Monday, January 1, 2018

தமிழக அரசின் தற்போதையகடன் சுமை... ரூ.2 லட்சம் கோடி!
தமிழக அரசின் கடன் சுமை, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. தற்போதைய கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது, அனைத்து தரப்பினரிடமும், கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கடனுக்கு செலுத்த வேண்டிய அதிக வட்டி காரணமாக, அரசு நிர்வாகத்தினரும் திணறி வருகின்றனர். எனவே, இலவச திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக,அரசின்,தற்போதைய,கடன் சுமை, ரூ.2 லட்சம் கோடி!

தமிழக அரசு, நிதி பற்றாக்குறையால், தவித்து வருகிறது. ஆண்டுதோறும் கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது. 1984 - 85ம் நிதிஆண்டில், 


2,129.59 கோடி ரூபாய் கடன் இருந்தது. பின், 2015 - 16ல், அரசின் கடன் சுமை, ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து, 95 கோடியே, 65 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு காரணமாக, தமிழக அரசுக்கு வருவாய் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.


சென்னை, அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், நர்மதா நந்தகுமார், தமிழகத்தில், காங்., ஆட்சியிலிருந்த காலம் முதல், 2017 வரை, ஒவ்வொரு நிதியாண்டிலும், தமிழக அரசின் கடன் சுமை எவ்வளவு என்ற விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டார்.


நிதித்துறை சார்பு செயலர், ராமநாதன், அதற்கு பதில் அனுப்பி உள்ளார். அதில், '1984 - 85ல் இருந்து, 2015 - 16 நிதியாண்டு வரை, ஒவ்வொரு ஆண்டிலும், தமிழக அரசுக்கு, எவ்வளவு கடன் இருந்தது' என்ற, விபரத்தை தெரிவித்துள்ளார்.அதன்படி, ஒவ்வொரு


ஆண்டும், தமிழக அரசின் கடன் சுமை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. ஒருமுறை கூட, கடன் சுமை குறையவில்லை.
1984ல், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தார். அவருக்கு பின், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,
கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

இரு கட்சி ஆட்சியிலும், போட்டி போட்டு கடன் பெற்றுள்ளனர். கடன் சுமையை குறைக்க, இரண்டு கட்சிகளும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், 2016 - 17க்கான கணக்குகள், இதுவரை இறுதி செய்யப்பட வில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தமிழக அரசின் கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயுடன் அரசு செலுத்த வேண்டிய வட்டி தொகையும் அதிகரித்தபடி உள்ளது. இதனால், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலவச திட்டங் களால் தான், இவ்வளவு சிக்கல் ஏற்பட்டுள்ள தாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆட்சியிலிருப்போர், கடன் சுமையை குறைக்க, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.


- நமது நிருபர் -

சென்னை:ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில், அதிர்வு அலைகளை உருவாக்கி உள்ளது. பலர் வரவேற்று உள்ளனர்; சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும்

தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின்:

ரசிகர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு, ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்; பாராட்டுகள். ரஜினியின் அரசியல் வருகையால், சாதகமோ பாதகமோ இல்லை. அதைப் பற்றி, தி.மு.க., கவலைப்படாது. தி.மு.க.,வை பொறுத்தவரை, அது ஏற்றுள்ள கொள்கையின் வழிமுறைப்படி, வெற்றிப் பாதையில் பயணிக்கும்.


அ.தி.மு.க., அமைச்சர் ஜெயகுமார்
:

யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம்; மக்களே இறுதி எஜமானர்கள். அவர்கள் தான், அரசை தீர்மானிக்க முடியும். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடிகர் ரஜினிக்கு வாழ்த்துகள். அவர், அ.தி.மு.க.,வை விமர்சித்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது; தி.மு.க.,வை கூட விமர்சித்திருக்கலாம்.


ஆர்.கே.நகர் தொகுதி, சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரன்:

அரசியலுக்கு ரஜினி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலில், பல கட்சிகள் உருவாகலாம். வெற்றி என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது. ரஜினிக்கு என் வாழ்த்துகள்.


தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்:

ஊழலற்ற நிர்வாகத்தை தரவே, அரசியலுக்கு வருகிறேன் என, ரஜினி கூறி யிருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தில், ஊழலை எதிர்த்து போராட, மேலும் பலம் தேவை. லோக்சபா தேர்தல் குறித்து, தேர்தல் நடக்கும் போது முடிவெடுப்பதாக கூறியுள்ளார். அவர், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பார் என்பது என் கணிப்பு.


தமிழக காங்., முன்னாள் தலைவர், இளங்கோவன்:

சட்டசபை தேர்தல் வரும் போது, கட்சி துவக்கப்போவதாக கூறியிருக்கிறார். புத்தாண்டில் அவரது படங்கள் வெளிவரவுள்ளன. அதற்காக, புதுவிதமாக அவர் கையாண்டுள்ள விளம்பர யுக்தி. முழுமையாக அரசியலுக்கு வரட்டும்; அப்போது பார்ப்போம்.


இ. கம்யூனிஸ்ட் மாநில செயலர், முத்தரசன்:
ரஜினி, அரசியல் சீரழிவுகளை விமர்சித்து இருக்கிறார். 'சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி துவக்குவேன்; ஆன்மிக அரசியல் நடத்துவேன்' என்கிறார். ஆன்மிகமும், அரசியலும் ஒன்றாக இருக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகள் தான், மக்களோடு நேரடி தொடர்பு கொண்டவை; ஆனால், அதில், போட்டியிடப் போவதில்லை என, கூறி உள்ளார். அவரது அறிவிப்பு, ரசிகர்களை ஒருங் கிணைக்கும் நடவடிக்கையாகவே கருதுகிறோம்


விடுதலை சிறுத்தைகள் தலைவர், திருமாவளவன்:

ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆன்மிக அரசியல் என்பதையும், மதவாத சக்திகளுக்கு எதிரான அரசியல் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன்படி, இடதுசாரிகளுடனும் சேராமல், பா.ஜ.,வுடனும் சேராமல், தனி வழியில் அவரது அரசியல் இருக்கும் என, கருதுகிறேன். அவரது நிலைப்பாடுகள் தெரிந்த பின், ஆதரவு கொடுப்பது குறித்து முடிவு எடுப்போம்.


த.மா.கா., தலைவர், வாசன்:
ரஜினி, அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன். ஜனநாயகத்தில், அரசியல் கட்சியை துவக்குவதற்கும், அதன் சார்பில் மக்களை சந்திப்பதற்கும் யாரும் இடையூறாக இருக்க முடியாது. மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட்டால் அங்கீகாரம் பெறலாம்; மக்கள் தான் எஜமானர்கள்.


முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி:


ரஜினியின் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள். அவர், என் நெருங்கிய நண்பர்.கருணாநிதிக்கும், அவரை பிடிக்கும். அவரது வருகை, அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். விரைவில், அவரை நேரில் சந்திப்பேன்.இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகர்களும் அரசியலும்

இந்தியாவில், அரசியல் கட்சி தொடங்கிய, சில முன்னணி நடிகர்கள்.என்.டி.ராமாராவ் -ஆந்திராவில், 1982ல், தெலுங்கு தேசம்கட்சியை துவக்கினார். 1983ல் முதல்வரானார். மூன்று முறை முதல்வராக இருந்தார். இவரது மறைவுக்குப் பின்பும், கட்சி இயங்குகிறது. முதல்வராக, சந்திரபாபு நாயுடு இருக்கிறார்.

சிரஞ்சீவி - பிரஜா ராஜ்யம்

ஆந்திராவில், 2008ல், பிரஜா ராஜ்யம் கட்சியை துவக்கினார். முதல் தேர்தலில், 18 தொகுதிகளில்


கட்சி வென்றது. பின், 2011ல், காங்., உடன் கட்சியை இணைத்தார்.


எம்.ஜி.ஆர்.,

தமிழகத்தில் அ.தி.மு.க.,வை, 1972ல், எம்.ஜி.ஆர்., துவக்கினார். 1977ல், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இவரது கட்சி ஆட்சியை பிடித்தது. 1987ல் மறையும் வரை, தொடர்ச்சி யாக மூன்றுமுறை முதல்வராக இருந்தார். மறைவுக்குப் பின், கட்சி இயங்குகிறது.

சிவாஜி கணேசன்

சினிமாவில் சாதித்த இவர், 1988ல், தமிழக முன்னேற்ற முன்னணியை துவக்கினார். ஆனால், அரசியலில் சாதிக்க முடியவில்லை. கட்சியை கலைத்துவிட்டார்.

விஜயகாந்த்

தே.மு.தி.க.,வை, 2005ல் துவக்கினார். 2006 தேர்தலில், விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். 2011 தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து, 29 இடங்களில் வென்றது இக்கட்சி. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவ ரானார். 2016 தேர்தலில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

சரத்குமார்


கடந்த, 2007ல், சமத்துவ மக்கள் கட்சியை துவக்கினார். 2011 தேர்தலில், இவர் உட்பட இருவர் வெற்றி பெற்றனர். 2016 தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி இல்லை.


டி.ராஜேந்தர்:தி.மு.க., வில் இருந்து பிரிந்து, 2004ல், லட்சிய தி.மு.க., கட்சியை துவக்கினார். தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை.

கார்த்திக்: கடந்த, 2009ல், நாடாளும் மக்கள் கட்சியை துவக்கினார். தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை.

சீமான்

இவர், 2010ல், நாம் தமிழர் கட்சியை துவக்கினார். 2016 தேர்தல் களத்தில், தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட்டது.

டிரான்ஸ்பரான அதிகாரிக்கு மீண்டும் சேலத்தில் பணி!

