Friday, October 6, 2017

Duty first for government doctors

By Siva Sekaran  |  Express News Service  |   Published: 06th October 2017 01:36 AM  |  

CHENNAI: Can government doctors go on strike? Definitely not, the Madras High Court has ruled. Justice N Kirubakaran, who gave the ruling on Wednesday, also restrained post-graduate medical students and other students unions and federations attached to Rajah Muthiah Medical College and hospitals in Chidambaram from going on any sort of strike and refusing to give treatment.
“It is very unfortunate to note that doctors pursuing their PG degrees in the college, who are duty bound to treat the ailing patients, are resorting to strike on certain issues, which could have otherwise been sorted out either by negotiations or by approaching the legal forum.
“Even the educated elite members of the society are indulging in this kind of unwanted action. Then what would happen to the common men, if they face any problem?” the judge asked.
The judge was passing interim orders suo motu on a writ petition from Raju, a resident of Annamalai Nagar.
When the petitioner took his wife Bakkiya to the medical college and hospital for admission for delivery on September 18, no doctors were available for attending to her, as the PG students were on a strike.
Left with no other option, the petitioner, a taxi driver, had to admit his wife at a private hospital, wherein she delivered a girl on September 23.
Highlighting the problems faced by patients, the petitioner moved the High Cou rt for directing the authorities concerned to take appropriate action against the PG students and others. The students went on a strike demanding that they should be charged tuition fee on par with their counterparts in government colleges. Though other demands were put forth by the striking students, their main issue was with regard to treating their college as a government college.
The judge pointed out that the issue regarding whether the college should be treated as a government college or not was already settled by a division bench of the High Court on September 26 last year.
The bench had held that Annamalai University is not owned by the government and it is empowered by the statute to fix the fees and to demand and receive such fees, as prescribed by the Senate, the judge further pointed out.
There may be justification to go on strike. But there is a way to express grievances. The PG students, who are all already registered doctors having obtained an under-graduate degree in medicine, cannot conduct themselves as ordinary labourers or workers by indulging in strikes and refusing to treat ailing patients at an affordable cost. Because of the strike, poor patients alone are the sufferers, whereas the rich can afford to go to private hospitals, the judge pointed out.
The striking doctors are graduates in medicine who have registered with Medical Council of India. Out of the 211 PG students, 151 are in-service students viz, they are treated as goverment servants and they are sponsored for doing a PG course with government salary.
Similarly, the remaining 60 PG students are getting a stipend of `25,000 per month. When PG students are paid by the government, they cannot refuse to treat poor patients and restrain others from discharging their duties.
Every doctor has a legal and moral duty towards every ailing human being. The Indian Medical Council (Professional Conduct, Etiquette and Ethics) Regulations, 2002, speaks about the duties and responsibilities of physicians. After making a declaration as per Appendix I only, UG doctors are registered with Medical Council, the judge pointed out and granted the interim injunction suo motu, even though the petitioner had not prayed for the same.
23 Raju, a taxi driver, filed the petition after his wife was forced to deliver in a private hospital on Sept 23.

மொபைல் நம்பருடன் ஆதாரை இணைப்பது அவசியமா? உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? #Aadhar





உங்கள் மொபைல் சர்வீஸ் புரொவைடர் யாராக இருந்தாலும் சரி. "2018 பிப்ரவரிக்குள் உங்கள் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்துவிடுங்கள். இல்லையேல், சேவையில் தடங்கள் ஏற்படலாம்" என குறுஞ்செய்திகளும், அழைப்புகளும் தினமும் இரண்டு முறையாவது உங்கள் மொபைலை தட்டிக்கொண்டிருக்கும். உண்மையாகவே, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்தே ஆக வேண்டுமா?

ட்விட்டரில் பலர், ஆதாருக்கு அத்தாரிட்டியான UIDAI நிறுவனத்தின் அதிர்காரபூர்வ கணக்கிடம் "மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா?" என்ற கேள்வியை கேட்கிறார்கள். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் FAQ ஒன்றின் ஸ்க்ரீன்ஷாட் அந்தக் கணக்கில் வெளியிடப்படுகிறது.




இதன் அர்த்தம் இதுதான். "உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, உங்கள் சிம் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம். உங்கள் பெயரில் இருக்கும் சிம்கார்டை வேறொருவர் பயன்படுத்தாமல் இருக்க இது உதவும். இதைச் செய்வதற்கு உடனடியாக உங்கள் மொபைல் ஆப்ரேட்டர் ஸ்டோருக்குச் செல்லுங்கள்"

இதில் இருக்கும் "உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி"என்பதுதான் இப்போது பிரச்னை ஆகியிருக்கிறது. உச்சநீதிமன்றம் இப்படி ஓர் ஆணையை வெளியிட்டதா?

இல்லை என்பதுதான் உண்மை.

உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடக்கிறது. அதில் ஒருவர் பெயரில் இருக்கும் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்தியிருக்கிறார். இதைத் தவிர்க்கும்பொருட்டு, எதாவது பாதுகாப்பு வழிகள் இருக்கிறதா என உச்சநீதிமன்றம் அரசைக் கேட்கிறது.

இதற்குப் பதில் அளித்த அரசு, "ஆதார் எண் மூலம் இதைச் செய்துவிடலாம். ஒவ்வொரு மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியிருந்தால், வாடிக்கையாளரின் கைரேகை தேவைப்படும். எனவே, போலி ஆவணங்கள் மூலம் இன்னொருவர் பெயரில் சிம் கார்டை வாங்கவே முடியாது. ஏற்கெனவே இருக்கும் மொபைல் எண்களையும் இணைக்கச் சொன்னால், இப்போது சந்தையில் இருக்கும் போலி சிம்களும் முடக்கப்படும் வாய்ப்புண்டு" என சொன்னது.





DOT வெளியிட்ட முழு அறிக்கையைப் படிக்க

இதைக் கேட்ட உச்சநீதிமன்றம் இதுபோன்ற பாதுகாப்பு வழிகள் எதாவது ஒன்றின் மூலம் ஓராண்டுக்குள் அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களையும் உறுதிசெய்யச் சொன்னது. அதைத்தான் "உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி" எனச் சொல்லிக்கொண்டு ஆதாரை மொபைலுக்கு கட்டாயமாக்கியிருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் பலமுறை "ஆதார் கட்டாயம் அல்ல" என்றும் சொல்லியிருக்கிறது. மேலே சொன்ன வழக்கிலும், ஆதார் மூலம்தான் இதைச் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை.





இதை உறுதிச்செய்துகொள்ள சில டெலிகாம் நிறுவனங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டோம். அவர்களும் சரியான பதிலைச் சொல்லவில்லை.

சமூக வலைதளங்களில் தேடியதில் "அரசு எங்களைக் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆதார் எண்ணை மொபைல் என்ணுடன் இணைப்பது அவசியம்" என்று மட்டும் சொல்கிறார்கள். UIDAI கணக்கும் இதுதொடர்பான ட்வீட்களுக்குப் பதில் அளிப்பதில்லை.

ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக TRAI வெளியிட்ட சுற்றறிக்கை இங்கே

ஆதார் எண்ணை அரசு தன் சேவைகளுடன் இணைப்பது சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைகளை திரித்து, மக்களிடம் பொய்யான தகவலைப் பரப்பில் ஒரு விஷயத்தைச் செய்யச் சொல்வது சரியா? ஆரம்பம் முதலே ஆதார் விஷயத்தில் அரசு நடந்துகொள்வதில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. இப்படி செயல்பட்டால் மக்கள் எந்த நம்பிக்கையில் தங்களது தனிப்பட்ட தகவல்களை எந்த பயமுமின்றி அரசுக்குத் தருவார்கள்?

ஆதாரை கட்டாயமாக்குவதில் அரசு காட்டும் தீவிர நடவடிக்கைகள் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.
Dailyhunt
மானாமதுரையில் அரசு வழங்கிய 360 ஸ்மார்ட் கார்டுகளிலும் பிழை..! கார்டை வாங்க மக்கள் மறுப்பு



சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ளது மேலப்பசலை கிராமம். இக்கிராமத்தில் உள்ள ரேஷன்கடையில் ஸ்மார்ட் கார்டு நுகர்வோர்களுக்கு வழங்கபட்டது. இந்தக் கார்டில் மேலப்பசலை என்பதற்குப் பதிலாக 360 ரேஷன் கார்டிலும் மேலப்பிடாவூர் என்கிற முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கார்டுகளைக் கடந்த மாதம் மக்களுக்கு விநியோகம் செய்யும்போதே பொதுமக்கள் வாங்க மறுத்துவிட்டனர். மேலப்பிடாவூர் என்கிற முகவரியை மாற்றாமல் வாங்க முடியாது என்று மறுத்துவிட்டார்கள் அக்கிராம மக்கள். ஆனால் மீண்டும் அதே முகவரியோடு எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் மேலப்பசலை ரேஷன்கடையில் ஸ்மார்ட் கார்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து இக்கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கூறிய அந்தக் கிராம மக்கள், 'ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் குறைந்துவிட்டது. உளுந்து வழங்வது இல்லை. சீனி, அரிசி பாமாயில் எதுவுமே மாதந்தோறும் வழங்கப்படுவது இல்லை.

