Friday, May 15, 2015

அன்று விதைத்தது; இன்று தழைக்கட்டும்

பிரதமர் நரேந்திர மோடி, சீனாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளார். பிரதமர் என்ற முறையில் மோடிக்கு இது சீனாவுக்கு செல்லும் முதல் பயணம் என்றாலும், ஏற்கனவே குஜராத் முதல்–மந்திரியாக இருந்தபோது, நான்கு முறை அரசு பயணமாக சீனாவுக்கு சென்றிருக்கிறார். அந்த சுற்றுபயணங்களும் குஜராத்துக்கு பல தொழில் முதலீடுகளை ஈர்த்து கொண்டுவந்தன. இந்த வரலாற்று சிறப்புமிக்க சீனா சுற்றுப்பயணத்தில், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜெயலலிதாவின் அனுமதியோடு சென்னை மேயர் சைதை துரைசாமி சென்றிருப்பது, தமிழ்நாட்டுக்கு பெருமை அளிக்கிறது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள கலாசார, வர்த்தக உறவு என்பது இன்று நேற்றல்ல, பண்டையகாலம் தொட்டே இருந்திருக்கிறது என்பதற்கு, இருநாடுகளிலுமே சரித்திர சான்றுகள் இருக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு 1954–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14–ந்தேதி ஜவகர்லால் நேரு சீனாவுக்கு சென்று, இருநாட்டு நல்லுறவுக்கு விதை விதைத்தார். அன்று அவரும், சீன அதிபர் மா சே துங்கும் 4½ மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தை, இருநாடுகளும் எதிர்காலத்தில் செல்லவேண்டிய புதிய பாதையை வகுத்துக்கொடுத்தது. அன்று மா சே துங் பேசும்போது, ‘பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவைவிட, சீனா மிகவும் பின்தங்கியிருக்கிறது.

அத்தகைய அளவில் தொழில்வளர்ச்சி அடைய சீனாவுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் ஆகும்’ என்று கூறினார். அத்தகைய நிலையில் இருந்த சீனாவின் முதலீடுகள் இந்தியாவுக்கு வேண்டும் என்று இப்போது கேட்கும் நிலையைப் பார்க்கும்போது, இத்தகைய வளர்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து, அதை பாடமாகக் கொண்டு கடைபிடிக்கவேண்டும். அன்று மாவோ பேசும்போது, ‘இந்தியாவும், சீனாவும் மோதிக்கொள்ளவேண்டிய அவசியமே இல்லை’ என்றார். இதற்கு பதில் அளித்த நேரு, ‘நமக்குள் சில வேறுபாடுகள் இருந்தாலும், நாம் மோதிக்கொள்வதில்லை’ என்றார். இந்த இருதலைவர்களும் விரும்பிய பரஸ்பர உறவு தழைக்க இந்த சுற்றுப்பயணம் உதவவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

மோடிக்கு பிரதமர் என்ற முறையில் இது முதல் பயணம் என்றாலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், மோடி பிரதமரானவுடன் இந்தியாவுக்கு வந்தபோது வழக்கமாக தலைவர்கள் தலைநகர் டெல்லியில் வந்து இறங்கும் மரபை மீறி, மோடியின் சொந்த ஊரான ஆமதாபாத்தில் தொடங்கினார். காந்தி ஆசிரமத்துக்கும் அவர் சென்றார். ஆமதாபாத்தில் இருதலைவர்களும் ஒரே ஊஞ்சலில் மகிழ்வோடு ஆடியதை இந்தியா, சீனா நாட்டு மக்கள் மட்டுமல்ல, உலக நாடுகளே ஆச்சரியத்தோடு பார்த்தன. அதுபோல, மோடியின் சீன பயணமும் ஜி ஜின் பிங்கின் சொந்த ஊரான ஜியான் நகரில் நேற்று தொடங்கியது. மோடியின் இந்த சுற்றுப்பயணம் வர்த்தக மற்றும் பொருளாதார பிரச்சினைகள், எல்லைப் பிரச்சினைகளை சுற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜின் பிங், இந்தியா வந்திருந்தபோது, இந்தியாவில், சீனாவின் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளுக்கு உறுதி அளித்தார். அந்த உறுதியை நிறைவேற்றும் வகையில், பல ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படும் எனவும், பெங்களூரில் சீனா அமைக்கப்போகும் கலாசார பூங்காவில் ஒரு ரெயில்வே கல்லூரியை அமைக்கப்போவதுபோல, தமிழ்நாட்டுக்கு பலன் அளிக்கும் ஏதாவது ரெயில்வே திட்டம், அல்லது வேறு ஏதாவது முதலீடும் கையெழுத்து ஆகும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Thursday, May 14, 2015

கேள்விகள், சிரிப்புகள், கவலைகள்!

Return to frontpage

மிக விரைவில் முன்னாள் முதல்வராகவிருக்கும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார். நீதிபதி குமாரசாமியை அவர் மனம் எந்த அளவுக்கு வாழ்த்தியிருக்கும் என்று கற்பனைகூடச் செய்ய முடியாது. ராமனின் பாதுகைகளின் கீழ் அமர்ந்து ஆட்சிசெய்த பரதனே கூச்சமடையும் அளவுக்குப் பணிவுடன் தன் கடமையைச் செய்த அவர், இனி தலை நிமிர்ந்து நடக்கலாம். அரியணை என்னும் சிறையை விட்டு விலகலாம். முள்முடியைவிடவும் மோசமான அந்தக் கிரீடத்தைக் கழற்றிவைக்கலாம்.

பன்னீர்செல்வத்தின் பிரச்சினை ஓய்ந்தது. தமிழகத்தின் பிரச்சினை? தமிழகக் கட்சிகளின் பிரச்சினை? நீதிமன்றப் பிரச்சினை? வழக்கு? மேல்முறையீடு? அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தல்?

ஆட்டம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. பன்னீர் செல்வத்துக்கு இருக்கும் நிம்மதி வேறு பலருக்கு இருக்காது. ஜெயலலிதா தேர்தலில் நிற்க இயலாத நிலையைக் கணக்கில் கொண்டு தேர்தல் கோட்டை கட்டியவர்கள் இப்போது புழுங்குகிறார்கள். வேறு சிலரோ தேர்தல் காலத்தில் ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை நம் மீது விழாதா என்ற ஏக்கத்துடன் காய் நகர்த்துகிறார்கள். இன்னும் ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய நிலையில் இருக்கும் ஜெயலலிதா, தீர்ப்பு தந்திருக்கும் புத்துணர்வை நம்பிச் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டுப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளக்கூடும் என்றும் யூகங்கள் உலவுகின்றன.

இவை அரசியல் கணக்குகள். இப்போதைக்கு வெறும் கணக்குகள். இந்தத் தீர்ப்புதான் தற்போதைக்கு நிச்சயமானது. எவ்வளவு விமர்சனத்துக்கு உள்ளானாலும் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுவிட்டார் என்பதும் அவர் மீண்டும் முதல்வராகிறார் என்பதும்தான் இன்றைய நிதர்சனங்கள். இவற்றின் அடிப்படையில்தான் ஒவ்வொருவரும் தனக்கான எதிர்காலம்குறித்த திட்டங்களை வகுக்க வேண்டும்.

ஒரு தீர்ப்பும் ஒரு சமூகமும்

திட்டங்கள் வகுக்கப்படவும் வெளிப்படவும் சில நாட்கள் ஆகலாம். இப்போதைக்குத் தீர்ப்பே தமிழகத்தின் பேச்சு. எல்லாத் தரப்புகளிலிருந்தும் எதிர்பார்த்த எதிர்வினைகளைக் காண முடிகிறது. சிலருக்கு இது தர்மம் வென்றதன் அடையாளம். மற்றும் சிலருக்கோ ‘இது இறுதித் தீர்ப்பு அல்ல’. வேறு சிலருக்குத் தீர்ப்பு பற்றி எந்தக் கருத்தும் இல்லை.

விடுதலை பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதைத் தங்கள் கடமையாகச் சிலர் உணர் கிறார்கள். வேறு சிலருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு ஆய்வுக் களம். அதிலுள்ள சட்டச் சிக்கல்களை, ஓட்டைகளை ஆராய்கிறார்கள். ஊடகங்களுக்கோ இது பெரும் தீனி. தீர்ப்பின் சட்ட விவகாரங்கள், உள் விவகாரங்கள், அரசியல் பரிமாணங்கள் ஆகியவை அலசி ஆராயப்படுகின்றன. மேல் முறையீட்டுச் சம்பிரதாயங்கள்பற்றிப் பேசப்படுகிறது.

கொண்டாட்டங்கள், குமுறல்கள், அலசல்கள், யூகங்கள் ஆகிய களேபரங்களுக்கு மத்தியில் தீர்ப்பின் சட்டச் சிக்கல்கள் குறித்த பேச்சு உரக்க ஒலிப்பது தனித்துக் கேட்கிறது. வருமானத்துக்கு மேல் 10% வரை அதிகமாகச் சொத்து இருந்தால், அதைக் குற்றமாகக் கருத இயலாது என்னும் முந்தைய தீர்ப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டிய நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா விஷயத்தில் 8.5%-தான் அதிகமாக இருக்கிறது என்கிறார். இந்த முடிவுக்கு அவர் வந்த விதம்பற்றி விமர்சிக்கப்படுகிறது. தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள கணக்கு வழக்குகள் தவறாக இருப்பதைச் சுட்டிக்காட்டும் சிலர், பிழையின்றிக் கூட்டினால் இந்தச் சதவீதம் 70-ஐத் தொடும் என்றும் கணக்குப்போட்டுக் காட்டுகிறார்கள்.

ஆச்சார்யாவின் வாதம்

வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜரான பி.வி. ஆச்சார்யா முன்வைக்கும் விமர்சனங்களில் ஒரு வாதம் மிகவும் முக்கியமானது. தன் தரப்பை முன்வைத்து வாதிடத் தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார். தன் தரப்பு வாதத்தை எழுத்துபூர்வமாகக் கொடுக்கும் படி கேட்ட நீதிமன்றம், அதற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே அவகாசம் கொடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். சாட்சிகள், பிறழ் சாட்சிகள், விசாரணை நடந்த விதம் ஆகியவை பற்றியெல்லாம் விமர்சனங்கள் நுட்பமான தளத்தில் விரிவாக முன்வைக்கப்படுகின்றன. நீதிபதி குன்ஹா அளித்த ஆயிரத்துச் சொச்சம் பக்கத் தீர்ப்புக்கும் நீதிபதி குமாரசாமி கொடுத்துள்ள தொள்ளாயிரத்துச் சொச்சம் பக்கத் தீர்ப்புக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் தீவிரமாக அலசப்படுகின்றன.

இவை அனைத்தும் குறிப்பது ஒரே ஒரு விஷயத்தைத் தான். இந்த வழக்கில் இறுதி வார்த்தை இன்னமும் சொல்லப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என்று ஆச்சார்யா கூறுகிறார். வழக்கை நடத்திய கர்நாடக அரசு, மனுதாரர்களான சுப்பிரமணியன் சுவாமி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகிய மூவரில் யார் வேண்டு மானாலும் மேல் முறையீடு செய்யலாம். செய்வார்கள் என்றே தோன்றுகிறது.

ரூ. 7,000-மும் 2 ஆண்டு சிறையும்!

தொலைக்காட்சி விவாதத்தில் இந்த வழக்கு பற்றிய ஆவேசமான விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, அடியில் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது. “ விவசாயியிடம் 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் துறை ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை - தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு” என்றது அந்தச் செய்தி. இந்தச் செய்தியைக் கண்ட சாமானியனின் முகத்தில் வறட்சியான ஒரு சிரிப்பு எழுந்திருக்கக்கூடும். ஜெயலலிதாவுக்குத் தண்டனை அல்லது விடுதலை ஆகியவற்றால் அரசியல் அரங்கில் நூறு சாத்தியக்கூறுகள் உருவாகலாம். பல நூறு மாற்றங்கள் நிகழலாம். ஆனால், சட்டத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட வேண்டு மானால், சட்டத்தின் விநோதமான சாத்தியக் கூறுகள் சார்ந்த பல கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்க வேண்டும். அரசியல் விளையாட்டுகளுக்கும் பழிவாங்கல்களுக்கும் அப்பாற்பட்ட முக்கியத்துவம் கொண்டது இது.

