sonali Bendre’s announcement that she has cancer. India is in the grip of fake news, and fake health content is spreading particularly fast.

More than 25% of the messages Shammas Oliyath, co-founder of fake news busting website Check4Spam.com, debunks are fake medical posts. “Social media is rife with medical posts. The allopathic doctors we consult say there’s no scientific proof to back such claims,” he says.

A common misconception propagated by social media is that a biopsy causes a tumour to turn cancerous. “I had a patient who refused a biopsy when I had good reason to suggest it. It took me some time to convince him,” says Dr Sandeep Nayak, surgical oncologist with Fortis, Bengaluru. Other fake messages that make the rounds regularly relate to prolonged use of sanitary napkins causing death of “56 girls”, and that “80% Females Die During Delivery Due To Swelling in Uterus Walls Caused Becouse Of washing head in The Early Days Of Ur Menstrual Cycle” (no, we didn’t add the caps or the spelling errors). Why do Indians believe and propagate such patently fake messages? In fact, most people think they are performing a public service by forwarding them to friends and family.

Doctors say one reason is that there just aren’t enough of them around. According to government data, India has only about one million allopathic doctors for a population of one billion. This has created a culture of quackery, they say, which allows fake health news to thrive and be accepted.

“This is especially true in rural areas where only one in five ‘doctors’ is qualified to practice,” says Dr Jaideep Malhotra, president, Federation of Obstetrics and Gynaecological Societies of India, quoting a WHO report. “Most of the consultation time now is wasted dispelling myths,” says Dr Malhotra who practices in Agra.

Dr Sandeep Budhiraja says this is a new challenge for doctors — how to control and counter fake health news.



MISLEADING
Love is blind, take students back, Kerala HC tells college

TIMES NEWS NETWORK

Kochi:22.07.2018

The Kerala high court has quashed the decision of a college in Kerala to oust a male and a female student for eloping over a love affair.

The court held that the college authorities failed to understand the intimate personal relationship is the matter of privacy of individuals upon which it has no authority to interfere. It issued the orders on the petition filed by Malavika Babu, BBA student at CHMM College for Advanced Studies, Varkala and her senior Vyshak, who are 20 and 21-year-old respectively, challenging the decision of the college.

“Love is blind and an innate humane instinct. It is all about individuals and their freedom’, it said. In the absence of evidence, that it had affected the classes conducted by the college or the congenial environment for learning, no action can be taken on the ground of indiscipline.

“Love is all about the individual and their freedom.”

In this case, the college authorities as well as their parents objected to their affair. Finding barriers placed on their affair, Malavika eloped with Vyshak. A missing person complaint was lodged by Malavika’s mother and later the police produced them before the magistrate.

But the court set her free as she was not wrongfully detained. The parents of Malavika retracted from the opposition and supported their marriage. Now the students are husband and wife. However, the approach of the college was indifferent and decided to expel them citing the reason that their acts amount to gross indiscipline.

The court directed the Kerala University to re-admit Malavika within two weeks and directed the college to return the records of Vyshak.

I-T unearths tax evasion of ₹450 crore
Sivakumar.B@timesgroup.com

Chennai:22.07.2018

Close to a week into the I-T searches against highways contractor SPK and Co, its promoter Nagarajan Seyyadurai, his family members and associates in Chennai, Aruppukottai and Madurai, the income tax investigation officials have unearthed tax evasion of ₹450 crore. The agency also sealed a portion of the group’s Aruppukottai office on Friday. In Chennai, officials seized ₹2.1 crore more, taking the total cash seizure to more than ₹182 crore.

A team of officials from the investigation wing has been questioning family members of Seyyadurai in Aruppukottai since the searches started on Monday. The family owns several houses, offices, hotels and many business establishments in Aruppukottai.

“We have seized documents, pen drives, laptops and computer hard discs from the residences and offices in Chennai and Aruppukottai. The room in one of the offices has been sealed as there are many documents and lap tops which need to be verified. It will take more time to verify the documents,” said a senior investigation wing official.

I-T officials took Seyyadurai to Madurai after he told them that the account books are at his Madurai office. “We have found that the company evaded tax for many years. Their books are not clean. Only a portion of the total business has been accounted for,” said the official.

So far, 107 kg gold and jewellery have been seized. Of that, 101 kg is in bullion form. Some are 1 kg gold bars with foreign markings.

“The latest cash seizure was effected from a sub-contractor’s residence. We went there based on information that he was working with the SPK group. He could not give proper account for the money,” said the official.

The searches are far from over. “Since we continue to get information about the group, searches are likely to continue,” said the official.

One of the business associates of Nagarajan Seyyadurai is a close relative of a senior AIADMK leader. The firm the two operate has taken several crores worth projects in the state highways. In a complaint given to the DVAC, the DMK had recently listed out the projects taken up by the group. Seyyadurai’s firm is handling six-laning of the Vandalur- Walajabad road for ₹200 crore and a long list of road projects in several districts for more than ₹2,000 crore.
1.4K GHs don’t have fire safety licence: Govt to HC

TIMES NEWS NETWORK

Chennai:22.07.2018

More than 1,400 hospitals run by Tamil Nadu government across the state do not have a valid fire safety licence, and 538 others are pending renewal, the state government has admitted in the Madras high court.

And, of 1,938 hospitals that are mandated to have ramp, only 668 hospitals have such facility, the authorities submitted in response to a PIL moved by Jawaharlal Shanmugam seeking direction to ensure ramp and fire safety facilities in all government run multi-storey hospitals.

When the plea came up for hearing before the first bench of Chief Justice Indira Banerjee and Justice PT Asha, the government further submitted that it had proposed to establish such facilities in all the government run hospitals at a cost of ₹89 crore.

“Firefighting arrangements will be made in 34 government medical college hospitals and institutions at a cost of ₹37 crore, and in Chennai the Institute of Child Health and Hospital for Children and Institute of Obstetrics and Gynecology and Government Hospital for women and children the same facility will be made available at a cost of ₹4 crore,” the authorities said.

Besides this, ₹2.9 crore has been allotted to provide such facilities in Thiruvannamali hospitals and Kanniyakumari Medical college and Hospital would be allotted ₹1.5 crore, the authorities added.

About 1,877 hospitals have the valid fire safety licence and 538 hospitals had renewal pending and 1,400 hospitals have no valid fire safety licence at the time of inspection. Similarly, 3,808 hospitals have fire safety plan/patient evacuation plan and displayed it and 2,023 hospitals either had no plan or not displayed them on their campus, they added.

Out of 1,939 multi-storied hospitals, 1,059 has usable ramp provision and 880 has no such facility. Out of 1,938 hospitals that are mandated to have ramp only 668 hospitals have both valid fire safety licence and ramp facility. The remaining hospitals either did not have either valid fire safety license or ramp facility in their campus, the affidavit added.

Recording the submission, the bench adjourned the plea to July 30.

In March last, the bench granted three months’ time to the state government for ensuring compliance of its earlier order to provide ramps and fire fighting equipment in the hospitals.

Pursuant to the direction the health and family welfare department conducted inspection across the state and has filed the status report.

Long stay not pass to citizenship, rules HC

Mom Of 3 To Be Deported To Sri Lanka

TIMES NEWS NETWORK

Chennai:22.07.2018

The citizenship claim of a 45-year-old Sri Lankan woman, who has been staying in India for more than 30 years, married an Indian citizen and has a valid Aadhaar card, was rejected by the Madras high court, which said she had not made any application to the competent authority for conferment of her status as an Indian citizen so far.

Sayanthi will now be deported to Sri Lanka, leaving behind her husband and their three children including the petitioner , P Divya.

On June 22, Sayanthi arrived from Milan, Italy (where she was working in a hotel). On landing at Chennai airport, she approached the immigration authorities for arrival clearance. Authorities found she had fraudulently obtained an Indian passport and previously held a Sri Lankan passport, which expired on October 11, 1994.