இந்நிலையில் சிவப்பு கலர் பருப்பு போடுறாங்க. அந்தப் பருப்பைச் சாப்பிட்டால் மூட்டுவலி வருமாம். ஆக எங்களுக்கு எந்தப் பொருளும் ஒழுங்காக வழங்காத நிலையில் ஸ்மார்ட் கார்டு இப்படி வழங்கப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்' என்று ஆதங்கப்பட்டார்கள்.


Dailyhunt
நோயாளிகளைப் பார்க்க வருகிறவர்கள் வெளி உணவுகளை கொண்டுவர கூடாது - அரசு மருத்துவமனை அதிரடி.




விருதுநகர்

நோயாளிகளைப் பார்க்க வருகிறவர்கள் வெளியில் உள்ள உணவகங்களில் இருந்து உணவு கொண்டுவர தடை போடப்பட்டுள்ளது என்று சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரகலாதன் தெரிவித்தார்.

சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரகலாதன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று கொடுத்தார். அதில், “சிவகாசி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆண்கள், பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவிலும் காய்ச்சல் தொடக்க நிலையில் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தனி வார்டில் 15 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாள்தோறும் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரு நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஒரு வேளை காய்கறி சூப், மற்றும் பப்பாளி இலை கஷாயம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு பிற்பகல் உணவாக அரிசி கஞ்சி, இரவு உணவாக கிச்சடி, சுண்டல் வழங்கப்படுகிறது.

நோயாளிகளைப் பார்க்க வருகிறவர்கள் வெளியில் உள்ள உணவகங்களில் இருந்து உணவு கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது. உணவகங்களில் தயாரிக்கப்படும் வடை உள்ளிட்ட பதார்த்தங்களை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உண்ணக் கூடாது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அரசு மருத்துவமனையில் மட்டுமே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்கறி சூப் மற்றும் பப்பாளி இலை கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 27 பேர் உள்ளனர். இவர்களில் இரண்டு பேருக்கு இரத்ததில் தட்டணுக்கள் குறைவாக உள்ளது. எனவே டெங்கு காய்சல் வராமல் இருக்க அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் இரத்தத்தில் தட்டணுக்கள் குறைவாக இருந்த சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டான். காய்ச்சல் பாதிப்பு உள்ளனவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தலைமை மருத்துவர் பிரகலாதன் தெரிவித்தார்.
Dailyhunt
தவறான சிகிச்சை அளித்த அரசு பெண் மருத்துவருக்கு அபராதம்; இணை இயக்குநரகத்தையும் வெளுத்து வாங்கியது நீதிமன்றம்.



அரியலூர்

அரியலூரில் தனியார் மருத்துவமனை நடத்தி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த அரசு பெண் மருத்துவருக்கு ரூ.10 இலட்சம் அபராதமும், அரசு மருத்துவர் தனியார் மருத்துவமனை நடத்தியதை கண்காணிக்காத ஊரக நலப்பணிகள் குடும்ப நல இணை இயக்குநரகத்திற்கு ரூ.1 இலட்சமும் அபராதம் விதித்து அரியலூர் நுகர்வோர் குறைதீர்வு மன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம், கே.கே.நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி பெருமாள்தாய் (35). கடந்த 2009-ஆம் ஆண்டு இவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வீட்டின் அருகே தனியார் மருத்துவனை நடத்தி வரும் அரசு மருத்துவர் ஆர்.கே.காஞ்சனாவைச் சந்தித்து சிகிச்சைப் பெற்றார். இருப்பினும் தொடர் இரத்தப்போக்கு மற்றும் வயிற்றுவலி இருந்ததால் காஞ்சனா வயிற்றில் கரு சரியாக தரிக்கவில்லை உடனடியாக கருவை கலைக்க வேண்டும் என்று கூறி அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்.

ஆனால், அதன்பிறகும் வயிற்றுவலி குறையாததால் பெருமாள்தாயின் தந்தை, அவரை ஆபத்தான நிலையில் திருநெல்வேலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பெருமாள்தாய்க்கு தவறான அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டு கரு கலைக்கப்பட்டு உள்ளது என்றும், ஆபத்தான நிலையில் இருப்பதால் வயிற்றில் உள்ள ஒரு குழாயை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்து அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து பெருமாள்தாயின் கணவர் செந்தில்வேல், மருத்துவர் காஞ்சனாவை சந்தித்து, தனது மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் அறிக்கைகளைக் கேட்டுள்ளார். அதற்கு அவர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்திற்கு ஆய்விற்காக அனுப்பட்ட அறிக்கைகள் இன்னும் வரவில்லை என்று கூறி பல நாள்களாக இழுத்தடிப்பு செய்துள்ளார்.

இதுகுறித்து செந்தில்வேல், மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு மன்றத்தில் கடந்த 16.11.2011 அன்று மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்வு மன்றத் தலைவர் ஜெயசந்திரன், தவறான சிகிச்சையளித்த மருத்துவர் காஞ்சனா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 இலட்சமும், வழக்குத் தொடர்ந்த நாளில் இருந்து தொகைச் செலுத்தும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சேர்ந்து நட்ட ஈடு வழங்குமாறு நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில், ஒரு அரசு மருத்துவர், தனியாக மருத்துவமனை நடத்தி வருவதை கண்காணிக்காத பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நல இணை இயக்குநரகம், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் செந்தில்வேலுக்கு ரூ.1 இலட்சமும், வழக்குத் தொடர்ந்த நாளில் இருந்து தொகை செலுத்தும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சேர்த்து நட்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்து நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் ஜெயந்திரன் உத்தரவிட்டார்.

Some colleges operate without building plan approval

As many as 71 colleges in the region operate out of unapproved buildings, according to information received by RTI activist Daniel Jesudas.
He had sought information from the office of the Deputy Director of Town and Country Planning under RTI on colleges that were functioning in the region without getting building plan approvals and received details on September 29 that there were 71 such institutions.
These were spread across the region. When these colleges operate without getting the required building plan approvals, safety of students is at risk. The State has seen loss of life due to building collapses and these buildings had not got the mandatory approvals.
Further, there is revenue loss to the government as these institutions have not paid the development charges.
Each of these buildings will have built up area of more than 50,000 sq.ft. These colleges might not have paid the property tax too as the assessment would not have been carried out. “We will take the legal course seeking action on the officials concerned and institutions,” he said.
An official at the regional office of town and country planning here said action was taken against some of the institutions a few years ago.
Notices were issued then to all colleges that did not have the required building plan approvals. Subsequently, some had submitted applications and even taken approval. In the case of the educational institutions that had not got the approval yet, action would be initiated again.
Steps would be taken for this, the official said.

Revamp may see Annamalai varsity lose medical college

A silver lining:Immovable properties of the college are located in such a manner within the campus of the varsity in Chidambaram that the partition will be a smooth affair.  

Rajah Muthiah Medical College may become part of MGR University

Struggling to keep the Annamalai University in Chidambaram going, the government is contemplating making the Rajah Muthiah Medical and Dental College, now part of the university, a constituent college of the Tamil Nadu Dr. MGR Medical University.
If this idea fructifies, the annual deficit of the Annamalai University will be down by Rs. 80 crore. Currently, the university is handicapped by a revenue gap of Rs. 250 crore. Recently, the authorities redeployed staff, a move which is expected to bring down the deficit by Rs. 40 crore. On an average, the government is providing Rs. 100 crore. This year, the allocation is around Rs. 140 crore. It is for the university to find ways to bridge the remaining shortfall by making its operations efficient, a top government official says.
There are about 1,800 students in the college inclusive of those pursuing undergraduate and post-graduate courses. The present sanctioned intake of students for MBBS is 150.
Another official says immovable properties of the college are located in such a manner within the sprawling campus of the Annamalai University in Chidambaram of Cuddalore district, about 225 km south of Chennai, that the partition will be a smooth affair.
It was because of a deep financial crisis faced by the university that the government took complete charge of the institution four years ago. Till then, the family of the University’s founder Annamalai Chettiar was managing the university. This was formally brought to an end when the Annamalai University Act of 1929 was replaced with a fresh law in 2013.
Taking into consideration the financial crisis of the university, the State government had sanctioned over Rs. 600 crore in the last four years to meet the expenses of the university.
The issue of the college charging much higher fees for MBBS and other courses than those charged by government medical and dental colleges has been bothering students. But, a year ago, the Madras High Court held that the university was entitled to fix the fees as prescribed by the Syndicate. It remains to be seen how the structure of fees will be if the college is brought under the control of the Medical University.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 9 சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு

By DIN | Published on : 05th October 2017 07:15 PM




தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 9 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வரும் 16-ம் தேதி இரவு 9.05-க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு வரும் 16-ம் தேதி இரவு 10.30-க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுக்கிறது.