இன்றைய இந்தியப் பொது வெளியில் அறம் என்பது எத்தனை கேலிக்குரியதாக இருந்தாலும், அறம் சார்ந்த கனவை நாம் இழந்துவிட முடியாது. ஏனெனில், அந்த அறம்தான் என்றேனும் ஒருநாள் நிகழக்கூடிய நமது மீட்சிக்கான ஒரே வழி.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

மருத்துவக் கல்லூரி தொடங்க இனி செவிலியர் பள்ளி அமைப்பதும் கட்டாயம்: மத்திய அரசு பரிசீலனை



புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு இனி செவிலியர் பள்ளி அமைப்பதையும் கட்டாய மாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

நாடு முழுவதும் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய சுகாதார அமைச் சகம் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச் சர் ஜே.பி.நட்டா தலைமையில் டெல்லியில் சில நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, சமூகநலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெல் லோட் ஆகியோர் தத்தமது துறை களின் உயரதிகாரிகளுடன் கலந்து கொண்டனர். இதில் பேசிய மேனகா காந்தி, “நாட்டில் மருத்து வக் கல்லூரிகள் அதிகரித்து வருவது வரவேற்க கூடியது. அதேவேளையில், செவிலியர் பற்றாக்குறை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது” என்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், புதிய மருத்துவக் கல்லூரிகளுடன் செவிலியர் பயிற்சிப் பள்ளி தொடங்குவதை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த யோசனையை சுகா தாரத் துறையின் இயக்குநர் ஜெனரல் ஜெக்தீஷ் பிரசாத் எழுப்பி னார். இதை வரவேற்ற அமைச் சர் வெங்கய்ய நாயுடு, இதற் காக புதிய மருத்துவக் கல்லூரி கள் தொடங்குவதற்கான இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறை களில் திருத்தம் செய்யலாம் என ஆலோசனை கூறினார்” என்றனர்.

தனியார் மட்டுமின்றி அரசு சார்பில் தொடங்கப்பட இருக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த யோசனையை அமல்படுத்த திட்டமிடப்படுகிறது. இந்த யோசனை தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் புள்ளிவிவரப் படி, தற்போது நாடு முழுவதும் உள்ள 2,000 செவிலியர் பள்ளி களில் டிப்ளமா பயிற்சி அளிக்கப் படுகிறது. 1200 செவிலியர் கல்லூரிகளில் செவிலியர்க ளுக்கான பட்டப்படிப்பு அளிக்கப் படுகிறது. இவற்றை முடித்த வர்களுக்கு 281 கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு வசதி உள்ளது. இவற்றின் மூலம் ஆண்டுக்கு நாடு முழுவதிலும் சுமார் 60,000 செவிலியர்கள் உருவாகின்றனர். ஆனால் இதில் சுமார் 20 சதவீதம் பேர் வெளிநாடுகளுக்கு பணியாற்றச் சென்றுவிடுகின்றனர். இதுவே செவிலியர் பற்றாக் குறைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

Overseas nursing recruitment now free

THIRUVANANTHAPURAM: In a big relief to nurses aspiring to work abroad, the Centre on Thursday banned collection of recruitment fees for overseas nursing recruitments to 18 Emigration Check Required (ECR) countries.

From April 30, Overseas Development and Employment Promotion Council (Odepc) and Non Resident Keralites' Affairs (Norka) have been in charge of recruiting nurses from Kerala to 18 ECR countries.

On Thursday, an order issued by the overseas Indian affairs (MOIA) ministry amended immigration rules that permitted recruiting agencies to charge Rs 20,000 as recruitment fee.

The government had directed Odepc and Norka to take charge of nurses' recruitment after receiving complaints that private agencies were charging exorbitant sums like Rs 20 lakh. The government had announced that Odepc and Norka would charge only Rs 60,000 (Rs 20,000 as recruitment fee and Rs 40,000 towards the welfare fund).

The new order now means that Odepc and Norka cannot even levy even this fee.

To tide over the shortfall, the state government has put a proposal before the Kuwait government initial talks are over to remit a nominal fee per candidate as they are beneficiaries of the services.

"We have submitted our proposal seeking $350. The final decision has not been taken," principal secretary (labour and rehabilitation) Tom Jose said.

A top-level delegation from Kuwait led by under-secretary for medical services Jamal Al Harbi will visit the state next week to resolve all concerns regarding the recruitment process. The Kuwait government also has concerns with regards to routing all recruitment of candidates by 32 private agencies in Kuwait through the e-migrate system of the MOIA, a comprehensive online system covering emigration.

Thursday's decision has come at a time when a couple of nursing recruitment agencies based in Kochi are under scanner for swindling crores of rupees from potential nursing candidates scouting for overseas jobs.

After a recent raid on a Kochi nursing recruitment agency charging exorbitant rates from candidates, the labour department has been receiving inquiries and complaints with regards to cases where candidates have paid lakhs for overseas jobs.

The countries to which Odepc and Norka will recruit nursing professionals include UAE, KSA, Qatar, Oman, Kuwait, Bahrain, Malaysia, Libya, Jordan, Yemen, Sudan, Afghanistan, Indonesia, Syria, Lebanon, Thailand and Iraq.

Nursing Body Hopes for Separate Varsity

CHENNAI:The Trained Nurses Association of India — an association of nurses from across the country, will be submitting a proposal to the Health and Family Welfare Department this week, to construct a University for Nurses. The Association along with S Ani Grace Kalaimathi, Registrar of the Tamil Nadu Nursing and Midwives Council is already in talks with the department. “We have been in talks with several other departments as well, but now we have done complete background work and prepared a final project that we wish to submit to the Minister in person, so that we can come to a favourable decision,” says Jaeny Kemp, president of TNAI, on the sidelines of the International Nurses Day Celebration at St Isabel hospital in Mylapore.

Over two lakh nurses have registered with the Tamil Nadu Nursing and Midwives Council since 1926, when it was established. Tamil Nadu also has 224 schools of nursing that offer diploma courses and 169 nursing colleges out of which 69 institutions offer M Sc programmes in nursing. Grace says that while colleges are available, several institutes offering unauthorised courses are on the rise, “Bogus nursing institutes are mushrooming in and around the city, they offer unauthorised courses like physician technicians and several names we haven’t even heard about making the number of unlicensed nurses quite long. This in turn risks the patients life,” she adds.

She adds that a Nursing University would help get rid of all these problems. “We have designed a course where we will be following the uniform standard of syllabus. We will also be looking at ways to improve it, so that, aspirants will be able to gain better quality education, better employment and would not feel left out in the medical world. This University will also have a nurse holding posts like the Vice Chancellor, Dean and others,” she explains. This will make it a first-of-a-kind in India and second in the world after Sweden.

Grace says that quality education is the need of the hour, “Nurses are the heart of the healing industry, they cannot do without us. All we need is proper recognition for our work and service. I hope this University, once established, will change it all.”

Delay in Formation of TS Nursing Council Leaves Students Worried

HYDERABAD: The inordinate delay in establishing Telangana State nursing council is resulting in unnecessary trouble for the nursing students in the State. With the absence of a state-level body for formal registration of nursing students, the latter are worried of losing job opportunities during the upcoming recruitment drive.

After completing the auxiliary nurses and midwifery (ANM) courses, the nursing students must register themselves with the State Nursing Council in order to receive eligibility for jobs in private and government sector firms. Currently, around 5,000 nursing students who have graduated in the 2013-14 academic year in Telangana, are still waiting for their registration as there is no State Nursing Council in the State.

With several job notifications in both the State and Central governments are ready to be released in the coming months, the nursing students have rushed to Andhra Pradesh Nursing Council (APNC) for registration. However, the APNC refused to register students from Telangana citing that registration of students from other states is against their norms.

“According to the existing rules, we cannot register students who studied in other States,” an official of APNC told Express.

After bifurcation of the erstwhile United Andhra, the Telangana Department of Health Medical and Family Welfare conducted the examination for ANM nursing students and had issued certificates to those who have completed the course. With certificates issued by the Telangana Board, AP officials refuse registration for these students.

However, the APNC also suggested that the registration can be done for Telangana students at APNC if the Telangana State government makes a formal request to AP government. “We can register them only if we receive orders from our State government,” the APNC official added.

Meanwhile efforts to establish the Telangana’s Nursing Council are yet to gain ground. Earlier, the TS government had prepared a proposal to form its own medical council and nursing council after bifurcation. However, no progress has been made yet.

Putta Srinivas, director, Medical Education, Telangana, said: “We have already sent the proposal to the Indian Nursing Council (INC) for setting up our own nursing council. The process of establishing the Board will begin once we get approval from the national body.”

INFORMATION COMMISSIONER PUTS FINE OF 1 LAKH ON CITY MAGISTRATE

Taking serious view of not making compliance of orders, besides provided replies filed under the Right to Information (RTI) Act, Information Commissioner, Vijay Shankar Sharma, imposed a fine of over a lakh rupees on city magistrate of Kanpur city, on Wednesday. Confirming of the above here on Wednesday afternoon, Sharma, said that despite of several reminders and warning, the city magistrate of Kanpur, Ashutosh Mohan Agnihotri, who is also RTI officer, neither gave reply to his queries, nor he appeared before him during the hearing. Sharma said that taking the negligent approach of the officer very seriously, he had imposed a fine of Rs 25,000 each in four separate matters while in one another, he slapped a fine of Rs 12,500 on the same officer.

Sharma claimed that besides the city magistrate, he also imposed a fine of Rs 25,000 on District Social Welfare officer of Kanpur. Sharma also issued warning to Nagar Ayukata of Kanpur, Executive Engineer of Kanpur Electric Supply, Secretary of Power Distribution Corporation of Kanpur and in three other matters taken up on Wednesday.

Puducherry RTI rules amended

In order to contain frivolous questions , the Puducherry Government has brought in certain amendments to Puducherry Right to Information Rules.

These rules are called the Puducherry Right to Information (Amendment) Rules, 2015.

New rule

As per the new rule, the application submitted by an applicant, in Form-I, for seeking information, should ordinarily not contain more than five hundred words, excluding annexures, containing address of the Public Information Officer and that of the applicant.

Under a new sub-clause, Rs. 20 will be charged per Compact Disc (CD) and Rs. 50 per Digital Versatile Disc (DVD).

The new sub-clause has also fixed price for obtaining a copy of a publication while Rs. 2 would be charged per page of photocopy for an extract from the publication.

Cut-off marks for MBBS likely to be low

Due to drop in number of centum in Biology and Physics

With the drop in number of centum in Biology and Physics in the Plus Two examination results, the cut-off marks for admission to MBBS course is expected to be low for the academic year 2015-16.

Centums

The numbers of centum in 2014 examination results were Physics (2,710), Chemistry (1,693), Biology (652) and Mathematics (3,882).

Results published last week shows that there is a significant drop in number of centum in Physics (124), Chemistry (1,049) and Biology (387) except Mathematics (9,710).

Academicians said that the drop in centum in Physics, Chemistry and Biology, which decide the cut-off, is due to tough questions in the examination.

Academicians opined that owing to the toughness of the question paper, the current year cut-off marks should not be compared with previous year.

Government colleges

S.P.N. Sharavanan, Correspondent of Green Park Matriculation Higher Secondary School, told The Hindu that the drop in cut-off could be 1 to 1.25 marks for government colleges while it would be 1.5 marks for government quota seats in private colleges.

A student belonging to Backward Community with 197.50 cut-off could get admission for MBBS in Government College while a student with 195.75 cut-off could get admission to private medical colleges, he added.

“Unless the previous year students apply for medicine, there would be no change in the cut-off”, he added.

For engineering courses, the competition for top institutions would remain high.

Engineering

Since, the number of centum in Mathematics has tripled when compared to last year, the competition for second level engineering colleges would be intense. “There is a gradual rise in the cut-off for engineering courses”, he added.

Academicians said that students with above mentioned cut-offs need not worry as they could get admissions either in government colleges or government quota seats in private institutions.

Zoology is dead course sans animal dissection’

The Delhi University has asked the University Grants Commission (UGC) and Union environment ministry to reconsider the decision to ban animal dissection, saying it has reducing zoology into a “dead discipline”.

A letter in this regard has been sent by the head of DU’s zoology department Neeta Sehgal.

“We have written to (the) UGC requesting it to reconsider the decision and limit the ban to just endangered animals. Zoology is being reduced into a dead discipline because of the ban its students are just reading theory and are unable to do any practical experiments,” said Prof. Sehgal.

