Sunday, July 22, 2018

சேலம் மாவட்டத்தில் நிலஅதிர்வு

Added : ஜூலை 22, 2018 08:06




சேலம் : சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 7.50 மணியளவில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக மேட்டூர் அணை அருகே நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஓமலூர், தாரமங்கலம், கன்னங்குறிச்சி, தீவட்டிப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சில விநாடிகள் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையை சுற்றி உள்ள சில ஊர்களிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ள இந்த சமயத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் அச்சம் அடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024