Tuesday, October 10, 2017

கம்ப்யூட்டரில் இனி இதயமே ‘பாஸ்வேர்டு’

2017-10-09@ 00:23:54




நியூயார்க்: கம்ப்யூட்டர், லேப்-டாப், ஸ்மார்ட் போன் என்று அனைத்துக்கும் இதயத்தை ஸ்கேன் செய்து அதன் மூலம் உள்ளே செல்லும் நவீன முறையை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவரின் இதயத்தை மிகச்சிறிய அளவிலான டாப்லர் ராடார் ஸ்கேன் கருவி மூலம் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. சில நொடிகள் இதயத்தின் இயக்கம் கண்காணித்ததும், அதையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழைய முடியும். இப்படி உங்கள் இதயத்தை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால், வேறுயாரும் உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தவே முடியாது. இது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் ஒவ்வொருவரின் இதயமும் வேறுபட்டு அமைந்துள்ளது. இந்த நவீன முறையை நியூயார்க்கில் உள்ள யு.பி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பயோமெட்ரிக் மற்றும் பிற பாதுகாப்பு முறையைவிட இது மிகவும் சிறந்தது, துல்லியமானது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதயத்தை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் முறை, இப்போதைக்கு கம்ப்யூட்டருக்கு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள், விமான நிலையங்களில் நடத்தப்படும் சோதனைகளில் பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“நாங்கள், ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இந்த பாதுகாப்பு முறையை பயன்படுத்த உள்ளோம். ஏனெனில், ஒவ்வொருவரும் தங்களது ரகசியத்தை பாதுகாக்கவே விரும்புகின்றனர்” என்று இந்த பல்கலைக்கழக பேராசிரியர் வான்யோவ் ஜியு தெரிவித்தார். இந்த நவீன முறையில், பயன்படுத்தப்படும் ஸ்கேன் கருவி வெளியிடும் கதிர்வீச்சு அளவு, வைபையில் பயன்படுத்தப்படுவதைவிட மிகவும் குறைவானது. ஆகையால், இதனால் நமது உடல் நலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இது குறித்து அச்சமடைய தேவையில்லை என்றும் அவர் கூறினார். “நாம், தினமும் வைபை சுற்றுப்புற சூழலில்தான் வாழ்கிறோம். வைபை முறையை போல் இந்த நவீன முறையும் மிகவும் பாதுகாப்பானதுதான். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அளவில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே இதில் வெளிப்படும் என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது’’ என்றார்.
ஒருவரின் இதயத்தை முதல் முறையாக ஸ்கேன் செய்ய சுமார் 8 வினாடிகள் தேவைப்படுகிறது. அதன் பின்னர் தொடர்ந்து இதயத்தை கண்காணித்து கம்ப்யூட்டர் தனது நினைவாற்றலில் பதிவு செய்து கொண்டுவிடும். பிறகு எப்போது வந்து கம்ப்யூட்டர் முன் அமர்ந்தாலும் உடனே ஸ்கேன் செய்து அடையாளத்தை சரிபார்த்து அடுத்த நொடியே நுழைய அனுமதித்து விடும்.

இத்தகைய பாஸ்வேர்டு மூலம் ஒருவர் கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போது, அதன் பாதுகாப்பு குறித்து கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் வேறு ஒருவர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அதை இயக்க நினைத்தால் முடியவே முடியாது. மேலும் தனது பாஸ்வேர்டை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. இந்த நவீன முறையை மிகவும் சிறிய அளவிலான கம்ப்யூட்டர் கீபோர்டுகளில் பயன்படுத்தவும் செல்போன்களில் பயன்படுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலையங்களில் ஒருவரை சுமார் 30 மீட்டர் அளவு இடைவெளியில் இருந்து அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் இந்த கருவியை பயன்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள்
அக்.11-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்: ஏழாவது ஊதியக்குழு குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு

2017-10-09@ 17:37:30



சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் வரும் புதன்கிழமை காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

ஆசிரியர்கள் உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து ஏழாவது ஊதியக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கடந்த வாரம் முதலமைச்சரிடம் வழங்கியது. இக்கூட்டத்தில், அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வை அமல்படுத்துவது தொடர்பாகவும், இடைக்கால நிவாரணத் தொகை எத்தனை சதவீதம் வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூச்சு விட சிரமப்பட்ட குழந்தை : 7 மணி நேரம் தாமதமாக வந்த, '108'

பதிவு செய்த நாள்10அக்
2017
00:03




காஞ்சிபுரம்: அரசு மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை, மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு கொண்டு செல்ல, '108' ஆம்புலன்சுக்காக ஏழு மணி நேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தோர், சசிகுமார் - வரலட்சுமி தம்பதி. இவர்களின், ஒன்பது மாத குழந்தைக்கு, உடல் நிலை சரியில்லாததால், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

நெஞ்சில் சளி இருந்ததால், மூச்சு விட, குழந்தை மிகவும் சிரமம் ஏற்பட்டது. காய்ச்சலும் அதிகமாக இருந்ததால், திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

அதனால், மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து, நேற்று காலை, 6:00 மணிக்கே, '108' ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வாகனம் வரவில்லை. 