In 2011, the UGC had imposed a partial ban on animal dissection and directed all universities and colleges to stop experimentation on animals for training purposes for zoology and life sciences at the undergraduate level. However, last year the UGC instructed all universities to ban dissection of animals for academic purposes at both the undergraduate and post-graduate levels. Prof. Sehgal said that it was ironical that we can kill a cockroach using a repellant at home but cannot pin the same in a laboratory to understand its anatomy.

“Concerning the maintenance of ecology, we have also raised the same with the ministry of environment and forests to revoke the ban. And dissection doesn’t mean we simply cut an animal into two halves and study it.”

DU urges UGC to reconsider ban on animal dissection

Delhi University has urged the University Grants Commission (UGC) and the Environment Ministry to reconsider their decision of a ban on animal dissection, saying it is reducing zoology into a “dead discipline”.

The university’s Department of Zoology has written a letter to the UGC to limit the ban to the endangered species. “Students are just reading theory and are unable to do any practical experiments,” Neeta Sehgal, HoD, said in the letter.

In 2011, the UGC had imposed a partial ban on animal dissection and directed all universities and colleges to stop experiments on animals for training purposes for zoology and life sciences at the undergraduate level.

However, last year, the UGC had instructed all universities to ban dissection of animals for academic purposes at both the undergraduate and postgraduate levels.

“No animal from any species shall be dissected, either by teachers or students for any purpose,” the UGC notification had said. The UGC had said that non-animal methods, including computer simulations, interactive CD-ROMs, films and lifelike models could be used to teach anatomy and complex biological processes. Institutions found violating the order can now be booked under the Wildlife Protection Act and also the Prevention of Cruelty Against Animals Act.

“Anatomy cannot be taught merely by doing simulations on computers. If the students do not know the odour of an animal when it is dissected, how are they going to deal with it medically and continue with the process? Without practical training if they perform some surgery, they might be shaky. Technology cannot be a substitute for cutting through tissues to feel the texture of the viscera,” Ms. Sehgal said.

“The department is breeding its own animals. Then why can’t they be used for dissection purpose? How else will students learn about the anatomy of an animal?” asked Mamta, a student of M.Sc.

பிளஸ் 2: இன்று முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 மாணவர்கள் வியாழக்கிழமை (மே 14) முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்தப் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
உயர் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்காக இந்த ஆண்டு முதல் முறையாக தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.
பள்ளி தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இந்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இணையதளத்தில் இருந்து நேரடி பதிவிறக்கம்: அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றைப் பதிவு செய்து மாணவர்களே நேரடியாக தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.

CBSE students to lose out on admission as results are delayed

COIMBATORE: Uncertainty stares at tens of thousands of CBSE Class 12 students across the state as the results are expected only on May 27 or 28, after an unusually long gap of 20 days since the state board results were announced.

Several colleges offering graduate courses in arts, science and commerce would have completed the admission process. TOI spoke to six colleges and found that at least three have started admitting students. One in Coimbatore is almost done with the process. Prominent Chennai colleges would begin admission by May 20, a week ahead of the CBSE results.

A professor of a Coimbatore college said, "We start admission on the day the state board results are published, as almost 95% of our candidates are from state board. However, we are open to candidates from CBSE if they have good marks." Asked if some seats would be reserved for CBSE students, he replied in the negative.

A commerce professor said CBSE students would find it toughest to get BCom seats in colleges of their choice. "If the results were to be announced three to five days after the state board results, there would be some possibility. But 20 days is quite a long period as seats in the management quota also get filled," he said.

In Chennai, colleges are not clear on what steps would they take to make sure students from the CBSE board are not deprived of an equal chance to avail a merit seat in the course they want. Madras Christian College principal Alexander Jesudasan said, "We have made a note of the announcement of the CBSE Class 12 results, and will work out a provision for those students." The principal said the college is yet to begin admission.

Loyola College spokesman K S Antonysamy said that the college is still receiving applications, and the last date is May 20. "We have mentioned in the prospectus that we will give two days for CBSE students after their results are announced," Antonysamy said. The college, however, will begin the admission process after May 20.

Sundararaman R, chief executive officer of Sri Krishna College of Arts and Science, Coimbatore said, "We begin admissions after the mark sheets are issued for the state board students on May 14. We reserve two or three seats for CBSE students." He added, "We have kept around 50 seats across all branches for them, based on the previous years' admission details."

A student of the CBSE board who is aiming at a seat in BCom professional accounting in some of the top colleges in Chennai and Coimbatore said he has no hopes of getting into a good college. "The lack of normalization of CBSE scores with the state board marks is a setback for us during admission. The delay in results makes it worse," the student said.

Plea in Madras HC seeks setting up of AIIMS in Madurai


MADURAI: The Madurai bench of the Madras high court on Wednesday ordered notices to the health secretaries of the central and state governments on a petition that sought setting up of an All India Institute of Medical Science (AIIMS) in Madurai district.

The central government is planning to establish an AIIMS in Tamil Nadu, and the state government had proposed five sites -- Thoppur in Madurai district, Perundurai in Erode district, Pudukkottai, Sekkipatti in Thanjavur district and Chengalpet near Chennai.

In his petition, K K Ramesh of Madurai said, "In Tamil Nadu, Chennai has many major hospitals. But the southern districts have no such hospitals. The medical facilities are not adequate in those districts."

"Hence establishment of an AIIMS in Madurai district is very much essential for the people living in the southern districts," the petitioner said.

He further pointed out a central team's visit to Thoppur for a feasibility study.

When the matter came up for hearing, the division bench of T S Sivagnanam and G Chockalingam ordered notices to health secretaries and adjourned the matter to June 19.

'தீர்ப்பை திருத்த முடியாது; ஜெ. பதவியேற்க தடை இல்லை!'

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பில் உள்ள குளறுபடி உள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என  தகவல் வெளியாகி உள்ளது. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் வங்கிகளில் இருந்து வாங்கிய கடன் தொகை குறித்த கூட்டலில் தவறு நடந்து இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி உள்ளனர். 

இந்நிலையில்,  நீதிபதி குமாரசாமி  தனது உதவியாளர்களுடன் இன்று தீர்ப்பு வழங்கிய அறை எண் 14ல் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஜெயலலிதா விடுதலை தீர்ப்பில் தவறு இருப்பதாக கூறி வரும் நிலையில், குமாரசாமி அவசரமாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீர்ப்பை திருத்த முடியாது 

மேலும், இந்த தகவல் அதிமுக வட்டாரத்திலும் கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பை திருத்தம் செய்யவோ அல்லது திரும்ப பெறவோ அல்லது ஜெயலலிதா விடுதலைக்கு தடை விதிக்கவோ குமாரசாமிக்கோ அல்லது கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுவதாக கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பில் கூட்டல் கழித்தல் போன்ற எண்கள் தொடர்பான தவறுகள் இருக்கும்பட்சத்தில் அதனை மட்டும் திருத்திக்கொள்ள தீர்ப்பு வழங்கிய குமாரசாமிக்கு அதிகாரம் உள்ளது என்றும், அதையும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே செய்ய முடியும் என்றும், அதே சமயம் அவ்வாறு செய்யப்படும் திருத்தங்களால் தீர்ப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அதனை செய்ய அதிகாரம் இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டின்போதே அத்தகைய தவறுகளை களைய முடியும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுவதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஜெ. பதவியேற்க தடை இல்லை
இதனால் ஜெயலலிதா தற்போதைக்கு முதல்வராக பதவியேற்பதில் தடையேதும் இல்லை என்பதால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் தனக்கு சாதகமாக கிடைத்த தீர்ப்பு குறித்து சர்ச்சை எழுந்தது குறித்து ஜெயலலிதா தரப்புக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

Wednesday, May 13, 2015

Public holidays of 2016 announced: Six long weekends next year -

SINGAPORE - Workers planning a getaway can look forward to six long weekends next year.

The Ministry of Manpower has released dates of public holidays for next year, with six of the 11 falling on a Friday, Sunday or Monday.

This is just one less than the bumper crop of seven long weekends this year, but up from an average of five in recent years.

When public holidays fall on a Sunday, it means the next day is a day off. This year, eight public holidays fall on Friday, Sunday or Monday - with Aug 7 declared a public holiday as part of Singapore's 50th birthday celebration, forming a four-day weekend.

Last year and the year before, there were four long weekends. There were five in 2012 and 2011, and seven in 2010.

There will also be a four-day weekend next year as the first and second days of Chinese New Year fall on Monday and Tuesday next year, similar to this year's, which fell on Thursday and Friday.

Long weekends give travellers the potential to go further afield using fewer days of leave.

Graphic designer Jason Fu, 26, said: "I will definitely make use of this to travel more. As I have only 15 days of annual leave, having long weekends matters to me."

Two of the public holidays next year fall on a Saturday - Vesak Day on May 21 and Deepavali on Oct 29.

Employees not required to work on Saturdays can claim a day off or compensation for that public holiday, if covered under the Employment Act.

Deepavali is also subject to change when the Hindu almanac becomes available. For this year, the Hindu Advisory Board has confirmed that Deepavali will fall on Nov 10 - a Tuesday - which was stated previously.

Companies here have various policies if the public holiday falls on a Saturday.

For example, at OCBC Bank, employees will be given a day off but they have to clear it within a month.

A Pan Pacific Hotels Group spokesman said that its staff will also get a day off, but they have three months to use it.

Public officers who work from Monday to Friday can also claim a day off for a public holiday falling on a Saturday, said the Public Service Division.

- See more at: http://www.straitstimes.com/news/singapore/more-singapore-stories/story/public-holidays-2016-announced-20150512#sthash.0hGfAsEe.dpuf

ECONOMY IN EXPENDITURE...SERVING OF REFRESHMENT DURING MEETINGS



ஒரே பெயரில் 460 கல்லூரிகள்: பட்டியல் வெளியிட்டது அண்ணா பல்கலை

மாணவர்களைக் குழப்பும் விதமாக, ஒரே பெயர் கொண்டுள்ள, 460 கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. கவுன்சிலிங்கின் போது, கல்லூரிகளின் பெயரை விட, கல்லூரிக் கவுன்சிலிங் எண்ணை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர், பொறியியல் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலையில், ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தனியார் சுயநிதிப் பல்கலைகள் தவிர, 570 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பின் கீழ் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் சேர, அண்ணா பல்கலை மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலையில், ஜூன் 28ம் தேதி முதல், கவுன்சிலிங் துவங்குகிறது; ஜூலை, 1ம் தேதி பொது கவுன்சிலிங் நடத்தப்படும். இந்நிலையில், உயர்தர வரிசையிலுள்ள கல்லூரிகளைப் போன்று, பல கல்லூரிகளுக்கு பெயர் வைத்துள்ளனர். இதனால், கவுன்சிலிங்கின் போது மாணவர்கள், தரமற்ற அல்லது ஒரே பெயரிலுள்ள, வேறு கல்லூரியை குழப்பத்தில் தேர்வு செய்து, சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். எனவே, ஒரே பெயரிலான கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை தனியாக வெளியிட்டு உள்ளது; இதில், 460 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன. பெரும்பாலான கல்லூரிகளின் பெயர்கள், ஒரே மாதிரியாக இருக்கின்றன; அதனால், கல்லூரிகளின் கவுன்சிலிங் எண்ணை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

- நமது நிருபர் -

மதுரையில் அமைகிறது 'எய்ம்ஸ்' மருத்துவமனை: அறிக்கை சமர்ப்பித்தது ஆய்வுக்குழு..DINAMALAR 13.5.2015

சென்னை: தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான இடங்களை ஆய்வு செய்த மத்திய குழு, ஆய்வு அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்து உள்ளது; மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவ மனை கிளை அமைக்க, மத்திய குழு பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

'டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான, 'எய்ம்ஸ்' மருத்துவமனை போன்று, தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில், அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, தமிழகத்தில், மதுரை - தோப்பூர்; ஈரோடு - பெருந்துறை; காஞ்சிபுரம் - செங்கல்பட்டு; தஞ்சை - செங்கிப்பட்டி; புதுக்கோட்டை என, ஐந்து இடங்களை, தமிழக அரசு பரிந்துரைத்தது. மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் தலைமையிலான, ஐந்து பேர் கொண்ட குழு, ஏப்ரல் மாத இறுதியில், தமிழகம் வந்து, மாநில அரசு பரிந்துரைத்த, ஐந்து இடங்களையும் ஆய்வு செய்தது.

