Wednesday, June 23, 2021

பிலிப்பைன்சில் தடுப்பூசி போடாதவர்களுக்கு சிறை


பிலிப்பைன்சில் தடுப்பூசி போடாதவர்களுக்கு சிறை

Updated : ஜூன் 23, 2021 07:24 

மணிலா : 'பிலிப்பைன்சில் கோவிட் தடுப்பூசியைப் போட மறுப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்' என, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தடுப்பூசி நிலையங்கள் சிலவற்றில், தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குறைவானவர்களே சென்றுள்ளனர். இதையடுத்து அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் மொத்த மக்கள் தொகையான 110 மில்லியனில் இந்த ஆண்டுக்குள் 70 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடுவது அரசாங்கத்தின் இலக்கு. இதுவரை அங்கு 2.1 மில்லியன் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு மருத்துவ நெருக்கடியில் இருக்கிறது. தடுப்பூசியைப் போட மறுப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டுட்டார்ட்டே தண்டனைகளுக்கு புகழ் பெற்றவர். போதை கடத்தல் கும்பல்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொலை செய்ததால் அச்சமூட்டும் மனிதராக இவர் பார்க்கப்படுகிறார். எனவே இவரின் எச்சரிக்கைக்கு பலன் இருக்கும் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...