Sunday, September 22, 2019

அண்ணா பல்கலையின் புதிய விதிமுறையை எதிர்த்து வழக்கு

Added : செப் 22, 2019 00:00

சென்னை, பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெற, அண்ணா பல்கலை ஏற்படுத்திய, புதிய விதிமுறையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, அண்ணா பல்கலைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொறியியல் மாணவர்களுக்கு, புதிய தேர்ச்சி முறையை, அண்ணா பல்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான விதியை, ௨௦௧௯ பிப்ரவரியில் பிறப்பித்தது. அதன்படி, ஒரு செமஸ்டரில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அடுத்தடுத்து, மூன்று செமஸ்டர்கள் வரை தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.மூன்று முறை கிடைத்த வாய்ப்பிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால், அடுத்த செமஸ்டரை தொடர முடியாது. அதாவது, முதல் செமஸ்டரில் தோல்வி அடைந்தவர், நான்காவது செமஸ்டர் முடிவதற்குள், தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான், ஐந்தாவது செமஸ்டர் போக முடியும்.இந்தப் புதிய விதிமுறையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்கள், ௧௦ பேர் மனு தாக்கல் செய்தனர். மனுவில், 'புதிய விதிமுறையால், மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படும்; எனவே, தடை விதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டது.இம்மனு, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் கந்தவடிவேல் துரைசாமி ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, உயர் கல்வித் துறை செயலர் மற்றும் அண்ணா பல்கலைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, அக்., ௧௦க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2026

  UP student (19) ‘bitten by snake’ 6 times in 6 weeks; family baffled  20.09.2026 Muzaffarnagar: For a 19-year-old BSc student from Hathras...