இந்நிலையில், மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, நேற்று தகவல் பரவியது. 'மத்திய குழு ஆய்வு அறிக்கையை, முறைப்படி மத்திய அரசிடம் சமர்ப்பித்து உள்ளது; இன்னும், இடம் உறுதி செய்யபப்படவில்லை' என, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய குழுவின் ஆய்வு அறிக்கையில், 'மதுரை இடம், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கு, எல்லா வகையிலும் ஏற்புடையதாக உள்ளது' என, பரிந்துரைத்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்மாவட்ட மக்கள் அதிகம் பயன்பெறும் வகையில், 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான, 'எய்ம்ஸ்' மருத்துவமனை, மதுரையில் அமையும் என்றே தெரிகிறது.

ICSE and ISC results to be announced on May 18

MUMBAI: The Council for the Indian School Certificate Examinations (CISCE) will announce the ISC and ICSE exams results at 11.30am on May 18.

This year, more than 70,000 candidates took the Class 12 boards, and the number of students who took the Class 10 boards was around 1.59 lakh. Last year, the result was announced on May 17 and May 21 for ISC and ICSE respectively.

According to a release issued by the council, results will be available to the students on to the council website. Schools will be able to access the results by logging on to the careers portal of the council using the principal's login ID and password.

The ICSE boards began on February 27 and ended on March 30, while the ISC exams began on February 9 and ended on April 1.

Medical college may get 50 more MBBS seats

The Medical Council of India (MCI) is yet to give recognition for 50 additional MBBS seats in the K.A.P. Viswanatham Government Medical College (KAPVGMC) for the academic year 2015-16.

The college had offered 50 additional seats, in addition to 100 seats, in 2013-14 based on temporary approval by the MCI. While granting permission for 2014-15 in July 2014, the MCI had stated that the college should meet the MCI requirements for conducting MBBS course with 150 seats.

Based on it, the State government had taken a number of steps to increase the manpower requirements, mainly additional faculty requirement, classroom facilities and others.

Following this, a three-member MCI team recently visited the medical college and the Mahatma Gandhi Medical College Hospital, which is attached to the medical college. The team inspected all facilities including hostels, canteen, classrooms and others required for 150 students. Similarly, it checked whether the college had sufficient number of faculty members, as prescribed by the MCI, for taking classes for 150 students. The team members paid special attention to check if the discrepancies pointed out by the earlier MCI teams had been rectified.

Hospital authorities are hopeful of getting the MCI nod for the additional 50 seats. M.K.Muralidharan, Dean, KAPVGMC, told The Hindu that the approval might come anytime. The team had made positive remarks about the facilities. Once it gets the approval, there would not be any hurdle in admitting 150 students for the next five academic years.





Round off marks, admit student, HC tells dental college

Citing several Supreme Court judgments, which allowed rounding off of marks in decimals to the next integer, the Madras High Court has directed a private dental college to admit a girl student, who secured 39.5 per cent against the eligibility of 40 per cent in the entrance examination for MDS programme.

The High Court had earlier directed the college to allow the petitioner participate in the counselling for admission into the course and not declare the results for admission but to produce before it.

Allowing a petition by B. Priakardiya, Justice S. Tamilvanan neither accepted the stand of the Dental Council of India that she cannot be admitted for not meeting the minimum eligibility criteria nor impleaded the Council in the case.

If the petitioner was not permitted to join the MDS course on the “trivial and unsustainable grounds,” the judge said that would be nothing but preventing illegally the eligible candidate from pursuing her studies in MDS PG course, which would be an “act against reservation policy and social justice,” the judge said.

“When the Supreme Court has laid down the law, stating with all fairness for round off to the next figure, if fraction is 0.5, so as to treat it as 1, the Dental Council of India cannot have a different interpretation, stating that 39.5 per cent cannot be treated as 40 per cent,” he said.

The petitioner had secured 39.5 per cent against the minimum of 40 per cent of marks for the only reserved seat for students belonging to the Scheduled Caste for admission into the MDS programme at Mahatma Gandhi Post Graduate Institute of Dental Sciences at Puducherry, which is scheduled to commence on May 15 this year.

The college authorities had received a communication from the DCI on the issue, which had said that the petitioner did not secure minimum marks for admission and hence the petition by the student.

When the case came up for hearing earlier, Justice M. Sathyanarayanan directed the college to allow her to participate in the counselling for admission and produce the results before it. The case came up for hearing before Justice Tamilvanan in the vacation bench of the High Court and the DCI’s communication was produced before it.

In an age of apps, shorthand gets short shrift

The once-celebrated art of writing using shorthand is now on the wane. There was a time when shorthand was the preferred mode of note-taking and played a vital role in speeding up communication. The exponents of the craft occupied a respected position in every major office and were a silent but efficient presence during many a meeting and briefing. Over the years, all this changed.

N. Ramachandran, a member of The Stenographer’s Guild and an advocate, started an institute for shorthand and typewriting in the year 1963. “During the period 1963-73, around hundred students took the Government technical exams for shorthand. After that though, the shorthand technique suffered a huge setback with only 25 candidates taking the exams during 1973-85. The situation worsened when the examination hall saw less than ten students from 1990 onwards,” says the 85-year-old Ramachandran, who runs the 52-year-old Institute of Commerce.

Earlier, there used to be at least 40 centres conducting these exams, but they have all disappeared now, with only one remaining in the entire city.

With a multitude of high-tech options that promise speed and accuracy and more privacy, such old-school models are in a rapid decline.

There are some pockets of resistance though. While short-hand in Chennai is perhaps in its death throes, it’s still very much alive in other parts of the State. In the Government Industrial Training Institute, the enrollment for shorthand exams is much higher in Coimbatore, Cudallore and several other places, Mr. Ramachandran claims.

Shorthand is the most accurate method of note-making. It is based on sound writing where one listens and notes down the words using outlines and symbols.

“Writing using shorthand will take only 1/6{+t}{+h}of the time one takes to write using full forms,” adds Ramachandran.

Although the use of shorthand or the profession of stenography might not be in its glory now, this practice still prevails in the 21st century, he says. “Even now, courts, government bodies, prominent personalities and several newspaper organisations employ stenographers. Shorthand bears testimony,” he explains.

While there are those who continue to swear by the art of quick note-taking, technology has rendered this once ubiquitous profession almost irrelevant

பள்ளிக்கூடம் திறக்கும் ஜூன் 1–ந் தேதி 67 லட்சம் மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகம் வழங்க ஏற்பாடு


சென்னை,

பள்ளிக்கூடங்கள் ஜூன் 1–ந் தேதி திறக்கப்படுகின்றன. அன்று அனைத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 67 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், அட்லஸ் ஆகியவை விலை இல்லாமல் வழங்கப்பட உள்ளன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

கல்வி கற்க விலை இல்லா உதவி பொருட்கள்

பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், புத்தகப்பை, காலணி, அட்லஸ் முதலியவற்றால் மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்று தமிழக அரசு எண்ணி இந்த பொருட்கள் உள்பட கல்வி தொடர்பான 14 பொருட்களை விலை இன்றி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கொடுக்க முடிவு செய்து அதன்படி வழங்கி வருகிறது.

இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு மட்டும், பாடப்புத்தகங்கள் அனைத்தும் விடுமுறையிலேயே கிடைக்க பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஏற்பாடு செய்தார். அதன்படி அவை வழங்கப்பட்டுவிட்டது.

விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் 1–ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் அன்று அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு (எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்–2 மாணவ–மாணவிகள் தவிர) பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் விலை இன்றி வழங்கப்பட இருக்கிறது.

அனுப்பப்பட்டன

பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், செயலாளர் க.அறிவொளி ஆகியோர் அனைத்து மாவட்ட அரசு குடோன்களுக்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்து அவை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் அவை பள்ளிக்கூடங்களுக்கு கொடுக்கப்பட இருக்கின்றன.

மே மாத இறுதியில் அனைத்து பள்ளிகளுக்கும் அனைத்து பாடப்புத்தகங்களும், நோட்டுபுத்தகங்களும் சென்றுவிடும்.

இது பற்றி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1–வது வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகள் 60 லட்சம் பேருக்கும், 11–வது வகுப்பு படிக்கும் 7 லட்சம் மாணவ–மாணவிகளுக்கும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் அட்லஸ், ஒரு செட் சீருடை ஆகியவையும் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது’’ என்றார்.

சென்னையில் நில அதிர்ச்சி; அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கின ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு ஓடிவந்தனர்

சென்னை,


நேபாளத்தில் நேற்று பகல் 12.40 மணிக்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. சென்னையிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டது. அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கின.

சென்னையில் நிலநடுக்கம்

சென்னையில் நந்தனத்திற்கும், ஆழ்வார்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதி, கோடம்பாக்கம் பகுதி, பட்டினப்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.

அப்போது அடுக்குமாடி கட்டிடங்கள் சற்று குலுங்கின. அந்த கட்டிடத்தில் உள்ள டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்தன.

நந்தனத்திற்கும், ஆழ்வார்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள 8 மாடி கட்டிடம் குலுங்கியதால், அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் அலறி அடித்துக்கொண்டு தரைக்கு வந்து வீதியில் நின்றனர்.

அப்போது அவர்களில் சிலர் கூறியதாவது:–

இந்த கட்டிடத்தில் சாப்ட்வேர் கம்பெனி உள்ளது. 12.40 மணி அளவில் நாங்கள் உட்கார்ந்து இருந்த நாற்காலிகள் திடீர் என்று ஆடின. மேலும் கட்டிடமும் குலுங்கியது. இதை உணர்ந்த அனைவரும் கீழே இறங்கி வீதியில் நின்றோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 1 மணி நேரம் அவர்கள் அங்கேயே நின்றனர். பின்னர் அதிர்ச்சி இல்லை என்று தெரிந்த பின்னர் மீண்டும் வேலைபார்க்க சென்றனர்.

கோடம்பாக்கம்

இதே போல கோடம்பாக்கம் டாக்டர் அம்பேத்கார் சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டது.

அதேபோல சாந்தோம், பட்டினப்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலை, சூளைமேடு, வடபழனி, வளசரவாக்கம் உள்பட பல்வேறு இடங்களிலும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனால் அங்கு இருந்த அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு ஓடி வந்து நின்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த நில நடுக்கத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து சென்னையில் உள்ள நில அதிர்ச்சி அலுவலக அதிகாரி கூறுகையில், ‘‘நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையில் சாந்தோம், வடபழனி, கோடம்பாக்கம், சூளைமேடு ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

நேபாளத்தில் நேற்று பகலில் மீண்டும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் நில அதிர்வு பதிவானது.

Tuesday, May 12, 2015

மாணவர்களிடம் அதிகரித்து வரும் தட்டச்சு பயிலும் ஆர்வம்: வேலைவாய்ப்பு அதிகம்

கோப்புப் படம்

அரசு பணி மற்றும் டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகி இருப்பதால் மாணவர்கள் மத்தியில் தற்போது தட்டச்சு பயி லும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

மாணவர்களுக்கு தட்டச்சு பயிற்சி என்பது 20 ஆண்டுக்கு முன் கூடுதல் தகுதியாக கருதப் பட்டது. ஆனால், கணினி வருகைக் குப் பின்னர் தட்டச்சு பயிற்சியின் முக்கியத்துவம் குறையத் தொடங் கியது.

மத்திய, மாநில அரசு பணிகளில் புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில் தட்டச்சு பயிற்சி மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.

இருப்பினும் தட்டச்சு பயிற்சி பெற்றால் கணினியில் எளிதாக கீ போர்டுகளை இயக்க முடியும் என்பதால் வெகு சிலரே தட்டச்சு பயின்று வந்தனர்.

ஆனால், சமீப காலமாக மத்திய, மாநில அரசு பணிகளில் தட்டச்சர்களும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களும் அதிகளவில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதோடு தனியார் துறையிலும் டேட்டா என்ட்ரி வேலைக்கு அதிகளவு பணியாளர்கள் தேவைப் படுகிறார்கள். இதன் காரணமாக, மாணவர்கள் மத்தியில் தட்டச்சு பயிலும் ஆர்வம் தற்போது அதிக ரித்து வருகிறது.