மேலும் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு அக். 20 மற்றும் 27-ம் தேதிகளில் இரவு 9.05-க்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு அக். 20 மற்றும் 27, நவ.3 மற்றும் 10-ம் தேதிகளில் இரவு 10.30-க்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் அக்.19-ம் தேதி இரவு 9.30-க்கும் அக்.22-ம் தேதி இரவு 7 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No legal heir certificates to Jaya niece, nephew

Julie Mariappan| TNN | Oct 5, 2017, 07:24 IST



CHENNAI: Former CM Jayalalithaa's nephew Deepak Jayakumar and niece Deepa Jayakumar have been denied legal heir certificates by revenue officials, who have advised them to move the appropriate court for getting the document.

Their application was rejected on the ground that only the immediate family (spouse, son and daughter) members were eligible to receive legal heir certificates from revenue officials.

The revenue authorities declined to entertain an application filed by Deepak — which according to officials, was also filed on behalf of his sister Deepa —with the Mylapore taluk office in August. The application was sent to Guindy taluk office on September 21, as Deepak's T Nagar residence comes under the jurisdiction of the Guindy office. In a two-page reply sent on September 22, the office directed him to approach a civil court for a succession certificate. As per Hindu Succession Act, 1956, you can get the succession certificate from the civil court," the tahsildar said. The officer also pointed out certain lapses, including lack of documentary proofs such as Jayalalithaa's death certificate, Aadhaar card, family ration card and voters photo identity card, in the application.

While Deepak was unavailable for comment, Deepa said none could say the family had nothing to do with the former chief minister. "It is unacceptable. The whole world knows who she is and who we are. So what is the point in delaying the paper work? We will do all that is needed to establish that we are legal heirs of Jayalalithaa," Deepa told TOI. She said that until Wednesday she had no knowledge of the application filed by her brother.

Deepa said it was best to go to court and that she could go up to four generations to produce the evidence. "We have not come from out of nowhere.

We were not hiding all these years. We have to go into the lineage, going from great grandfather. We will get all the relevant documents and necessary evi dence, if at all needed. All this is a well-known fact. We are not claiming madam's legacy anew. We are her family and everybody knows that," she said.

TOP COMMENT  MAD party Deepa is Mad for Money !Mort Walker

Deepa said her efforts to get information like who signed the relevant papers in hospital to get Jayalalithaa's mortal remains from hospital, through RTI Act, ended in vain so far.

Deepa moved the high court last month opposing the Edappadi K Palaniswami government's plan to convert Jayalalithaa's Poes Garden residence into a memorial, without the consent of the legal heirs. The case is yet to come up for hearing.
Air passengers file police complaint against customs officials at Chennai airport

A Selvaraj| TNN | Oct 5, 2017, 16:45 IST

Chennai airport

CHENNAI: Four air passengers have lodged a complaint with police against customs officials at the Chennai airport for allegedly forcing them to sign a paper and demanding Rs 5,000 from them.

In his complaint, Jamal, 42, of Mannadi in Chennai stated that he and his three other friends returned to Chennai from in Dubai in Air India flight on Wednesday. They were wearing gold jewellery (weighing 8.5 sovereigns). In addition, they brought protein powder, spinach pockets and face oil. When the customs officials questioned them, they said they had brought all the items for personal use.

TOP COMMENT  The customs officers are number one cheaters. They try to fool the passengers just to get some money.Evans Chris Sumitra

Customs officials asked them to sign a paper stating that they concealed gold jewellery and had not paid customs duty for the other items.

The four passengers refused to sign and later they lodged a complaint with the Chennai airport police against the customs officials.


FLASH NEWS : ஒரு வாரத்தில் 7வது ஊதியக் குழு பரிந்துரை - தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 20 முதல் 25% வரை சம்பளம் உயர்வு?

மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவில் தெரிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசும் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்துவது குறித்து நிதித்துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் சம்பள உயர்வுக்கான அறிக்கையை உடனடியாக வழங்காமல் காலம் தாழ்த்தினர்.

மேலும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் தாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தினர்.

இதன் உச்சக்கட்டமாக கடந்த மாதம் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றம் தலையிட்டு, தமிழக அரசின் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை நிதித்துறை செயலாளர் கடந்த மாதம் 27ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அளித்தார். இந்த பரிந்துரையை அரசு பரிசீலித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு கூடுதலாக வழங்கலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறது.

இதுகுறித்து தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிகப்பட்சமாக 20 முதல் 25 சதவீதம் வரை சம்பளத்தை உயர்த்தி வழங்க பரிசீலித்து வருகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஒரு வாரத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பார். மேலும், 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து முன்தேதியிட்டு கூடுதல் சம்பளம் வழங்க வாய்ப்புள்ளது.

அதே நேரம், அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அப்படியே அமல்படுத்தினால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில திருத்தங்கள் செய்து, அதன்மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்அடைய வழிவகை ஏற்படுத்தி தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

VIT 32 ND CONVOCATION


பெண்களுக்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள்

Published on : 02nd October 2017 01:18 PM



கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆயிரம் காலத்துப் பயிர் எனப்படும் திருமண வாழ்வு சிறக்க முன்னோர்கள் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தனர்.

பணப்பொருத்தம் பார்ப்பதை விட மனப்பொருத்தமும், மண் பொருத்தமும், மங்கல நாண் சூட நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்று கண்டறிந்தனர். வாழ்பவனுக்கு நட்சத்திரம் என்று கண்டறிந்தனர். நம்பிக்கையூட்டும் நட்சத்திரப் பொருத்தங்கள் வாயிலாக நாம் வரனைத் தேர்ந்தெடுக்கலாம்.

திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும் போது ஜோதிடர்கள் முதலில் பார்ப்பது நட்சத்திரப் பொருத்தத்தை தான். திருமணத்திற்குத் தயாராக இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட சில பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

அதன்படி, பெண்களுக்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் இங்கே தனித்தனியாக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.



மேலும் உள்ள நட்சத்திரங்களுக்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் - https://goo.gl/TnGEY3​
தப்பித் தவறியும் இவைகளை வைத்து பூஜை செய்யாதீர்கள்?
Published on : 05th October 2017 01:05 PM



பூஜை அறையில் நாம் செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

வீட்டில் பூஜை செய்யும் போது சிலருக்குப் பல குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்? எந்த பழம் எந்த தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எந்தப் பூ கொண்டு ஸ்வாமிக்கு அர்ச்சனைச் செய்வது எனப் பல சந்தேகங்கள் ஏற்படும்.

வெற்றிலைக்கு நுணியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலைபாக்கில் நுண்ணாம்பு இருக்கக் கூடாது.

அவல்பொறி, கடலை மற்றும் கல்கண்டு நிவேதனமாகப் படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்து தான் கடவுளுக்குப் படைக்க வேண்டும். மேலும், நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இளந்தை, விளாம்பழம், புளியம்பழம், மாம்பழம் ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையாகும்.

வாழையில் நாட்டுப்பழம் நல்லது. குடுமி தேங்காயை சீறாக உடைத்து பிறகு குடுமியைப் பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் இருந்தால், அதனை மாற்றி வேறு தேங்காயை உடைக்கலாம். கோணலான, வழுக்கையான தேங்காய் இருக்கக் கூடாது. வழிப்பாட்டிற்கு முன்பாக சாம்பிராணி புகை போடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல் கொண்டது.

கோலமிட்டு, விக்ரகங்களைச் சரியாக அமைத்துக்கொண்டு, விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி அர்ச்சனை செய்து அதன்பின் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.

விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளுக்கு அர்ச்சதையால் பூஜிப்பதும் தவறு. சிவபெருமானுக்கு தாழம் பூ ஆகாது. திருமகளுக்கு தும்பை பூ ஆகாது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உகந்தது அல்ல. வில்வம், கொன்றை, தும்பை, வெள்ளேருக்கு, ஊமத்தை சிவனுக்கு உரியது. காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளி பூக்கள் உகந்தவை.

அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ, ரோஜா, பன்னீர் ரோஜா, சங்குப்பூ, தாமரை, மரிகொழுந்து, சம்பங்கி, துளசி, விரிச்சிப்பூ ஆகியவை பூஜைக்கான மலர்கள் என்று ஆன்றோர்களால் கூறப்படுகிறது.

சாமந்தி போன்ற மனமில்லாத மலர்கள் பூஜைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால், அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம். அர்ச்சிக்கும் போது முழு மலரால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும். காய்ந்துபோன மற்றும் அழுகிப்போன, வாடிப்போன, பூச்சி கடித்த பூக்களைப் பயன்படுத்த தெய்வ குற்றமாகும். இவையே பூஜை அறையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஆகும்.