Added : ஜன 01, 2018 03:59

சேலம்: சேலத்தில் நடந்த முதல்வர் விழாவில் ஏற்பட்ட குளறுபடியை காரணம் காட்டி, திருநெல்வேலிக்கு துாக்கியடிக்கப்பட்ட, போலீஸ் உதவி கமிஷனருக்கு, மீண்டும் சேலத்தில் பணி ஒதுக்கி, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.சேலம், திருவாக்கவுண்டனுார் ரவுண்டானாவில், முதல்வர் பழனிசாமி, கடந்த 2ல் மேம்பாலத்தை திறந்துவைத்தார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளை, வடக்கு குற்றப் பிரிவு உதவி கமிஷனர் பிரேம் ஆனந்த் கவனித்தார். ஆனால், ரிப்பன் வெட்டுதல் உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.இதனால், குளறுபடி நிலவியதால், முதல்வர் பழனிசாமி அதிகாரிகளை கடிந்து கொண்டார். இச்சம்பவத்தால், பிரேம் ஆனந்தை, திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவுக்கு மாற்றி, டி.ஜி.பி., ராஜேந்திரன் 


உத்தரவிட்டார்.மாற்றத்தை மறுபரிசீலனை செய்யும்படி, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அவரை, மீண்டும், சேலம் மாநகர வடக்கு குற்றப்
பிரிவில் பணியில் இணைய, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
பவுர்ணமி கிரிவலத்துடன் தி.மலையில் புத்தாண்டு

Added : ஜன 01, 2018 00:26


வேலுார்: திருவண்ணாமலையில், இந்த புத்தாண்டு, பவுர்ணமி கிரிவலத்துடன் துவங்குகிறது. 2018ம் ஆண்டில், மொத்தம், 13 பவுர்ணமிகள் வருகின்றன.


பஞ்ச பூத தலங்களில், அக்னி தலமாக, தி.மலை அண்ணாமலையார் கோவில் விளங்குகிறது.
இங்கு, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில், கிரிவலம் வந்து, அண்ணாமலையாரை வழிபட்டால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.


திருவண்ணாமலையில் இந்த புத்தாண்டு, பவுர்ணமி கிரிவலத்துடன் துவங்குகிறது. இந்த ஆண்டில், மொத்தம், 13 பவுர்ணமி வருகிறது. 


குறிப்பாக, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில், இரண்டு பவுர்ணமி வருகிறது; பிப்ரவரியில் பவுர்ணமி இல்லை.


இந்த ஆண்டில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ள பட்டியல்:


 ஜன., 1ம் தேதி திங்கள் காலை, 10:30 மணி முதல், 2ம் தேதி செவ்வாய் காலை, 8:30 மணி வரை


 ஜன., 30ம் தேதி செவ்வாய் இரவு, 9:36 மணி முதல், 31ம் தேதி புதன் இரவு, 7:26 மணி வரை


 மார்ச், 1ம் தேதி வியாழன் காலை, 8:13 மணி முதல், 2ம் தேதி வெள்ளி காலை, 6:30 மணி வரை
சித்ரா பவுர்ணமி


 மார்ச், 30ம் தேதி வெள்ளி இரவு, 7:16 மணி முதல், 31ம் தேதி சனி மாலை, 6:19 மணி வரை


 ஏப்., 29ம் தேதி ஞாயிறு காலை, 7:05 மணி முதல், 30ம் தேதி திங்கள் காலை, 6:50 மணி வரை


 மே, 28ம் தேதி திங்கள் இரவு, 7:37 மணி முதல், 29ம் தேதி செவ்வாய் இரவு, 8:30 மணி வரை


 ஜூன், 27ம் தேதி புதன் காலை, 9:35 மணி முதல், 28ம் தேதி வியாழன் காலை, 10:20 மணி வரை


 ஜூலை, 26ம் தேதி வியாழன் இரவு, 12:20 மணி முதல், 27ம் தேதி வெள்ளி இரவு, 2:25 மணி வரை


 ஆக., 25ம் தேதி சனி மாலை, 4:05 மணி முதல், 26ம் தேதி ஞாயிறு மாலை, 5:40 மணி வரை


 செப்., 24ம் தேதி திங்கள் காலை, 8:02 மணி முதல், 25ம் தேதி செவ்வாய் காலை, 8:45 மணி வரை


 அக்., 23ம் தேதி செவ்வாய் இரவு, 10:45 மணி முதல், 24ம் தேதி புதன் இரவு, 10:50 மணி வரை


கார்த்திகை பவுர்ணமி


 நவ., 22ம் தேதி வியாழன் மதியம், 12:45 மணி முதல், 23ம் தேதி வெள்ளி மதியம், 12:02 மணி வரை


 டிச., 22ம் தேதி சனி காலை, 10:45 மணி முதல், 23ம் தேதி ஞாயிறு காலை, 8:30 மணி வரை
ரஜினி ஒரு ஊழல்வாதி: சுவாமி கோபம்

Added : ஜன 01, 2018 04:11


சென்னை: ''நடிகர் ரஜினிக்கு நான் எப்போதுமே எதிர்ப்பைத்தான் தெரிவிப்பேன்,'' என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறிஉள்ளார்.

அவர் கூறியதாவது: நடிகர் ரஜினி ஒரு படிப்பறிவில்லாதவர். ஊழல்வாதி. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மீடியாக்களே மிகவும் பெரிது படுத்துகின்றன. அவர் நம்மிடம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இதுவும் தமிழ் நடிகர் ஒருவர் அரசியலில் இணைந்தார் என கூறும் ஒரு பழைய கதை மட்டும்தான். நான் எப்போதும் ரஜினிக்கு எதிர்ப்புதான் தெரிவிக்கிறேன். சினிமா நடிகர்களை என்று மக்கள் விடுவிக்கிறார்களோ அப்போதுதான் தமிழகம் முன்னேறும். இன்னும் அவருடைய கட்சியை அறிவிக்கவில்லை. பா.ஜ.,வுடன் அவரை கூட்டணி அமைக்கவிட மாட்டேன். தவறான நேரம் மற்றும் இடத்தில் இருந்து ரஜினி, அரசியலுக்கு வருகிறார். அவருடைய கறுப்பு பண விவகாரம் விசாரணைக்கு வந்ததும் அவர் கவலையடைவார். ரஜினியின் பாடல்கள் மற்றும் நடனங்களில் மக்கள் விழுந்துவிடக்கூடாது. ஒரு நடிகர் சங்கம் அரசியல் கட்சியாக முடியாது. என் எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் பா.ஜ., கூட்டணி வைத்தால் கட்சியில் இருந்து விலகி வேறு மாநிலம் சென்று அரசியல் செய்வேன்.இவ்வாறு கூறினார்.
வசனம் எடுபடாது: அமைச்சர் ராஜு காட்டம்

Added : ஜன 01, 2018 03:29




மதுரை: ''திரைப்படத்தில் வேண்டுமானால், லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன் என, வசனம் பேசலாம். அரசியலில் ரஜினி வசனம் எடுபடாது,'' என, மதுரையில், கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு தெரிவித்தார்.

நேற்று அவர் கூறியதாவது: ஜனநாயக நாட்டில், ரஜினி மட்டுமல்ல, யாரும் அரசியலுக்கு வரலாம். அவரது செயல்பாட்டை பொறுத்து தான், அவரை ஏற்பதா, புறக்கணிப்பதா என, மக்கள் முடிவெடுப்பர். 


முதல்வர், பழனிசாமி ஆட்சியில், சிஸ்டம் சரியாக தான் உள்ளது. எந்த சிஸ்டம் சரியில்லை என, ரஜினி கூறுகிறாரோ அதில் உண்மை இருந்தால், திருத்திக் கொள்வோம்.
இது, மக்களுக்கான அரசு. திரைப்படத்தில் வேண்டுமானால், 'லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா' வருவேன் என வசனம் பேசலாம். 


அரசியலில் அப்படி பேசுவதோ, செயல்படுவதோ கடினம். ஒரு இயக்கம் நடத்துவதில் உள்ள கஷ்டம், இனி தான் அவருக்கு புரியும். திரைப்பட வசனம் வேறு, அரசியல் வேறு என, ரஜினி புரிந்துகொள்ள வேண்டும்.


இந்த அரசை குறை கூறிய, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள், 'டிபாசிட்' கூட வழங்காமல் புறக்கணித்துள்ளனர். எம்.ஜி.ஆருக்கு அடுத்து, நடிகர்கள் யாரையும் இதுவரை மக்கள் ஏற்றுக் கொண்டதில்லை. தினகரன் வெற்றி தற்காலிகமானது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.



ஹோமியோபதி டாக்டர்களுக்கு அலோபதி டாக்டராக வாய்ப்பு

Added : டிச 31, 2017 20:46 |




  புதுடில்லி:ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், தேர்வு எழுதி, அலோபதி டாக்டராக செயல்படுவதற்கு வாய்ப்பு அளிக்கும் மசோதா, தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மசோதா தாக்கல்


இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கும் மசோதா, லோக்சபாவில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், நவீன மருத்துவ முறையான, அலோபதி டாக்டர்களாவதற்கு வாய்ப்பு அளிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.தேசிய மருத்துவ கமிஷன், ஹோமியோபதிக்கான மத்திய கவுன்சில், இந்திய மருத்துவ முறைக்கான மத்திய கவுன்சில் ஆகியவை ஆண்டுக்கு ஒரு முறை கூடி, இது குறித்து பேச வேண்டும்.

விவாதிக்க வேண்டும்

மருத்துவ முறைகளை மேம்படுத்துவது குறித்தும், இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், அலோபதி டாக்டர்களாக செயல்படுவதற்கு தேர்வு நடத்துவது குறித்தும் இந்த அமைப்புகள் விவாதிக்க வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது..
2018-புத்தாண்டு பிறந்தது; நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

Added : ஜன 01, 2018 00:02 |

 

  புதுடில்லி: நாடு முழுவதும் 2018 ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிற்பகல் இருந்து மக்கள் குவியத் தொடங்கினர். ஸ்டார் ஹோட்டல்களில், ஷாப்பிங் மால்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆடிப்பாடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவிந்த ஏராளமானோர், உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர்.

