Sunday, September 16, 2018

சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தரிசனம் முடிந்ததும் திரும்பிவிட அறிவுறுத்தல்

Added : செப் 15, 2018 23:43

சபரிமலை புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. உணவு, தண்ணீர் பிரச்னை உள்ளதால், தரிசனம் முடிந்ததும் ஊர் திரும்பிவிடுமாறு பக்தர்களுக்கு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.55 நாட்கள் இடைவெளிக்கு பின் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து ஆழிகுண்டத்தில் தீ வளர்க்கப்படும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 4.00 மணிக்கு நெய் அபிஷேகம் துவங்கும். 21-ம் தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். தினமும் படிபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகளை நடத்துவார்.
கட்டுப்பாடுகள்

பம்பை உருக்குலைந்து காணப்படுவதால் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதிக்கும் பாதை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். குடிநீர், உணவு எடுத்து செல்ல வேண்டும். சன்னிதானத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. தரிசனம் முடிந்த உடன் ஊர் திரும்பிவிட வேண்டும்.பக்தர் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படும். அங்கிருந்து கேரள அரசு பஸ்சில் சென்று திரும்ப வேண்டும்.பம்பையில் புலி மீது அமர்ந்த கோலத்தில் 28 அடி உயர ஐயப்பன் சிலை வைக்கப்பட உள்ளது. இதற்கு நேற்று தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் அடிக்கல் நாட்டினார்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...