Since she wantonly suppressed the facts, she was denied entry to India and sent to Sri Lanka on June 23. But since she falsely claimed to be an Indian, the Lankan authorities sent her back to India the same day. On June 24 she was sent back to Sri Lanka by Indian authorities. However, Lankan immigration officials did not grant arrival clearance and requested the Indian immigration to send her back on the strength of a valid emergency travel document issued by the Sri Lankan Deputy High Commission.

Accordingly, the Sri Lankan deputy high commission was asked to issue an emergency travel document to facilitate her return to Sri Lanka. On June 24, an order was issued by the Foreigners Regional Registration Officer, Chennai restricting her movement under the Foreigners Act, 1946.

Assailing the move, Sayanthi’s daughter Divya approached the high court seeking direction to the authorities to relieve her mother from detention and allow her to travel to Italy to work.

Refusing her claim, Justice T Raja said, “The claim of the petitioner that by virtue of Section 5(1)(c) of the Citizenship Act, her mother has to be treated an Indian, is far from acceptance. Although she has produced Aadhaar card, driving licence, voter identity card and marriage registration certificate of her mother, she has not made any application before the competent authority seeking conferment of her status as an Indian citizen. Above all, since Sri Lanka has admitted the status of her mother as Sri Lankan and also issued a passport inviting her to return to their country, the writ petition fails.”



SETTING STRAIGHT RULES
8 men drug & gang-rape girl, 16, in Pondy

TIMES NEWS NETWORK

Puducherry:22.07.2018

A youth and his seven friends drugged and raped the youth’s 16-year-old girlfriend in a village in the Union territory of Puducherry, police have said. The incident comes less than a week after more than 20 men were found to have sexually assaulted an 11-year-old girl in an apartment complex in Chennai over seven months and police arrested 17 suspects.

The Puducherry police on Friday registered a case against Vicky of Vazhudavur, Mugilan, Kannadasan, Surya, Ashok, Deva, Soorya and Kalai. Specials teams have been formed to nab them.

A police officer said the girl, a school dropout, was working in a private firm and came in contact with Vicky while travelling to work daily.

If convicted, accused may get 10-yr jail

The two soon became friends and Vicky often invited her to his village. During one such visit, he took her to a secluded spot and raped her, the officer said, quoting from the complaint lodged by the girl’s parents with the child welfare committee.

Vicky, who reportedly filmed the act on his mobile phone, showed the clips to his friends who insisted that he introduce her to them. About a week ago, Vicky again invited the girl to his house. When she arrived, he took her to an abandoned house in the village where he offered her a soft drink laced with sedatives. When she fell unconscious, Vicky and his friends raped her and escaped, the officer said.

The girl, who had suffered severe internal injuries in the sexual assault, on gaining consciousness, escaped from the house and reached home. She narrated the incident to her parents, who preferred to approach the child welfare committee to seek action against the culprits.

The committee members, after recording the statement of the survivor, lodged a complaint with the jurisdictional police. A case was registered under Section 6 (punishment for aggravated penetrative sexual assault) of the Protection of Children from Sexual Offences (Pocso) Act, 2012. If convicted, the eight shall be punished with rigorous imprisonment for a term, which shall not be less than 10 years, but which may extend to imprisonment for life and shall also be liable to fine.
Respect the judiciary, HC warns I-T dept

Chennai:22.07.2018

Learn to respect judiciary, the Madras high court warned the I-T department after flaying it for filing an affidavit shorn of even minimum particulars in connection with a case pending before a magistrate court in Coimbatore.

Justice P N Prakash said, “The counter (filed by the I-T department) is shorn of even minimum particulars and this court strongly records its displeasure and the cavalier manner in which the counter has been filed. The department must learn to respect the judiciary. The commissioner of I-T is directed to take appropriate action against the officer who filed the counter.”

The issue pertains to search and seizure action conducted by the I-T department on the properties of Sukesh Chandrashekar, an undertrial prisoner lodged in Tihar central prison, for attempting to bribe the Election Commission for getting ‘Two Leaves’ symbol for the TTV Dinakaran faction.

During the search, high-end cars and motorbikes possessed by Sukesh were seized. Later, it came to light that the vehicles were purchased from Karthikeyan and S Balaji, who were dealers in second-hand luxury cars. TNN
Counselling dates out for Anna univ

TIMES NEWS NETWORK

Chennai:22.07.2018

Anna University released the schedule for general counselling, on Saturday. Students with an aggregate score of 190 or above will be attending the counselling between July 25 and July 29, said an official release.

The candidates should pay the initial deposit before July 24, the release added. Similarly those with an aggregate score of 175-189, 150-174, 125-149 should pay the initial deposit between July 25-29, July 30-August 3, August 4-8 respectively.

Online counselling has been scheduled between July 30-August 3,August 4-August 8, August 9-13 respectively for these candidates. The remaining eligible candidates would choose their seats in between August 14 and 19.

Unlike previous years, candidates need not travel to Anna University, Chennai for the counselling. A total of 42 Tamil Nadu Engineering Admission (TNEA) Facilitation Centres (TFCs) have been setup across the state for online counselling. Candidates can reach out to these centres to select the engineering seats of their choice as per availability. According to official data, nearly 1.5 lakh candidates applied for the online counselling this year, which is higher compared to the last four years.
Exorbitant med college fees leave many docs in debt trap

Rema.Nagarajan@timesgroup.com  22.07.2018

High fees in most medical colleges mean that students who have to take loans to pay the fees cannot hope to service the loans from what they earn as doctors after completing MBBS.

Here’s how the maths works. Annual tuition fees in private medical colleges average over ₹10 lakh. That’s half a crore rupees or more for the entire course when charges for things like hostel, mess, library, internet and examinations are included. The EMI on an education loan of ₹50 lakh works out to at least ₹60,000. Government salaries for an MBBS graduate range from ₹45,000 to ₹65,000 depending on the state and area and starting salaries in the private sector are even lower.

This raises a question: The government is allowing the opening of more private colleges or allowing existing ones to increase seats citing shortage of doctors, especially in rural areas and in PHCs, but don’t high fees defeat the purpose? Can such doctors have a living wage after they pay the EMI? In most banks, education loans cannot exceed ₹7 lakh to ₹10 lakh without collateral, which typically would mean mortgaging a house or land.


Government salary for an MBBS graduate starts at ₹45,000

States doing little to regulate med college fees

With collateral, the loan amount can be as high as the value of the collateral. Usually, the loan carries an interest of 10% to 12.5% and has to be repaid within 10 to 12 years.

Since most parents cannot afford lakhs every year in fees, if education loans become prohibitive, it could make medical education the preserve of the rich.

A TOI analysis of fees charged in 210 private medical colleges in 2017 showed that about 50 charged anything between ₹10 lakh and ₹15 lakh and over 30 charged even more. Several government colleges too charge high fees, especially in Gujarat and Rajasthan where there are some that charge over ₹3 lakh and ₹5 lakh, respectively, as annual tuition fees.

After 4.5 years of MBBS, a student has to do a one-year paid internship, during which time his/her salary would be at best ₹20,000-25,000 per month. After MBBS, whether a student is doing threeyear post-graduation or working as a resident doctor or medical officer, the salary in government service ranges from ₹40,000 to ₹55,000 in most states and even less in the private sector. In about three to four years, the salary rises to about ₹70,000 at best in most places. With EMIs of ₹45,000- ₹65,000 for loans ranging from ₹30 lakh to ₹50 lakh, doctors are left with barely enough to live on. For those who get married by this stage, the added responsibility of running a household complicates matters further. Mirroring the US situation, where students come out of the education system with huge loans to repay, India’s medical education set-up is becoming a debt trap for thousands with governments doing little to regulate medical college fees. Even in states with fee regulation, the annual fees in private colleges could range from ₹2.5 lakh to over ₹6 lakh, especially for management seats. For those without means, that would entail a loan of ₹12 lakh to ₹30 lakh and hence unaffordable EMIs.