மேலும் சென்னையில் உள்ள பல்வேறு பூங்காக்கள், கிளப்களில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கேக் வெட்டியும் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவொருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

அதேபோல மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர்.
‘அ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி பெற முடியாது’ அமைச்சர் ஜெயக்குமார்

‘அ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி பெற முடியாது’ அமைச்சர் ஜெயக்குமார்
 
அ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி உள்பட யாரும் பெற முடியாது என அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்தார்.
ஆலந்தூர்,

தமிழக அமைச்சர் ஜெயக் குமார், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா ஜனநாயக நாடு. வலிமையான ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தீர்மானிப்பது மக்கள்தான். அவர்கள்தான் சிறந்த நீதிபதிகள். இறுதி எஜமானார்கள். ஒரு அரசின் வெற்றி, தோல்வியை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.

கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த ரஜினிக்கு, தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ரஜினியின் பேச்சை திசை திருப்ப வேண்டாம். ரஜினி, அ.தி.மு.க. என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. பொதுவாக சொன்ன கருத்து. அவர் தி.மு.க.வை கூட சொல்லி இருக்கலாம். அ.தி.மு.க.வை சொல்லி இருந்தால் நாங்கள் பதில் தருவோம். பொதுவாக சொன்ன கருத்துக்கு நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

ரஜினி வருகையால் அ.தி.மு.க.வுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி உள்பட யாரும் பெற முடியாது. அரசியலில் குதிக்கப்போவதாகத் தான் சொல்லி இருக்கிறார். அரசியல் என்பது ஒரு கடல். அதில் யார் வந்தாலும் வரவேற்போம்.

அரசியலில் குதித்த பின் என்ன மாதிரி கொள்கைகள், திட்டங்கள் என்பதை பார்த்து தான் விமர்சனம் செய்ய முடியும். பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணியா? என்பதை ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும்.

திருமங்கலம் தேர்தலில் மோசமான கலாசாரத்தை தி.மு.க.தான் கொண்டு வந்தது. தி.மு.க. வழியில் ரூ.20 டோக்கன் தந்து தினகரன் ஹவாலா முறையில் ரூ.10 ஆயிரம் தருவதாக உறுதி அளித்து வெற்றியை தற்காலிகமாக பெற்றிருக்கிறார். ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் தினகரனை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் மு.க.ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும் இருக்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால், ‘கடல் வற்றி கருவாடு சாப்பிட கொக்கு நினைத்து செத்தது’ போல் இருக்கிறது.

2021-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. அரசு நீடிக்கும். அதன்பின்பும் அ.தி.மு.க. அரசை அமைப்போம் என்ற பயணத்தில் நாங்கள் செல்கிறோம். ஜெயலலிதாவை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்தில் தினகரன் வெற்றி பெற்று உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்மிக அரசியல் என்றால் என்ன? நடிகர் ரஜினிகாந்த் கூறிய விளக்கம்





ஆன்மிக அரசியல் என்றால் என்ன? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

ஜனவரி 01, 2018, 05:15 AM சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து போயஸ் கார்டன் இல்லம் நோக்கி ரஜினிகாந்த் வந்தார்.

போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லம் அருகே ரசிகர்கள் நற்பணி மன்ற கொடியுடன் திரண்டனர். அவர்கள் ரஜினிகாந்த் வந்தபோது உற்சாகமாக பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

அப்போது, ‘ரஜினிகாந்த் ஜனநாயகத்தின் பாதுகாவலர்’, ‘நமது சின்னம் பாபா சின்னம்’, ‘வருங்கால தமிழகம் ரஜினிகாந்த்’, ‘நாளைய முதல்-அமைச்சர் ரஜினிகாந்த்’ என்பன உள்ளிட்ட பல்வேறு வாழ்த்து கோஷங்களை ரசிகர்கள் எழுப்பினர்.

வீட்டுக்கு செல்லும் வழியில் போயஸ்கார்டன் சாலை சந்திப்பில் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மக்களை எப்போது நேரடியாக சந்திப்பீர்கள்?

பதில்:- மக்களை எப்போது நேரடியாக சந்திப்பேன் என்பது தெரியாது. ஏற்கனவே நான் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லிவிட்டேன்.

கேள்வி:- ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாக கூறியிருக்கிறீர்கள். ஆன்மிக அரசியல் எப்படி இருக்கும்?

பதில்:- ஆன்மிக அரசியல் என்பது தர்மமான, நியாயமான அரசியலாக இருக்கும்.

கேள்வி:- உங்களுடைய கட்சியின் பெயரை தெரிந்துகொள்ள ரசிகர்கள் சட்டசபை தேர்தல் வரை காத்திருக்கவேண்டுமா?

பதில்:- எனது கட்சி பெயரை எப்போது அறிவிப்பேன் என தெரியாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

கேள்வி:- உங்களுடைய நண்பர் கமல்ஹாசன் நீங்கள் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறாரே..

பதில்:- வாழ்த்து தெரிவித்ததற்காக கமல்ஹாசனுக்கு ரொம்ப நன்றி. மேலும் எனக்கு வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பதில் அளித்தார்.

Happy New Year wishes 2018

Image result for 2018 wishes images
அரசியலுக்கு வருவது உறுதி; சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி - ரஜினி அறிவிப்பு

அரசியலுக்கு வருவது உறுதி; சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி - ரஜினி அறிவிப்பு
 
நான் அரசியலுக்கு வருவது உறுதி, வரும் தமிழக சட்டபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியென நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். #Rajinikanth #Rajinikanthpoliticalentry 
 
 சென்னை,

கடந்த மே மாதம் நடிகர் ரஜினி காந்த் ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட போது நமது அரசியல் சிஸ்டமே கெட்டுப்போய் விட்டது என்றார். மேலும் தேர்தலை மனதில் வைத்து போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரசிகர்களுக்கு ஆலோசனை கூறி பேசினார். இது ரஜினி அரசியலுக்கு வருவார? மாட்டாரா? என்ன நிலைப்பாடு எடுப்பார் என்ற நீண்ட விவாதத்தை மீண்டும் வலுவடைய செய்தது. தற்போது மறுபடியும் கடந்த 26-ந்தேதி முதல் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து வந்தார்.

 நடிகர் ரஜினிகாந்த் இறுதி நாளான இன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு அறிவிப்பதாக கூறியிருந்தார். இன்று ரசிகர் மத்தியில் பேசுகையில், அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். 

ரஜினிகாந்த் பேச்சு விவரம் வருமாறு:-

முதலில் நான் ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. கட்டுப்பாடாக ஒழுக்கமாக இருந்து கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேர் இங்கு வந்து போட்டோ எடுத்து போனது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கட்டுப்பாடு ஒழுக்கம் மட்டும் இருந்தால் போதும் நாம் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். இது நானாக பில்டப் கொடுக்கவில்லை. எனக்கு அரசியல் கட்சி தொடங்க பயம் இல்லை. மீடியாவை பார்த்து தான் எனக்கு பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், திணறுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. நான் காரில் வரும்போது, போகும் போது எல்லாம் கேட்பார்கள். நான் ஏதாவது சொல்ல அது விவாதம் ஆகிவிடும்.

நேற்று முன்தினம் வரும்போது, சார் உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்டார்கள். சோ சார் முதலிலேயே என்னிடம் மீடியாவிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள் என்றார். இப்போது அவரை நான் மிஸ் பண்றேன். அவர் இருந்து இருந்தால் எனக்கு ரொம்ப பக்க பலமாக இருக்கும். அவரது ஆன்மா இப்போது எனக்கு பக்க பலமாக இருக்கிறது. 

கண்ணன் அர்ச்சுனனிடம் கடமையை செய், யுத்தத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். யுத்தம் செய் நான் ஆள்கிறேன், செத்தால் வீர மரணம். யுத்தம் செய்யாமல் போனால் உன்னை கோழை என்று சொல்வார்கள். நான் எல்லாவற்றையும் ஏற்கனவே முடித்துவிட்டேன். இனி அம்பு விடுவதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம்... இது காலத்தின் கட்டாயம்... வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். 

அதற்கு முன்னால் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. அதற்கு நாட்கள் ரொம்ப குறைவாக இருப்பதால் அதில் போட்டியிடப் போவதில்லை. பாராளுமன்ற தேர்தல் பற்றி அந்த நேரத்தில் முடிவு எடுப்பேன். நான் பதவிக்கோ, பெயருக்கோ, புகழுக்கோ அரசியலுக்கு வரவில்லை. அதை கனவில் கூட நினைக்க முடியாத அளவுக்கு நீங்கள் ஆயிரம் மடங்கு கொடுத்து விட்டீர்கள். எனக்கு பதவி ஆசை இருந்தால் 1996-லேயே வந்திருப்பேன். 1996-லேயே நாற்காலி என்னைத் தேடிவந்தது. அது வேண்டாம் என்று தள்ளி வைத்தேன். 45 வயதிலேயே எனக்கு அந்த பதவி ஆசை இல்லை. 68 வயதில் பதவி ஆசை எனக்கு வருமா? அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன் இல்லையா? 

நான் ஆன்மீகவாதி என சொல்வதற்கு தகுதியற்றவனா? அரசியல் ரொம்ப கெட்டுப்போச்சு... நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சு... ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சு. கடந்த ஒரு ஆண்டாக தமிழ்நாட்டில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஒவ்வொரு தமிழ் மக்களையும் தலைகுனிய வைத்துவிட்டது. எல்லா மாநிலத்து மக்களும் நம்மைப்பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நான் இந்த முடிவு எடுக்கவில்லை என்று சொன்னால், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்கு ஜனநாயக ரீதியாக, நான் ஒரு முயற்சி எடுக்கவில்லை என்றால், சாகிற வரைக்கும் அது என்னை துரத்தும். மாத்தணும் எல்லாவற்றையும்  மாத்தணும். 