இதுகுறித்து சென்னை தி.நகரில் இயங்கும் பாரம்பரியம் வாய்ந்த ஸ்டெனோகிராபர்ஸ் கில்டு நிறு வனத்தின் கவுரவ முதல்வர் எஸ்.சேகர் “தி இந்து”விடம் கூறிய தாவது:

தற்போது தட்டச்சு முடித்தவர் களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதால் மாணவர் களும், பட்டதாரிகளும் ஆர்வத் தோடு தட்டச்சு பயில வருகிறார்கள். தட்டச்சு தெரிந்தவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் சம் பளத்தில் டேட்டா என்ட்ரி வேலை அளிக்க தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. வீட்டு வாச லுக்கே வந்து காரில் கூட்டிச் செல் கின்றனர். அந்த அளவுக்கு டேட்டா என்ட்ரி பணிக்கு “டிமாண்ட்” இருக்கிறது.

தட்டச்சு தெரிந்தால் கணினியை எளிதாக இயக்க முடியும் என்பதால் பொறியியல் கல்லூரி மாணவர்களும் ஆர்வத்தோடு தட்டச்சு பயில வருகிறார்கள். தட்டச்சு தெரிந்தவர்களுக்கு டிடிபி மையங்கள், பிரவுசிங் சென்டர் கள், தனியார் தொலைக்காட்சி சேனல்கள், பதிப்பகங்கள் போன்ற வற்றிலும் வேலைவாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.

தட்டச்சில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வாய்ப்புகள் அதிகம். பயிற்சி பெற்ற தட்டச்சர்கள் கிடைக்காத காரணத்தால், வழக்கு தொடர்பான தட்டச்சு பணிகளை கவனித்துக்கொள்ளும் வகையில் மூத்த வழக்கறிஞர்களே இப்போது தட்டச்சுப் பயில வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தட்டச்சு தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு தடவை (பிப்ரவரி, ஆகஸ்ட்) நடத்தப்படுகின்றன. சுமார் 3 மாதங்கள் பயிற்சி பெற்றாலே தட்டச்சு கீ போர்டுகளை சராசரி வேகத்தில் இயக்கிட முடியும்.

ஜெயலலிதாவின் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு 8.12 சதவீதம் அல்ல, 76 சதவீதம்: ஜி.ராமகிருஷ்ணன்



ஜெயலலிதாவின் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு 8.12 சதவீதம் அல்ல, 76 சதவீதம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் 3 பேர் மீதான தண்டனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று (11.5.2015) ரத்து செய்து தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் நகல் கிடைக்கும் முன்னரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு “இது இறுதி தீர்ப்பல்ல; கர்நாடக அரசு இதன் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தது.

தீர்ப்பின் நகல் கிடைத்துள்ள நிலையில் தீர்ப்பின் அடிப்படை தவறான கணக்குகள் மற்றும் புரிதலின் அடிப்படையில் அமைந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் ஜெயலலிதாவும், அவரோடு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் வங்கிகளிலிருந்து வாங்கிய கடன்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வருமானமாக கணக்கில் கொள்ளவில்லை என்றும், அவற்றையும் கணக்கில் கொண்டால் சட்டப்படியான அவரது வருமானம் அதிகமாக இருக்கும் என்று நிர்ணயிக்கிறார்.

இதனடிப்படையில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்து 8.12 சதவிகிதம் மட்டுமே என்றும், இது அனுமதிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தண்டனை பெற்றோர் வாங்கிய கடன்களை நீதிபதி கூட்டுகிற போது, 13.50 கோடி ரூபாய் கூடுதலாக கடன் வாங்கியதாக தவறாக காட்டப்பட்டுள்ளது. இந்த ஒரு தவறை மட்டும் நேர்செய்தாலே ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76 சதவிகிதத்திற்கும் மேல் வரும். இது சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரியாகவே சீர்தூக்கி பார்த்து தீர்ப்பளித்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஒரு அம்சமே இந்த தீர்ப்பில் ஊனங்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இது தவிர பிறழ் சாட்சிகள் குறித்த நீதிபதியின் கருத்தும் தவறானதாகும். தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பிலிருந்த போது சாட்சிகள் மிரட்டப்பட்டார்கள், அதன் காரணமாக பிறழ் சாட்சிகளாக மாறுகிறார்கள் என்கிற காரணத்தினால் தான் கர்நாடகா மாநிலத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ளாமல் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டு கொடுத்த சாட்சியங்களை ஏற்க முடியாது என்று கூறியிருப்பது உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எந்த நோக்கத்திற்காக வேறு மாநிலத்திற்கு மாற்றியதோ அதனடிப்படையையே கேள்விக்குள்ளாக்குவதாகும்.

1995ம் ஆண்டு கட்டுமானப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டத் தொகையை கணக்கிடும் போது ஒரு சதுர அடிக்கு 280 ரூபாய் என்று கணக்கில் கொண்டிருக்கிறார் நீதிபதி. இது அப்போது பொதுப்பணித்துறை நிர்ணயித்திருந்த ரூ. 315/-ஐ விட குறைவாகும். சாதாரணமாக கட்டப்படும் கட்டிடங்களுக்கான தொகையை விட போயஸ் கார்டனிலும், அதுபோன்ற இடங்களிலும் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கான செலவை பொதுப்பணித்துறை நிர்ணயித்துள்ள தொகையை விடவும் குறைத்து நிர்ணயித்திருப்பதும் நிச்சயமாக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதே போன்று வளர்ப்பு மகன் திருமணத்திற்கு ஜெயலலிதா அவர்கள் செலவிட்ட தொகை ரூ. 28,68,000/- என்று சொல்லப்பட்டிருக்கிறது. 1995ஆம் ஆண்டில் ஓட்டிஸ் லிப்ட் விலை ரூ. 15,000/- தான் என்று குறிப்பிட்டிருப்பது சரியான முறையில் செலவுகள் கணக்கிடப்படவில்லை என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று நமது எம்ஜிஆர் பத்திரிக்கை சந்தா சேர்ப்பு சம்பந்தமாக எந்த அறிவிப்பும் தனது பத்திரிகையில் வெளியிடவே இல்லாமல் ரூ. 14 கோடிக்கும் அதிகமான தொகை பெற்றதாக சொல்லியிருப்பதை ஏற்க முடியாது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி கூறியிருந்தார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறியதை எவ்வித கேள்வியுமின்றி நீதிபதி குமாரசாமி அப்படியே ஏற்றிருப்பதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றது.

மேலும் தனக்கு வாதிடவும் வாய்ப்பளிக்கப்படவில்லை, எழுத்து மூலம் வாதங்களை முன்வைக்கவும் ஒரு நாள் அவகாசமே வழங்கப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட 2 மாத காலமும் அதை கவனித்து பதிலளிக்க அரசு தரப்பு ஆஜராகவில்லை என்பது உட்பட பல அம்சங்களை அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா சுட்டிக்காட்டியிருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் நீதிமன்றங்கள் உரிய பங்காற்றும் என்று மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இத்தீர்ப்பின் மீது உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்'' என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு தவறானது: ஆச்சார்யா பேட்டி!

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மனு மீது, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் அடிப்படை தவறுகள் உள்ளது என அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான 

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, 4 பேர் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் அடிப்படை தவறுகள் உள்ளன என அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த வழக்கில் ஜெயலலிதாவின் வருமானம் மற்றும் சொத்துக்கள் முறையாக கணக்கிடப்படவில்லை. சொத்து மதிப்பீடு குறித்து நீதிபதி குமாரசாமியின் விளக்கம் அடிப்படையில் தவறானது. நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் அடிப்படை தவறுகள் உள்ளன.

இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட வேண்டிய வழக்காகும். எனவே, மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடக அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார்.

அரசு டாக்டர்கள் மேற்படிப்புக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசுப் பணியை ராஜினாமா செய்த மூன்று டாக்டர்களை மேற்படிப்பிற்கு அனுமதிக்க, மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி தேவி சங்கீதா, சுப்பையா ஸ்ரீராம், ஜானகி. இவர்கள் அரசு உதவி மருத்துவர்களாக பணிபுரிந்தனர். பணியை ராஜினாமா செய்து 2015-16ல் மேற்படிப்பிற்கு விண்ணப்பித்தனர். 'ராஜினாமாவை ஏற்று மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்விற்கு 'ஹால்டிக்கெட்' வழங்க உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர். நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் எம்.சரவணக்குமார் ஆஜரானார். அரசு வழக்கறிஞர், 'மருத்துவப் பணி தேர்வு வாரிய விதிகள்படி பணியில் சேர்ந்து ? ஆண்டுகள் முழுமை அடைந்தால் தான் முதுகலை படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்' என்றார்.

நீதிபதி உத்தரவு:

'மனுதாரர்களுக்கு 'ஹால்டிக்கெட்' வழங்க வேண்டும். தேர்வு முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்' என ஏற்கனவே உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. பின், தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் அனுமதித்தது. மனுதாரர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். எந்த கல்வி நிறுவனத்திலும் தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மனுதாரர்கள் மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். தங்கள் லட்சியத்தை அடையும் நோக்கில் அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா ஏற்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நியாயமற்ற காரணங்களைக்கூறி மனுதாரர்களின் கனவை நசுக்குவது சரியான நடைமுறை அல்ல. தகுதியான டாக்டர்கள் நாட்டிற்கு அவசியம். அவர்களால் நோயற்ற சமுதாயம் உருவாகி, நாடு வளர்ச்சி அடையும். மனுதாரர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி!

கடந்த ஆறு மாதங்களாக நிலவிய இறுக்கமும், எதிர்பார்ப்பும் முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறது. மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் முற்றிலுமாக வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹாவின் தீர்ப்பை முற்றிலுமாக நிராகரித்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சி.ஆர். குமாரசாமி தலைமையிலான சிறப்பு இருக்கை தீர்ப்பளித்திருக்கிறது.
நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும், அரசியல்சாரா சாமானியத் தமிழ் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சையும் அளித்திருக்கிறது. கடந்த 3 மாதங்கள், யாரையும் சந்திக்காமல் தனித்திருந்து பிரச்னையை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஜெயலலிதாவின் மன உறுதிக்கும், அவரது விடுதலைக்காக வேண்டாத தெய்வமில்லை என்று பிரார்த்தித்த தொண்டர்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி இது! கடந்த ஆறு மாதங்களாக முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. அமைச்சரவைக்கு இருந்த எதிர்பார்ப்பெல்லாம் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவந்து, ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க வேண்டும் என்பதுதான். அதனால் பல நல்வாழ்வுத் திட்டங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாததைத் தவறு காண முடியாது.
"சட்டத்தின் போர்வையில் அரசியல் லாபங்களுக்காக வழக்குத் தொடுக்கப்படுவதை ஊக்குவிக்கக் கூடாது. சட்ட நெறிமுறைகள், அரசமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைகளுக்கு உள்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது. வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துகள் குவித்ததாகக் கூறப்படும் கணக்குகளை ஆராயக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விசாரணை அதிகாரி வாய்ப்பளிக்க வேண்டும்' என்கிற நீதிபதி குமாரசாமியின் கருத்து வருங்காலத்தில் அரசியல் காரணங்களுக்காகத் தொடுக்கப்படும் இதுபோன்ற வழக்குகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்த ஒவ்வோர் அம்சத்தையும், உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது 919 பக்கத் தீர்ப்பில் மிகத் தெளிவாக மறு ஆய்வு செய்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்திருக்கிறார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு ஏனோதானோ என்று எழுதப்பட்ட தீர்ப்பு அல்ல. விரிவாக அலசப்பட்ட, விவரங்களுடன் கூடிய தீர்ப்பு.
வழக்குப் பதிவு செய்த அன்றைய தி.மு.க. ஆட்சியில், கட்டுமானம் தொடர்பான பொதுப் பணித் துறைப் பொறியாளர்களின் மதிப்பீடுகள் அதிகப்படியாக இருந்தன என்பதாலும், திருமணச் செலவினங்கள் சரியாக மதிப்பிடப்படவில்லை என்பதாலும் அந்தச் செலவினங்களை உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி மறு மதிப்பீடு செய்திருக்கிறார். அதற்குப் பிறகு கணக்கிடும்போது வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு மொத்த வருமானத்தில் வெறும் 8.12%தான். இதன் அடிப்படையில்தான் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்திருக்கிறது.
அரசு ஊழியர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் உச்சநீதிமன்றமும், ஏனைய உயர்நீதிமன்றங்களும் காட்டியிருக்கும் முன்னுதாரணங்களின் அடிப்படையில்தான் நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை வழங்கி இருக்கிறார். கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில் 10% வரை கணக்கில் காட்டப்படாத அல்லது கணக்குக் காட்ட முடியாத சொத்துகளை அனுமதிக்கலாம் என்கிற தீர்ப்பு முன்னுதாரணம் ஏற்கெனவே இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், ஆந்திர அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்ட, அரசு ஊழியர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில், கணக்கில் வராத சொத்தாக 20% வரை அனுமதிக்கலாம் என்பதை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், "மிகையான சொத்து மதிப்பு வெறும் 8.12%தான் என்பதால், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் நிரபராதிகள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகியுள்ளது' என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களைச் சரியான முறையில் கணிக்க கீழமை சிறப்பு நீதிமன்றம் தவறிவிட்டது என்றும், அதனால் கீழமை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்றும் நீதிபதி குமாரசாமி தெரிவித்து, கீழமை சிறப்பு நீதிமன்றம் நான்கு பேருக்கும் விதித்த தண்டனை, அபராதத் தொகை ஆகியவற்றை ரத்து செய்ததுடன் நான்கு பேரின் பிணையப் பத்திரங்களையும் விடுவித்திருக்கிறார்.
இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவைக் குற்றவாளியாக்கித் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து 29.09.2014-இல் வெளியான "தினமணி' தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததை இங்கே மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறோம்.
"ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒரு ராசியுண்டு. மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை. ஐந்து முறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை, மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை' என்பதுதான் அது.
இப்போது அதில் இன்னொரு வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆறாவது முறையாகவும் முதல்வர் பதவி ஏற்று அவர் சரித்திரம் படைக்கக் கூடும்!