குழந்தையின் போக்கால் அச்சமடைந்த பெற்றோர், தனியார் ஆம்புலன்சில் கொண்டு செல்ல முடிவெடுத்தனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஒப்பு கொள்ளாமல், 'தனியார் ஆம்புலன்சில், அரசு மருத்துவர்கள் செல்ல மாட்டார்கள்' எனக்கூறி விட்டது.

மதியம், 1:15 மணிக்கு வந்த ஆம்புலன்சில், குழந்தைக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தி, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடன், ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இருந்தனர்.
காஞ்சிபுரம் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஒன்று எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 53 ஆம்புலன்சுகள் உள்ளன. அதில் குழந்தைகளுக்கு, செயற்கை சுவாச கருவியுடன் கூடிய இரு வாகனங்கள் மட்டுமே உள்ளன. காஞ்சிபுரத்தில் இருந்த வாகனம் ஒன்று பழுதாகி விட்டது. செங்கல்பட்டில் உள்ள வாகனம் மட்டுமே, மாவட்டம் முழுவதும், குழந்தைகள் அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
டில்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியாது
புதுடில்லி: டில்லியில், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.



டில்லியில், காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து, 2016 நவ., 11ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த தடையை தற்காலிகமாக நீக்கி, செப்., 12ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பட்டாசுகள் விற்க, வெடிக்க தடை

இந்நிலையில், 'டில்லியில், காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில், பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில்

வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த, நீதிபதி, ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, பிறப்பித்த உத்தரவு:

டில்லியில், தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிக்காவிட்டால்,காற்றின் தரம் எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன்படி, அக்., 31 வரை, டில்லியில் பட்டாசுகள் விற்க, வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. பட்டாசு விற்பனைக்கு அனுமதித்து, செப்., 12ல் அளித்த உத்தரவு, நவ., 1 முதல் அமலுக்கு வரும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பை அடுத்து, இந்தாண்டு தீபாவளியின் போது, டில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில், பட்டாசு வெடிக்க முடியாது. டில்லியில், 19ல், தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.

தடையால் சிவகாசிக்கு ரூ.1,000 கோடி இழப்பு

டில்லியில், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால், தமிழகத்தின், சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு, 1,000 கோடி

ரூபாய் இழப்பு ஏற்படும் என, கணிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, பட்டாசு விற்பனையாளர்கள் கூறியதாவது:

நாட்டின் மொத்த பட்டாசு தேவையில், 85 சதவீதம், சிவகாசியில் இருந்தே அனுப்பப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு, 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. டில்லியில் விதிக்கப்பட்ட தடையால், 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். டில்லியை தொடர்ந்து, வேறு சில மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டால், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கர்ப்பப்பைக்கு பதில் தலைக்கு 'சிடி ஸ்கேன்': ஆப்பரேட்டரான துப்புரவு ஊழியர்

பதிவு செய்த நாள்10அக்
2017
02:03

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் 'சிடி ஸ்கேன்' பிரிவில் பணிபுரியும் துப்புரவு பெண் ஊழியர், ஸ்கேன் ஆபரேட்டர் வேலை பார்த்து,சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு கர்ப்பப்பைக்கு பதிலாக தலைக்கு சிடி ஸ்கேன் எடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், சூராணம் அருகே உள்ள சங்கனி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், சென்னையில் கார் டிரைவராக வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி செல்வி, 44. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். பரிசோதித்த டாக்டர்கள் 'சிடி ஸ்கேன்' எடுக்க பரிந்துரைத்தனர்.
இந்நிலையில் சூராணம் வந்த செல்வி, செப்.25ல் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு 'சிடி ஸ்கேன்' எடுக்க சென்றார். அங்கு டாக்டர் இல்லாததால், பணியில் இருந்த துப்புரவு பெண் பணியாளர் சிடி ஸ்கேன் ஆபரேட்டராக செயல்பட்டுள்ளார். அப்போது அவர் அலைபேசியில் யாரிடமோ பேசியபடி, செல்விக்கு ஸ்கேன் எடுத்துள்ளார். பின்னர் ஸ்கேன் ரிசல்ட்டை ஒரு வாரம் கழித்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி, செல்வியை அனுப்பிவிட்டனர்.இதையடுத்து செல்வி, தனது ஊரைச் சேர்ந்த மங்கையர்கரசி என்பவரிடம் 'சிடி ஸ்கேன்' எடுக்க ரூ.500 கட்டணம் செலுத்தியதற்கு வழங்கிய'பில்'லை கொடுத்து, 'சிடி' ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கி அனுப்பும்படி கூறிவிட்டு சென்னைக்கு சென்று விட்டார்.இதையடுத்து மங்கையர்கரசி, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வியின் 'சிடி ஸ்கேன்' ரிப்போர்ட்டை கேட்டுள்ளார். 