அரசியல் மாற்றம் அதுக்கு நேரம் வந்தாச்சு. சிஸ்டமை மாற்றணும். உண்மையான, நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஜாதி, மத சார்பற்ற, ஒரு ஆன்மீக அரசியலை கொண்டு வரணும். அதுதான் என்னு டைய நோக்கம். அதுதான் என்னுடைய விருப்பம். அதுதான் என்னுடைய குறி. அது ஒரு தனி மனிதனால் முடியாது. தமிழக மக்கள் நீங்கள் எல்லோரும் என்கூட இருக்கணும். இது சாதாரண விஷயம் இல்லை. எனக்கு தெரியும். ஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தலில் நின்று ஜெயித்து ஆட்சி அமைக்கிறது என்பது சாதாரண விஷயம் இல்லை என்பது எனக்கு தெரியும். கடலில் மூழ்கி முத்து எடுப்பது மாதிரி.

ஆண்டவனின் அருள், மக்களின் நம்பிக்கை, அவர்களுடைய அபிமானம், அவர்களது அன்பு, அவர்களது ஒத்துழைப்பு, அவர்களது ‘சப்போர்ட்’ இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும். ஆண்டவனின் அருள், மக்களின் ஆதரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கு. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். அவர் பேசி முடித்ததும் ரசிகர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
புதிய நம்பிக்கையை கொடுக்கும் புத்தாண்டு 
 
2017–ம் ஆண்டு முடிந்து, இன்று 2018–ம் ஆண்டு பிறந்தது. அரசியல் ரீதியாகவும், நாட்டின் பொருளாதார ரீதியாகவும், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல சவால்கள், சோதனைகள் 2017–ஐ வாட்டி வதைத்தது. 2016–ம் ஆண்டு கடைசியில் நவம்பர் 8–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் பாதிப்பு 2017–ல் தான் முழுமையாக தெரிந்தது.  இதுபோல, ஜூலை 1–ந் தேதி சரக்கு சேவை வரி அமலுக்கு வந்தது. சரக்கு சேவை வரியால் பொருட்களின் விலையெல்லாம் குறையும், மத்திய–மாநில அரசுகளுக்கு வருமானம் பெருகும், பல வரிகளை கட்டுவதற்கு பதிலாக, ஒரே வரியாக சரக்கு சேவை வரியை கட்டுவதால் வியாபாரிகளுக்கும், தொழில் முனைவோருக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக பொது மக்களுக்கும் மிகுந்த பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், யாரும் அந்தளவு பலனை அனுபவிக்கவில்லை.

ரியல் எஸ்டேட் துறைக்கு 2017–ல் நிச்சயமாக ஒரு சிறப்பான ஆண்டாக இல்லை. இந்த தொழிலில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. வேலைவாய்ப்புகளும் பெருமளவில் குறைவாகவே இருந்தது. பொருளாதார வளர்ச்சி சரிவடைந்ததோடு மட்டுமல்லாமல் ஏப்ரல் முதல் நவம்பர் வரையுள்ள கால கட்டத்தில் அரசின் வருவாயைவிட செலவு ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து 105 கோடி அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், அ.தி.மு.க. பிளவுபட்டது. ஆண்டுதோறும் நடக்க வேண்டிய மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு இந்த ஆண்டு நடைபெறவில்லை. பருவமழை தவறியதால் கடும் வறட்சி நிலவியது. நவம்பர் 30–ந்தேதி ‘ஒகி’ புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டது. தொழில் வளர்ச்சி இல்லாததால், வேலைவாய்ப்புகளும் பெருமளவு குறைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த புத்தாண்டில் நிச்சயமாக மத்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசாங்கத்தை பொறுத்தமட்டில், பிப்ரவரி 1–ந் தேதி தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்தான் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்போகும் முழுமையான பட்ஜெட்டாக இருக்கும். இதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு 8  மாநில சட்டசபை தேர்தல்களை பா.ஜ.க. சந்திக்க இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்கள் நிச்சயமாக இடம்பெறும். தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, இரண்டுக்குமே இந்த ஆண்டு மத்திய அரசாங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் வறட்சியும்,   குடிநீர்   பற்றாக்குறையும்   இருக்கும்.  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அறிவிப்புகள் நிறையவரும். மேலும், இந்த ஆண்டு தமிழக அரசு பல புதிய திட்டங்களை அறிவித்து முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாடத்திட்டங்களில் கொண்டுவரப்படும் மாற்றம் கல்வி வளர்ச்சியில் எந்த அளவுக்கு முன்னேற்றம் கொண்டுவரப்போகிறது என்பதையும் பார்க்கலாம். தமிழக அரசியலிலும், அரசிலும் இந்த ஆண்டு ஒரு பரபரப்பான ஆண்டாகத்தான் இருக்கும்.

Sunday, December 31, 2017

Death sentence to rapists within 24 hrs if BJP comes to power: BSY

Mudigere, DH News Service Dec 30 2017, 20:02 IST 
 
State BJP President B S Yeddyurappa speaks at BJP's parivarthana yathra in Mudigere on Saturday.
State BJP President B S Yeddyurappa speaks at BJP's parivarthana yathra in Mudigere on Saturday.
State BJP President B S Yeddyurappa said that the BJP will implement death sentence to rapists within 24 hours of coming to power in Karnataka.

Speaking at BJP's parivarthana yathra in Mudigere on Saturday, he said that the Congress has no moral right to speak on Dr B R Ambedkar. The Congress had conspired against Ambedkar during the election, he said. The Congress did not even allow his memorial in Rajghat. It was with the help of the BJP during V P Singh's tenure that Ambedkar was conferred Bharath Ratna award, he said.
Yeddyurappa said there has been an increase in atrocities on women after the Congress government came to power in Karnataka. A total of 3,102 sexual assault cases, 2534 murders, 430 kidnap and atrocities on 19,000 female students have taken place in the state which points a finger at the failure of the state government, he added. "The BJP is committed to the safety of women and will frame rules to provide death sentence to rapists after coming to power," he said.

Union Minister D V Sadananda Gowda said that Bhairapura-Shishila road has been included in Sagarmala project.

MP Shobha Karandlaje said the Congress which ruled the country for seven decades did not take any measures to distribute LPG to the poor. The NDA government led by Narendra Modi implemented Ujwala scheme to distribute LPG to the poor, she added.

Former MLA M P Kumaraswamy said that the local MLA has failed to raise the issue of encroachment, tiger and elephant menace. No action has been initiated to contain the tiger and elephant menace.

MLAs C T Ravi, D N Jeevraj, MLC M K Pranesh and others were present.
Andhra Pradesh: Tirumala Tirupati trust to seek govt advice on non-Hindu staff 

INDIAN EXPRESS 

 A government order issued in 2007 mandated that only Hindus can be recruited by the TTD as it is a purely Hindu organisation. The order exempted TTD’s educational institutions.

  By: Express News Service | Hyderabad | Updated: December 31, 2017 6:02 am






The Tirumala Tirupati Devasthanams (TTD), which manages the Lord Venkateshwara temple at Tirumala in Andhra Pradesh, has decided to seek the government’s advice on what to do with 42 non-Hindus working in the TTD. A government order issued in 2007 mandated that only Hindus can be recruited by the TTD as it is a purely Hindu organisation. The order exempted TTD’s educational institutions.

Prior to the order, 35 Christians were recruited by the TTD. After the 2007 order, seven Christians were recruited in the TTD’s educational institutions.

The TTD decided to seek the government’s advice after priests complained against the Deputy Executive Officer in the TTD’s Welfare Department, M S Snehalatha, after she was found to be using her official car to visit church every Sunday.

The matter came to light when Snehalatha reportedly changed her driver, who complained he was being made to work on Sundays.

TTD priests took up the issue, stating that non-Hindus should not be allowed to work in the TTD. A TTD official said, “…there are 42 non-Hindus working in TTD…. To avoid unnecessary controversies based on religion, we are writing to the government seeking its opinion on what to do with the non-Hindu employees.”
Rajnikanth is too innocent to survive in politics, TN minister says

TNN | Dec 28, 2017, 21:03 IST



Rajinikanth

By Padmini Sivarajah

MADURAI: Tamil Nadu milk and dairy products developments minister K T Rajendra Balaji has said superstar Rajinikanth is too innocent to survive in politics. A person who doesn't not know how to play the political game would not fit in it, according to the minister.

Speaking to reporters after inaugurating a veterinary hospital in Sivakasi on Thursday, the minister said Rajinikanth would have succeeded if he had entered politics around 20 years ago. "It is too late for him now as his fans are members of various political parties. Let's hope someone is able to guide and advise him on this,'' he said.

The minister's remark comes two days after Rajinikanth told his fans that he would announce his political stand on December 31.

Top CommentThe minister accepted two things one Rajini IS clean and two they are surviving because they are Crooks   Srinivas Govindswamy

The minister said the government was able to achieve much because it had a good relationship with the central government. A coalition with the BJP in the next elections could not be rule out, he said.

"The defeat in RK Nagar bypoll was an accident. We will use it as the stepping stones to another victory,'' he said.
Snake Park to get research centre linked to Madras university

P Oppili | TNN | Updated: Dec 29, 2017, 09:38 IST




Madras University CHENNAI: An advanced research centre for herpetological studies will be inaugurated at the Guindy Snake Park on Friday by internationally renowned conservationist Kerry M Kriger of the United States. The centre will be affiliated with the zoology department of University of Madras.

Although the snake park has carried out many research projects, it did not have a dedicated centre to take up research programmes and guide researchers. One of the trustees, S Paulraj, said an advanced research centre was essential to undertake national and international research projects.

Two experienced scientists will be employed by the park to undertake research projects and write proposals for obtaining grants and funding, besides guiding research students for their degrees. The centre will also take up collaborative projects with the Tamil Nadu Veterinary University, Vandalur Zoo, Chennai Crocodile Bank and other national and international institutions, said Paulraj.

