Monday, January 1, 2018

2018-புத்தாண்டு பிறந்தது; நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

Added : ஜன 01, 2018 00:02 |

 

  புதுடில்லி: நாடு முழுவதும் 2018 ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிற்பகல் இருந்து மக்கள் குவியத் தொடங்கினர். ஸ்டார் ஹோட்டல்களில், ஷாப்பிங் மால்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆடிப்பாடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவிந்த ஏராளமானோர், உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர்.

மேலும் சென்னையில் உள்ள பல்வேறு பூங்காக்கள், கிளப்களில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கேக் வெட்டியும் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவொருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

அதேபோல மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024