அவர் வழங்கிய 'பில்'லையும், 'சிடி ஸ்கேன்' ரிப்போர்ட்டையும் ஒப்பிட்டு பார்த்த சிடி ஸ்கேன் அலுவலர் அதிர்ச்சியடைந்துள்ளார். செல்வியின் கர்ப்பப்பைக்கு பதில் தலைக்கு 'சிடி ஸ்கேன்' எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதை மங்கையர்கரசியிடம் தெரிவிக்காமல், 'செல்விக்கு சரியாக ஸ்கேன் பதிவாகவில்லை; அவரை மீண்டும் ஒருமுறை ஸ்கேன் எடுக்க வரச்சொல்லுங்கள்,' என்று மட்டும் கூறி அனுப்பி விட்டனர்.

இதுகுறித்து சென்னையில் வசிக்கும் செல்வி கூறியதாவது: ஸ்கேன் எடுக்கும்போது முகத்தை துணியால் மூடி இயந்திரத்திற்குள் படுக்க வைத்தனர். அதனால் எந்த இடத்தை ஸ்கேன் எடுக்கிறார்கள் என அப்போது தெரியவில்லை. இப்போது திரும்பவும் ஸ்கேன் எடுக்க வரச்சொல்கிறார்கள். இதற்காக நான் சென்னையில் இருந்து மீண்டும் சிவகங்கைக்கு வரமுடியாத நிலையில் உள்ளேன் என்றார்.

இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., குழந்தையானந்தனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:'சிடி ஸ்கேன்' எடுத்தபோது, பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்பட்டிருக்கும். அதை நோயாளியோ, அவரது உதவியாளரோ கொண்டு வந்து காண்பித்தால், அந்த
தேதியில் பணியில் இருந்தவர் யார் என விசாரித்து, டீன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
கத்தியுடன் கல்லூரி மாணவர்களின், 'அட்டகாச' வீடியோ
ரயில் நிலையத்தில், கல்லுாரி மாணவர்கள் கத்தியுடன் திரிவதுடன், பட்டாசு வெடித்து பயணியரை அலறடிக்கும், வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வெளியானதால், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உஷாரடைந்து உள்ளனர்.

கத்திகளை உரசி

புறநகர் பகுதியில் இருந்து, சென்னையில் உள்ள கல்லுாரிக்கு படிக்க வரும் மாணவர்கள், ரயில் தினம் கொண்டாடுவதாக கூறி, அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர், நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில், மாணவர்கள் கத்திகளுடன் சுற்றுவது, பிளாட்பாரத்தில் கத்திகளை உரசி, தீப்பொறி ஏற்படுத்துவது, கூட்டத்தில் பட்டாசு வெடித்து, பயணியரை அலறடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.

பரபரப்பு

மேலும், 'ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்' என, பரபரப்பை ஏற்படுத்தி, ரயில் பயணியரை எரிச்சலடையச் செய்துஉள்ளனர். இதை, தங்களுடன் படிக்கும் கல்லுாரி மாணவர்களுக்கு காட்டுவதற்காக, வீடியோ பதிவு செய்த அவர்கள், சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். 

இக்காட்சிகள், வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

இதை பார்த்த, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள், கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள், திருவள்ளூர் மற்றும் நெமிலிச்சேரி ரயில் நிலையங்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது, கல்லுாரி மாணவர்கள் என்பதால் கண்டு கொள்ளாமல் இருந்ததாக, தகவல் கிடைத்து உள்ளது.

மூன்று வீடியோக்கள்

இந்த வீடியோ காட்சிகள், யாரால் வெளியிடப்பட்டுள்ளது என, வலைதளங்களில் ஆராய்ந்ததில், பாரதிராஜா என்ற மாணவரின், 'பேஸ்புக்'கில், 7ம் தேதி பதிவேற்றப்பட்டது தெரியவந்தது. மூன்று வீடியோக்களை பதிவேற்றியுள்ள அவர், 'இது தான் நாங்க, இப்படித்தான் நாங்க' என்ற தலைப்பில், பதிவு செய்திருந்தார்.