The park is equipped with a lab for field studies. Scientists at the lab had developed a snake repellent to protect Army personnel from snakes found in the desert on the India-Pakistan border in Rajasthan. The research was funded by a grant from the Defence Research and Development Organisation.

Apart from basic research facilities, the park also has a collection of rare books and museum specimens of herpetological fauna. The park, which was founded in 1972 by wildlife conservationist Romulus Whitaker, exhibits a wide variety of reptiles and has successfully bred several species.

Vandalur zoo begins preparations to receive Pongal crowd

| TNN | Dec 29, 2017, 16:02 IST
 
 
A lioness in Vandalur zoo (PTI photo) 
 
A lioness in Vandalur zoo (PTI photo)
 
CHENNAI: Officials in Arignar Anna Zoological Park (Vandalur zoo) here have begun preparations to receive visitors during the Pongal holidays. The zoo attracts lakhs of visitors during the Pongal holidays, in mid-January.

On Wednesday, the zoo authorities held a meeting with officials of other department. An official communication from the zoo said Kancheepuram district superintendent of police, DRO, district fire and rescue service officer and officials of electricity board, transport department, water and drainage board and health and family welfare department attended the meeting.

They discussed facilities in the zoo, safety aspects, transport facilities, emergency help and other aspects.
Body of medical student found on railway track in Tamil Nadu

K Sambath Kumar | TNN | Dec 29, 2017, 21:10 IST

TRICHY: The body of a 21-year-old medical student was found on a railway track near Kulithalai in Karur district of Tamil Nadu on Friday.

The victim has been identified as A Amrithraj, a second year MBBS student in KAP Viswanathan Medical College in Trichy. He was a native of Karupathur in Karur district.

Amrthraj left home on Thursday morning to write an exam in his college. As he had not returned home even till midnight, his family member started searching for him.

His body was found in pieces on a railway track near Kallapalli temple in the early hours Friday. The Kulithalai police recovered the body and sent it for postmortem.

The police suspect that he might have committed suicide by jumping in front of a train. "He was found dead on a railway track after his examination. This points to a possible suicide. He might have committed suicide after performing poorly in the exam," said an investigation officer.

The police were inquiring with his family members and friends to ascertain the reason for his death.

Lawyer pic on vakalats: HC suspends rules

TNN | Dec 30, 2017, 10:41 IST

 CHENNAI: More than a month after making it mandatory for lawyers to affix their photograph and other details on vakalats filed in the court, so as to keep bogus lawyers out of court proceedings, the Madras high court has agreed to 'temporarily suspend' the order till January 22, 2018. The rule was to come into force from January 2 next year.

It was in November second week that justice S Vaidyanathan passed the order and said advocate filing cases must affix a valid photo identity card, along with details of enrolment number, residential and office address and contact number, on vakalats. Now, after much persuasion by almost all advocates associations, the court agreed to temporarily suspend the order till January 22, 2018.

Noting that the order has been suspended since various bar associations have sought more time to submit their suggestions to weed out fake lawyers from the profession, justice Vaidyanathan made it clear that such suggestions must be made by January 22, without delay.

In his earlier order, the judge had also held that all anticipatory bail applications must be filed in the form of affidavits, with signature of the advocate on all the pages. Justice Vaidyanathan brought in the suspended rules after he unearthed a fraud played upon by a group of litigants, who filed multiple bail applications at the same time.

Aggrieved by the order, Bar associations requested the court to either recall the order or modify it removing the new rules. On November 21, noting that the associations are making such submission only to please its members and genuine legal practitioners would not object such directions, the judge refused to modify the directions.

But now, since many other associations, including Madras Bar Association, made a similar request to the court, the judge decided to suspend the rules till January 22.
Students on train footboard to face music in college

Siddharth Prabhakar | TNN | Updated: Dec 30, 2017, 10:57 IST



CHENNAI: College students across the city and its suburbs who display their footboard travelling stunts on suburban trains will soon have to face their principal for their antics.
The Railway Protection Force (RPF) has started a drive where it will write to college principals armed with solid evidence about these footboard travelling students, thus leading to strict action from the college management.

RPF personnel across the Chennai division, which is spread up to Tiruvallur and Vellore districts in the north-west and Kancheepuram in the south, have already started video recording the footboard travelling incidents. They have been directed to zoom in onto the faces of the offenders.

The footage will then be matched with the students' railway passes for photo identification. "We have collected this information from colleges and the commercial department," said Louis Amuthan, senior divisional security commissioner (Sr DSC), who heads the RPF of Chennai division.

This strategic move comes close on the heels of an alarming increase in the number of footboard travelling cases registered by RPF. Compared to 6,500 cases in January to November period of 2016, this year 7,500 cases have been registered in the same period. This is an increase of 15%. This has gone up to around 8,300 in December this year.

Data shows that maximum cases have been registered on the Chennai-Arakkonam section (40%), followed by the Chennai-Gummidipundi (32%) and the Chennai-Chengalpet (28%). In October, videos of students travelling on footboard of a train from Chennai to Arakkonam and brandishing knives and other weapons went viral, much to the shock of everyone. Sources say the stunts of Pachaiyappa's and Presidency college students have spilled over from MTC buses to suburban trains.

"It is become a menace. Many run-over deaths are also because the passengers are travelling on footboard. It is extremely dangerous, but students don't understand the risk it carries," said Amuthan. RPF personnel on the ground say that there are many commuters who travel on footboard as there is no space inside the trains, but college students choose the dangerous way of travel only to 'show-off'. Footboard travelling can be dangerous for other co-passengers too.
Rajinikanth may take a dip, not a plunge, in politics 

Abdullah Nurullah | TNN | Updated: Dec 31, 2017, 06:26 IST




CHENNAI: Will he? Won't he? Rajinikanth is likely to keep the suspense alive as he makes the promised statement on his political entry on Sunday.

People who interacted with the actor in the past few days say he would not announce a political party till his two movies in can are released. But nobody rules out a surprise.

With more than Rs 300 crore at stake on two films, - '2.0' and 'Kaala' - Rajinikanth would not risk revealing his political ambitions now, said veteran writer and producer Kalaignanam, who launched the actor as a hero in 'Bairavi' (1978). Only after the two films are released would he reveal his cards, said Kalaignanam. "Irrespective of whether the two films succeed or not, Rajinikanth will get into full-time politics following their release," he said. Director J Mahendran and Kalaignanam were present at the inauguration of the ongoing six-day interaction between Rajinikanth and his fans at Raghavendra marriage hall, Kodambakkam.

Addressing his fans from north Chennai on Saturday, Rajinikanth said, "My film '2.0' is set for an April release. Two months after that, 'Kaala' will be released. God knows what will happen after that."

Addressing Rajini fans, 78-year-old Mahendran said, "Rajinikanth addresses you as the Gods who gave him his livelihood. Fans will have to be patient to know what plans the superstar has for them." The 'Mullum Malarum' director held that Rajini's greatest quality was his patience. "Rajinikanth's patience and perseverance made him the star that he is today. These qualities are rare and seen only in a few," said Mahendran.

S P Muthuraman, who cast Rajini in 25 films and who remains one of his confidants, chose to remain tight-lipped.

Kalaignanam said, "Rajinikanth is not easy to read. He is secretive. He will listen to suggestions unassumingly, but will never let out what is on his mind. It has been that way since the days of 'Bairavi'. He will be cautious of the negative impacts of his decision on producers". He recalled that release of recent films starring actors Kamal Haasan and Vijay had run into trouble for various reasons.

On Saturday, Rajini looked back at his four-decade old acting career. He recalled that director K Balachander had told him that he would take him to great heights as a star if he learnt Tamil. That was before the making of 'Apoorva Raagangal' (1975). The superstar, who grew up in Karnataka, arrived in Chennai in 1973 at the age of 23 to study at the Adyar film institute. When Balachander met him at the film institute first, he could not speak Tamil or English, said Rajini. His first audition was in Kannada, said Rajini.

கேட்டது மாமூல்... கிடைத்தது பேதி மருந்து....!

கோவை: கோவை மாநகரில் "நைட் ரவுண்ட்ஸ்'' செல்லும் போலீசார், அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட்ட சில ஓட்டல் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் இரவு டிபன் இலவசமாக முடித்துக்கொள்கின்றனர். இட்லியில் துவங்கி பிரியாணி வரை ரவுண்ட் கட்டுகின்றனர். இதுதவிர, 'கை நீட்டுவது' தனி. கோவை பெரியகடை வீதியில் எஸ்.ஐ ஒருவர், தள்ளுவண்டி கடை ஒன்றில் ரெகுலராக இட்லி, தோசை, ஆம்லெட் என டஜன் கணக்கில் அடுக்குவது வழக்கம். அத்துடன், மாமூல் தொகையும் கேட்டு மிரட்டுவார். பின்னர், ஜீப்பில் ஏறி பறந்து விடுவார். இப்படியே தொடர்ந்ததால் மனம்உடைந்த அந்த கடைக்காரர், ஒரு முறை தோசை மாவில் பேதி மருந்து கலந்து, அந்த எஸ்.ஐக்கு முருகலாக தோசை போட்டு கொடுத்துவிட்டார். அவரும், வழக்கம்போல் வாங்கி ருசித்தார். ஆனால், சில நிமிடங்களில் வயிற்றை கலக்கியது. அடுத்த நாள் கடைக்கு வந்த அந்த எஸ்.ஐ., 'ஏம்பா.... நல்ல மாவு பயன்படுத்த மாட்டாயா....

நேற்று கொடுத்த ஐயிட்டம் சரியில்லப்பா... ஒரே பேதி...'' என புகார் கூறினார். இதற்கு அந்த கடைக்காரர், 'காசு கொடுத்து வாங்கும் ஐயிட்டம்தான் தரமாக இருக்கும் சார்'... என நக்கலாக பதில் அளித்தார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த எஸ்.ஐ., இந்த பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. மாறாக, நல்ல பிரியாணி கடை ஏதாவது இருக்கிறதா... என ேதடி அலைகிறார்.


