Monday, September 17, 2018

7-வது பட்டமளிப்பு விழா: ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியில் 61 பேருக்கு ரூ.25 லட்சத்தில் தங்கப் பதக்கம்

Published : 16 Sep 2018 12:35 IST



சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியில் 7-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், பல்கலைக்கழக ரேங்க் பெற்ற 61 மாணவ, மாணவிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் ஏஐசிடிஇ துணைத் தலைவர் எம்.பி.பூன்யா, சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் கலைச்செல்வி லியோமுத்து, தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து, மேலாண்மைத் துறை இயக்குநர் கே.மாறன், கல்லூரி முதல்வர் கே.பழனிகுமார், ஆராய்ச்சி, வளர்ச்சித் துறை டீன் ஏ.ராஜேந்திர பிரசாத் பங்கேற்றனர்.

மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழாவில் 612 மாண வர்கள் பட்டம் பெற்றனர். பல்கலைக் கழக ரேங்க் பெற்ற 61 மாணவர் களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள லியோமுத்து உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் கலைச்செல்வி லியோ முத்து குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அகில இந் திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (ஏஐசிடிஇ) துணைத் தலைவர் முனைவர் எம்.பி.பூன்யா, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார்.

விழாவில் 612 மாணவ, மாணவி கள் பட்டம் பெற்றனர். 61 பேர் பல் கலைக்கழக ரேங்க் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப் புள்ள தங்கப் பதக்கங்கள் வழங்கப் பட்டன.

சமுதாய வளர்ச்சி

சாய்ராம் கல்விக் குழும தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து தனது தலைமை உரையில், ‘‘சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளி லேயே அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 10 தரவரிசைக்குள் தன் இடத்தை நிரந்தரமாக தக்கவைத்துக் கொண் டது. சமுதாய வளர்ச்சி என்ற நோக் கத்தோடு கலந்த கல்வி போதிப்பது தான் எங்கள் கல்லூரியின் பலம். கடந்த 10 ஆண்டுகளாக இந்திய மற்றும் உலக அளவிலான நிறுவனங் களில், எங்கள் மாணவர்களில் 90 சதவீதம் பேருக்கு மேல் உறுதியாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருதல் எங்கள் தனிச்சிறப்பு’’ என்றார்.

சாய்ராம் மேலாண்மைத் துறை இயக்குநர் கே.மாறன் வாழ்த்திப் பேசினார். கல்லூரி முதல்வர் கே.பழனிகுமார் வரவேற்புரை ஆற்றினார். ஆராய்ச்சி, வளர்ச்சித் துறை டீன் ஏ.ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார். பட்டம் பெற வந்த மாணவர்கள், பெற்றோர் உட்பட 2,500 பேர் விழாவில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...