நான்கு பேர் கைது

இது குறித்த போலீசார் விசாரித்து வந்த போலீசார், ஜெகதீசன், 18, தண்டபாணி, 20, கிருஷ்ணன், 18, யுவராஜ், 18, ஆகிய நான்கு பேரை, நேற்று கைது செய்துள்ளனர். இவர்கள், பிரசிடென்சி மற்றும் தியாகராஜா கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

- நமது நிருபர் -
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் டிச.29ல் சொர்க்கவாசல் திறப்பு
பதிவு செய்த நாள்10அக்
2017
01:59


திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு, 2017ம் ஆண்டில் இரண்டாவது முறையாக, டிசம்பர், 29ல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடக்கிறது.

பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம், திருப்பதி, சென்னை பார்த்தசாரதி கோவில்கள் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும்.

கடந்த ஆண்டுக்கான சொர்க்கவாசல் திறப்பு, 2017ல் ஜனவரி, 8ல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்தது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, வரும் டிசம்பர், 18ல் திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் துவங்குகிறது. அடுத்தநாள் பகல்பத்து நிகழ்ச்சிகள் துவங்கி, 28ம் தேதி மோகினி அலங்காரம் நடக்கிறது. அடுத்த நாள், டிசம்பர் 29, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின், ஜனவரி, 4ல் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கைத்தல சேவையும், 5ல் திருமங்கைமன்னன் வேடுபறியும், 7ல் தீர்த்தவாரியும், 8ல் நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.
குமரியில் வெங்கடாஜலபதி கோவில் 2018ஜனவரிக்குள் முடிக்க திட்டம்

பதிவு செய்த நாள்10அக்
2017
00:48

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் மூலஸ்தான கோபுர விமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திரா வளாகத்தில், கடற்கரையை ஒட்டி, திருப்பதி வெங்க டாஜலபதி கோவில் கட்டப்பட்டு வருகிறது. 22.50 கோடி ரூபாய் செலவில், ஐந்தரை ஏக்கர் நிலத்தில், இந்த பணி நடக்கிறது.

திருமலை கோவில் போன்று, அதே வடிவில் கட்டப்பட்டு வருகிறது. 2013 ஜூனில் துவங்கிய பணி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. திருமலையில் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில், இங்குள்ள மூலஸ்தானத்தில் சூரிய ஒளி விழும் வகையில், கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது மூலஸ்தான விமான கோபுர பணி நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும், வரும் ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

கடல் காற்றால் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டு வருகிறது. கற்கள் அனைத்தும், திருச்சி மாவட்டம், நாகலாபுரத்தில் இருந்து வந்துள்ளன.
அரசு ஊழியர் ஊதிய உயர்வு : அமைச்சரவை நாளை முடிவு
பதிவு செய்த நாள்  09அக்
2017
23:54


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை நடைபெற உள்ளது.

மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. 

இதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, 'அலுவலர் குழு' அமைக்கப்பட்டது. இக்குழு, செப்., 27ல், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அறிக்கை வழங்கியது. அதன் அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக, நாளை காலை, 11:15 மணிக்கு, தலைமை செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -
சித்தா படிப்புக்கு நாளை கவுன்சிலிங்

பதிவு செய்த நாள்09அக்
2017
23:47

சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 396 இடங்கள்; 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 600 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர். தரவரிசை பட்டியல், www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம், சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், நாளை துவங்குகிறது; 14 வரை, கவுன்சிலிங் நடைபெறும்.
முதல் நாளில், சிறப்பு பிரிவினர் மற்றும் தரவரிசை பட்டியலில், 201 வரை இடம் பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர். அழைப்பு கடிதத்தை, இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
போலீஸ் எஸ்.ஐ.,யாக திருநங்கை பொறுப்பேற்பு
பதிவு செய்த நாள்09அக்
2017
23:36




போலீஸ் எஸ்.ஐ.,யாக தேர்ச்சி பெற்ற திருநங்கை, பிரித்திகா யாசினி, சென்னையில் பொறுப்பேற்றார்.

தமிழக காவல் துறையில், காலியாக இருந்த, எஸ்.ஐ., பணியிடங்கள், 1,078ஐ நிரப்புவதற்கான தேர்வை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 2015ல் நடத்தியது. இதற்கு விண்ணப்பித்திருந்த, சேலம் மாவட்டத்தை சேர்ந்த, திருநங்கை பிரித்திகா யாசினி நிராகரிக்கப்பட்டார். பின், சட்டப் போராட்டம் நடத்தி, எஸ்.ஐ.,யாக தேர்ச்சி பெற்றார். நாட்டில் முதல் திருநங்கை, எஸ்.ஐ., என்ற பெருமையும் பெற்றார்.