Dailyhunt

அந்தரத்தில் தொங்கும் எதிர்காலம்: அழிவின் பிடியில் சர்க்கஸ் தொழில்

சேலம்: ''கரணம் தப்பினால் மரணம்'' என்ற சொல்லுக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர்கள் சர்க்கஸ் கலைஞர்கள். உடலை வில்லாக வளைத்து, அந்தரத்தில் தொங்கி, அதிரடியாக விழுந்து, மிருகங்களோடு மல்லுக்கட்டி மனங்களை மகிழ்ச்சி அலைகளில் மிதக்க விடுபவர்கள் இவர்கள். இப்படி லட்சக்கணக்கான இதயங்களை தன்வசம் ஈர்த்த சர்க்கஸ் கலை, காலத்தின் சுழற்சியால் ெமல்ல மெல்ல அழிவின் கரம் பற்ற ஆரம்பித்துள்ளது. அதை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான கலைஞர்கள் எதிர்காலம் குறித்த கவலைகளுடன் கலங்கி நிற்கின்றனர். இந்தியாவில் 1950ம் ஆண்டு தான், சர்க்கஸ் சாகசங்களின் தொடக்க காலம். அன்றைய காலகட்டத்தில் சினிமாவுக்கு அடுத்த ெபரும் பொழுதுபோக்கு அம்சமாக சர்க்கஸ் விளங்கியது. யானைகள் கால்பந்து விளையாடுவதும், சிங்கங்கள் சாதுவாக சொன்னதை கேட்பதும், குரங்குகள் சைக்கிள் ஓட்டுவதும் வியப்பின் உச்சம் தொட்டது. கைதேர்ந்த கலைஞர்கள் இதனை செய்து காட்டி, அரங்கம் அதிரும் கைதட்டல்களை ெபற்றனர்.

இதேபோல் உயரம் குறைந்த மாற்றுத்திறன் மனிதர்கள், இந்த சர்க்கஸ் அரங்குகளில் பபூன்கள் என்ற பெயரில் வலம் வந்து, விலா நோக சிரிக்க வைத்து மனிதர்களின் மனஅழுத்தத்திற்கு மருந்து போட்டனர். இப்படி சுடர்விட்டு ஜொலித்த சர்க்கஸ் கலை, கடந்த சில வருடங்களாக தேய்பிறையாய் மாறி வருகிறது. வீட்டு வரவேற்பறையில் டிவி, உலகத்தை கைக்குள் அடக்கும் செல்போன், மிருகங்களை வைத்து வித்தை காட்ட விதிக்கப்பட்ட தடை என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் சர்க்கஸ் கம்பெனிகளின் உரிமையாளர்கள். இது குறித்து ஜம்போ சர்க்கஸ் கம்பெனி மேனேஜர் டைட்டஸ் வர்கீஸ், ஒருங்கிணைப்பாளர் அபுதாகீர் ஆகியோர் கூறியதாவது: சர்க்கஸ் கலைஞர்கள் தங்கள் உடலை வருத்தி, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றனர். ஆனால், சமீபகாலமாக இந்த கலையின் மீதான ஈர்ப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஆயிரம் பேர் பார்க்க வேண்டிய அரங்கில், அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே இருக்கிறார்கள். காட்டு மிருகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பின்னர், சர்க்கஸ் கம்பெனி நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த பொழுதுபோக்கு அம்சத்தில் சிங்கம், புலி, கரடி உள்ளிட்டவைகளை காண சிறுவர்கள் அதிகளவில் வருவார்கள்.

தற்போது குதிரை, ஒட்டகம் மட்டுமே உள்ளது. மற்ற மிருகங்கள் இல்லாததால், குழந்தைகள் மற்றும் பார்வையாளர்களின் வருகை வெகுவாக சரிந்து விட்டது. ஒரு சர்க்கஸ் குழுவில் குறைந்தபட்சம் 150 கலைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு ேதவையான மூன்று வேளை உணவு, மருத்துவ செலவு, இருப்பிடம், போக்குவரத்து செலவு போன்றவற்றை கணக்கிடும் போது குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு 1லட்சம் வருமானம் வேண்டும். ஆனால், தற்போது இதில் பாதி தொகை கூட வசூல் ஆவதில்லை. இதனால் சர்க்கஸ் கம்பெனி உரிமையாளர்களும், அதை நம்பியுள்ள கலைஞர்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறோம். உயிரை பணயம் வைத்து நடத்தும் இந்த கலை, அழிவின் பிடியில் செல்வது வேதனைக்குரியது. அற்புத சாகசங்களுக்கும், அரிய கலைக்கும் மக்கள் கரம் கொடுத்து தூக்கி விட்டால் மட்டுமே, காலம் கடந்து சர்க்கஸ் கூடாரங்கள் நிலைத்து நிற்கும். இவ்வாறு உரிமையாளர்கள் கூறினர்.

90 சதவீத கம்பெனிகள் மூடல்
இந்தியாவில் பரசுராம், பாம்பே, இந்தியன், கமலா, ஜெமினி, ஜம்போ, ஜமுனா என 200க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கம்ெபனிகள் இருந்தன. தற்போது 22 சர்க்கஸ் கம்பெனிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. 90 சதவீதம் கம்பெனிகள் மூடப்பட்டு விட்டன. அவற்றில் பணிபுரிந்த சர்க்கஸ் கலைஞர்கள் பலர், வேறு வழியின்றி மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். இன்னும் ஐந்து ஆண்டுகளில் சர்க்கஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக சரியும். அப்போது மீதமுள்ள கம்பெனிகளும் இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும். இத்தொழிலை நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மிகவும் பாதிக்கும். எனவே, சர்க்கஸ் கலையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும். சர்க்கஸ் கலைஞர்களுக்கு விருது வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும்
இந்த கலைஞர்களின் கோரிக்கை.

Dailyhunt
அசைவ உணவுகளை காட்சிக்கு வைக்க தடை

Added : டிச 31, 2017 04:19 |



  புதுடில்லி : மக்களின் உணர்வுகளை மதித்தும், சுகாதாரம் கருதியும், உணவகங்களில், அசைவ உணவுகளை கடைக்கு வெளியே காட்சிக்கு வைப்பதற்கு, தெற்கு டில்லி மாநகராட்சி தடை விதிக்க உள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு உள்ளது. இங்குள்ள தெற்கு டில்லி மாநகராட்சி, பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், 'உணவகங்களில் அசைவ உணவுகளை காட்சிக்கு வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்' என, பா.ஜ., கவுன்சிலர் ஒருவர் கூறினார்.

அதையேற்று, விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. இது குறித்து, மாநகராட்சி தலைவர், சிக்கா ராய் கூறியதாவது:மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும், சுகாதாரம் கருதியும், உணவகங்களின் வெளியில், அசைவ உணவுகளை காட்சிக்கு வைப்பதற்கு தடை விதிக்க உள்ளோம்; இது தொடர்பாக ஏற்கனவே சட்டங்கள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

டாஸ்மாக் கடைக்கு லீவு..! அட்லீஸ்ட் ஒரு நாளாவது குடிக்காம இருங்கய்யா....?

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றும் பொருட்டு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. 
சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் முருகானந்தம், அரசு பணியாளர் சங்க பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், 


மற்ற 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25- ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு போராட்டம் நடத்த  திட்டமிடப்பட்டு  உள்ளது. 
மேலும்,இந்த போரட்டத்திற்கு மற்ற சங்கங்களிடமிருந்து  ஆதரவு கேட்பத உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  முன்வைக்கப்பட்டு உள்ளன. 
Dailyhunt

புத்தாண்டிலும் விடாது விரட்டும் ஆளுநர் பன்வாரிலால்!

சென்னை: தஞ்சாவூரில் வரும் ஜனவரி2ம் தேதி மக்கள், கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆளுநர் பன்வாரிலாலிடம் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் பதவியேற்றபின், பல்வேறு மாவட்டங்களில் அவர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக புகார்கள் எழுந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன சோதனையை தொடரந்து வரும் பன்வாரிலால், சமீபத்தில் குளியல்யறையை எட்டிப்பார்த்ததாக சர்ச்சையிலும் சிக்கினார்.

இந்நிலையில், எதைப்பற்றியும் கவலைப்படாத ஆளுநர் தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஜனவரி ஒன்றாம் தேதி திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை துவக்க விழாவில் பங்கேற்கும் ஆளுநர் பன்வாரிலால், அதற்கு அடுத்த நாள் ஜனவரி 2ம் தேதி தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் மக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து மனுக்களை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய பெயரை களங்கப்படுத்த பலர் முனைப்பு காட்டி வருவதால் சுதாரித்துக்கொண்ட ஆளுநர், களத்தில் போய் பார்த்தால் தானே பாத்ரூம் எட்டிப்பார்த்தது போன்ற பிரச்சனைகள் வரும் என எண்ணி, அவருடைய தங்குமிடத்திற்கே மக்களை வரவைத்து விட்டார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆளுநர் மறைவதில்லை....புதுச்சேரி காற்று இந்த பக்கம் விரைவில் வீசும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

source: oneindia.com
 
Dailyhunt
திருக்கோஷ்டியூரில் சொர்க்கவாசல் திறப்பு

Added : டிச 31, 2017 00:07

திருப்புத்துார்;திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நள்ளிரவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மார்கழி உற்ஸவத்தை முன்னிட்டு பகல் பத்து, ராப்பத்து,வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் நடைபெறும். 


