Thursday, September 13, 2018

பான் கார்டில் தந்தை பெயர் தேவையில்லை

Added : செப் 12, 2018 21:38

புதுடில்லி: விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்கள், தங்கள் பிள்ளைகளுக்கு, 'பான் கார்டு' பெறும்போது, அவர்களது தந்தை பெயரை குறிப்பிட தேவைஇல்லை என்று, விதிகளில் திருத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும், பான் கார்டு எனப்படும், நிரந்தர கணக்கு அட்டையை, மத்திய நிதி அமைச்சகம் வழங்கி வருகிறது.இந்த அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், தங்கள் தந்தையின் பெயரை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்கள், தங்கள் பிள்ளைகளுக்கு பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போது, அதில், முன்னாள் கணவரின் பெயரை குறிப்பிடுவதில் சிக்கல்கள் உள்ளது. எனவே, அதில் திருத்தம் செய்யும்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, இந்த நடைமுறையில், திருத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தை கள் நலத்துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...