அக்டோபர் 7 மின் தடை


By DIN  |   Published on : 06th October 2017 04:43 AM  |
பராமரிப்புப் பணிகள் காரணமாக கல்லூரி சாலை, பரங்கிமலை, மாத்தூர், கடப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்.7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
பேப்பர் மில்ஸ் சாலை: பேப்பர் மில்ஸ் சாலை(ஒரு பகுதி), பல்லார்டு தெரு, சின்னசாமி ராஜா தெரு, ஜெகநாதன் தெரு(ஒரு பகுதி), இஎஸ்ஐ மருத்துவமனை(ஒரு பகுதி), எஸ்ஆர்பி கோயில் வடக்கு, அமிர்தம்மாள் காலனி, தீட்ஸ் தோட்டம் (1 - 7 தெரு), டிஎன்பி பிரதான தெரு ( 1 - 5 தெரு), பிரகாஷ் நிழற்சாலை, மரியநாயகம் நகர், சோமராமசாமி தெரு (ஒரு பகுதி), துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, ஆலாக்ரெட்டி அடுக்ககம், கங்கா அறக்கட்டளை, கோபால் ரெட்டி காலனி.
கல்லூரி சாலை: ஆன்டர்சன் சாலை, சுப்பராவ் நிழற்சாலை மற்றும் 1, 2 மற்றும் 3-ஆவது சாலை, கல்லூரி சாலை, பைகிராப்ட் கார்டன் சாலை, ஹடோஸ் சாலை மற்றும் ஹடோஸ் சாலை 1,2 தெருக்கள், கிரீம்ஸ் சாலை, ஷபி முஹமது சாலை, 109,110 நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ருட்லாண்ட் கேட் 1 - 6, டி.பி.ஐ. வாளகம், கல்லூரி தெரு, டெஸ்ட் புக் சொசைட்டி, மூர்ஸ் சாலை, வேலஸ் கார்டன் 1 - 3, காதர் நவாஸ்கான் சாலை, மாடல் ஸ்கூல் சாலை (ஒரு பகுதி), பாந்தியன் சாலை.
பரங்கிமலை: மேகஸின் சாலை, பட் சாலை, பட் சந்து, ராணுவக் குடியிருப்பு மற்றும் மருத்துவமனை, நந்தம்பாக்கம் பிரதான சாலை, ராமர் கோயில் தெரு, செயின்ட் தாமஸ் மவுண்ட், உட்க்ரீக் கவுண்டி, மீனம்பாக்கம், ஆலந்தூர், நசரத்புரம், மவுண்ட் பூந்தமல்லி சாலை, பர்மா மற்றும் ஸ்ரீபுரம் காலனி, போலீஸ் ஆபிஸர் சாலை, அச்சுதன் நகர்
மாத்தூர்: கே.கே.ஆர். பூங்கா மற்றும் நகர், பழனியப்பா நகர், டிமாண்டி காலனி, எம்.ஆர்.எச் சாலை, கே.பி. கார்டன், கே.கே.ஆர். கார்டன் 1 முதல் 4 தெரு வரை, தபால் பெட்டி, அலெக்ஸ் நகர், பி,சி மற்றும் டி காலனி, விக்டரி பீல்டு, ஒயிட் பீல்டு, வி.ஆர்.டி நகர், ரோஜா நகர், கண்ணம்மாள் நகர், புக்ராஜ் நகர், வாத்தியார் தோட்டம், திரு.வி.க. 1 முதல் 6 தெரு, சிவசக்தி நகர், பாரதியார் தெரு, ராஜாஜி தெரு மற்றும் இணைப்பு, பஜார் தெரு, சத்யமூர்த்தி தெரு.
கொடுங்கையூர்: ரிங்வான் சாலை, பொன்னுசாமி நகர், சாஸ்திரி நகர், பர்மா காலனி, ஹார்பர் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், கோபால் ரெட்டி தொழிற்பேட்டை.
குக்ஸ் சாலை: குளக்கரை 1, 2 மற்றும் பிரதான தெரு, நேரு ஜோதி நகர் 1, 2 மற்றும் பிரதான தெரு, புதுவாழைமாநகர், கிருஷ்ணதாஸ் சாலை, பூங்கா தெரு, சாஸ்திரி நகர், இகாங்கிபுரம் 1 - 4 மற்றும் பிரதான தெரு, சேமாத்தம்மன் காலனி 1 - 6 மற்றும் பிரதான தெரு, டீக்காகுளம், ஸ்டாரன்ஸ் சாலை, ஓட்டேரி (ஒரு பகுதி), ஸ்டாரன்ஸ் 1 - 5 சந்து, குக்ஸ் சாலை, ஹைதர் கார்டன் 1 - 3 மற்றும் பிரதான தெரு, ஈடன் கார்டன் தெரு, சோமசுந்தர நகர், பழைய வாழைமா நகர், கே.எச்.சாலை, சுப்பராயன் 1 - 5 மற்றும் பிரதான தெரு, சின்னபாபு தெரு, ஒத்தவாடை தெரு, பராக்கா 1,2 மற்றும் பிரதான தெரு, வருமான வரி மற்றும் பிரியதர்ஷினி குடியிருப்பு, சி.ஆர்.கார்டன் தெரு, ராமானுஜ கார்டன் தெரு, சி.எஸ்.நகர், டோபிகானா தெரு, தேவராஜ் தெரு, அருணாசலம் தெரு, வெங்கடேச பக்தன் தெரு, சின்னதம்பி தெரு, புது தெரு, படவட்டம்மன் கோயில் தெரு, செங்கற் சூளை தெரு, காமராஜ் தெரு, திரு.வி.க.தெரு, எஸ்.எஸ்.புரம், திடீர் நகர், யேமி தெரு, புது மாணிக்கம் தெரு, வெங்கடரத்தினம் தெரு, செல்லப்பா தெரு, ஸ்டேரன்ஸ் சாலை, நாராயண முதலி தெரு, அனுமந்தராயன் கோயில் தெரு, வல்லுவன் தெரு, சுப்பராயன் பிரதான மற்றும் 4, 5-ஆவது தெரு, வருமானவரி குடியிருப்பு, நல்லய்யா நாயுடு தெரு, சின்னபாபு தெரு.
கடப்பேரி: மெப்ஸ்- பகுதி 1, தாம்பரம்(ஒரு பகுதி), கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம், செம்பாக்கம் (ஒரு பகுதி), சிட்லப்பாக்கம், நேரு நகர், துர்கா நகர், பச்சைமலை, திருநீர்மலை, மெளலானா நகர், அமர் நகர், எம்.ஈ.எஸ்.சாலை, ரூரல் தாம்பரம், ஜி.எஸ்.டி.சாலை, கடப்பேரி, குரோம்பேட்டை.
வில்லிவாக்கம்: பொன்கிணறு தெரு, திரு.வி.க தெரு, எம்.டி.எச். சாலை(ஒரு பகுதி), சீயாளம் தெரு, திருமலை தெரு வடக்கு, தெற்கு, பஜனை கோயில் தெரு, மூர்த்தி தெரு கிழக்கு மாடத் தெரு, சென்னை பாட்டை சாலை, நாராயண மேஸ்திரி தெரு,விஜய் நிழற்சாலை.
 

முதன்மையில் பெருமையில்லை!

