Monday, January 1, 2018

ரஜினி ஒரு ஊழல்வாதி: சுவாமி கோபம்

Added : ஜன 01, 2018 04:11


சென்னை: ''நடிகர் ரஜினிக்கு நான் எப்போதுமே எதிர்ப்பைத்தான் தெரிவிப்பேன்,'' என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறிஉள்ளார்.

அவர் கூறியதாவது: நடிகர் ரஜினி ஒரு படிப்பறிவில்லாதவர். ஊழல்வாதி. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மீடியாக்களே மிகவும் பெரிது படுத்துகின்றன. அவர் நம்மிடம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இதுவும் தமிழ் நடிகர் ஒருவர் அரசியலில் இணைந்தார் என கூறும் ஒரு பழைய கதை மட்டும்தான். நான் எப்போதும் ரஜினிக்கு எதிர்ப்புதான் தெரிவிக்கிறேன். சினிமா நடிகர்களை என்று மக்கள் விடுவிக்கிறார்களோ அப்போதுதான் தமிழகம் முன்னேறும். இன்னும் அவருடைய கட்சியை அறிவிக்கவில்லை. பா.ஜ.,வுடன் அவரை கூட்டணி அமைக்கவிட மாட்டேன். தவறான நேரம் மற்றும் இடத்தில் இருந்து ரஜினி, அரசியலுக்கு வருகிறார். அவருடைய கறுப்பு பண விவகாரம் விசாரணைக்கு வந்ததும் அவர் கவலையடைவார். ரஜினியின் பாடல்கள் மற்றும் நடனங்களில் மக்கள் விழுந்துவிடக்கூடாது. ஒரு நடிகர் சங்கம் அரசியல் கட்சியாக முடியாது. என் எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் பா.ஜ., கூட்டணி வைத்தால் கட்சியில் இருந்து விலகி வேறு மாநிலம் சென்று அரசியல் செய்வேன்.இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...