Sunday, September 16, 2018

'மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Added : செப் 15, 2018 21:03 |



டேராடூன்: அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், நோயாளி களுக்கு பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளை, இனி கையால் எழுதி தராமல், 'கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்'களாக தரவேண்டும் என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நோயாளி களுக்கு மருந்து சீட்டுகளை, கையால் எழுதி தருகின்றனர். இதனால், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள், பல சந்தர்ப்பங்களில், டாக்டர்களின் கையெழுத்து புரியாமல் தவிக்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில், உத்தரகண்டை சேர்ந்த அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், இனி மருந்து சீட்டுகளை, கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களாக வழங்க வேண்டும்.அரசு டாக்டர்களுக்கு, கம்ப்யூட்டர் மற்றும், 'பிரின்டர்' வசதிகளை, மாநில அரசு செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...