By ஆசிரியர்  |   Published on : 05th October 2017 01:22 AM  |  
உலகில் மிக அதிகமாகக் குழந்தைகள் மரணமடையும் நாடு என்று இந்தியா அடைந்திருக்கும் 'பெருமை' குறித்து நாம் மகிழ்ச்சி அடையவா முடியும்? 2000 முதல் 2015 வரையிலான 15 வருடங்களில் மரணமடைந்திருக்கும் ஐந்து வயதிற்கும் கீழேயான குழந்தைகளின் எண்ணிக்கை 2 கோடி 90 லட்சம். ஒட்டுமொத்த உலக எண்ணிக்கையில் இது 20%. 
தெற்காசியாவில், பிறந்த 28 நாட்களில் மரணமடைந்த 10 லட்சம் சிசுக்களில், ஏழு லட்சம் சிசுக்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்கிறது யுனிசெஃப் அறிக்கை. அதன்படி 2015 வரையிலான உலக சிசு மரணங்களில் 26% இந்தியாவைச் சேர்ந்தவை. 
வேடிக்கை என்னவென்றால், நம்மைவிட நேபாளம், வங்க தேசம், பூடான் ஆகியவை சிசு மரண விகிதத்தில் குறைவாக இருக்கின்றன. பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும்தான் இந்தியாவைவிட மோசமானதாக காணப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தாய் - சேய் நலம் சரியாகப் பேணப்படுவதில்லை என்பதும், நோய்த் தடுப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதும்தான் முக்கியமான காரணங்கள்.
இந்தியாவிலுள்ள பேறுகால மகளிர் பெரும்பாலானோருக்கு பொது சுகாதார அமைப்புகள்தான் ஒரே நம்பிக்கை. இவற்றின் மூலம்தான் கர்ப்பிணிப் பெண்களும், பால் வழங்கும் நிலையில் உள்ள தாய்மார்களும் மகப்பேறுக்கும் சிசுப் பாதுகாப்புக்கும் மருத்துவ வசதி பெற முடியும். குறிப்பாக, 'டிப்தீரியா', 'டெட்டனஸ்' உள்ளிட்ட தடுப்பூசிகள் போட வேண்டிய நிலையிலுள்ள அடித்தட்டு மக்களின் தேவைகளைப் பொது சுகாதார மையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. போலியோவைப் பொருத்தவரை, இந்தியா மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருப்பதற்கும், ஏனைய வளர்ச்சி பெறும் நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதற்கும் பொது சுகாதார மையங்கள் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன.
இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழேயுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடிக்கும் மேல். அதனால்தானோ என்னவோ, உலகிலேயே மிக அதிக அளவிலான - ஏறத்தாழ 15 லட்சம் குழந்தைகள் - குளிர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு பலியாகின்றன. இவையெல்லாம் அரசின் கவனத்துக்கு வராததல்ல. 
இதுகுறித்த விழிப்புணர்வும் செயல்திட்டங்களும் பலனளிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தாலும்கூட, அதேநேரத்தில் சில குறிப்பிட்ட காரணிகளால் ஏற்படும் குழந்தை மரண விகிதம் இந்தியாவில் குறைந்திருப்பதாக 'லான்செட்' மருத்துவ இதழ் சமீபத்தில் தெரிவித்திருக்கிறது.
பிரசவ கால மரணங்கள் சராசரியாக ஆண்டுக்கு 3.3% குறைந்திருக்கிறது. ஒன்று முதல் 59 மாதங்களுக்கு உள்ளேயுள்ள குழந்தைகள் மரண விகிதம் 5.4% குறைந்திருக்கிறது. தேசிய சுகாதாரத் திட்டம், பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றில் ஊழலும் முனைப்பின்மையும் காணப்பட்டாலும்கூட, இந்தியாவில் கிராமப்புறத்திலுள்ள அடித்தட்டு மக்களின் தேவைகளை எதிர்கொள்வதில் ஓரளவுக்கு அவை வெற்றியடைந்திருக்கின்றன என்பதைத்தான் இது காட்டுகிறது.
ஆனால், 'லான்செட்' அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் ஒரு கருத்து வேதனை அளிக்கிறது. அந்த அறிக்கையின்படி தேசிய அளவிலான குழந்தை நலத் திட்டங்களுக்கு இணையாக மாநில அரசுகளும் முனைப்புடன் செயல்பட்டிருந்தால் இப்போதைய குழந்தைகள் மரணத்தில் மூன்றில் ஒரு பங்கு மரணம் தடுக்கப்பட்டிருக்கும். சுகாதாரம் என்பது மாநில அரசு சார்ந்தது என்பதால், மக்களுக்குத் தரமான மருத்துவ சேவை வழங்கும் அடிப்படைப் பொறுப்பு அதனைச் சார்ந்தது. இந்தியாவில் பல மாநிலங்கள் இதுகுறித்து கவலைப்படுவதோ, கவனம் செலுத்துவதோ இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய ஒன்று.
பெரும்பாலான மாநிலங்களில் ஏனைய துறைகளுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு குறைந்து கொண்டுவரும் அவலம் காணப்படுகிறது. 2013-14இல் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தனி நபருக்கான அரசின் ஓராண்டு சராசரி ஒதுக்கீடு வெறும் ரூ.452 தான். இப்படி இருக்கும்போது, தங்களது முதல் பிறந்த நாளுக்கு முன்பு நாளொன்றுக்கு 981 குழந்தைகள் அந்த மாநிலத்தில் மரணமடைகின்றன என்கிற புள்ளிவிவரம் வியப்பை ஏற்படுத்தவில்லை.
அதேபோல சுகாதாரத்துக்கான அரசின் செலவினங்களில் மருத்துவமனைகளின் மூலம் தரப்படும் சிகிச்சைக்கு முன்னுரிமை தருவதுபோல, நோய்கள் வராமல் தடுப்பதற்கான முயற்சிகளில் மாநில அரசுகள் போதிய கவனமும் நிதி ஒதுக்கீடும் செய்வதில்லை. சுத்தமான குடிநீர் வழங்கப்படுவது என்பது சுகாதாரப் பாதுகாப்பில் மிக முக்கியமானது. இதன்மூலம் பல தொற்று நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. ஆனால், அரசுகள் சுத்தமான குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்துவதில்லை.
இந்தியாவில் குழந்தைகள் மரணத்திற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுபவை, பெண்கள் மிகச்சிறிய வயதிலேயே திருமணம் செய்துகொள்வது, இளம் பெண்கள் கர்ப்பகாலத்தில் எடைக் குறைவுடன் இருத்தல், பிரசவத்திற்கு முன்னால் போதுமான கவனிப்பும் ஊட்டச்சத்துள்ள உணவும் கிடைக்காமல் இருத்தல் ஆகியவை. இதனால் அவர்கள் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுகிறது. 
தென்னிந்திய மாநிலங்களைப்போல இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் கர்ப்பிணிகளுக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும், மூன்று வயதுக்குட்பட்ட சிசுக்களுக்கும் முறையான சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்படுமேயானால் இந்தியாவை இந்த அவப்பெயரிலிலிருந்து காப்பாற்றிவிட முடியும்.
 

ஆளுநருக்கு வாழ்த்துகள்!

By ஆசிரியர்  |   Published on : 06th October 2017 02:43 AM  
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும், அந்தமான் - நிகோபார் யூனியன் பிரதேசத்திற்கும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் புதிய ஆளுநராக 77 வயது பன்வாரிலால் புரோஹித் இன்று பதவி ஏற்கிறார். கடந்த 13 மாதங்களாக முழுநேர ஆளுநர் இல்லாமல் தவித்த தமிழகத்துக்கு ஒருவழியாக ஆளுநர் நியமிக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஏழரைக்கோடி மக்களுடன் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழகம், முழுநேர ஆளுநர் இல்லாமல் ஓராண்டுக்கு மேல் தொடர்ந்தது என்பது சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய களங்கம். 
குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியான பிகார் ஆளுநர் பதவிக்கு பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவர் சத்யபால் மாலிக் நியமிக்கப்பட்டிருக்கிறார். பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால் அஸ்ஸாமில் ஏற்பட்டிருக்கும் காலியிடத்தை நிரப்புகிறார் ஜெகதீஷ் முகி. இந்த மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப, ஓய்வு பெற்ற கடற்படை அட்மிரல் தேவேந்திரகுமார் ஜோஷி அந்தமான் - நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநராகிறார். பிகாரைச் சேர்ந்த கங்கா பிரசாத் மேகாலயா ஆளுநராகவும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா அருணாசலப் பிரதேச ஆளுநராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் பன்வாரிலால் புரோஹித் நீண்டகால அரசியல் அனுபவசாலி. மூன்று முறை நாகபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு முறை காங்கிரஸ் உறுப்பினராகவும் ஒரு முறை பா.ஜ.க. உறுப்பினராகவும் மக்களவையில் பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர்.
1969 காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்ட பன்வாரிலால் புரோஹித், 1978-இல் நாகபுரி கிழக்குத் தொகுதியிலிருந்து முதன்முதலில் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980-இல் நாகபுரி தெற்கு தொகுதியிலிருந்து மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், மாநிலத்தின் துணை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
1984-இல் எட்டாவது மக்களவையிலும், 1989-இல் ஒன்பதாவது மக்களவையிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாகபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், பாரதிய ஜனதா கட்சியால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கம் தொடங்கப்பட்டபோது காங்கிரஸில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார். 1991-இல் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். 1996-இல் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று 11-ஆவது மக்களவையில் உறுப்பினரானார் பன்வாரிலால் புரோஹித்.
1999-இல் பா.ஜ.க.வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பன்வாரிலால் புரோஹித், அதே ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராம்டேக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டபோது தோல்வியைத் தழுவினார். 2003-இல் சொந்தமாக 'விதர்பா ராஜ்ய கட்சி'யைத் தொடங்கி, 2004-இல் மக்களவைக்குப் போட்டியிட்டபோதும், 2009-இல் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து போட்டியிட்டபோதும் அவரால் தோல்வியைத்தான் தழுவ முடிந்தது.
நரேந்திர மோடி அரசு மத்தியில் பதவியேற்ற பிறகு 2016-இல் பன்வாரிலால் புரோஹித் அஸ்ஸாம் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்போது அஸ்ஸாமிலிருந்து தமிழகத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஏறத்தாழ 35 ஆண்டு அரசியல் வாழ்வில் பன்வாரிலால் புரோஹித் சந்தித்த உயர்வுகளும் அதிகம், வீழ்ச்சிகளும் அதிகம். ஆனாலும்கூட, மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியில் குறிப்பிடத்தக்க அரசியல் பிரமுகராகத் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவரால் முடிந்திருக்கிறது. 
ஆளுநர் மாளிகைகள் அரசியல் பிரமுகர்களின் பணி ஓய்வு இருப்பிடங்களாக மாற்றப்படும் வழக்கம் நரேந்திர மோடி அரசிலும் தொடர்கிறது என்பதைத்தான் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஆளுநர் நியமன அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது. ஆளுநர்களை நியமிக்கும் மிகமுக்கியமான கடமையை ஒத்திப்போட்டுக்கொண்டே வந்த உள்துறை அமைச்சகம், இப்போதாவது தனது கடமையை ஆற்றியிருக்கிறது என்பதற்காக ஆறுதல் அடையலாம். 
அதேநேரத்தில், தேவையில்லாமல் வதந்திகளை உலவவிடும் வகையில் ஆளுநர் நியமனங்கள் குறித்த தெளிவின்மை இருப்பது தவறு என்பதை உள்துறை அமைச்சகம் உணர வேண்டும். குறிப்பாக, கடந்த சில நாட்களாகவே ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் என்.என். வோரா மீது மத்திய அரசு நம்பிக்கை இழந்திருக்கிறது என்பது போன்ற தோற்றமும் வதந்தியும் காணப்படுகிறது. அதற்கு உள்துறை அமைச்சகம் முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
கோபால கிருஷ்ண கோகலேவால் தொடங்கப்பட்டு நாகபுரியிலிருந்து வெளிவரும் 'தி ஹிதவாடா' நாளிதழின் உரிமையாளரும் ஆசிரியருமாக இருந்து தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்க இருக்கும் பன்வாரிலால் புரோஹித் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் மிக அதிகம். ஆளுநர் மாளிகை அரசியல் மாளிகையாக மாறிவிடாமல், அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் விதத்தில் அவரது பதவிக்காலம் அமைய வேண்டும் என்கிற தமிழக மக்களின் உணர்வுகளை 'தினமணி' வெளிப்படுத்தி புதிய ஆளுநரை வாழ்த்தி வரவேற்கிறது.