Saturday, July 21, 2018

நெட்டிசன் நோட்ஸ்: 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பாரத சமுதாயமா? பலாத்கார சமுதாயமா?

Published : 18 Jul 2018 17:19 IST
 



சென்னை அயனாவரத்தில் 12 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

அப்பாவி

‏நம்முடைய அலைபேசியின் இணையத்தில் கிடக்கும் விடயங்களுக்கு எந்த தணிக்கை துறையும் இல்லை. இனி நாம்தான் நம் குழந்தைகளுக்கு தொடுதல்(Good Touch & Bad Touch) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இனி ஒரு அயனாவரம் குடியிருப்பு சம்பவம் உலகில் எங்கும் நடைபெறக்கூடாது

அஜாதசத்ரு

‏அயனாவரம் காது கேளா-வாய் பேசா சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு அந்த 22 பேர் மட்டுமா காரணம்?! # நம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பின்மைதானே காரணம்?!

S Amudhan

‏சமூக வலைதளங்களில் கோபத்தை கொட்டிக்கொண்டு இருக்கும் நேரத்திலேயே அயனாவரம் பாலியல் கொடுமை போன்று இன்னொன்று நடந்து விடுகிறது..POCSO சட்டமெல்லாம் குற்றவாளிகளின் காதுக்கு போய் சேருகிறதா??

அரசு குற்றவாளிகள் பயப்படும்படி செய்ய வேண்டும். பெற்றோர் ஆண் குழந்தைகளை நல்லபடி வளர்க்க வேண்டும்.

Senthil guru

‏ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு தன் தாயும், சேயும், உடன்பிறப்புகளும் பெண் தான் என்று நினைவில் வரவில்லையா?

ர.நந்துரவிச்சந்திரன்

‏மிகப் பெரிய சோகம்..

மனிதத்தன்மையின் நம்பிக்கையில் நம்பிக்கை இழந்துவிட்டோம்..

"அயனாவரம் சம்பவம்"

வணங்காமுடி

‏அயனாவரம் சிறுமி சீரழிக்கப்பட்ட வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை வழக்கறிஞர்கள் தாக்கினார்களாம்.

நல்ல முன்னேற்றம் அப்படியே உங்க பார் கவுன்சிலை கூட்டி சிறுமிகளுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வாதாடமாட்டோம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்க..

ஆனந்த்

‏வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமிக்கு வயது

பதினொன்று.

வன்புணர்வில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை பதினாறு.

இஃது,

பாரத சமுதாயமா?

பலாத்கார சமுதாயமா?

வேதியன்

‏குற்றம் சார்ந்த எண்ணம் வருகிறதென்றால் தண்டனையின் வீரியம் பத்தவில்லை என்று அர்த்தம்

Karthik Rangaraj Namakkal, Chennai and Nagercoil

‏சட்டத்தை கடுமையாக மற்றும் விரைவாகத் தாருங்கள்...

Alex Pandiyan JB

‏வன்புணர்வு பற்றி பதிவிடும் நண்பர்களுக்கு முதலில் sex, molested, intercourse, love making பற்றிய புரிதல் வேண்டும். பெண்களின் கவர்ச்சி மிகுந்த ஆடைகளே காரணம் போன்ற பிற்போக்குத்தனமான பதிவுகளை தவிர்க்கலாம். வன்புணர்வுக்கு முக்கியக் காரணம் ஆண்களின் வக்கிர சிந்தனை ம‌ட்டுமே காரணம்.

tamil

சென்னை அயனாவரம் சிறுமி பலாத்காரம்:

இந்த மாதிரி மிருகங்களுக்கு தகுந்த பாடம் சாகும்வரை ஜெயில்.

Devi Somasundaram

1. சென்னைல யாரும் தன் அபார்ட் மென்ட்டை திறந்து போடுவதில்லை. அபார்ட்மென்ட்டில் காலியாக இருந்த வீட்டில் தான் வன்புணர்வு செய்யபட்டதாக சொல்லப்படுகிறது....அப்படி யார் 7 மாதம் தன் வீட்டைக் கண்டுக்காம திறந்து போடுகிறார்கள் ? .

2 ..மயக்க ஊசி போட்டா திரும்பத் தெளிய குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும்..அத்தனை மணி நேரமா விளையாட அனுமதித்து தேடாமல் இருந்திருப்பார்கள்..அதும் 7 மாதமா. ..டெய்லி 4. மணி நேரம் குழந்தை காணாமல் போவதை கண்டுபிடிக்கலையா.. அசந்தர்ப்பமா கூட அவள் தேடப்படவில்லையா?

3 .மயக்க மாத்திரை தந்தால் அது தொடர்ச்சியா மயக்கத்தில் வைக்கும்..பள்ளியிலோ, வேனிலோ, பக்கத்து வீட்டிலோ கவனிக்காமலா இருந்திருப்பார்கள் ?

4..மயக்க ஊசி அவ்வளவு எளிதாக சந்தையில் கிடைக்காது.மெடிக்கல் ப்ராக்‌டிஷ்னர் அனுமதி இல்லாம வாங்க இயலாது .யார் அனுமதித்தது .எந்தக் கடையில் வாங்கினார்கள்..அவர்கள் கைது செய்யப்பட்டனரா ? .

5..18-ல் இருந்து வகை வாரியா வயது நம்பர் தரப்பட்டுள்ளது. சின்ன பையனுக 7 மாதமா ஒளறாம இருப்பார்களா...தண்ணி போட்டா நண்பர்கள் கிட்ட ஒளறிடுவானுக..

6...எதோ இந்த சம்பவத்தில் சரி இல்லைன்னு உள்ளுணர்வு சொல்லுது ....எதுன்னு சொல்ல தெரில..

7 ..போக்சோ ஆக்ட். நான் பெயிலபிள். .ஒரு வருடத்தில் கேஸ் முடித்து தீர்ப்பு வழங்கியாக வேண்டும்..

Elamathi Sai Ram

அயனாவரம் சம்பவத்தில், கொன்றுவிடுங்கள், எரித்து விடுங்கள் போன்ற பதிவுகள் ஆற்றாமையில் இடப்படுபவை. நீதியின் மேல், நீதி வழங்கும் மன்றங்களின் மீது நம்பிக்கையற்று சொல்லப்படுபவை.

மாறாக, கொல்வதையே நீதியாகக் கோரமுடியாது.

குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட 17 பேரும், வழக்கமாக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபவர்கள் அல்ல எனத் தெரிகிறது. ஆனால் 12 வயதுப் பெண் குழந்தை இவர்கள் அனைவரது பாலியல் வக்கிரத்துக்கும் ஆளாகிறாள். அவள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு. குடும்பத் தலைவனாக, அண்ணனாக, தம்பியாக, சக மனிதனாக நம்மிடையே, வாழ்ந்து நினைத்து பார்க்க முடியாத வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளனர். இதுதான் கடுங்கோபத்தை உண்டாக்குகிறது. கிட்டத்தட்ட ஒரு குழந்தையைக் கடத்தி, கும்பலிடம் விற்று காசு பார்க்கும், child trafficking குற்றத்திற்கு ஒப்பானது. நமக்குத் தெரியாமல் எங்கோ நடக்கும் பயங்கர குற்றம் நாம் வசிக்கும் இடத்திலேயே மிகச் சாதாரணமானவர்களால் நிகழ்த்தப்படுகிறது.

அச்சத்தை விடுங்கள். கடும் எரிச்சலும், வெறுப்பும்தான் மிஞ்சுகிறது.