MBBS, BDS merit list on June 12

The issue of application forms for MBBS and BDS courses offered in government medical colleges began on Monday.

The last date for issue of forms is May 28 and the last date for submission of filled-in forms is May 29.

The forms and the prospectus can be downloaded from tnhealth.org.

Forms will be sold at all the 19 government medical colleges and the dental college. The form costs Rs. 500 and is free for SC/STstudents who must produce a copy of the caste certificate at the time of purchase to avail themselves of the facility.

“The merit list of candidates will be released on June 12 and the first session of counselling will be held from June 19 to 25,” said Director of Medical Education S. Geetalakshmi.

Counselling will be held for 2,172 seats as of the 2,555 seats currently available, 383 seats will be set aside for All India Quota (AIQ).

To questions about whether admission to the ESIC Medical College would be conducted, medical education officials said that they were awaiting information from the Centre.

“All efforts are being made to ensure that the Medical Council of India gives the approval to admit students to the new college coming up at Omandurar Estate,” she said.

According to selection committee secretary R.G. Sukumar, at present 803 seats were available in 13 self-financing medical colleges and 1,020 seats in self-financing dental colleges.

Of the 100 seats in dental colleges, 15 would be allotted under AIQ.



First session of counselling will be held from June 19 to 25, says Director of Medical Education

Man held for creating FB page with paedophilic content

CHENNAI: A 27-year-old man from Tirupati was arrested by the cyber cell of the CB-CID for creating a page containing paedophilic content on social networking site Facebook. The page had more than 3,000 members.

Yadava Manikanta, a diploma holder in house-keeping, was arrested from his house after police tracked down his IP address. A complaint was filed by Chennai-based NGOs working for prevention of child abuse.

He used to upload pictures of children for a year. The page, which had comments of a sexual nature along with photos of children, was later blocked after a few people wrote to Facebook.

A senior police officer said investigations revealed Manikanta tried to create at least four pages in a year but failed after an error in the verification code. But he managed to create one four months ago and uploaded pictures, he added. "Inputs from telecom service provider helped us nab the offender," said an official.

Manikanta used to clandestinely shoot photographs of children on his mobile phone at public places in and around Tirupati. He usually shot tourists who visited the temple town and also sourced photos from the internet. He also circulated these photographs with members of a closed online group who in turn posted them on other pages of similar nature created by them.

CB-CID police registered a case under the Information Act and the Protection of Children from Sexual Offences Act (POCSO). He was brought to Chennai and remanded in judicial custody. Further interrogations are on to track the network.

Enoch Moses, a resident of Porur, filed a complaint with the police commissionerate demanding action against the creator of the page and the members who have posted comments. The city police said offenders could get seven years rigorous imprisonment for the non-bailable offence. They have also sent a request to Facebook to share details of the creator of the page.

Jaya verdict: How Karnataka HC arrived at the acquitting figures

CHENNAI: Some fine accounting, number crunching and statistics: At the end, these alone helped AIADMK chief J Jayalalithaa and her three associates wriggle out of the 19-year-old disproportionate assets case.

On Monday, Justice CR Kumaraswamy of the Karnataka high court matched figures against figures and then arrived at just 8.12% deviation from the declared assets and incomes of the four accused, and the value disproportionate to the declared sums.

READ ALSO: Staying together doesn't mean Jayalalithaa conspired with other accused, Karnataka HC says

Like an expert accountant, the judge, said that the total assets of the accused, after deductions, was Rs 37.59 crore, and that their total income during the period was Rs 34.76 crore.

Noting that the differential sum was a mere Rs 2.82 crore, the judge said the percentage disproportionate assets was just 8.12%.

READ ALSO: The Karnataka high court verdict on Jayalalithaa case (PDF file)

He went on to say: "It is well settled law that according to Krishnanand Agnihotri's case, when there is disproportionate asset to the extent of 10%, the accused are entitled for acquittal. A circular has been issued by the government of Andhra Pradesh that disproportionate asset to the extent of 20% can also be considered as a permissible limit. The margin of 10% to 20% of the disproportionate assets has been taken as a permissible limit, taking into consideration the inflationary measures."

It is relatively small, he said, adding, "The disproportionate asset is less than 10% and it is within permissible limit. Therefore, accused are entitled for acquittal. When the principal accused (Jayalalihtaa) has been acquitted, the other accused, who have played a lesser role, are also entitled for acquittal."

READ ALSO: Trial court failed to appreciate evidence in proper perspective, Karnataka HC says

Justice Kumaraswamy was also of the view that the prosecution had "mixed up" assets of the accused, firms and companies and also added the cost of construction (Rs 27.8 crore) and marriage expenses (Rs 6.45 crore) and valued the assets at Rs 66.45 crore.

He said, "If we remove the exaggerated value of cost of construction and marriage expenses, the assets will work out at Rs 37.59 crore. The total income of the accused, firms and companies is Rs 34,76,65,654. Lack of proportion amount is Rs 2,82,36,812. The percentage of disproportionate assets is 8.12%."

ஜெயலலிதா விடுதலைக்கு காரணம் என்ன? நீதிபதி தீர்ப்பு முழு விவரம்

பெங்களூரு,

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார்.

919 பக்க தீர்ப்பு

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார்.

விடுதலை செய்வதற்கான காரணங்களை அவர் தனது 919 பக்க தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது:-

* மேல்முறையீட்டு வழக்குகளில், அரசு தரப்பின் வாதம் உண்மையானது என்றும், மேல்முறையீட்டு மனுதாரர்களின் குற்ற நிரூபணம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும் விசாரணை கோர்ட்டுகளை போலவே, மேல்முறையீட்டு கோர்ட்டையும் திருப்திப்படுத்த வேண்டும்.

*விசாரணை கோர்ட்டின் தீர்ப்பு தவறானது என்று மேல்முறையீட்டு மனுதாரர்கள் இந்த கோர்ட்டை திருப்திப்படுத்த வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த ஆதாரங்களையும் ஆய்வு செய்ய வேண்டியது மேல்முறையீட்டு கோர்ட்டின் வேலை. அந்த வகையில், விசாரணை கோர்ட்டுக்கு உள்ள அதே அதிகாரங்கள், மேல்முறையீட்டு கோர்ட்டுக்கும் உள்ளன.

தவறு

*அதன்படி, ஆதாரங்களை ஆராய்ந்தால், விசாரணை கோர்ட்டின் முடிவுகள் தவறானவை, ஆதாரங்களுக்கு முரணானவை என்றே சொல்லத் தோன்றுகிறது.

*இந்த வழக்கில், வருமான வரித்துறையின் மதிப்பீட்டை விசாரணை கோர்ட்டு பெரிய ஆதாரமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் பரிசீலிக்கவில்லை.

கடன்

*குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்தியன் வங்கியில் கடன் பெற்றதை விசாரணை கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த கடனை ஒரு வருமானமாக கருதவில்லை. இதன்மூலம், கடனை வருமானமாக கருதாத தவறை விசாரணை கோர்ட்டு செய்துள்ளது.

மேலும், கட்டுமான செலவு தொடர்பான ஆதாரங்களை முறையாக ஆராய தவறி விட்டது. கட்டுமான செலவாக, 20 சதவீத செலவை கழித்துக் கொள்ளலாம் என்று சர்வசாதாரணமாக முடிவு செய்து விட்டது. இந்த 20 சதவீத கழிவு என்பது சந்தேகத்துக்கு உரிய வகையிலும், யூகத்தின் பேரிலும் கணக்கிடப்பட்டுள்ளது.

திருமண செலவு

*மேலும், (சுதாகரன்) திருமண செலவை ரூ.3 கோடி என்று விசாரணை கோர்ட்டு மதிப்பிட்டுள்ளது. அந்த ரூ.3 கோடியை முக்கிய குற்றவாளிதான் (ஜெயலலிதா) செலவழித்தார் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை. அதையும் மீறி, திருமண செலவு ரூ.3 கோடி என்ற முடிவுக்கு வந்துள்ளது.

*திருமண செலவு ரூ.3 கோடி என்றும், அந்த தொகையை முக்கிய குற்றவாளியின் செலவு கணக்கில் சேர்த்ததும் முறையல்ல.

*குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்வைத்த பெரும்பாலான வாதங்களை விசாரணை கோர்ட்டு நிராகரித்துள்ளது. சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக கருதாமல், அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள் கூறுகிறார்கள். அந்த சாட்சிகளிடம் தங்களுக்கு சாதகமான முறையில் அரசுத்தரப்பு கேள்விகள் கேட்டுள்ளது.

*குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமான அம்சங்களில் ஒன்றாக இதை கருத வேண்டும். சாட்சிகள், வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு விதமாக சாட்சி அளித்தால், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நல்லதல்ல.

குற்றச்சதியா?

*மேலும், முறைகேடாக சம்பாதித்த பணத்தில்தான் சொத்துகள் வாங்கப்பட்டதாக யூகிப்பது கடினம். எனவே, அந்த சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு விசாரணை கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு, சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல.

*ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் விசாரணை கோர்ட்டு ஆராயவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெருமளவு கடன் வாங்கித்தான், அசையா சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

*4 குற்றவாளிகளும் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பொறுத்தவரை, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் முக்கிய குற்றவாளியுடன் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதை மட்டும் வைத்து அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறிவிட முடியாது.

*ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்ய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் இடையே ஒப்பந்தம் உருவானால்தான், அதை சதியாக கருத வேண்டும். சதி நடந்தது என்பதையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சதியில் பங்கேற்றனர் என்பதையும் நம்புவதற்கு காரணம் இருக்க வேண்டும்.

சட்டப்பூர்வ வருமானம்

*ஆனால், இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள், ஜெயலலிதாவை தவிர மற்ற 3 பேரும், பெருமளவு கடன் வாங்கி, விவசாய நிலங்கள், நிறுவனங்கள் போன்ற அசையா சொத்துகளை வாங்கியதாக தெரிவிக்கின்றன.

*எனவே, வருமானம் வந்த வழி, சட்டப்பூர்வமானது. நோக்கம், சட்டப்பூர்வமானது. 4 பேரும் ஒரே வீட்டில் இருந்தனர் என்ற ஒரே காரணத்துக்காக, 4 பேரும் சதி செய்தனர், முறைகேடான வழிகளில் சொத்துகள் வாங்கினர் என்ற முடிவுக்கு வர முடியாது.

*ஒட்டுமொத்த சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்து பார்க்கும்போது, விசாரணை கோர்ட்டின் தீர்ப்பும், முடிவும் பலவீனமாக உள்ளது. சட்டப்படி ஏற்க முடியாததாக இருக்கிறது.