ஆதார் எண் இணைத்தால் மாதம் 12 முறை ரயில் பயணத்துக்கு முன்பதிவு

By DIN  |   Published on : 06th October 2017 01:38 AM  
ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைத்தால் மாதத்துக்கு 12 முறை ரயில் பயணத்துக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்திருந்தால்தான் இணையம் வழியாக ரயில் பயணத்துக்கான முன்பதிவை மேற்கொள்ள முடியும். அப்படி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இப்போது ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மாதம் 6 முறை மட்டுமே ரயில் பயணச் சீட்டை முன்பதிவு செய்ய முடியும். ஆதார் எண்ணை இணைக்கும் பயனாளிகள், இனி மாதம் 12 முறை இணையம் மூலமாக ரயில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யலாம்.
சும்மா கிடைத்த ரூ.3,280 கோடியை  கடனாக சுமக்குது மின் வாரியம்

மின் திட்டப் பணிகளை, குறித்த காலத்தில், மின் வாரியம் முடிக்காததால், மத்திய அரசு ஒதுக்கிய, 3,280 கோடி ரூபாய் நிதி, திரும்ப செலுத்தக்கூடிய கடனாக மாறி உள்ளது.



மத்திய அரசு, ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி., என்ற, திருத்திஅமைக்கப்பட்ட விரைவு மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டத்தை, 2008ல் துவக்கியது. இத்திட்டம், இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி, 'டிரான்ஸ்பார்மர்' உள்ளிட்ட மின் சாதனங்களில், தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் பொருத்தி, மின் இழப்பை கண்காணிப்பது; இரண்டாவது, புதிய துணை மின் நிலையம், வழித்தடம் அமைத்து,

சீராக மின் சப்ளை செய்வது.திருத்திய திட்ட பணிகளை, மின் வாரியம், சென்னை உள்ளிட்ட, 110 நகரங்களில், 2009ல் துவங்கியது.

மத்திய அரசு, முதல் பணிக்கு, 417 கோடிரூபாயும், இரண்டாவது பணிக்கு, 3,279 கோடி ரூபாயும் ஒதுக்கியது. இப்பணிகளை முடிக்காததால், மின் வாரியம், மேற்கண்ட நிதியை, மத்திய அரசிடம் திரும்ப செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருத்திய மின் திட்ட முதல் பணிக்கு ஒதுக்கிய நிதியை, மத்திய அரசுக்கு, திரும்ப செலுத்த தேவை இல்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்தால், இரண்டாவது பணிக்கு ஒதுக்கிய நிதியில், 50சதவீத தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை. மீதி, 50 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும்.அதன்படி, திட்டபணிகளை, 2012ல் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டது.

அதற்குள் பணிகளை முடிக்காததால், ஓராண்டு, இரு ஆண்டுகள் என, 2017 செப்., வரை, அவகாசம் வழங்கப்பட்டது; ஆனாலும், பணிகளை முடிக்கவில்லை. இதனால், 2018 மார்ச் வரை, அவகாசம் வழங்கும் படி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது; எந்த பதிலும் வரவில்லை.இதனால், மத்திய அரசு, இரண்டாவது பணிக்கு ஒதுக்கிய முழு தொகையையும், 12 சதவீத வட்டியுடன், திரும்ப செலுத்த வேண்டிய நிலை ஏற்படுமோ என, அஞ்சப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
டிசம்பருக்குள் அரசு ஊழியர் பணிப்பதிவேடு கணினிமயமாக்கம் : முதன்மை செயலர் தகவல்

பதிவு செய்த நாள்06அக்
2017
03:25

மதுரை: ''டிசம்பருக்குள் தமிழகத்திலுள்ள ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் (சர்வீஸ் ரிக்கார்டு) கணினிமயமாக்கப்படும்,'' என, கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: திறந்த வெளிப்படையான விரைவான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்கும் பணி நடக்கிறது. இதுவரை, 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. தற்போதைய நடைமுறையின்படி பணிப்பதிவேடுகளை பராமரிப்பதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
ஒரு அரசு ஊழியர் அவரது பணிப்பதிவேட்டை முறையாக கவனித்திருக்க இயலாது. அவர் ஓய்வு பெறும் நிலையில் ஏற்கனவே பணிபுரிந்த அலுவலகத்தில் சம்பள விவரங்களை பதிவு செய்ய விடுபட்டிருந்தால், அவர் அந்த அலுவலகத்திற்கு சென்று அதை சரி செய்ய வேண்டும்.
இதனால் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க முடியாத நிலை ஏற்படும். கணினிமயமாக்குவதன் மூலம், உடனுக்குடன் இதுபோன்ற குறைகளை சரி செய்ய முடியும்.
வங்கி கணக்குகளை அலைபேசியில் வாடிக்கையாளர்கள் பார்த்து கொள்வதை போல, அரசு ஊழியர்கள் தங்கள் அலைபேசியில் பணிப்பதிவேடு பதிவுகளை பார்த்து கொள்ளலாம். ஊழியர்கள் குறித்து வயது, பணி அனுபவம் என ஏதாவது ஒரு அடிப்படையில் கணக்கெடுக்க அரசு உத்தரவிடும் போது, தற்போது மூன்று நாட்களுக்கு மேலாகி விடுகிறது.

கணினிமயமாக்குவதால், உடனுக்குடன் கணக்கெடுத்து விட முடியும். இதுகுறித்து அடுத்த வாரம் திருநெல்வேலி, திண்டுக்கல்லில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது, என்றார்.
அரசு ஊழியருக்கு 20 சதவீத சம்பள உயர்வு?

பதிவு செய்த நாள்06அக்
2017
03:09

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு, தீபாவளிக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப் பட்டதும், தமிழக அரசு
ஊழியர்களுக்கும் மாற்றி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி பிப்., 22ல் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க அலுவலர் குழு அமைத்து, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

குழு அறிக்கை அடிப்படையில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை அடுத்த வாரம் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

-நமது நிருபர்-
மதுரை மீனாட்சி கோயிலில் வெள்ளம் புகுந்தது எப்படி 16 மி.மீ., மழையை தாங்காத வடிகால்; கண்காணிப்பில் அலட்சியம்

பதிவு செய்த நாள்06அக்
2017
00:41

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரம் பெய்த மழையில், ரோட்டில் சென்ற தண்ணீர் கோயிலுக்குள் பெருக்கெடுத்து ஓடியது.

பிரமிப்பைத் தரும் கட்டடக்கலையின் சான்றாக காட்சிதரும் இக்கோயில், இயற்கையின் சீற்றங்களை தாங்கும் தொழில் நுட்பங்களோடு நம் முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே செல்லும் மழை நீர், ஒரு சில நிமிடங்களில் வடிந்துவிடும். அந்த அளவிற்கு அதன் கட்டமைப்புகள் இன்றும் ஆச்சரியம் தரும்.

தொடர் பாதிப்பு

கோயிலை சுற்றிலும் கட்டடங்கள் அதற்கு வசதியாக ரோடுகள் எல்லாம் அமைக்கப்பட்டு, காலப்போக்கில் ரோடு மட்டத்தை விட கோயில் தாழ்வாக மாறிவிட்டது. இதனால் சிறு மழை பெய்தால் கூட தண்ணீர், கோயிலுக்கு வரும் நிலை உள்ளது. குறிப்பாக கிழக்கு, தெற்கு கோபுரப் பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

கீழ ஆவணி மூலவீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதியில் உள்ள தண்ணீர் எல்லாம் இந்த பகுதியில் சேகரமாகிறது. இந்த தண்ணீர் கோயிலுக்குள் வராமல் தடுப்பதற்கு , பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெருமழை பெய்கின்ற போது இந்த தண்ணீரை தடுக்க முடியாமல் போய்விடுகிறது.