இது தொடர்ந்து நடக்கிறது. ஆசிஃபா பாலியல் பலாத்கார கொலை பேரதிர்ச்சியை நாம் கண்ட பிறகு, தொடர்ந்து இது போன்ற செய்திகள்.. ஒன்றையொன்று தூண்டப்படுகின்றன போலும்.

பாலியல் இச்சை கொண்ட நிறைய ஸோம்பிகள் நம்மைச் சுற்றிலும் வாய்ப்புகளுக்காக காத்துக்கிடக்கினறன.

இவர்களுக்கிடையேதான் நல்ல நண்பர்களும், உறவுகளும் கைப்பிடித்துக்கொள்ள இருக்கிறார்கள் என்று நிச்சயமாக நம்புவோம். முரண்தான் வாழ்க்கை போலும்.

Deepa Janakiraman

பாதிக்கப்பட்ட சிறுமி குறித்த சம்பவத்தைப் பற்றி ‘பகுத்தறிவோடு இதை யோசிக்க வேண்டும்’ என்கிற ரீதியில் எழுதப்பட்ட நிலைத்தகவல்களை ஃபேஸ்புக்கில் வாசித்தேன். பகுத்தறிவு என்பது உணர்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டு யோசிப்பது தான் என்று இங்கு விதைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.

நடந்த சம்பவம் உண்மை என காவல்துறையும், மருத்துவத்துறையும் சொல்லியாயிற்று. சிறுமியும் குற்றவாளிகளை அடையாளப்படுத்தியிருக்கிறாள்.

அந்தக் குழந்தையை நினைத்தால் பதறுகிறது. பேரச்சம் எழுகிறது இந்தப் பதற்றமும் அச்சமும் உண்மையானது. இங்கு உண்மை என்பது பெண், ஆண் குழந்தைகளை யாரிடமிருந்து எப்படி பாதுகாப்பது என்பது தான். எங்களைப் போன்ற இதற்கெல்லாம் பகுத்தறிவின்றி அதீதமாய் உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு உங்களிடம் தீர்வு இருந்தால் சொல்லுங்கள். ஏனெனில் எந்த நேரமும் எங்களால் சாந்தமாய் இருக்க முடிவதில்லை. நாங்கள் இந்த சாதிக்காரன் தான் தவறு செய்வான் என்றும் முடிவு செய்வதில்லை. கருப்பா, சிவப்பா என்று பார்ப்பதில்லை. எங்களுடைய ஒரே கொந்தளிப்பு எங்கள் குழந்தைகள் மட்டுமல்ல அனைத்து பெண் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டுமே என்பதாகத் தான் இருக்கிறது.

எங்கள் அச்சமெல்லாம் பிளம்பரையும் நம்பமுடிவதில்லை, பேராசியரையும் நம்பமுடிவதில்லை என்பதாகவே உள்ளது.

Kirthika Tharan

பெண் உரிமை , சம நிலை எல்லாம் சரி. ஆனால் ஏதும் அறியாத ஒரு பெண் இங்கு உள்ளே நுழையும் பொழுது ஆசை வார்த்தைகள், பேரன்பு, நேசம் என்று பேசியே கவிழ்க்கும் பல போலி ஆண்களும் வன்புணர்வுக்கு எதிராக பொங்குவதுதான் முரண்.

ஆண், பெண் நட்பின் மீதான நம்பிக்கையில் பலர் வெந்நீர் ஊற்றிக்கொண்டே இங்கு இன்னொரு வேஷம் போடுவதும் அறிவோம்.

திறக்கப்படாத அதர்ஸ் இன்பாக்ஸில் ஆயிரக்கணக்கில் மெசெஜ்கள் .அதில் பாலியல் வக்கிரம் தோய்ந்து பாதியாவது இருக்கும்

ஆசையாய் பேசி மனம் மாற்றுவது சட்டப்படி குற்றமாம். ஆண்களுக்கு தண்டனை உண்டு என்கிறது. அதாவது செக்‌ஷன் 497 படி..இன்னொருவரின் மனைவியோடு..கணவரின் சம்மதம் இன்றி உறவு வைத்துக்கொண்டால் ஏழு வருடம் கடுங்காவல் தண்டனை( இதை நீக்க போரட்டமும் நடக்கிறது)

பெண்களுக்கு அனபுதான் பலம், பலவீனம் ..பலவீனத்தை பயன்படுத்தும் எவரும் கோழைகள்.

Geethappriyan Karthikeyan Vasudevan

இப்போது அந்த பாதிக்கப்பட்ட குழந்தைக்குத் தேவை பெற்றோர் உற்றாரின் அரவணைப்பும் தான், அக்குழந்தைக்கு நல்ல மனோதத்துவ சிகிச்சை அளித்து இதே புரையோடிய சமூகத்தில் எதிர் நீச்சல் போட்டு சாதிக்கும் வீராங்கனையாக மாற்றிக் கொண்டு வர வேண்டும்.


தஞ்சாவூர் அருகே மது போதையில் மனைவி, மகன்களை கொலை செய்த கணவன்: முன்னாள் எம்எல்ஏக்களின் மகனுக்கு போலீஸார் வலைவீச்சு

Published : 20 Jul 2018 14:16 IST
 
வி.சுந்தர்ராஜ்    கும்பகோணம்

 


தஞ்சாவூர் அருகே மது போதையில் மனைவியையும், இரு மகன்களையும் மண்வெட்டிக் கம்பால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் போலீஸ் சரகம் அன்னப்பேட்டை மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (47). இவரது தந்தை செல்லப்பா, தாய் யசோதா இருவரும் திமுக ஆட்சிக்காலத்தில் வலங்கைமான் தொகுதியில் எம்எல்ஏக்களாக பதவி வகித்தவர்கள். ஜெயக்குமாரின் சித்தி இளமதி சுப்பிரமணியன் அதிமுக ஆட்சிக்காலத்தில் அதே தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்.

ஜெயக்குமாருக்கு திருமணமாகி அனிதா (40) என்ற மனைவியும், தினேஷ் (9), தரனேஷ் (7) ஆகிய இரு மகன்களும் இருந்தனர். இதில் அனிதா தஞ்சாவூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் தினேஷும், தரனேஷும் நான்காம் வகுப்பும், இரண்டாம் வகுப்பும் படித்து வந்தனர்.

ஜெயக்குமார் விவசாயம் பார்த்து வந்தார். அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ஜெயக்குமார் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் அருகில் கிடந்த மண்வெட்டிக் கம்பை எடுத்து அனிதாவைத் தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். அப்போது மகன்கள் இருவரும் தாயை அடிப்பதைத் தடுத்தனர். இதில் ஜெயக்குமார் இரு மகன்களையும் மண்வெட்டிக் கம்பால் தாக்கியதால் மண்டை உடைந்தது.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சத்தம் கேட்டு வந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகன்கள் இருவரும் இறந்தனர். வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காமல் அனிதா இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து பாபநாசம் டிஎஸ்பி செல்வராஜ், மெலட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான ஜெயக்குமாரை தேடி வருகின்றனர்.
தன்னம்பிக்கையால் ஓடத் தொடங்கிய கால்!

Published : 20 Jul 2018 11:40 IST

என்.சுவாமிநாதன்

 


டுபு…டுபு….டுபு...டுபு’ வெனச் சீறிப் பாய்ந்து வருகிறது அந்த புல்லட். அதில் மனைவி, குழந்தைகளோடு வலம்வருகிறார் விக்னேஷ்வர சுப்பையா. அவரது வாழ்க்கை ஒருவகையில் பிறருக்குத் தன்னம்பிக்கைப் பாடம்!

