Monday, January 1, 2018

டிரான்ஸ்பரான அதிகாரிக்கு மீண்டும் சேலத்தில் பணி!

Added : ஜன 01, 2018 03:59

சேலம்: சேலத்தில் நடந்த முதல்வர் விழாவில் ஏற்பட்ட குளறுபடியை காரணம் காட்டி, திருநெல்வேலிக்கு துாக்கியடிக்கப்பட்ட, போலீஸ் உதவி கமிஷனருக்கு, மீண்டும் சேலத்தில் பணி ஒதுக்கி, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.சேலம், திருவாக்கவுண்டனுார் ரவுண்டானாவில், முதல்வர் பழனிசாமி, கடந்த 2ல் மேம்பாலத்தை திறந்துவைத்தார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளை, வடக்கு குற்றப் பிரிவு உதவி கமிஷனர் பிரேம் ஆனந்த் கவனித்தார். ஆனால், ரிப்பன் வெட்டுதல் உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.இதனால், குளறுபடி நிலவியதால், முதல்வர் பழனிசாமி அதிகாரிகளை கடிந்து கொண்டார். இச்சம்பவத்தால், பிரேம் ஆனந்தை, திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவுக்கு மாற்றி, டி.ஜி.பி., ராஜேந்திரன் 


உத்தரவிட்டார்.மாற்றத்தை மறுபரிசீலனை செய்யும்படி, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அவரை, மீண்டும், சேலம் மாநகர வடக்கு குற்றப்
பிரிவில் பணியில் இணைய, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...