பகல் பத்து உற்ஸவத்தை முன்னிட்டு தினசரி காலைபதினொரு ஆழ்வார்கள், பெருமாள் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினர்.டிச.,28 ல் பகல் பத்து உற்ஸவம் நிறைவடைந்தது. டிச.,29ல் வைகுண்ட ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டுகாலை 9:00 மணிக்கு மூலவர் சன்னதி முன்பாக திருமாமணி மண்டபத்தில் உற்ஸவர்சயன அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


பின்னர் இரவு 8:00 மணிக்கு அமர்ந்த நிலையில் ராஜ அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் பல்லக்கில் நின்ற சேவையில் அருள்பாலித்தார். தொடர்ந்து தாயார் சன்னதியிலும், ஆண்டாள் சன்னதிகளில் எதிர் சேவை நடந்தது. இரவு 11:10 மணிக்குபரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள் தேவியருடன் பரமபத வாசலை கடந்தருளினார்.தொடர்ந்து ஏகாதசி மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி ஆழ்வாருக்கு மரியாதை நடந்தது.பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. அடுத்து ஏகாதசி மண்டபத்தில் பெருமாள் பத்தி உலாத்துதலும், தென்னமரத்து வீதியில் உட்பிரகாரம் வலம் வருதலும் நடந்தது. பின்னர்தாயார் சன்னதிக்கு பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு பத்து உற்ஸவம் நடைபெறுகிறது.

‘Change Of Bench Doesn’t Entitle One To Relief Denied By Earlier Bench’: Supreme Court | Live Law

‘Change Of Bench Doesn’t Entitle One To Relief Denied By Earlier Bench’: Supreme Court | Live Law: The Supreme Court vacation bench of Justice Arun Mishra and Justice Deepak Gupta on Friday refused to accede to the request of holders of leases for mining of iron and manganese ores in Odisha to extend the deadline of December 31 for the payment of penalty imposed by judgment dated August 2 of the apex court for carrying …

Haryana Judicial Exam Leak: Court-Constituted SIT Arrests Former Registrar(Recruitment) Of P&H HC | Live Law

Haryana Judicial Exam Leak: Court-Constituted SIT Arrests Former Registrar(Recruitment) Of P&H HC | Live Law: The Special Investigation Team formed by the Punjab and Haryana High Court has arrested its former Registrar (Recruitment) Balwinder Sharma after evidence showed he was in constant touch with the prime accused in the Haryana Judicial Service Examination paper leak. The SIT headed by Ravi Kumar Singh, IPS, Superintendent of Police (Crime and Investigation), has …
No stock of stents, accessories at cath lab

TNN | Updated: Dec 27, 2017, 23:53 IST

Thiruvananthapuram: The functioning of the cath lab at the Medical College Hospital here has been almost stalled with stents and other accessories running out of stock.
Recommended By Colombia

The TOI had reported about the stoppage of supply of stents, pacemakers and other accessories to the MCH since the hospital authorities had not cleared their dues of Rs 15.42 crore to the distributors. The distribution has been stopped since December 15 and the cath lab has been functioning with existing stock.

However, reports are that the existing stock of stents and accessories got exhausted by Wednesday and there will be no more angioplasties and angiograms from Thursday. But the hospital authorities are not ready to accept this and said only two angioplasties were scheduled on Wednesday and were performed.


At the same time the medical superintendent at the hospital made it clear that Rs 3 crore has been sanctioned to the distributors and the remaining fund will be issued at the earliest. "The reports that the angioplasties have been stopped are baseless. We have performed nine angiograms and two angioplasties today. We have also asked the distributors to supply the stents and other accessories and has assured them that the remaining dues will be cleared as soon as the fund is sanctioned," said Dr M S Sharmad, medical superintendent.

But the distributors have made it clear that they are yet to receive the amount and hence no decision has been taken on resuming the distribution. "We have stopped the distribution since our repeated requests for clearing the dues were not heard by the hospital authorities," said Rajeesh Raghavan distributor of pacemakers to the cath labs of MCHs in the state. TNN

TRAIN SERVICES DISRUPTED NEAR TAMBARAM

CBSE board exams likely from March 5

New Delhi: The Class X and XII board exams for schools affiliated with the Central Board of Secondary Education (CBSE) will start after Holi. According to CBSE sources the exams likely to start from March 5.

“The exams are going to start after Holi, which is on March 2, 2018. Generally the exams start on March 1 or 2 provided they are not holidays. The 2018 exams are likely to start from March 5, which is a Monday, for both the classes,” said a senior CBSE official.

The board is likely to declare the exams dates in the first week of January, 2018. The registration process was completed in the third week of December, this year. Sources said while the Class XII exams will continue till April, Class X exams are likely to be over in March itself. There will be over 4,200 exam centres for close to 16,500 schools this time.

According to CBSE sources, around 18 lakh students have registered for the Class X exams, while for Class XII the number of registration has crossed 11 lakh for the first time.
Vigilance sleuths seize ₹10.7L, nab 30

TIMES NEWS NETWORK

Salem: A team of officials from the directorate of vigilance and anti-corruption (DVAC) and the Salem district inspection cell (SDIC) seized ₹10.75 lakh during a raid at the office of a government official at the Salem collectorate on Saturday. The team also arrested more than 30 officials including the assistant director, town panchayat, S Kannan.

Police said Kannan, who was the assistant director, town panchayat, for both Salem and Namakkal districts, demanded that all the 52 executive officers (EO) of the town panchayats in the two districts pay ₹20,000 each as a ‘New Year gift’.

DVAC and SDIC officials got a tip and monitored the Salem collectorate from Saturday morning. They entered the office at 6pm and arrested all the 14 employees working there. “We arrested 15 EOs who were waiting in the office with the money,” the official said, adding all of them will be lodged at the Salem central prison on Sunday morning.

Anna University Appointment of VC search committee


Sastra university to conduct free online prep exams

Chennai: Sastra (deemed university) is organising free online preparatory exams for various medical and engineering competitive tests for Class XII students across Tamil Nadu.

Three exams will be conducted online at various centres across the state on January 20, February 18 and April

22. Registration process has to be done online, while allotment will be carried out on first-come-first-served basis. The initiative aims at helping around 10,000 students taking JEE or NEET exams in the state.

Students can choose medical or engineering or both options for taking the exams. Registration starts on January 5 and ends by January 16. Preference will be given to students from government and government-aided schools, while adequate provision will be made for other students as well, a release said. For more details, log on to www.sastra.edu or www.tnschools.gov.in TNN

TTV rebellion takes shape, to form front 

Will Carry Out A Statewide Tour, Says Dhinakaran

Sivakumar.B@timesgroup.com

Chennai: Newly elected RK Nagar legislator T T V Dhinakaran is set to regroup expelled AIADMK functionaries to float a new front. It is likely to be formed in a fortnight, sources said.

After the AIADMK’s drubbing in the December 21 byelection, chief minister Edappadi K Palaniswami and his deputy O Panneerselvam have been either expelling Dhinakaran’s supporters from the party or removing them from party posts. Dhinakaran on Friday convened a meeting of the expelled leaders and explained plans to float a front to take on the ruling party. He will also carry out a statewide tour.

“He won’t start a political party, because by doing so Dhinakaran will lose his claim over the AIADMK. Also, the rebel MLAs who have been disqualified by the speaker will not get any reprieve from the court if they join any political party,” said a leader in the TTV camp.

The front is expected to open a new office in Chennai and embark on a membership drive. “We have plans for an online membership drive. We are also looking at the possibility of developing a mobile app for this purpose,” a TTV supporter said. “All senior party leaders who support him were present at the meeting. Every sidelined and expelled functionary of the AIADMK will be given some post in the front,” said a supporter from Mannargudi.



Besides the 18, TTV getting support from other MLAs

Apart from the 18 disqualified MLAs, support has been swelling for Dhinakaran from other legislators as well. E Rathinasabapathi of Aranthangi and Vriddhachalam legislator V T Kalaiselvan attended the meeting at Dhinakaran’s residence. Alliance party MLA and actor Karunas, who represents Thiruvadanai, is yet another Dhinakaran supporter.

All three were present when Dhinakaran was sworn in as MLA. Another alliance party MLA Thamimun Ansari, who contested on the AIADMK symbol from Nagapattinam, had sent his representative to attend the swearing-in. Another ally Thaniyarasu, who representd Kangeyam, is still undecided whether to go with the EPS-OPS group or pitch his lot with Dhinakaran. Besides the threat of instability, their vocal support to Dhinakaran within the assembly and outside can cause embarrassment to the government.

The ‘front’, political analysts feel, is a desperate attempt by Dhinakaran to keep his flock together. “At this stage, when he is still fighting for taking control over the AIADMK, Dhinakaran cannot afford to form a new political party. But he cannot keep quiet either when so many of his supporters have been expelled from the AIADMK. At least to keep them happy and show them some direction, he has to give shape to a formation and give them some position in it. Floating a front is perhaps the best option,” said political analyst Ramu Manivannan.

Palaniswami and OPS have so far expelled 175 office-bearers, including 130 on Friday, supporting Dhinakaran fropm the party. Disqualified MLAs too are challenging the party to show them the door.

“EPS and OPS are expelling all our supporters, but are they ready to expel us? I challenge them to expel me or any other MLA who has been disqualified,” said Thangatamilselvan, one of the rebel legislators.
Man forges papers for promotion, held

TIMES NEWS NETWORK

Chennai: Police have arrested a 52-year-old man from Avadi for submitting fake documents to get a promotion in the Tamil Nadu Khadi Craft Board in 2008.

The man, identified as V Koteeshwara Rao, a resident of Paruthipattu near Avadi, had submitted fake documents to get a promotion when he worked in the Khadi Craft Board in Vellore division.

The forgery came to light after his name was considered for the post of assistant director in the Khadi Craft Board and his credentials were sent for verification recently.

Officials at the board replied that Rao had not passed the examination held by it, which is one of the criteria for promotion.

A assistant manager Sudarsan subsequently lodged a police complaint with Chennai city police commissioner A K Viswanathan and it was forwarded to the central crime branch of the city police.

Officials investigated the matter and confirmed that Rao had forged the documents.

When police questioned Rao, he confessed to having committed the offence. Rao was arrested and remanded in judicial custody after being produced before a magistrate court in the city on Saturday.