சாலை விபத்தில் ஒரு காலை இழந்த இவர், செயற்கைக் கால் பொருத்தி, இயல்பான மனிதர்களோடு ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். நிச்சயித்த திருமணமும் விபத்துக்குப்பின் நின்றுபோக, தன் தன்னம்பிக்கையால் மீண்டெழுந்தவர், இன்று அன்பான மனைவி, அழகான குழந்தைகள் செல்வங்கள், திகட்டாத தன்னம்பிக்கை என வாழ்ந்துவருகிறார்.

ஒரு காலைப் பொழுதில் விக்னேஷ்வர சுப்பையாவை நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். ‘’அப்பா ராமகிருஷ்ணனுக்குத் தனியார் நிறுவனத்தில் வேலை. அம்மா முத்துமாரி இல்லத்தரசி. என் உடன்பிறந்தவங்க இரண்டு தங்கச்சிங்க. இரண்டுபேருக்கும் திருமணம் முடிஞ்சிருச்சு. நான் பன்னிரெண்டாம் வகுப்புவரை படிச்சுட்டு, எலக்ட்ரிக்கல் வேலை செஞ்சுட்டு இருந்தேன். நான் வேலை பார்த்த எலக்ட்ரீசியன் வெளிநாட்டுக்குப் போனாரு. அதனால மொத்தப் பொறுப்பையும் எனக்கே சொந்தமா தந்துட்டு போனாரு.

எல்லாம் நல்லபடியா போச்சு. எனக்கும் வீட்டுல திருமண நிச்சயம் பண்ணுனாங்க. ஒரு நாள் நண்பர் வீட்டு விசேஷத்துக்குப் போயிட்டு பைக்ல வந்துட்டு இருந்தேன். எதிர்ல வந்த மீன் லோடு வண்டி என்னை இடிச்சுட்டு நிக்காமப் போயிருச்சு. தூரத்துல இருந்தே அந்த வண்டி ஆடி, ஆடித்தான் வந்துச்சு. டிரைவர் குடிபோதையில் இருந்திருக்கணும். அந்த விபத்தில் என்னோட வலது கால் மூட்டின் கீழ் பகுதி மூன்று பாகங்களா உடைச்சுருச்சு. பாதமும் உருத்தெரியாம சிதைஞ்சு போனது.

ஆஸ்பத்திரியில ஆப்ரேஷன் பண்ண முடியாது. செயற்கைக் கால்தான் வைக்கணும்னு சொன்னாங்க. மொத்த குடும்பமும் இடிஞ்சு போச்சு. நிச்சயிக்கப்பட்ட பொண்ணு வீட்டுல ஒரு கால் இல்லைன்னு சொல்லி, கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. வாலிப வயசுல இது எத்தனை சோதனையான காலகட்டம்? ஆனாலும் நான் மனம் தளரல. செயற்கைக் கால் வைச்சேன். பிலோனி என்னும் வகையைச் சேர்ந்த கால் இது. மூணே மாசத்துல செயற்கைக் காலில் நடந்தே பொண்ணு வீட்டுக்குப் போனேன்.

பொண்ணு வீட்டுல எல்லாருக்கும் எப்படி நடக்குறீங்கன்னு ஆச்சர்யமா பார்த்தாங்க. ஆனாலும் கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் இல்லன்னு சொல்லிட்டாங்க. இதெல்லாம் நடந்து அஞ்சு வருசம் ஆச்சு. திரும்பி பார்க்கும்போது, இப்பவும் வலிக்குது” என்கிறார் விக்னேஷ்வர சுப்பையா.

ஆனால், விபத்துக்குப் பிறகு அவர் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடவில்லை. செயற்கைக் கால் உதவியுடன் ஜிம்முக்குப் போகத் தொடங்கியிருக்கிறார். சிறிய உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார். விக்னேஷ்வராவுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால், உடம்பு சீக்கிரமே குணமாகிவிட்டது, பிறகு ஹைதராபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு விழிப்புணர்வு மாரத்தான் நடந்தபோது அதில் கலந்துகொள்ள விரும்பியிருக்கிறார்.

செயற்கைக் கால் வைத்து ஏழே மாதங்களில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று, 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி அசத்தியிருக்கிறார். அந்த மாரத்தானில் 30 பேர் மட்டுமே 5 கிலோ மீட்டர் தூரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். இவர்களில் விக்னேஷ்வர சுப்பையாவும் ஒருவர். அந்த நம்பிக்கை கொடுத்த அனுபவம், தொடர்ந்து ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

“முதலில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப் பந்தயங்களில்தான் பங்கெடுத்தேன். அதில் பரிசு வாங்குனாலும், எனக்குள்ள ஒரு கேள்வி இருந்துட்டே இருந்துச்சு. நம்மைவிட இயலாதவருக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பை நாம் பறிக்கிறோமோன்னு தோணுச்சு. உடனே இயல்பானவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன். இதுக்குன்னு செயற்கைக் காலுக்குப் பதிலாக, பிளேட்ன்னு ஒரு கால் இருக்கு. ஸ்பிரிங் வகையில் அது துள்ளி எழும்பி ஓட வைக்கும்.

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் என்னை ஊக்குவிக்கும் விதமா ரூ.5 லட்சம் மதிப்பிலான கார்பன் பைபர் வகையிலான இந்தக் காலை எனக்கு இலவசமா கொடுத்தாங்க. இப்போ என்னால 100 மீட்டரை 13.5 வினாடிகளில் ஓட முடியும். மாவட்ட அளவில் பல பரிசுகளும் வாங்கிருக்கேன். இப்போதைய உடல்நிலையில் எலக்ட்ரிக்கல் வேலை சாத்தியமே இல்லைன்னு மொபைல் பழுது நீக்கும் பயிற்சி படிச்சேன். இப்போ நாகர்கோவிலில் சொந்தமா செல்போன் சேல்ஸ், சர்வீஸ் மையம் வைச்சுருக்கேன்” என்று பெருமையுடன் கூறுகிறார் விக்னேஷ்வர சுப்பையா.

சரி, திருமணம் நடந்த கதையைச் சொல்லவே இல்லையே என்று கேட்டவுடன் அதையும் பகிர்ந்துகொண்டார். “ஒரு திருமண வீட்டுலதான் முதன்முதலா ஸ்ரீதேவிய சந்திச்சேன். கால் இல்லைன்னாலும், தன்னம்பிக்கை நிறைந்த மனுஷன்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாங்க. அவுங்க வீட்டுலயும் என்னை மகன்போல ஏத்துக்கிட்டாங்க. இப்போ எனக்கு இரண்டு குழந்தைங்க இருக்காங்க.

இப்போ இவுங்கதான் என் உலகம். என்னால் புல்லட்கூட ஓட்ட முடியும். என்னைப் பொறுத்தவரை விருதும் கோப்பையும் முக்கியம் அல்ல. விபத்தால் ஒரு காலை இழந்த பின்பும், நான் இயல்பாக இருப்பதும், தொடர்ச்சியாய் இயங்குவதும் என்னைப் போல் பலருக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்!” என்று சொல்லியவாறே குடும்பத்தை ஏற்றிக்கொண்டு புல்லட்டைக் கிளப்புகிறார் விக்னேஷ்வர சுப்பையா.

'முன்னாபாய் எம்பிபிஎஸ்' படம் என்று நினைத்தாரா?: பிரதமரைக் கட்டிப் பிடித்த ராகுல் காந்திக்கு ஹர்சிம்ரத் கவுர் கண்டனம்

Published : 20 Jul 2018 20:43 IST
 
ஐஏஎன்எஸ் புதுடெல்லி,
 


மக்களவையில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி - படம்உதவி:ட்விட்டர்

மக்களவையில் பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயலை தான் விரும்பவில்லை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் மீது அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் விவாதம் செய்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசி முடிக்கும்போது, தன்னைச் சிறுவன் எனப் பிரதமர் மோடி நினைத்தாலும், நான் அவரை வெறுக்கவில்லை என்று கூறிச் சென்று, பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டித் தழுவினார். பிரதமர் மோடியும் ராகுலை அழைத்துக் கைகொடுத்தார்.

இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டாலும், பாஜகவினரும், சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் அதிருப்தி அடைந்துள்ளனர்.பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்துவிட்டு, ராகுல் காந்தி தனது இருக்கையில் அமர்ந்து, கண்ணைச் சிமிட்டினார்.


மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

இதைப் பார்த்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், ''ராகுல் காந்தியின் செயல்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. இந்த அவையில் அமர்ந்திருப்பது நாட்டின் பிரதமர். அவருக்கென மரியாதை உண்டு. அவர் நரேந்திரமோடி அல்ல, நாட்டின் பிரதமராவார்.

காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமானால் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை விரும்பியிருக்கலாம். ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை. அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி அமர்ந்த பின் கண்ணை சிமிட்டியது எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. சபையின் மாண்பைப் பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

ராகுல் காந்தி எனக்கு மகன் போன்றவர். பிள்ளைகள் தவறு செய்தால், அதை தட்டிக்கொடுத்து, அவர்களை மெருகேற்றவேண்டியது தாயின் கடமையாகும்'' என்று சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

முன்னதாக ராகுல் காந்தி பேசி முடித்தவுடன் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், ''சிலர் திடீரென அவையில் கட்டிப்பிடி இயக்கத்தை நடத்திவிடுகிறார்கள்'' என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் பெரும் கூச்சலிட்டதால், சில நிமிடங்கள் அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

அதன்பின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பேசுகையில், ''இது நாடாளுமன்றம், 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' திரைப்படம் அல்ல. கட்டிப்பிடித்து விளையாடுவதற்கு'' என்று கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், பஞ்சாபிகள் என்றால் போதைமருந்து உட்கொள்பவர்கள் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். இப்போது ராகுல் செய்தது என்ன?, நீங்கள் இப்போது என்ன எடுத்துக்கொண்டீர்கள். இதற்கு பதில் இல்லாமல் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு சென்றார் எனத் தெரிவித்தார்.
5 நாள் மண வாழ்க்கையில் ஏமாற்றம்; கணவனை அடித்து உதைத்த மனைவி: ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்ததால் ஆத்திரம்

Published : 19 Jul 2018 18:12 IST

கோவை

 

சரமாரியாக தாக்கும் புதுமணப்பெண்

மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் வைத்துத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை சாய்பாபா கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய புதுமணத் தம்பதிகள் வந்தனர். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை அந்த இளம்பெண் சரமாரியாகத் தாக்கினார். கையை முறுக்கி முகத்தில் குத்தியபடி திட்டிக் கொண்டிருந்தார்.

அடிவாங்கியபடி எதிர்க்க முடியாமல் அந்த இளைஞர் அழுதுகொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிரித்தபடி சென்றனர். சிலர் செல்போனில் படம் எடுத்தனர். சிலர் தடுக்க முயன்றபோது இளம்பெண் கூறிய காரணத்தைக் கேட்டு “போடு இன்னும் ரெண்டு போடு” என்று இளம்பெண்ணுக்கு ஆதரவாகப் பேசிவிட்டுச் சென்றனர்.

கணவரைத் தாக்கிய இளம்பெண் ஐந்து நாட்களுக்கு முன்னர் தனது வீட்டார் எதிர்ப்பையும் மீறி தனது காதலரைக் கரம் பிடித்துள்ளார். அந்த மகிழ்ச்சியில் 5 நாள் மண வாழ்க்கை வாழ்ந்த தம்பதியர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கணவரின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சை குத்தியிருப்பதை புது மணப் பெண் கவனித்திருக்கிறார்.

அது பற்றிக் கேட்டபோது கணவர் மறைத்துள்ளார். தனக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி பிரிந்துசென்று விட்டார் என்கிற தகவலைக் கூறியுள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்து தன்னிடம் பழகி ஏமாற்றியதை அந்த இளம்பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் கோபமான அப்பெண் இடத்தில் பொது இடம் என்றும் பாராமல் கணவனை சரமாரியாக அடித்து வெளுத்துவிட்டார்.

மனைவியிடம் அடிவாங்கி அழுத இளைஞர் மூன்று பெண்களைக் காதலித்ததும், அவர்களில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ததும் பின்னர் தெரியவந்துள்ளது.

இதனிடையே பொது இடத்தில் இளம்பெண் ஒருவர் இளைஞரை அடிப்பதாக போலீஸாருக்கு சிலர் போன் செய்து தகவல் சொல்ல சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இளம்பெண் தாக்குதலிலிருந்து அழுதுகொண்டிருந்த இளைஞரை மீட்டனர்.

“என்ன செய்ததால் அந்தப் பெண் உன்னை இந்த அடி அடிக்குது” என்று போலீஸார் கேட்க “நான் என்ன சார் செய்தேன், அவள் என் மனைவி அவள்தான் என்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறார்” என்று கூறிய கணவன் “நல்லவேளை சார் வந்து காப்பாற்றினீர்கள்” என்று கூறியுள்ளார்.

“ஏம்மா புருஷனைப் போட்டு அடிப்பதை எல்லாம் வீட்டுக்குள் வைத்துக்கொள். பொது இடத்தில் இவ்வாறு செய்யக்கூடாது. அவன் என்ன தவறு செய்தான்” என்று போலீஸார் கேட்டுள்ளனர்.

“ என்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு பெண்களுடன் பழக்கம் உள்ளது, ஏற்கெனவே திருமணமாகி மனைவியும் இருக்கிறார்” என்று இளம்பெண் கூற, ஏதாவது புகார் இருந்தால் ஸ்டேஷனில் சொல்ல வேண்டும், சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று போலீஸார் எச்சரித்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் கணவரை நையப்புடைத்த காட்சியும், கதறி அழும் கணவரை பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் காட்சியும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. தப்பு செய்யும் கணவர்களுக்கு சரியான தண்டனை என சிலர் இளம்பெண்ணைப் பாராட்டியும் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
கட்டி அணைத்த ராகுல்: கைகுலுக்கி வாழ்த்து சொன்ன மோடி

Published : 20 Jul 2018 14:48 IST

சென்னை




கட்டி அணைத்த ராகுல், கைகுலுக்கிய மோடி

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது காரசாரமாகப் பேசிய ராகுல் காந்தி பேச்சை முடித்த பின்னர் பிரதமர் இருக்கும் இடம் சென்று அவரைக் கட்டி அணைத்தார். மோடி சிரித்தபடியே அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆந்திராவுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய தெலுங்கு தேசம் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. 15 ஆண்டுகளுக்குப் பின் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் இது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்து முதலில் பேசிய தெலுங்கு தேசம் எம்.பி. ஜெயதேவ் கல்லா, ''ஆந்திரா பிரிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, 5 கோடி ஆந்திர மக்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு பூர்த்திசெய்யவில்லை'' என்று குற்றம் சாட்டினார்.

பாஜகவினரால் குழந்தை என்ற அர்த்தத்தில் பப்பு என்று அழைக்கப்படும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சில் அனல் பறந்தது. அவர் பேச்சில் நேரடியாக பிரதமரை குற்றம் சாட்டினார். அப்போது மோடி அவையில் அமர்ந்திருந்தார். அவர் சிரித்தபடியே ராகுல் பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தார்.

ராகுல் காந்தி பேச்சில் பிரதமர் என் கண்ணைப்பார்த்து பேசவேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.

பழங்குடி இன மக்கள், இஸ்லாமியர்கள் இந்தியர்கள் இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர் இந்தியாவில் பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் , பெண்கள், தலித்துகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை சிறிது நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார். பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்துசென்று மோடியின் அருகே சென்று அவரைத் திடீரென கட்டி அணைத்தார்.