ஆறு மாதங்களுக்கு முன், தர்மபுரி மாவட்டத்தில், பயிற்சி, எஸ்.ஐ.,யாக பணி அமர்த்தப்பட்ட, திருநங்கை பிரித்திகா யாசினி, சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில், சட்டம் - ஒழுங்கு பிரிவு, எஸ்.ஐ.,யாக நியமிக்கப்பட்டார்; அவர் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரித்திகா யாசினி கூறியதாவது: மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த இந்த வாய்ப்பு, மகிழ்ச்சி அளிக்கிறது. நான், இந்த பணியில் சேர காரணமாக இருந்த அனைவருக்கும், குறிப்பாக சென்னையில் பணி இடம் ஒதுக்கிய, கமிஷனருக்கு நன்றி.ஆண், பெண், திருநங்கை என்ற பாகுபாடு இன்றி, யார் குற்றம் செய்தாலும், சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பேன். சென்னை சூளைமேடு பகுதியில், திருநங்கையர் அதிகம். அதனால், இங்கு என்னை பணி அமர்த்தி உள்ளனர் என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மதத்தை குறிக்கும் வார்த்தைகள் : பல்கலை பெயர்களில் வேண்டாம்!
பதிவு செய்த நாள்10அக்
2017
00:23

புதுடில்லி: பல்கலைக் கழகங்களின் பெயர்களில், 'ஹிந்து, முஸ்லிம்' போன்ற மதத்தை குறிக்கும் வார்த்தைகளை கைவிடும்படி, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைத்து உள்ளது.

நாட்டின், மத்திய பல்கலைகளில், முறைகேடுகள் நடப்பதாக, புகார் எழுந்ததை அடுத்து, ஆய்வு செய்து பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க, யு.ஜி.சி., உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரைகள் விபரம்: மத்திய அரசு நிதியில் செயல்படும் பல்கலைகள், மதச்சார்பற்ற கல்வி மையங்களாக செயல்பட வேண்டும். அவற்றின் பெயர்களில், 'ஹிந்து, முஸ்லிம்' போன்ற, மதத்தை குறிக்கும் வார்த்தைகள் இடம் பெறக் கூடாது.

அலிகார் முஸ்லிம் பல்கலை, பனாரஸ் ஹிந்து பல்கலை போன்றவற்றில் உள்ள, முஸ்லிம், ஹிந்து போன்ற வார்த்தைகளை நீக்க வேண்டும். இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், ''பல்கலைகளின் பெயரை மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
நெல்லைக்கு தீபாவளி சிறப்பு ரயில்

பதிவு செய்த நாள்10அக்
2017
04:32




சென்னை: தீபாவளியையொட்டி, சென்னை எழும்பூரில் இருந்து, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
* சென்னை எழும்பூரில் இருந்து, 17ம் தேதி, மாலை, 3:30க்கு இயக்கப்படும் சுவிதா ரயில், மறுநாள் அதிகாலை, 4:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்
* திருநெல்வேலியில் இருந்து, 21ம் தேதி மாலை, 4:00க்கு இயக்கப்படும், சிறப்பு கட்டண ரயில், மறுநாள் அதிகாலை, 5:35 மணிக்கு, சென்னை எழும்பூர் வந்தடையும்
* இந்த ரயில்களில், இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 17 உட்பட, 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.
12 வயது திருமணம் செல்லாது

பதிவு செய்த நாள்10அக்
2017
01:49

ஜோர்: ராஜஸ்தானின், பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தசுசீலா, 18, என்ற பெண்ணுக்கு, அவரது, 12 வயதில், ஜோத்பூரை சேர்ந்த, நரேஷ் என்பவரை திருமணம் செய்து வைத்தனர்.இந்நிலையில், சுசீலாவுக்கு, 17 வயதானதும், கடந்த ஆண்டு முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். வீட்டை விட்டு, சுசீலா வெளியேறினார். பார்மர் நெடுஞ்சாலையில் தனியாக இருந்த அவரை, ஒரு அரசு சாரா அமைப்பு மீட்டது.சுசீலா சார்பில் ஜோத்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், 12 வயதில் நடந்த திருமணம் செல்லாது என தீர்ப்பு அளித்துள்ளது.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்  'டெங்கு' காய்ச்சலுக்கு சிகிச்சை

சென்னை: ''முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறலாம்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.



சென்னை, புதுப்பேட்டையில் நடந்த, டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

தினமும், 2,000 ரூபாய்

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கூடுதலாக டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நியமிக்கப் பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், சிகிச்சை அளிக்கப்படும். தினமும், 2,000 ரூபாய் வரை சிகிச்சைக்காகபெற்று கொள்ளலாம். 