சொத்து குவிப்பு எவ்வளவு?

*குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளையும், நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் சொத்துகளையும் அரசு தரப்பு ஒன்றாக சேர்த்துள்ளது. கட்டுமான செலவாக ரூ.27 கோடியே 79 லட்சத்து 88 ஆயிரத்து 945-ஐயும், திருமண செலவாக ரூ.6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222-ஐயும் சேர்த்துக் கொண்டு, மொத்த சொத்து மதிப்பு ரூ.66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரத்து 573 என்று மதிப்பிட்டுள்ளது.

*மிகைப்படுத்தப்பட்ட கட்டுமான செலவையும், திருமண செலவையும் கழித்து விட்டோம் என்றால், மொத்த சொத்து மதிப்பு ரூ.37 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 466 ஆகும். ஆடைகள் மற்றும் செருப்புகளின் மதிப்பு குறைவாகவே இருப்பதால், அந்த செலவை நான் கழிக்கவில்லை.

*குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களின் மொத்த வருமானம் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 654 ஆகும்.

*சொத்து மதிப்பில் இருந்து மொத்த வருமானத்தை கழித்து விட்டால் வரும் தொகை ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இதுவே, வருமானத்துக்கு மீறிய சொத்து ஆகும். இந்த தொகை மொத்த வருமானத்தில் 8.12 சதவீதமே ஆகும்.

அனுமதிக்கத்தக்க சொத்து குவிப்பு

*கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி என்பவரின் வழக்கில், சொத்து குவிப்பு வருமானத்தை விட 10 சதவீதம்வரை இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

*சொத்து குவிப்பு வருமானத்தை விட 20 சதவீதம்வரை இருந்தால், அதை அனுமதிக்கத்தக்க அளவாக கருதலாம் என்று ஆந்திர அரசு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, 10 முதல் 20 சதவீதம் வரையிலான சொத்து குவிப்பை அனுமதிக்கத்தக்க அளவாக எடுத்துக் கொள்ளலாம்.

விடுதலை

*இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து குவிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே இருப்பதால், அது அனுமதிக்கத்தக்க அளவுக்குள்தான் இருக்கிறது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியானவர்கள்.

*முக்கிய குற்றவாளியே விடுதலை செய்யப்படும்போது, சிறிய பங்கு வகித்த மற்ற 3 பேரும் விடுதலை பெற தகுதியானவர்கள்தான்.

*ஆகவே, அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் 4 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்ற நிரூபணமும், ஜெயில் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது.

*அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா விடுதலை தேர்தலில் நிற்க தடை நீங்கியது மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார்

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி குமாரசாமி விசாரித்தார்.

ஜெயலலிதா விடுதலை

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமாரசாமி சரியாக காலை 11 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தார். அதைத் தொடர்ந்து தீர்ப்பின் முக்கிய பகுதியை வாசிக்க தொடங்கினார்.

அப்போது, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோர்ட்டு ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவுக்கு தனிக்கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்தார்.

இதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதை ரத்து செய்து அவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

சொத்துகளை ஒப்படைக்க வேண்டும்

அத்துடன் இந்த வழக்கில், நிறுவனங்களின் மேல்முறையீட்டில் ஒரு பகுதியை கோர்ட்டு அனுமதிப்பதாகவும், அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி கீழ்க்கோர்ட்டு (தனிக்கோர்ட்டு) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் கூறினார். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை அவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் கூறி இருப்பதாவது:-

தவறான முடிவு

இந்த வழக்கில் ஆதாரங்களை ஆய்வு செய்யும் போது கீழ்க்கோர்ட்டு ஒரு தவறான முடிவுக்கு வந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதில் சட்ட தடைகள் இல்லாதது மட்டுமல்ல, நீதியின் நலன் கருதி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கில் வருமான வரி விவகாரங்களை ஒரு குறைந்தபட்ச மதிப்பாக கூட எடுத்துக்கொள்ள கீழ்க்கோர்ட்டு மறுத்துவிட்டது. குற்றவாளிகள் தரப்பு ஆவணங்களை கீழ்க்கோர்ட்டு சரியான முறையில் கவனத்தில் கொள்ளவில்லை.

கீழ்க்கோர்ட்டு தனது தீர்ப்பில், குற்றவாளிகள் இந்தியன் வங்கியில் கடன் வாங்கினார்கள் என்று குறிப்பிட்டு இருந்தாலும், அதை அவர்களின் வருமானமாக கருதவில்லை. அதனால் கடனை வருமானமாக கருதாமல் கீழ்க்கோர்ட்டு தவறு செய்து உள்ளது. சொத்து மதிப்பீட்டில் பிரச்சினைகள் உள்ளதாக எதிர்தரப்பு எடுத்துக் கூறியும், அது சம்பந்தமான ஆவணங்களை சம்பந்தப்பட்ட காலத்தில் கட்டுமான செலவுடன் ஒப்பிட்டு பார்க்காமல் ஒரு முடிவுக்கு கீழ்க்கோர்ட்டு வந்து இருக்கிறது.

திருமண செலவு

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமலும், ஆவணங்களை பரிசீலிக்காமலும் ஒரு தோராயமாக மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைத்து உள்ளது. இது சந்தேகத்தை எழுப்புகிறது. போதுமான சான்றுகள் இல்லாமலும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சுதாகரன் திருமண செலவு ரூ.3 கோடி என்று கீழ்க்கோர்ட்டு மதிப்பிட்டு இருக்கிறது. இந்த செலவை ஜெயலலிதா செய்ததாக எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த செலவு தொகை முழுவதையும் ஜெயலலிதா மீது சுமத்தியது தவறு.

குற்றவாளிகள் சார்பில் வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை கீழ்க்கோர்ட்டு நிராகரித்துவிட்டது. சாட்சிகளை மீண்டும் அழைத்து குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் அவர்களிடம் கேள்வி கேட்கும்போது, தலைமை விசாரணை அதிகாரியிடம் சொன்னது சரியா? அல்லது குறுக்கு விசாரணையின்போது அவர்கள் கூறியது சரியா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற முறையை தேர்ந்து எடுக்கும்போது அவர்கள் முன்பு சொன்ன பதிலை அழிக்க முடியாது. இந்த முறை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அமையும். இந்த வழக்கு குற்றவாளிகளுக்கு சாதகமாக போனதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

ஆதாரங்கள் இல்லை

சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல. ஒட்டுமொத்த விஷயங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளும் போது, கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பும், அதற்கான ஆதாரமும் பலம் குறைந்து காணப்படுகிறது என்பது எனது கருத்து. கீழ்க்கோர்ட்டு கூறிய ஆதாரங்கள் சட்டப்படி வலிமையாக இல்லை.

இவ்வாறு நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

919 பக்கங்களில் தீர்ப்பு

3 நிமிடங்களில் தீர்ப்பின் இந்த முக்கிய பகுதியை அவர் வாசித்து முடித்துவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார். நீதிபதியின் தீர்ப்பு 919 பக்கங்களை கொண்டதாக இருந்தது. அவர் புறப்படும் முன் எதிர்தரப்பு வக்கீல்கள் நீதிபதியை பார்த்து இருகை கூப்பி வணங்கி நன்றி தெரிவித்தனர்.

‘ஜெயலலிதா விடுதலை’ என்ற வார்த்தையை நீதிபதி கூறியபோது, அவருடைய வக்கீல்கள் மகிழ்ச்சி பொங்க ‘அம்மா வாழ்க’ என்று கோஷமிட்டனர். அதை பொருட்படுத்தாமல், நீதிபதி தொடர்ந்து தீர்ப்பை வாசித்தார். கோர்ட்டு அறையில் குவிந்து இருந்த வக்கீல்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களின் செல்போன் மூலம் ஜெயலலிதா விடுதலை செய்தியை மின்னல் வேகத்தில் அனுப்பிவைத்தனர்.

பரபரப்பான சூழல்

வக்கீல் குமார் உள்ளிட்ட ஜெயலலிதா தரப்பு வக்கீல்களை பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களின் கருத்தை கேட்டு அறிந்தனர். இதனால் ஐகோர்ட்டு வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. ஐகோர்ட்டுக்கு வெளியே அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் அங்கு கூடி இருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

மீண்டும் முதல்-அமைச்சர்

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ. மற்றும் முதல்-அமைச்சர் பதவியை இழந்ததோடு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்தார். ஆனால் கர்நாடக ஐகோர்ட்டு இப்போது அவரை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து இருப்பதால் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை நீங்கியது.

எனவே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விரைவில் கூடி முதல்-அமைச்சராக ஜெயலலிதாவை தேர்ந்து எடுக்க உள்ளனர். எனவே அவர் மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.

முதல்-அமைச்சராக பதவி ஏற்ற 6 மாதங்களுக்குள் அவர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆவார்.

எதிர்நீச்சல் இவருக்கு வாடிக்கை

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி, அவருக்கு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து 919 பக்க தீர்ப்பு வழங்கியுள்ளார். ஜெயலலிதா மட்டுமல்லாமல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். 19 ஆண்டுகளாக நடந்த நீண்டநெடிய நீதி பயணம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. 1991–1996–ல் முதல்–அமைச்சராக பதவி வகித்தபிறகு அடுத்து நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்ற நிலையில், ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுப்பிரமணியசாமி புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், 1996–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18–ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தி.மு.க. அரசில் டிசம்பர் மாதம் 7–ந்தேதி ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். 1997 ஜனவரி மாதம் 3–ந்தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அன்று முதல் நீதிமன்றங்களில் இங்கும் அங்குமாக பந்துபோல சென்றது பயணம். கடந்த செப்டம்பர் மாதம் 27–ந்தேதி பெங்களூரில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கும் மற்ற மூவருக்கும் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதன்காரணமாக அவர் 20 நாட்கள் ஜெயிலுக்கு போகவும், பதவியை இழக்கவும் நேரிட்டது.

மீண்டும் நீதிமன்ற பயணம் விசுவரூபம் எடுத்தது. கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் 41 நாட்கள் அப்பீல் மனு மீதான விசாரணை நடந்தது. இந்த நிலையில், ஜெயலலிதா விடுதலை பெறவேண்டும் என்று அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் விசேஷ பிரார்த்தனைகள், யாகங்களை நடத்தினர். 233 தொண்டர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டதால், உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழ்நாடு முழுவதும் மகிழ்ச்சி பிரவாகம் எடுத்துள்ளது. ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் தீர்ப்பளிக்கப்பட்ட விடுதலை, தமிழக அரசில் மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக அரசியலிலேயே பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவை பொருத்தமட்டில், வாழ்க்கையில் அவர் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் பல சோதனைகளை, தடைகளை சந்தித்து எதிர்நீச்சல்கண்டு வெற்றி பெற்றவர். இந்தமுறை சுனாமியை எதிர்த்து நீந்தி வெற்றி பெற்று இருக்கிறார். வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்து, ஒரு வயதிலேயே தந்தையை இழந்து பல கஷ்டங்களை சந்தித்தவர். சர்ச்பார்க் கான்வெண்ட்டில் முதல் மாணவியாக விளங்கியும், தொடர்ந்து படிக்கமுடியாமல் விருப்பத்துக்கு மாறாக சினிமாவில் நடிக்க நேர்ந்தாலும் அதிலும் ஜொலித்தார். 1982–ல் அரசியலில் நுழைந்து, அ.தி.மு.க.வில் சேர்ந்தபிறகும் கட்சியிலும், அரசியலிலும் பல சோதனைகளை சந்தித்தவர். தடைதாண்டி ஓடும் ஓட்டபோட்டிபோல, பல தடைகளை சந்தித்து தோல்வி என்பது எனது அகராதியில் இல்லை என்ற அளவில், இறுதியில் எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அவர் விளையாட்டு போட்டியில் பைனல்போல இப்போது நடந்த போட்டியிலும் வெற்றிபெற்று உள்ளார்.

