Monday, September 23, 2019

பிரிட்டனில் பணியாற்ற 'டோபல்' தேவையில்லை

Added : செப் 22, 2019 23:07

புதுடில்லி:ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பணியாற்றுவதற்கு, டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர், 'டோபல்' மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விசா கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் பணியாற்ற விரும்பும் டாக்டர்கள், நர்சுகள், பல்மருத்துவர்கள், பணிப் பெண்கள் ஆகியோர், ஓ.இ.டி., எனப்படும் தொழிற்முறைஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதைத் தவிர, டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எல்., என்ற மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.ஆக்ஸ்போர்டு பல்கலையின் துணை அமைப்பு நடத்தும், ஓ.இ.டி., தேர்வு, பல்வேறு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால், அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, பிரிட்டனுக்கான விசாவை பெறலாம். டாக்டர்கள் உள்ளிட்டோர், டோபல் போன்ற தேர்வுகளிலும் தேர்ச்சி பெறத் தேவையில்லை.இதற்கான அறிவிப்பு சமீபத்தில்வெளியிடப்பட்டது. அக்., 1 முதல் இது அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...