இதை எதிர்பார்க்காத பிரதமர் திரும்பிச்சென்ற ராகுலையின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்து அவர் பேசியதற்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கினார். இருவரின் நாகரிகமிக்க இச்செயலை சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் புன்னகையுடன் பார்த்து ரசித்தனர்.
சீரழிக்கும் 'டிவி' சீரியல்கள் தீமைகளை விளக்கும் கல்லூரி மாணவிகள்

Added : ஜூலை 20, 2018 23:31

அருப்புக்கோட்டை, முன்பெல்லாம் உறவினர்கள் வீட்டிற்கு செல்வது, குழந்தைகளுடன் கோயிலுக்கு செல்வது, குடும்பத்துடன் சந்தோஷமாக வீட்டில் பேசிக் கொண்டிருப்பது என எவ்வளவோ பொழுது போக்கு அம்சங்கள் இருந்தன.இவ்வாறான பொழுதுபோக்குகள் நாம் வாழ்வில் எந்தவித எதிர்மறை தாக்கத்தையும், துன்பத்தையும் ஏற்படுத்தவில்லை.மேலும் நமது வாழ்க்கையில் அன்பு, பாசம், குணம், கலாசாரம், அணுகுமுறை, பாரம்பரியம் மாறாமல் இருந்து வந்தது.முந்தைய கால கட்டத்தில் மேடை நாடகங்கள் மூலம் சமுதாய விழிப்புணர்வு ஏற்பட்டது. நவீன தொழில் நுட்பங்கள் வந்தபின் அனைத்துமே இயந்திரதனமாக மாறி விட்டது.நவீன வளர்ச்சியால் மனிதன் தன் வாழ்க்கையை இழந்து விட்டான்.எதுவுமே எளிதாக கிடைத்து விடுகிறபடியால் சுவாரஸ்யம் இல்லாத வாழ்க்கையாக மாறி விட்டது. எந்நேரமும் டென்ஷன் ஏற்படுகிறது. இதை குறைத்து கொள்ள 'டிவி' சீரியல்களில் கவனம் செலுத்தி காலம் கழிக்கின்றனர் சிலர். 24 மணி நேரமும் 'டிவி'யே கதியாக இருப்பவர்களும் உண்டு.சேனல்களில் வரும் தொடர்களும் கூடுதல் டென்ஷனை ஏற்றுவதாகவே உள்ளது. உறவு முறைகளை கெடுப்பது, குடும்பத்திற்குள் பகையை வளர்ப்பது, சதி செய்வது போன்ற தொடர்களாகத்தான் அதிகம் வருகின்றன. இவற்றால் சமுதாயத்திற்கு பயன் இல்லை.வீட்டில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற தொடர்களை பார்த்து அதற்கு அடிமையாகி விட்டனர். குடும்பங்களில் 'டிவி 'தொடர்களால் குழப்பம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப பிரச்னைகளுக்கு 'டிவி' தொடர்களும் காரணமாக உள்ளன.சிக்கல்களை ஏற்படுத்தும்' டிவி' தொடர்கள் குறித்து அருப்புக் கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லுாரி மாணவிகள் என்ன ெசால்கிறார்கள் என்பதையும் கேளுங்களேன்...

மனநிலையை மாற்றுது'டிவி' சீரியல்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் அமைய வேண்டுமே தவிர பார்ப்பவர்களின் மனநிலையை மாற்ற கூடாது. சீரியல்களில் வரும் கதாபாத்திரம் போல் ஒருசில பெண்கள் தங்களை சித்தரித்து கொள்கின்றனர். இதனால் பல குடும்பங்களில் பிரச்னையே ஏற்படுகிறது. சீரியல்களில் வருவதை போல் நமது வாழ்க்கையிலும் எடுத்து கொள்ள கூடாது.-தீபிகா, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ.,தீயவைகளை கற்கின்றனர்இந்தி, தெலுங்கு, கொரியா போன்ற வேறு மொழி சீரியல்களை தமிழில் மொழி பெயர்ந்து காண்பிக்கப்படுகிறது. இதுபோன்ற சீரியல்களில் வரும் தீய சம்பவங்கள் பார்ப்பவர்களை ஈர்க்கிறது. குடி பழக்கம், போதை பொருள் உபயோகித்தலையும் சீரியல்களை பார்த்து கற்று கொள்கின்றனர். பிற மொழி சீரியல்களை பார்ப்பதில் தவறில்லை. அதில் வரும் தீயவைகளை ஒதுக்கி வைத்து விட வேண்டும்.-கோகிலவாணி, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ.,குழந்தைகளை கவனிப்பதில்லை'டிவி' சீரியல்களை விடாமல் பார்ப்பதால் பெண்கள் தங்கள் குழந்தைகளை கவனிப்பதில்லை. இதனால் அவர்களின் படிப்பு மட்டும் அல்லாமல், வேறு சில தவறுதல்களை செய்ய வைக்கிறது. தற்போது வரும் சீரியல்களில் அதிகப்படியான உறவு முறைகளை தவறாக காட்சி படுத்துகின்றனர். இதனால் சமுதாய பாதிப்பு ஏற்படுகிறது. குடும்ப மற்றும் சமுதாய ஒற்றுமைகளை வலியுறுத்தும் வகையில் யாரும் சீரியல்கள் எடுப்பதில்லை.--அனிதா, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ.,எதிர்மறை எண்ணங்கள்சீரியல்களை பார்ப்பதால் நம்மை அறியாமலே மனதில் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி விடும். இதனால் குடும்பங்களில் பிரச்னைகளை புதியது புதியாக முளைக்கிறது. சீரியல்கள் நமது நேரத்தை வீணாக்குகிறது. சீரியல்கள் பார்க்கும் மாணவர்களுக்கு படிப்பின் மீது நாட்டம் குறைகிறது. தேவையற்ற சந்தேகங்கள் உருவாகி குடும்பங்களை பிரிக்கிறது.-ஜனனி, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ.,உறவுமுறைகளுக்கு வேட்டுசினிமா மற்றும் 'டிவி' சீரியல்கள் மக்களை அதிக அளவில் ஈர்க்கின்றன. குறிப்பாக பெண்கள் சீரியல்களுக்கு அடிமைகளாக உள்ளனர். சீரியல்களில் தீமைகளே அதிகம் உள்ளது. உறவு முறைகளுக்கு வேட்டு வைக்கும் சீரியல்களை பார்ப்பதை தவிர்ப்போம்.-- லாவண்யா, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ., -
மருத்துவ கல்வி கட்டணம் ஒழுங்குபடுத்த கமிட்டி

Added : ஜூலை 20, 2018 21:58

சென்னை, : நிகர்நிலை பல்கலைகளில் மருத்துவ படிப்புக்கு, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்த, ஆய்வு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வு கட்டாயமானது. இதனால், அனைத்து நிகர்நிலை பல்கலைகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கும், நீட் கட்டாயமானது. நீட் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியலின்படி, மருத்துவ படிப்புகளில் சேர்க்க, நிகர்நிலை பல்கலைகளுக்கும் அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.ஆனால், கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்த்தாலும், தனியார் நிகர்நிலை பல்கலைகள், மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. பல பல்கலைகள், கோடிக்கணக்கில் வசூலிப்பதால், நீட் தேர்வு இருந்தாலும், பணம் இருந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது.இதை மாற்றும் வகையில், நிகர்நிலை பல்கலைகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியாக கட்டண ஒழுங்குமுறை கமிட்டி, பல்கலை மானிய குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக, 'எய்ம்ஸ்' மருத்துவ கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர், ஆர்.சி.ரேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
'நீட்' தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை

Added : ஜூலை 21, 2018 04:05 | 

dinamalar



புதுடில்லி : 'நீட்' எனப்படும், மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் அலைபேசி எண், புகைப்படங்கள், இணையதளத்தில் விற்பனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'நீட்' தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளதாக இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதியோரின் முழு முகவரி, அலைபேசி எண், புகைப்படம், பிறந்த நாள், இ - மெயில் முகவரி, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களை அளிப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது. இதற்கு, இரண்டு லட்சம் ரூபாய், பணம் செலுத்த வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதியோரின் அலைபேசி எண்களின் முதல் மூன்று எண்கள் மட்டுமே இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளோர், பணம் செலுத்தி, மொத்த தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வு எழுதியோரின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட செய்திகள்

களை கட்டத்தொடங்கியது ஆடி தள்ளுபடி விற்பனை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்




ஆடி தள்ளுபடி விற்பனை களை கட்டத்தொடங்கி விட்டது. தள்ளுபடி விற்பனையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பதிவு: ஜூலை 21, 2018 05:00 AM

சென்னை,

ஆடி மாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அம்மன் கோவில் திருவிழாக்கள் தான். இதற்கு அடுத்தபடியாக இருப்பது தள்ளுபடி விற்பனை.