ஜெயலலிதா முதல்–அமைச்சராக இல்லாத நிலையில், தமிழக அரசில் ஒரு மந்தமான நிலையையும், அரசியலில் ஒரு துடிப்பில்லாத நிலையையும் தமிழக மக்கள் பார்த்துவிட்டனர். அடுத்த சில நாட்களில் மீண்டும் முதல்–அமைச்சராக பொறுப்பேற்கப்போகிறார். சாட்டையை எடுத்து சுழட்டப்போகிறார். மீண்டும் ஒரு வேகமான அரசையும், துடிப்புள்ள அரசியலையும் தமிழ்நாடு சந்திக்க இருக்கிறது. அடுத்தவாரம் மீண்டும் கூடப்போகும் தமிழக சட்டசபையில் புதுப்புது திட்டங்களை, அறிவிப்புகளை அடுக்கடுக்காக மக்கள் எதிர்பார்க்கலாம்.

Monday, May 11, 2015

ஜெயலலிதா விடுதலை சாத்தியம் ஆனது எப்படி?- 919 பக்க தீர்ப்பில் புரிதலுக்கு உதவும் 'எண்கள்'

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு உரிமை உடையவரே, அவரது வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார்.

919 பக்க தீர்ப்பில், ஜெ. விடுதலைக்கு முக்கியக் காரணங்களைச் சொல்லும் அம்சங்கள்:

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு உரிமை உடையவரே, அவரது வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அரசு தரப்பு கூறியது போல் ரூ.66.65 கோடி வருவாய்க்கு மீறிய சொத்துக்களோ அல்லது சிறப்பு நீதிமன்றம் கணக்கின் படி வருவாய்க்கு மீறிய ரூ.53.6 கோடி சொத்துக்களோ அவரிடம் இல்லை, மாறாக, ஜெயலலிதா பெயரில் ரூ.2,82,36,812 மதிப்பளவே சொத்துக்கள் உள்ளன என்று கூறியுள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம்.

இன்று நீதிபதி குமாரசாமி அளித்த 919 பக்க தீர்ப்பில் “குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்துக்களுடன், நிறுவனங்கள் மற்றும் பிற சொத்துக்களை சேர்த்து கட்டுமான மதிப்பான ரூ.27,79,88,945 என்ற தொகையுடன் திருமண செலவு தொகையான ரூ.6,45,04,222-ஐயும் சேர்த்து அவரது சொத்து ரூ.66,44,73,573 என்று அரசு தரப்பு சேர்த்துக் கூட்டி சொத்து மதிப்பை நிர்ணயித்துள்ளது.

எனவே கூடுதலாக சேர்க்கப்பட்ட கட்டுமான மதிப்புத் தொகையையும், திருமண செலவு தொகையையும் நீக்கிவிட்டால், சொத்துக்கள் மதிப்பு ரூ.37,59,02,466 ஆக உள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்துக்கள், நிறுவனங்கள் மற்றும் பிற வருவாயோ ரூ.34,76,65,654 ஆக உள்ளது. எனவே வருவாய்க்கு அதிகமாக ரூ.2,82,36,812 மதிப்புடைய சொத்துக்களே உள்ளன. வருவாய்க்கு அதிகமான சொத்துக்களின் சதவீதம் 8.12%. இது ஒப்பிடுகையில் மிகச்சிறிய தொகையே” என்று ஆவணங்களை ஆய்வு செய்ததில் கோர்ட் முடிவுக்கு வந்ததாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணாநந்த் அக்னிஹோத்ரியின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது, வருவாய்க்கு மீறி 10% வரை அதிக சொத்துகள் வைத்திருக்கும் நபர்கள் விடுதலை செய்ய உரிமையுடையவர்களே என்று அறிவுறுத்தியிருந்ததை கர்நாடக உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் போது சுட்டிக் காட்டியது.

மேலும், ஆந்திர மாநில அரசு தனது சுற்றறிக்கை ஒன்றில் வருவாய்க்கு அதிகமாக 20% வரை சொத்துக்கள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என்று தெரிவித்திருந்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

“இந்த வழக்கில் வருவாய்க்கு அதிகமான சொத்து 10%-க்கும் குறைவாக உள்ளதோடு அனுமதிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டுதான் இருக்கிறது. எனவே குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலைக்கு உரியவரே. எனவே குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் முதன்மையாக இடம்பெற்றவர் (ஜெயலலிதா) குற்றமற்றவர் எனும் போது சிறிய பங்கையாற்றிய குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களும் விடுவிப்புக்குரியவர்களே” என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர் இந்தியன் வங்கியிடமிருந்து கடன் பெற்றார் என்றும், இதனை வருவாயாக நாம் சேர்க்க முடியாது என்றும் சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. எனவே, கடனை வருவாயாகக் கணக்கிடாமல் சிறப்பு நீதிமன்றம் தவறிழைத்தது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முழு எழுத்து வடிவம் - ஆங்கிலத்தில் - Text of Karnataka High Court's verdict on Jayalalithaa DA case |

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வழக்கு: ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு ஜாமீன்!

ஹைதராபாத்: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக கடந்த 2009ஆம் ஆண்டு புகார் எழுந்தது. இதையடுத்து, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு, அவரின் சகோதரர்கள் ராமா ராஜூ, சூர்ய நாராயண ராஜு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன முன்னாள் தலைமை நிதி அதிகாரி வத்லாமணி ஸ்ரீநிவாஸ், பி.டபிள்யூ.சி. ஆடிட்டர்கள் சுப்ரமணி கோபாலகிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ், ஊழியர்கள் ஜி.ராமகிருஷ்ணா, வெங்கட்பதி ராஜு, ஸ்ரீசைலம், இண்டர்னல் ஆடிட்டர் பிரபாகர் குப்தா ஆகிய 10 பேருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, செர்லாபல்லி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை நீக்குமாறும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரியும், 10 பேர் சார்பிலும் ஹைதராபாத் மாநகர செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, ராமலிங்க ராஜூ உள்பட 10 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ராமலிங்க ராஜூ மற்றும் அவரது சகோதரருக்கு ரூ.1 லட்சத்திற்கான தனிப்பட்ட பத்திரம் சமர்பிப்பதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மீதமுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரத்திற்கான பத்திரம் சமர்பிப்பதன் நிபந்தனையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்!

எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலவிதம். எம்.ஜி.ஆர். இறந்து இவ்வளவு வருடங்கள் ஆனாலும் இப்போதும் அவர் படம் ரிலீஸ் ஆனால் கூட்டம் கூடுகிறது. இந்தப் பாசக்கார ரசிகர்களில் மதுரை ரசிகர்கள் ‘அடடே’ ரகம். மதுரை யானைக்கல் பாலத்தின் கீழ் மன்றம் வைத்திருக்கும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் எம்.ஜி.ஆர். நடித்த அத்தனை படங்களின் போஸ்டர்களையும் பாலத்தின் அடியில் வரிசையாக ஒட்டி, அதை காவல் காப்பதையே கடமையாக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி போஸ்டர் கிடைக்கிறது?
யானைக்கல் பாலத்துக்குக் கீழே சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருக்கும் எம்.ஜி.ஆர். ரசிகரான 7௦ வயது ஜின்னாவிடம் பேசினேன். ‘‘இந்தப் பாலத்துக்குக் கீழேதான் அந்தக் காலத்துலேர்ந்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் இருக்கு. கூலித்தொழிலாளிங்க இங்கே எப்பவும் கூடுவாங்க. அவங்க எல்லோருக்கும் எம்.ஜி.ஆருன்னா உசுரு. நான் ஆரம்பத்துல கம்யூனிஸ்ட். ஆனா, அவங்களைப் பார்த்து, எம்.ஜி.ஆர். ரசிகனா ஆயிட்டேன். அவர் படங்களைப் பார்ப்போம். எங்களை இங்கே உள்ள அ.தி.மு.க கட்சிக்காரங்க யாருக்கும் தெரியாது, ஏன்னா, நாங்க யார்கிட்டேயும் போய் நின்னது கிடையாது. அவர் நடிச்ச படங்கள் மதுரையிலோ, சுத்தியுள்ள ஊர்களிலோ வந்துட்டா, அந்த தியேட்டர்காரங்க கிட்டே கேட்டு  போஸ்டரை வாங்கி இங்கே ஒட்டிடுவோம். எப்பவுமே போஸ்டர் புதுசா இருக்கும்.  போஸ்டர் பழசாகிடுச்சுனா, உடனே எங்கிருந்தாவது அடுத்த போஸ்டரை வாங்கி வந்து ஓட்டிடுவோம். இந்த போஸ்டர் வாங்குறதுக்காகவே பல ஊர்களுக்குப் போய் வருவாங்க’’ என்றார்.
சின்னையா என்ற ரசிகர், ‘‘நான் டிரை சைக்கிள் ஓட்டிப் பிழைக்கிறேன். எம்.ஜி.ஆர்னா சின்ன வயசுலேர்ந்து பிரியம். இன்னைக்கு அவரைத் தெரியாதவனெல்லாம் அரசியல்ல பெரிய ஆளா இருக்கான். ஆனா, நாங்க அவரை மட்டும்தான் மதிப்போம். அதுக்காகத்தான் அவர் நடிச்ச அத்தனை படங்களுடைய போஸ்டர்களைப் புதுசா ஒட்டி அவரை வணங்குறோம். உணமையான எம்.ஜி.ஆர் பக்தனுக்கு அ.தி.மு.க-வில் மரியாதை இல்லை. பல வருஷமா இந்த இடத்தை எம்.ஜி.ஆர். மன்றமா வெச்சு அவருக்கு விழா எடுத்து வர்றோம். இன்னைக்கு மதுரையில் அ.தி.மு.க-வில் பதவியில் இருக்கிற ஓர் ஆளுகூட இங்கே வந்ததில்லை. ஆனா, நாங்க இந்த இடத்தை புனிதமா காத்து வர்றோம். வாத்தியாரோட சில பட போஸ்டர்கள் கிடைக்க மாட்டேங்குது, அதான் கஷ்டமா இருக்கு’’ என்றார்.
வண்டியில் சாப்பாட்டுக்கடை வைத்திருக்கும் மைமூன் ‘‘நாங்க பர்மாவிலேர்ந்து வந்தவங்க. இந்த யானைக்கல்லுல எம்.ஜி.ஆர் ரசிகருங்க அதிகம். இங்கே உள்ளவங்க எம்.ஜி.ஆர். போஸ்டரைக் கொண்டு வந்து ஒட்டிக் கும்பிட்டு போவாங்க. வருஷந்தோறும் விழா எடுப்போம். நாங்க இருக்கிற வரைக்கும் இங்கே எம்.ஜி.ஆர். போஸ்டர் ஓட்டுவோம். அவரைக் கொண்டாடுவோம்’’ என்றார்.
 ஆச்சர்யமான ரசிகர்கள்தான்!

Jayalalithaa case verdict: Less traffic on Chennai roads

CHENNAI: While Monday mornings are synonymous with traffic snarls in Chennai, today appeared to be an exception. With former Tamil Nadu chief minister J jayalalithaa's verdict is expected to be delivered after 11am, even arterial roads wore comparatively an empty look.

"Unlike on any other Monday morning, there was no traffic on Anna Salai. Never thought this could happen," said K Sudhakar, resident of Alwarpet.

There was no traffic snarls on the Poonamallee High Road and the OMR.

"Our entire force is on the roads today to ensure there is no road blocks after the verdict is out. But for now, there traffic is very smooth," said a police officer.

Representatives from National Association of Software and Services Companies (NASSCOM) said they would take a decision at around 2pm on holding the evening shift at IT companies.

"We are monitoring the situation. Once the verdict is out, we will decide if work can happen during the evening shift," said senior director at NASSCOM Purushothaman K.

CBSE Board results by May end

NEW DELHI: The Class X and XII board results of Central Board of Secondary Education will be declared on the third and fourth week of May respectively.

According to sources in the CBSE, the Class X results are likely to be declared on either May 19 or May 20, 2015. "The Class XII results are likely to be ready by May 25 and the board will declare it by May 27 or May 28, 2015," said an official in the exam branch.

The board officials said that the Class XII results could be declared in two or three phase - Chennai region could be the first region to get the results and then the Patna and Bhubaneshwar region in the third phase. The All India results are likely to be declared on May 27, 2015.

In Class X, a total of 13,73,853 students registered for the exam this year, which is around 3.3% increase from that of 2014. In Class XII, a total of 10,40,368 students registered for the exams this year, of which 6,07,383 are boys and 4,32,985 are girls.

This year Class XII exams have been dubbed as among the toughest in the history of the board. Students and even a section of schools sent their representation to the board regarding the difficulty level of exams like mathematics and physics.

NEWS TODAY 20.09.2024