2004ம் ஆண்டிற்கு பின் நேற்று முன்தினம் தான், அதிகமாக இங்கு மழை தண்ணீர் புகுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டு போதிய மழை பெய்யாத நிலையில் கடந்த மாதம், இப்பகுதியில் பெய்த ஒரு மணி நேர மழையிலும் தண்ணீர் கோயிலுக்குள் புகுந்துள்ளது.

கண்காணிப்பில் அலட்சியம்

சித்திரை வீதிகளை சுற்றிலும் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மழைநீர் வடிகால்கள் அனைத்தும் முறையாக பராமரிப்பு இல்லாதது தண்ணீர் தேங்க முக்கிய காரணம். இந்த கால்வாய்களில் ஏற்பட்டும் அடைப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. இதில் மாநகராட்சி முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை. இந்த மழை நீர்வடிகால்கள் அடைப்பு ஏற்படுவதற்கு பொதுமக்கள், ஓட்டல், லாட்ஜ் ஊழியர்களின் அலட்சிய போக்கும் முக்கியமானது.

மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிய தெருக்களில் குப்பைகள் போடுவதற்கு குப்பைத் தொட்டிகள் தனியாக வைத்திருந்தாலும், மழை நீர் கால்வாயில் குப்பைகள் கொட்டும் பழக்கம் இன்னும் மாறவில்லை. இதன் பாதிப்பால் தான் இப்போதும் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த பகுதியில் மழைநீர் ஓடைகள் கட்டமைப்பு முழுமையாக இணைக்கப்படாமல் ஆங்காங்கே அரைகுறையாக இணைப்புகள் உள்ளது. இந்த பணியை மாநகராட்சி இன்னமும் முழுமையாக முடிக்கவில்லை.

ஆடிவீதியின் நிலை என்ன

சித்திரை வீதிகள் உயரமாக இருப்பதால் மழை பெய்தால் தண்ணீர் ஆடி வீதிக்குள் வருகிறது. ஆடி வீதியில் இந்த தண்ணீரை வெளியேற்றும் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை. இரண்டு இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளன. இங்கு தேங்கும் தண்ணீர்
சுத்திகரிக்கப்பட்டு தெப்பக் குளத்தில் சேரும். மழை குறைவால் இந்த மழைநீர் சேகரிப்பு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. 2003ம் ஆண்டில் இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் வழியாக நல்ல தண்ணீர் தெப்பத்தில் செல்லும் வகையிலும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

யானை மகால் அருகில், மழை நீரை வெளியேற்றி மழைநீர் வாய்க்காலில் சேர்க்கும் கட்டமைப்பு உள்ளது. இந்த ஒரு இடத்தில் இருந்து தான் ஆடிவீதியில் சேரும் தண்ணீர் வெளியேறுகிறது. ஆனால் இந்த கால்வாயின் வெளிப்பகுதியில் ஏற்படும் அடைப்பால் வெளியில் உள்ள தண்ணீர் ஆடிவீதிக்கு ஆறாக வந்துவிடுகிறது. இந்த பகுதியில் ஒன்றரை அடி தண்ணீர் தேங்கினால் கோயிலுக்குள் தண்ணீர் பாய்ந்து விடும்.

சுகாதாரம் பாதிக்குமா

கோயிலுக்கான பாதுகாப்புகள் நாளுக்குநான் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது. அதே போன்று சுகாதாரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் புனிதத்துவம் வாய்ந்த இடங்களில் முதன்மையானதாக இக்கோயில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டது, துாய்மையின் அடிப்படையில் தான். ஆனால் இங்கு ரோட்டில் உள்ள தண்ணீர் உள்ளே புகுந்துவிடுவது என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கோயிலின் உள்ளே காற்று, ஒளி வருவதற்கு ஏற்ப பல இடங்களில் திறந்த தாழ்வாரங்கள் உள்ளன. அதிகமாக மழை பெய்யும் போது இதன் வழியாகவும் தண்ணீர் கோயிலுக்குள் வரும். ஆனால் இந்த தண்ணீர் ஒரு சில நிமிடங்களில் வெளியேறும் வகையில் தரையில் கல் மூடிகள் கொண்ட கால்வாய் கட்டமைப்பை அக்காலத்திலேயே அமைத்திருக்கிறார்கள். அதன் வழியாகத்தான் இப்போதும் கோயிலுக்குள் புகுந்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டுள்ளது.

தண்ணீரை வெளியேற்றுவதற்கான பம்பிங் வசதிகளும் இங்கு உள்ளன. மழையின் போக்கையும், வெள்ளத்தின் வேகத்தையும் கண்காணித்து தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் சற்று தாமதமாக நடந்துள்ளதால், இரண்டு மணி நேரம் கோயில் வளாகத்தில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது.

முன்னெச்சரிக்கை அவசியம்

அம்மன் சன்னதிக்கு செல்லும் நுழைவு வாயிலை கடந்ததும் வரும் இருட்டு மண்டபத்தில் மின்இணைப்புகளின் கன்ட்ரோல் பேனல் உள்ளது. மழை வெள்ளத்தில் இதன் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கி நின்றுள்ளது. இதன் பாதுகாப்புகளை இன்னும் மேம்படுத்த வேண்டும். வெள்ளம் புகுந்த நேரத்திலும் கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்துள்ளனர்.

மழை தொடர்ந்த போது கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மும்முரமாக செயல்பட்டதால் , தண்ணீரை விரைவாக வெளியேற்ற முடிந்தது. இதே பணியை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டிருந்தால்
வெள்ளத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கலாம். வெறும் 16 மி.மீ., மழை பெய்ததற்கே இந்த பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. தொடர்ந்து மழைக்காலங்கள் வரஉள்ளது. இந்த பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களை சுத்தப்படுத்தும் பணியை மாநகராட்சி எடுக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் விடிவு வருமா

மீனாட்சி அம்மன் கோயில் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளதால் இங்கு 200 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் எந்த காரணத்தை முன்னிட்டும் ரோட்டில் உயரம் இன்னும் அதிகரிக்காமல் பணிகளை மாநகராட்சி நடத்த வேண்டும். சித்திரை வீதிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளின் தண்ணீர் ஆடிவீதிக்குள் வராத கட்டமைப்புகளை இப்போதே மாநகராட்சி திட்டமிட வேண்டும். இதற்காக கட்டுமான கலையின் வல்லுனர்களை கொண்ட குழுவினர் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோயில் புனித்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்த இனி தொலைநோக்கு திட்டங்கள் தான் அவசியம். தற்காலிக அல்லது அவசரகால திட்டங்கள் தீர்வுகளைத்தராது.
புதிய கவர்னர் புரோஹித் இன்று பதவியேற்பு : விமான நிலையத்தில் வித்யாசாகருக்கு வழியனுப்பு

பதிவு செய்த நாள்05அக்
2017
23:53


தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள, பன்வாரிலால் புரோஹித், நேற்று சென்னை வந்தார். இன்று காலை, 9:30 மணிக்கு, சென்னை, கவர்னர் மாளிகையில், புதிய கவர்னராக பொறுப்பேற்கிறார்.

மஹாராஷ்டிரா கவர்னர், வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர் பதவியை, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். தமிழகத்தில், தற்போது குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், 18 பேர், முதல்வர், பழனிசாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். அ.தி.மு.க.,விற்கு பெரும்பான்மை இல்லாததால், சட்டசபையை கூட்டி, பலத்தை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், கவர்னரிடம் கடிதம் கொடுத்த, 18 எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர், தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற சிக்கல்கள் நீடிப்பதால், தமிழகத்திற்கு முழு நேர கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு உள்ளார்.அதைத் தொடர்ந்து, பொறுப்பு கவர்னர் பதவியிலிருந்து, வித்யாசாகர் ராவ் விலகினார். நேற்று காலை, தமிழக அரசு சார்பில், அவருக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்டது.காலை, 9:30 மணிக்கு, அவர், தன் மனைவி வினோதாவுடன், தனி விமானத்தில், மும்பை சென்றார். முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள், வழியனுப்பி வைத்தனர்.

புதிய கவர்னர் வருகை : பகல், 1:30 மணிக்கு, பயணியர் விமானத்தில், புதிய கவர்னர், பன்வாரிலால் புரோஹித், பெங்களூரிலிருந்து சென்னை வந்தார். புதிய கவர்னர், சென்னை வந்தபோது, மழை பெய்தது. முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், தலைமைச் செயலர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் ஆகியோர், பூங்கொத்து கொடுத்து, புதிய கவர்னரை வரவேற்றனர். காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின், புரோஹித், ராஜ்பவன் புறப்பட்டுச் சென்றார். கிண்டி, ராஜ்பவன் முன், ஆறு குதிரை வீரர்கள் அணிவகுத்து நின்று, கவர்னரை வரவேற்றனர்.

