Friday, March 2, 2018

காரைக்குடி- பட்டுக்கோட்டை சோதனை ரயில் இயக்கம்

Added : மார் 02, 2018 01:25

காரைக்குடி: காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில்பாதையில் நேற்று சோதனை ரயில் இயக்கப்பட்டது. காரைக்குடி - பட்டுக்கோட்டை வரை 73 கி.மீ.,க்கு அகல ரயில்பாதை பணிகள் 2012ல் தொடங்கி ரூ.700 கோடியில் முடிக்கப்பட்டது. கடந்த மாதம் பணி முடிந்ததாக கட்டுமான நிறுவனம், ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது.ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தலைமையில் அதிகாரிகள் ஐந்து டிராலியில் பிப்.27-ல் தொடங்கிய ஆய்வு பணி இரு நாட்கள் நடந்தது. நேற்று சோதனை ரயில் இயக்கம் நடந்தது.இதற்காக காரைக்குடியில் இருந்து ஆய்வு ரயில் காலை 10:00 மணிக்கு பட்டுக்கோட்டை புறப்பட்டு சென்றது. பாதுகாப்பு ஆணையர் மனோகரன் மற்றும் மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியாரா தொடங்கி வைத்தனர். சுமார் 60 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. மறு மார்க்கத்தில் மாலை 4:00 மணியளவில் 110 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு, பாலம் மற்றும் இருப்பு பாதையில் ஏற்படும் அதிர்வுகள் கணக்கிடப்பட்டது.

No comments:

Post a Comment

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறைஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறை ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது. சாப்பிடும் முன் மற்றவர்கள...