இந்த திட்டம், தமிழகம் முழுவதும் உள்ள, 870 மருத்துவமனைகளில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.அதேபோல, பன்றிக்காய்ச்சல் மூலம், இறந்தவர்கள் குறித்த ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

டெங்கு பாதிப்பு உள்ளோருக்கு, நம்பிக்கை அளிக்கும் வகையில், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு, தேவையான மருத்துவ உபகரணங்களை, மருத்துவமனை நிர்வாகமே வாங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உணவகங்களிலும் நிலவேம்பு கஷாயம்

சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், உணவு வணிக சங்க நிர்வாகிகளுடன், ஆலோசனை நடந்தது. இந்தக் கூட்டத்தில், 'அனைத்து உணவகங்களிலும், வாடிக்கையாளர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும். தேவையான நிலவேம்பு பாக்கெட்டுகள், மாவட்ட உணவு அதிகாரிகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாவட்ட செய்திகள்

திருப்போரூர் முருகன் கோவிலில் 3 மாதம் பிச்சைக்காரராக வாழ்ந்த கோடீஸ்வரர்



குடும்ப தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய கோடீஸ்வரர், 3 மாதங்களாக திருப்போரூர் முருகன் கோவிலில் பிச்சைக்காரராக வாழ்ந்து வந்தார். மனைவி, மகன்கள் கதறி அழுது கூப்பிட்டதால் மனம் மாறி அவர்களுடன் வீட்டுக்கு சென்றார்.

அக்டோபர் 10, 2017, 05:00 AM

திருப்போரூர்,

திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி அருகே உள்ள தீவனூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். கோடீஸ்வரர். விவசாய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் முன்னேறியவர். இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். ஒரு மகனுக்கு மட்டும் திருமணம் ஆகி உள்ளது. அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் மருமகளுடன், நடராஜனுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்ட நடராஜன், தனது மனைவி மற்றும் மகன்களிடம் எதுவும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஒவ்வொரு இடங்களிலும் உள்ள கோவில்களாக சுற்றித்திரிந்த நடராஜன், கடைசியாக காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கு வந்தார். இந்த கோவில் தலம் அவருக்கு பிடித்து விட்டதால் இங்கேயே தஞ்சம் அடைந்தார்.

கோவிலின் வெளிப்புற மண்டபம் பகுதியில் தங்கி இருந்து, கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழங்கும் அன்னதானத்தை சாப்பிட்டு நாட்களை கடத்தினார். கடந்த 3 மாதங்களாக பிச்சைக்காரராகவே அங்கு தங்கி வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில் மாயமான நடராஜனை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடி வந்தனர். பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களுக்கும் சென்று பார்த்தனர். ஆனால் நடராஜனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நடராஜனின் மனைவி மற்றும் மகன்கள் காரில் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அருகே உள்ள கடையில் டீ சாப்பிட சென்றனர்.

அப்போது தாடி வளர்ந்த நிலையில் தனது தந்தையை போல் ஒருவர் அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து இருப்பதை கண்ட அவருடைய மகன்கள், அருகே சென்று பார்த்தபோது தங்கள் தந்தை நடராஜன்தான் பிச்சைக்காரர் போல் அமர்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகன்கள் 3 பேரும் தந்தையை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

அதற்குள் காரில் அமர்ந்து இருந்த அவருடைய மனைவியும் தனது கணவர் கிடைத்து விட்டதை அறிந்து காரில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கி கணவரிடம் ஓடி வந்து அவரது நிலையை கண்டு கதறினார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருந்த பொதுமக்களும் கண் கலங்கினர்.

நடராஜனிடம் அவருடைய மகன்கள் மன்னிப்பு கேட்டு தங்களுடன் வீட்டுக்கு வரும்படி கெஞ்சினர். மனைவி மற்றும் மகன்களின் கண்ணீரை பார்த்து கோபம் தணிந்த நடராஜன், அவர்களுடன் வீட்டுக்கு வர சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் அங்குள்ள சலூன் கடையில் முடிவெட்டி, ஷேவ் செய்துகொண்டு நடராஜன் புதுமனிதராக மனைவி மற்றும் மகன்களுடன் காரில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

Monday, October 9, 2017

Posted Date : 05:30 (08/10/2017)

60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை!
JAYAVEL B

சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஒரகடம் சிப்காட் பகுதியில் உள்ள டெல் நிறுவனத்திற்குச் சொந்தமான கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 160 லேப்டாப்களை ஏற்றிச் சென்ற லாரி கடத்தப்பட்டுள்ளது. இந்த விவரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