இன்று பதவியேற்பு : இன்று காலை, 9:30 மணிக்கு, ராஜ்பவனில் புதிய கவர்னர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சென்னை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

- நமது நிருபர் -

தீபாவளி கங்கா ஸ்நானம் : காசிக்கு சிறப்பு ரயில்


சென்னை: தீபாவளியையொட்டி, கங்கையில் நீராட, தனி சுற்றுலா ரயிலை, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது. இந்த ரயில், மதுரையில் இருந்து, 14ம் தேதி புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக செல்லும். ஒடிசாவில், பூரி ஜெகன்நாதர், கோனார்க், சூரிய நாராயணார் கோவிலில், தரிசனம் செய்யலாம்.
உ.பி., மாநிலம், காசியில் உள்ள, கங்கை நதியில், தீபாவளியன்று நீராடலாம். அயோத்தியில், ராமஜென்ம பூமிக்கு சென்று வரலாம்; அலகாபாத் திரிவேணி சங்க மத்திலும் நீராடலாம். 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, 11 ஆயிரத்து, 340 ரூபாய் கட்டணம்.

கர்நாடகா சுற்றுலா : கர்நாடகாவில், பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்லும் வகையில், பக்தி சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், நாளை, மதுரையில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, போத்தனுார் வழியாக இயக்கப்படும். கர்நாடகாவில், தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில், ஹோரநாடு அன்னபூரணி, சிருங்கேரி சாரதா பீடம், கொல்லுார் மூகாம்பிகை, முருடேஷ்வரில் உள்ள முருடேஷ்வர் மற்றும் உடுப்பி கிருஷ்ணனையும் தரிசிக்கலாம். ஐந்து நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 6,045 ரூபாய் கட்டணம். மேலும் தகவல்களுக்கு, 90031 40681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நிச்சயம் முடிந்த பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: ஹெல்மெட்டால் அடித்து இன்ஜினியர் படுகொலை: 3 வாலிபர்கள் கைது: ஒருவருக்கு வலை

2017-10-06@ 01:01:14



சென்னை: வேறு ஒருவருடன் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்த இன்ஜினியர், ஹெல்மெட்டால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர், வேதா நகரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் ராஜ்குமார் (28), இன்ஜினியரான இவர் தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி இரவு ராஜ்குமார் பணி முடிந்து தனது பைக்கில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே இரண்டு பைக்கில் வந்த 4 ேபர் வழிமறித்து ராஜ்குமாரிடம் பேசியுள்ளனர். பிறகு அனைவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜ்குமாரை பைக்கில் வந்தவர்கள் ஹெல்மெட்டால் அடித்துள்ளனர். இதில் ராஜ்குமார் படுகாயமடைந்தார்.

தகவல் அறிந்த ராஜ்குமார் தந்தை துரைராஜ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது மகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தார். இதுகுறித்து போலீசார் அடிதடி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார், கொலை வழக்காக மாற்றி ராஜ்குமாரை தாக்கிய ஜெயசீலன் (27), கிங்ஸ்டன் (25), பிரவீன்குமார் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அபிஷேக் (27) என்பவரை தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:

வேலை செய்யும் இடத்தில் உடன் பணியாற்றும் பெண் ஒருவரை ராஜ்குமார் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். பலமுறை ராஜ்குமார் தனது காதலை சொல்லியும் அந்த பெண் காதலை ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் ராஜ்குமார் அந்த பெண்ணை பின்தொடர்ந்து பல இடங்களில் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன் பிறகும் ராஜ்குமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். அதனால் மனமுடைந்த அந்த பெண் இதுகுறித்து பெற்றோர் மற்றும் திருமணம் செய்து கொள்ளும் நபரிடம் சொல்ல முடியாமல் தவித்தார். பின்னர் அவருடன் கல்லூரியில் படித்த திருவான்மியூரை சேர்ந்த ஜெயசீலனை சந்தித்து சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

அதன்படி, ராஜ்குமாரை சந்தித்து அவர் காதலிக்கும் பெண்ணை விட்டுவிடும்படி பஞ்சாயத்து பேச கடந்த 23ம் தேதி இரவு ஜெயசீலன் அவரது தம்பி கிங்ஸ்டன் மற்றும் அவரது நண்பர்கள் அபிஷேக், பிரவீன்குமார் ஆகியோர், ராஜ்குமாரை அவர் வீட்டின் அருகே சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ராஜ்குமார், நான் அந்த பெண்ணை விடமாட்டேன். அவரது திருமணத்தை கண்டிப்பாக நிறுத்திவிடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் கடுமையாக ராஜ்குமாரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த வழக்கில் நாங்கள் ராஜ்குமார் காதலித்த பெண்ணிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
சேலம் உள்பட 4 மாவட்டங்களில் விடிய, விடிய மழை பாலம் உடைந்தது, பயிர்கள் சேதம் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

2017-10-06@ 00:25:32


சேலம்: சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. பயிர்களும் தண்ணீரில் மூழ்கின. தரைப்பாலம் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு துவங்கி விடிய, விடிய பலத்தமழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் 984 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாநகரின் தாழ்வான பகுதிகளில் பெய்த மழையால், திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக மாறியது. பலத்த மழையால் குமரகிரி ஏரி நள்ளிரவில் நிரம்பியது. ஏரி நிரம்பி வெளியேறிய தண்ணீர் பச்சப்பட்டி, நாராயணநகர், ஆறுமுகநகர் பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். ஆட்டையாம்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையால் திருமணி முத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது. இடைப்பாடியில் பலத்த மழையால் ₹ 30லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமானது.

ஓசூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மத்தம் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தது. இதனால் அந்தப்பகுதியில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து தடைபட்டு, மக்கள் மிகுந்த சிரமத்தில் ஆழ்ந்தனர். அஞ்செட்டி மலைகிராமங்களில் பெய்த மழையால் தொட்டல்லா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது.
டாக்டர் அனுமதியில்லாமல் மருந்துகள் விற்க கூடாது : அமைச்சர் விஜயபாஸ்கர்

 டாக்டர் அனுமதியில்லாமல் மருந்துகள் விற்க கூடாது : அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: ''டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல், மருந்துகளை விற்க கூடாது,'' என, மருந்து வணிகர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மருந்து வணிக சங்க நிர்வாகிகளுடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அமைச்சர்விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழகத்தில், 37 ஆயிரத்து, 93 சில்லரை மருந்து விற்பனை நிலையங்களும்; 14 ஆயிரத்து, 894 மொத்த விற்பனை நிலையங்களும் உள்ளன. இவற்றில், டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல், மருந்துகளை விற்க கூடாது. மருந்து கடைகளில், டெங்கு விழிப்புணர்வு குறித்த பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டி வைக்கவேண்டும்.
சென்னையில், மூன்று நாட்களில், இரண்டு லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை அரசுக்கு சவாலான ஒன்றாக உள்ளது. ஆனாலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.

சி.பி.ஐ., விசாரணைக்கு லாலு ஆஜரானார்

பதிவு செய்த நாள்06அக்
2017
00:29




புதுடில்லி: ரயில்வே அமைச்சராக இருந்தபோது, மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜரானார்; அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது.

லாலு பிரசாத், 2006ல், காங்கிரஸ் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயின் துணை அமைப்பான, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இரண்டு ஓட்டல்களை நடத்தும் உரிமம், ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அதற்கு பிரதிபலனாக, பீஹாரின் பாட்னா நகரில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, போலி நிறுவனம் மூலம், லாலு குடும்பத்தினர் பெற்று உள்ளதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக, லாலு மற்றும் அவரது மனைவி ரப்ரி தேவி, மகனும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி, மகளும், எம்.பி.,யுமான, மிசா பார்தி உள்ளிட்டோரிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்திஉள்ளது.

பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையும் நடந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் படி, சி.பி.ஐ., 'சம்மன்' அனுப்பியிருந்தது. அதன்படி, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில், லாலு பிரசாத் நேற்று ஆஜரானார். அவரிடம், அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
ஸ்டிரைக்கில் குதிக்க போவதாக அரசுக்கு வங்கி ஊழியர்கள் மிரட்டல்

05அக்
2017 
14:41
புதுடில்லி : கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி உயர் மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மக்கள், தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை அருகில் உள்ள வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் வங்கி ஊழியர்களின் பணிச்சுமை அதிகமானது. பலரும் நாள் ஒன்றிற்கு 14 மணி நேரம் வரை பணிசெய்யும் நிலை ஏற்பட்டது. வேலை நெருக்கடி கருதி பலரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பின் போது கூடுதலாக பணியாற்றிய வங்கி ஊழியர்களுக்கு, கூடுதல் பணிக்கான சம்பளம் இதவரை வழங்கப்படவில்லை. ஏறக்குறைய 11 மாதங்கள் கடந்த பிறகும், அரசிடம் பலமுறை வலியுறுத்திலும் பணியாற்றிய கூடுதல் நேரத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை.

ஊழியர்கள் ஒருவருக்கு அவர் கூடுதலாக பணியாற்றும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 முதல் ரூ.300 வரை வழங்கப்பட வேண்டும். நிலுவை தொகை வழங்கப்படாதது தொடர்பாக மத்திய அரசுக்கு அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக நிலுவை தொகையை தர நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் அல்லது சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வோம் எனவும் வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

NewsToday 18.10.2024