VELAMMAL BOGHI CAMPUS

 புதிய டேட்டா சலுகை கொடுத்து ஏர்டெல்'லுக்கு ஆப்பு வைத்த ஜியோ! 
 
 
ஜியோ-வை பொறுத்தவரை இலவச டேட்டா முதல் இலவச கால்ஸ் என அனைத்தும் ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ என சலுகை மேல் சலுகை வழங்கியது.
சொல்லப்போனால், ஜியோ வந்த பிறகு தான், மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள், டேட்டா சலுகை முதல் ப்ரீ கால்ஸ் வரை அனைத்தும் சலுகையாக மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டது.

மேலும், தற்போது மிக குறைந்த விலையில்,பல ஆபர்களை வழங்க  தொடங்கி உள்ளது பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள். இந்நிலையில்,ஜியோவிற்கு நிகராக ஏர்டெல் குறுகிய கால சலுகையாக அதிரடி சலுகையை அறிவித்து உள்ளது.

அதன்படி,

ஏர்டெல் ரூ.93
டேட்டா - 1 ஜிபி
கால  அவகாசம் - 10 நாட்கள்

ஜியோ ரூ.98
டேட்டா - 2.1 ஜி பி
கால அவகாசம் -14  நாட்கள்

என்னதான் ஏர்டெல் ஜியோவிற்கு நிகராக பல சலுகைகளை  வழங்கினாலும், ஒப்பிட்டு பார்க்கும் போது ஜியோ வழங்கும் சலுகை தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் போதை 15: கண்காணிக்க முடியாத சூது!

Published : 30 Dec 2017 11:59 IST


வினோத் ஆறுமுகம்




சூதாட்டம் என்பது நமக்கு மகாபாரதக் கதைகளில் இருந்தே தெரியும். சூதாட்டம் ஆடுவது தவறு என்று சொல்லித்தான் பெற்றோர்கள் பலரும் தங்களின் குழந்தைகளை வளர்க்கிறார்கள். இதனால் சூதாட்டம் ஒழிந்துவிட்டதா என்ன? இன்று, டெக்னாலஜி உதவியுடன் பணம் பிடுங்க வந்துவிட்டது, ஆன்லைன் சூதாட்டம்.

மங்காத்தா, மூணு சீட்டு, ரம்மி, குதிரை ரேஸ், கிரிக்கெட் பெட்டிங் என்று சூதாட்டம் பல பரிமாணங்களை எட்டிவிட்டது. கிராமத்தில் சிலர் சீட்டு விளையாடிக்கொண்டிருப்பார்கள். போலீஸ் வருகிறது என்று தெரிந்தால் துண்டைக் காணோம் துணியைக் கணோம் என்று ஓடிவிடுவார்கள்.

சூதாட்டங்களின் சொர்க்கபுரி

திருமண வீடுகளில் பொழுதுபோக்குக்காக ரம்மி விளையாடுவார்கள். ஆனால், பொதுவாக சண்டையில்லாமல் முடிந்தது இல்லை. நகரங்களில் கிளப்புகளில் விளையாடப்படும் சூதாட்டம் வெளிப்பார்வைக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. கோவாவில் இதற்கென கேசினோக்கள் இருக்கின்றன. அமெரிக்காவுக்குச் சென்றவர்களுக்குத் தெரியும், லாஸ் வேகாஸ் என்றாலே சூதாட்டம்தான் என்று. அது சூதாட்டங்களின் சொர்க்கபுரி.

தமிழ்நாட்டில் குதிரை பந்தயம் தடைசெய்யப்பட்டுவிட்டது. அதன் நினைவாக வைக்கப்பட்ட குதிரை சிலை இன்றும் அண்ணா சாலையில் நிற்கிறது. கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டம் பற்றிச் செய்திகளில் படிக்கிறோம். ஆனால் ஒன்று தெரியுமா… இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும், கிரிக்கெட் மட்டுமல்லாமல் எந்த ஒரு விளையாட்டுக்கும் நீங்கள் பெட் கட்டி ஆடலாம்.

ஆன்லைன் சூதாட்டங்கள்

எல்லாம் சரி… வீடியோ கேமில் சூதாட்டம் எப்படி? முன்பெல்லாம் அங்கே இங்கே என்று திரைமறைவாக ஆடிக்கொண்டிருந்த சூதாட்டம் இன்று ஆன்லைன் உதவியுடன் உங்கள் உள்ளங்கைக்கே வந்துவிட்டது. ஸ்மார்ட்போனில் இதற்கென நிறைய ‘ஆப்’கள் வந்துவிட்டன. தரவிறக்கம் செய்துகொண்ட அடுத்த நொடி, நீங்கள் சூதாடலாம்.

இதில் பதின் வயது சிறுவர்கள் நிறைய பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் இருக்கும் முதன்மைப் பிரச்சினை, உங்கள் வாரிசு இதில் விளையாடினால் உங்களால் கண்காணிப்பது மிகவும் கடினம். அதனால் நம் வாரிசுகளை இதிலிருந்து காப்பாற்ற நாம் அதைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

(அடுத்த வாரம்: உங்களை ‘இணை’க்கும் சூது!)
கட்டுரையாளர்,டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com
எனக்கு ஏற்பட்ட அவமானங்களும் வேதனைகளும் சொல்லில் அடங்காதவை: தங்கர் பச்சான் வருத்தம்!

By DIN | Published on : 30th December 2017 01:05 PM

பல ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கிய படம் - களவாடிய பொழுதுகள். பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பரத்வாஜ். ஐங்கரன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

வெளியீட்டுச் சிக்கல்களால் முடங்கிக் கிடந்த படம் நேற்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் தங்கர் பச்சான் ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

இன்று எனக்கு விடுதலை! என்னால் இதை நம்ப முடியவில்லை!! விடுதலை இதோ கிடைத்துவிடும், இதோ கிடைத்துவிடும் என பலமுறை எதிர்பார்த்து ஏமார்ந்து போனதால் இந்த உண்மையை ஏற்க மனம் தயங்குகிறது.

என்ன குற்றம் செய்தேன்? எதற்காக சிறை படுத்தப்பட்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை! எப்படியாவது சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறி விடலாம் என எல்லா திசைகளிலும் முட்டி மோதிப் பார்த்ததால் முழு உடலும் கண்ணிப்போயிருக்கிறது. இரத்தக்கட்டுகளால் உறைந்து கிடக்கிறது.

இதுவரை நான் பணியாற்றிய எல்லாப் படங்களிலும் உழைத்த உழைப்பை எல்லாம் சேர்த்து இந்த ஒரு படத்தில் மட்டும் செலுத்தியிருக்கிறேன். அதற்காக இன்று வரை எனக்கு ஏற்பட்ட அவமானங்களும், சோதனைகளும், வேதனைகளும் சொல்லில் அடங்காதவை.

கருவை உருவாக்கி அதைக் கதையாக்கி பின் அதற்கு திரைக்கதை அமைத்து ஒவ்வொரு தயரிப்பாளராகத் தேடித் பிடித்து, ஒவ்வொரு நடிகரையும் சந்திக்க அலைந்து ஒரு வழியாக அவர்களைப் பிடித்து படப்பிடிப்பு தொடங்குவதே, மக்களின் வாழ்விலிருந்தே படைப்புக்களை உருவாக்கும் என் போன்றவர்களுக்கு பெரும் போராட்டம் தான்.

“களவாடிய பொழுதுகள்” திரைப்படத்தை திரைக்குக் கொண்டு வர நான் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சிகளும், சந்தித்த சம்பவங்களும், மீண்டும் நினைக்க விரும்பாத மனிதர்களும், வெளியில் காண்பித்துக்கொள்ளாத அவமானங்களும் பட்டியலிட முடியாதவைகள்.

திரைப்படக்கலையின் மூலம் எதையாவது இந்த மக்களுக்கு சொல்லலாம் என நினைத்துத்தான் இந்தத் துறைக்கு வந்தேன். பணம் மட்டுமே போதும் என நினைத்திருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆண்டுக்கு இரண்டு படங்களை எடுத்து பெரும் பணக்காரனாக மாறியிருப்பேன்! எப்படியாவது வாழ்ந்தால் போதும் என நினைக்காமல் இப்படித்தான் வாழ வேண்டும் என நினைப்பதால்தான் ஒவ்வொரு படைப்புக்காகவும் தொடர்ந்து முதல் படம் போலவே உழைத்து போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு மனதோடும் சென்று அவர்களோடு உரையாட வேண்டிய இப்படத்தின் கதைப் பாத்திரங்கள் உயிரற்றவர்களாக கிடந்தார்கள்! இனி உங்கள் மனதோடு அவர்கள் பேசுவார்கள். அவர்களின் நினைவுகள் சில நாட்களுக்கு உங்களை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்! படம் பார்த்த பின் எத்தனைப்பேர் ஒருவருக்கும் தெரியாமல் யார் யாரைத்தேடி அலைவார்கள், சந்திக்க முயல்வார்கள், கைப்பேசியில் பேச முயல்வார்கள், தனிமையில் அழுவார்கள் என்பதெல்லாம் நடக்கத்தான் போகிறது.



நான் சிறைப்படுத்தப்பட்ட இத்தனைக் காலங்கள் எல்லாவற்றையும் எனக்குள்ளேயே புதைத்து அழித்துக்கொள்ள முயல்கிறேன்! அதற்காக முயன்று கொண்டிருக்கிறேன்!

எது எப்படியோ எனக்கு விடுதலை கிடைத்து விட்டது. நான் கூறியபடி என் பொற்செழியனும், ஜெயந்தியும் உங்கள் மனதோடு இனி பேசுவார்கள்; தொந்தரவு செய்வார்கள்! அப்போது என்னைத்திட்டுங்கள். அதுதான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெற்றதற்காக எனக்கு நீங்களெல்லாம் அளிக்கும் ஆறுதல் என்று எழுதியுள்ளார்.

NEWS TODAY 24-26.10.2024