வெளிநாடுகளில் உள்ள டெல் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் லேப்டாப்களை விமானம் மூலம் இந்தியா கொண்டு வந்து ஒரகடம் குடோனில் வைப்பது வழக்கம். அங்கிருந்து விற்பனை செய்வதற்காக மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சீனாவில் இருந்து விமானம் மூலம் 160 லேப்டாப்கள் வந்தன. அவற்றை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஒரகடம் பகுதியில் உள்ள குடோனிற்கு கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு சென்றனர். வண்டலூர், வாலாஜாபாத் சாலையில் லாரி சென்றுகொண்டிருக்கும்போது, படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி அருகே லாரி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது இனோவா காரில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் லாரியை மடக்கி லாரி ஓட்டுனரையும், உதவியாளரையும் மிரட்டி இறக்கிவிட்டு லாரியை கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து லாரி ஓட்டுனர் பாலசுப்பிரமணி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். லேப்டாப்புடன் கடத்தப்பட்ட அந்த லாரி காஞ்சிபுரம் அருகே நின்றுக்கொண்டிருப்பதாக மணிமங்கலம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது லேப்டாப் கொள்ளையடித்தது தெரியவந்தது. லேப்டாப் கடத்திய கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

சசிகலாவை வரவேற்க கூடிய கூட்டம்...சென்டிமென்ட் கைகொடுக்குமா?
சே.த.இளங்கோவன் குமரகுருபரன்
கே.ஜெரோம்



இந்தக் கட்டுரையில் இடம்பெறும் காட்சிகள் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்ததாக இருக்கலாம், பார்க்காதவையாகவும் இருக்கலாம். ஒரு திரைப்படம் போலவும் காட்சிகள் விரியலாம், இல்லை குறும்படமாகவும் சுருங்கலாம். ஆனால், இங்கே எழுதப்பட்ட செய்திகள், நேரில் பார்த்ததும், தொண்டர்கள் சொல்லக் காதில் கேட்டதுமான உண்மைப் பதிவு. இது சில திரைப்படங்களில் தொடக்கத்தில் போடப்படும் ஸ்லைடு போன்ற கற்பனையல்ல.


இனி உங்கள் மனக்கண் விரித்து வார்த்தைகள் வழி காட்சிகளை நுகரலாம்.



கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில், மூன்று முறை அடித்து சத்தியம் செய்துவிட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை செல்கிறார் சசிகலா. சசியின் சிறைவாசம், வெளியில் பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திடுகிறது. அப்போது அவர் அணியில் இருந்தவர்கள் எல்லாம் இப்போது எதிரணியில். அரசியல் சக்கர சுழற்சியில், 233 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, சசிகலாவை வெளியே கொண்டு வந்துள்ளார் அவரின் கணவர் நடராஜன். ஆம், அவரின் உடல்நிலை பாதிப்பு, சசிகலாவுக்கு ஐந்து நாள் அவசரப் பரோலை பெற்றுத்தர அக்டோபர் 6 ஆம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு சிறைக்கூண்டை விட்டு வெளியே வந்தார் சசிகலா. ஜெயலலிதா போலவே பச்சை புடவை, நீள பொட்டோடு பலத்த வரவேற்போடு காரில் ஏறினார் சசிகலா. ''முதல்ல விமானத்துலதான் எங்க சின்னம்மா சசிகலாவக் கூட்டிப் போறதா இருந்தோம். ஆனா கார்ல போனா பேசிட்டே போகலாம். வழியெங்கும் தொண்டர்களைப் பார்க்கலாம்'னு டி .டி.வி தினகரன் சொன்னாரு. 'ம்ம் நானும் அதேதான் நினச்சேன். ஜனங்களப் பார்த்து எவ்ளோ நாள் ஆகுது' என்று சின்னம்மா சசிகலாவும் சொன்னாங்க. அதனால்தான் கார்ல போறோம்" என்றார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர். கார் புறப்பட ஆங்காங்கே வழியில் ஆதரவாளர்கள் இருபுறமும் நின்று வாழ்த்தினர். 10 கார்களோடு புறப்பட்ட சசிகலா கான்வாயில், போகப் போக கார்களின் எண்ணிக்கை கூடியது. ஓசூரில் டிபன் சாப்பிட்ட சசிகலா, ராணிப்பேட்டை வந்ததும், ரோட்டோர டீ கடையில் நிறுத்தச் சொல்கிறார். அங்கே சூடான டீ சாப்பிட்டவரிடம் இது ''தி.மு.க கடையில் வாங்கிய டீ'' என்றனர் அருகிலிருந்தோர். மெல்லியப் புன்னகையோடு டீ குடித்து முடிக்க, அங்கிருந்து மீண்டும் பயணம் தொடங்கியது. அதேநேரம், சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீ டு அருகே மாலை 4 மணியிலிருந்தே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். பெண்களும், முதியவர்களும் சீரான அளவில் குவிந்திருந்தனர். பரோல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காலையிலிருந்தே தஞ்சாவூர், மன்னார்குடி, திருவாரூரில் இருந்து ஆதரவாளர்கள் கார், லாரி, பேருந்துகளில் வந்து குவிந்தபடியே இருந்தனர். அருகில் இருந்த பசும்பொன் தேவர் மண்டபத்தில் அவர்கள் தங்கினர். அந்த வீதியே திருவிழா போல காட்சி தர, உற்சாக பானத்திலிருந்த ஒருவர், 'சின்னம்மா எங்க சார் வந்திருக்காங்க ?' என்றபடியே யாருக்கோ போன் செய்தவர், ''ஓ, பூந்தமல்லியா, தாங்யூ... சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்'' என்றபடியே வடிவேலு கணக்காக பதில் பெற்று அதை மற்றத் தொண்டர்களுக்கு பரிமாறினார். மாலை மணி-6 ஐக் கடக்க, கூட்டம் அலைமோதத் தொடங்கியது. அங்கே துண்டை விரித்து திடீர் கடை போட்ட ஒருவர், அதில் ஜெயலலிதா, தினகரன், சசிகலா ஆகியோரது தனித்தனிப் படங்கள் மற்றும் சேர்ந்திருக்கும் படங்களை விற்று வந்தார். தொண்டர்கள் தேடிச் சென்று அதை வாங்கி தங்களது வெள்ளை சட்டை பாக்கெட்டில் சொருகிக் கொண்டனர். அந்த வீதி முனையில் இருந்த ஒரேயொரு டீக் கடையில் கூட்டம் ஈக்களாக மொய்த்தன.