சென்னையில் அங்காடி தெரு என்று அழைக்கப்படும் தியாகராயநகர் மற்றும் புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஜவுளி கடைகளில் ஆடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு சேலை வாங்கினால் 2 சேலைகள் இலவசம், ஒரு சட்டை வாங்கினால் 2 சட்டை இலவசம் என்பன உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

அலைமோதுகிறது

இதையடுத்து தள்ளுபடியில் பொருட்களை வாங்க மக்கள் கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் பிரதான கடைகள், வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளிகள் மட்டுமின்றி எலக்ட்ரானிக் பொருட்கள், பர்னிச்சர்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட் களும் ஆடித்தள்ளுபடி பட்டியலில் இணைந்துவிட்டன.

நகைக்கடைகளும் ஒரு பவுன் தங்கத்துக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை தள்ளுபடி அறிவித்துள்ளன. இதேபோல மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், கார் நிறுவனங்களும் வாகனங்களின் விலைகளுக்கு ஏற்ப தள்ளுபடி மற்றும் ஆயுட்கால காப்பீடு இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கின்றன. வியாபாரிகளின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் ஆடி மாதம், தள்ளுபடி விற்பனை மாதமாக ஆகி களை கட்டத்தொடங்கி விட்டது.


தேசிய செய்திகள்

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு





தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர் களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு, 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வை நடத்த அனுமதி வழங்கியது.

பதிவு: ஜூலை 21, 2018 05:45 AM

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுதேர்வை தமிழில் எழுதிய மாணவர் களுக்கு, கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியால் மதிப்பெண்கள் குறைந்தது.

196 கருணை மதிப்பெண்கள்

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறியதோடு, மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) அறிவுறுத்தியது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி சி.பி.எஸ்.இ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் தரப்பிலும், ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.எஸ்.இ, தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கேள்வித்தாளை கோர்ட்டில் தாக்கல் செய்து வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்களை வழங்கினால் சில மாணவர்களின் மதிப்பெண் கள் மொத்த மதிப்பெண்களை விட அதிகமாகும். உதாரணத்துக்கு மொத்த மதிப்பெண் 720 ஆகும். இப்போது கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்கினால் சில மாணவர்களின் மதிப்பெண் 750 ஆகிவிடும். இது தேர்வு முறையை கேள்விக்குரியதாக்கி விடும்.

கேள்வித்தாளில் தமிழ் மொழிபெயர்ப்போடு ஆங்கில மூலத்தாளும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல் கையேட்டில், தமிழ் கேள்வித்தாளில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகள் இருப்பதாக தோன்றினால், ஆங்கில கேள்வித்தாளில் உள்ளதே இறுதியாக கொள்ளப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் வருங்காலத்தில் இது போன்ற குளறுபடிகள் எதுவும் நடைபெறாமல் அனைத்து வகையிலும் கவனமாக பார்த்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரை தொடர்ந்து டி.கே.ரங்கராஜன் எம்.பி. தரப்பில் ஆஜரான வக்கீல் சித்தார்த் லுத்ரா வாதாடுகையில், “தமிழில் வெளியிடப்பட்ட கேள்வித்தாளில் ஏதேனும் எழுத்துப்பிழைகள் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மொழிபெயர்ப்பில் வினாக்களே தவறாக கேட்கப்பட்டு உள்ளன. இது மாணவர்களுக்கு மிகவும் பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தியது. எனவே, ஐகோர்ட்டு தீர்ப்பு மிகவும் சரியானது. அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி கருணை மதிப்பெண்கள் வழங்குவதுதான் நியாயமாக இருக்கும்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் கூறியதாவது:-

49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. தவறாக மொழிபெயர்க் கப்பட்ட ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தம் 196 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் வழங்குமாறு ஐகோர்ட்டு கூறி உள்ளது. இது நாடு தழுவிய அளவில் உள்ள தகுதி பட்டியலை பாதிக்கும்.

இது தேசிய அளவில் நடைபெறும் தேர்வு. மொழி பெயர்ப்பு சரியாக இருந்தாலும் மாணவர்கள் விடைகளில் தவறு நேர்ந்திருக்கலாம் என்ற விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் இந்த கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியதாவது:-

ஒரு கேள்வியில் ‘சீட்டா’ (சிறுத்தை) என்ற வார்த்தை ‘சீதா’ என்று தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. மொழிபெயர்ப்பின் கூர்மைத்தன்மை தவறுவதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதுபோன்ற பிழைகள் மாணவர்களின் விடையை தவறாக வழிநடத்திச் செல்லும் ஆபத்து உள்ளது. இதுபோன்ற தவறுகளால் அடுத்த முறை மாணவர்கள் தமிழில் தேர்வை எழுத எப்படி முன்வருவார்கள்? ஆனால் அதற்காக இப்படி கருணை மதிப்பெண்கள் அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகு, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்களை அளிக்குமாறு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது.

ஐகோர்ட்டு தீர்ப்பினால் தடைபட்ட 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வை சுகாதாரத்துறை இயக்குனரகம் நடத்திக்கொள்ளலாம்.

வருங்காலத்தில் நீட் தேர்வில் கேள்வித்தாளை இறுதி செய்வதற்கும், பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பை சரிபார்க்கவும் சி.பி.எஸ்.இ. நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மீண்டும் தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு

நீட் தேர்வு கருணை மதிப்பெண்  தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, தமிழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 -ஆம் தேதி முதல் 7 -ஆம் தேதி வரை நடைபெற்றது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மூலம் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கி புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு மற்றும் தமிழகத்தில் நடைபெற்று வந்த கலந்தாய்வு என அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், இவ்வழக்கை எதிர்த்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடைவிதித்துள்ளது. இதையடுத்து, மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ கூறியது:

 உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்படும். அந்த உத்தரவின் நகல் கிடைத்ததும் தமிழக அரசிடம் ஆலோசனை பெற்று, சட்ட ஆலோசனைகளும் பெற்ற பின்னர் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும். இன்னும் இரு தினங்களில் ஆலோசனைகள் நிறைவடையும். திங்கள்கிழமை (ஜூலை 23) கலந்தாய்வு தேதி குறித்த தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்.
இதற்கிடையே, அகில இந்திய அளவிலான இரண்டாம்கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் வெளியீடும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த முடிவுகள் வெளியிடப்பட்டு, மீதம் உள்ள இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்தான் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும். அரசு இடங்களுக்கான இரண்டாம்கட்டக் கலந்தாய்வையும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வையும் ஒரே நேரத்தில் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என்றார் அவர்
 

NEWS TODAY 20.09.2024