Monday, February 4, 2019


'தஞ்சாவூர் - விழுப்புரம் ரயில் பாதை மின்மயம் பணி 2 ஆண்டில் முடியும்'

Added : பிப் 03, 2019 22:59


திருச்சி : 'தஞ்சை - விழுப்புரம் இடையேயான ரயில் பாதை மின்மயமாக்கும் பணி வரும், 2021ல் முடியும்' என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.திருச்சி கோட்டத்தில் உள்ள, தஞ்சாவூர் - விழுப்புரம் பிரதான ரயில் பாதை, திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களையும் இணைக்கும் மாற்று ரயில் பாதையாக உள்ளது. 228 கி.மீ., உள்ள இந்த ரயில் பாதையை, மின் மயமாக்கும் பணி நடை பெற்று வருகிறது.இதே போல், திருச்சி -தஞ்சாவூர், திருவாரூர் - காரைக்கால் இடையிலான அகல ரயில் பாதைகளும் மின் வழித்தடமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை, ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.மின் மயமாக்கும் பணிகளை ஆய்வு செய்த அந்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:தஞ்சாவூர் - விழுப்புரம் அகல ரயில் பாதையை, 250 கோடி ரூபாயில் மின் மயமாக்க திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக, விழுப்புரம் - கடலுார் இடையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் மார்ச் மாதம் முடிக்கப்பட்டு, அடுத்த கட்டமாக ஏப்ரல் மாதம் முதல், கடலுார் - மயிலாடுதுறை இடையே, மின் மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். வரும், 2021ல், தஞ்சாவூர் - விழுப்புரம் இடையேயான அகல ரயில் பாதை முழுவதும் மின் மயமாக்கும் பணிகள் முடிந்து விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024