Monday, September 23, 2019

5 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து

Added : செப் 22, 2019 23:09

திருப்பதி:திருமலையில், செப்., 24ல், ஏழுமலையான் தரிசனம் ஐந்து மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலையில், வரும், செப்., 30 முதல் அக்.,8 வரை, வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது. அதை முன்னிட்டு, அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில், ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, செப்., 24ம் தேதி, ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்பட உள்ளதால், காலை, 6:00 முதல் 11:00 மணிவரை, ஐந்து மணி நேரம், தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில் சுத்தப்படுத்திய பின் பக்தர் கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

No comments:

Post a Comment

Declare assets online by Oct, TN govt tells staff

Declare assets online by Oct, TN govt tells staff  Julie.Mariappan @timesofindia.com 11.09.2026 Chennai: Tamil Nadu govt has made it mandato...