Sunday, September 22, 2019


ஒரே வகுப்பில் படித்த நான்கு நீதிபதிகள்


Added : செப் 21, 2019 21:51

புதுடில்லி, : உச்ச நீதிமன்ற நீதிபதிகளில், நான்கு பேர், ஒரே ஆண்டில், டில்லி சட்டக் கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றவர்கள்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை சமீபத்தில், 34 ஆக உயர்த்தப்பட்டது. தற்போதுள்ள, 34 நீதிபதிகளில், நான்கு பேர், டில்லியில் உள்ள சட்டக் கல்லுாரியில், 1982ல், பட்டப் படிப்பை முடித்தவர்கள்.

இவர்களில், நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட், 2016ம் ஆண்டிலும்; நீதிபதி, எஸ்.கே.கவுல், 2017லும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர். நீதிபதிகள், எஸ்.ரவீந்திர பட், ரிஷிகேஷ் ராய் சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர்.தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், ஆர்.எப்.நரிமன், நவீன் சின்ஹா, தீபக் குப்தா, ஹிந்து மல்ஹோத்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோரும், இதே கல்லுாரியில் படித்தவர்கள் தான்.

நிரந்தர அமர்வு

ஐந்து நீதிபதிகள் கொண்ட, நிரந்தர அரசியல் சாசன அமர்வை அமைக்க, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் முடிவு செய்துள்ளார். அரசியல் சாசனம் தொடர்பான, 37 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை, இந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.மூன்று நீதிபதிகள் அமர்வில், 164 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கும் நிரந்தர அமர்வு உருவாக்குவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2026

  UP student (19) ‘bitten by snake’ 6 times in 6 weeks; family baffled  20.09.2026 Muzaffarnagar: For a 19-year-old BSc student from Hathras...