Saturday, July 21, 2018

மாவட்ட செய்திகள்

களை கட்டத்தொடங்கியது ஆடி தள்ளுபடி விற்பனை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்




ஆடி தள்ளுபடி விற்பனை களை கட்டத்தொடங்கி விட்டது. தள்ளுபடி விற்பனையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பதிவு: ஜூலை 21, 2018 05:00 AM

சென்னை,

ஆடி மாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அம்மன் கோவில் திருவிழாக்கள் தான். இதற்கு அடுத்தபடியாக இருப்பது தள்ளுபடி விற்பனை.

சென்னையில் அங்காடி தெரு என்று அழைக்கப்படும் தியாகராயநகர் மற்றும் புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஜவுளி கடைகளில் ஆடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு சேலை வாங்கினால் 2 சேலைகள் இலவசம், ஒரு சட்டை வாங்கினால் 2 சட்டை இலவசம் என்பன உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

அலைமோதுகிறது

இதையடுத்து தள்ளுபடியில் பொருட்களை வாங்க மக்கள் கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் பிரதான கடைகள், வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளிகள் மட்டுமின்றி எலக்ட்ரானிக் பொருட்கள், பர்னிச்சர்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட் களும் ஆடித்தள்ளுபடி பட்டியலில் இணைந்துவிட்டன.

நகைக்கடைகளும் ஒரு பவுன் தங்கத்துக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை தள்ளுபடி அறிவித்துள்ளன. இதேபோல மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், கார் நிறுவனங்களும் வாகனங்களின் விலைகளுக்கு ஏற்ப தள்ளுபடி மற்றும் ஆயுட்கால காப்பீடு இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கின்றன. வியாபாரிகளின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் ஆடி மாதம், தள்ளுபடி விற்பனை மாதமாக ஆகி களை கட்டத்தொடங்கி விட்டது.


No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024