''ஏங்க , போண்டா , பஜ்ஜியெல்லாம் இல்லையா ? என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க, எங்கூருக்கு வந்து பாருங்க பலகாரமெல்லாம் படையல் கணக்கா போடுவோம்'' என திருவாரூரிலிருந்து வந்திருந்த ஒருவர் ராகம் போட்டு கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தார். (திருவாரூர் மாவட்டத்தினர் ராகமாக மொழியைக் கையாள்வர் ).

இதற்கிடையே உற்சாக பானத்தோடு வலம் வந்தவர் யாருக்கோ போன் செய்துவிட்டு, ''சின்னம்மா பூந்தமல்லி தாண்டிட்டாங்களாம்'' என்றார் சத்தமாக. இந்தக் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்த நேரத்தில், சசிகலா காஞ்சிபுரத்தைத் தாண்டினார். அங்கே வழியில் அவர் காருக்கு பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் திருஷ்டி சுற்றினார்கள் தொண்டர்கள். புன்னகையோடு அதனை ஏற்றுக்கொண்டார் சசிகலா. இந்தப் பயணத்தினூடாக காட்சிகளை மீண்டும் அபிபுல்லா சாலைக்குத் திருப்புவோம்.

இங்கே கலி.பூங்குன்றன், சி.ஆர் சரஸ்வதி, அப்சரா ரெட்டி என முக்கிய நிர்வாகிகள் மற்றும் தினகரன் மகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் கிருஷ்ணப்பிரியா வீட்டில் ஆஜரானார்கள். ஜெயலலிதாவுக்கு சமைச்சு கொடுத்த சமையல்காரம்மா, டிரைவர்களும் வந்தனர். வீட்டைச் சுற்றி ஒயிட் அண்ட் ப்ளாக்கில் பவுன்சர்ஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உள்ளே செல்ல முற்பட்ட தொண்டர்களை பவுன்சர்ஸ் விரட்டினர் . அப்போது ஒருவர் , 'ஏய் , நான் மதுரைக்காரன். அவ்ளோதான் ' என முறுக்கு மீசையில் முறுக்க, அவரையும் உள்ளேவிடாமல் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தனர் பவுன்சர்ஸ்.

கூட்டம் மேலும் மேலும் கூட, அங்கிருந்த ஒரு முதியவரிடம் ''அய்யா சசிகலா எங்க வந்திட்டு இருக்காங்களாம் ?'' என்றேன். "தெரியல தம்பி, ரெண்டு மணி நேரமா பூந்தமல்லி தாண்டிட்டாங்கன்னுதான் எல்லாரும் பேசிக்கிட்டாங்க" என்றவரிடம் ''உங்க பேரென்ன, எங்கிருந்து வர்றீங்க ?'' என்றபடியே பேச்சுக் கொடுத்தேன். "என் பேரு முனுசாமி. பழைய வண்ணாரப்பேட்டையிலருந்து வரேன். சின்னதா வியாபாரம் பண்றேன். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போது இருந்தே நான் ரெட்டை எலைக்காரன் . கட்சிக்காக அப்போதிலேருந்து 

போஸ்டர் ஒட்டுறது
 ,
பிரசாரம் செய்றதுனு வேலை பாக்குறேன். இப்போ 47 வருஷம் கழிச்சும் அதே தெம்போட, சந்தோஷத்தோடதான் போஸ்டர் ஒட்டுறேன், கட்சி வேலை பாக்கிறேன். அம்மாவுக்குப் (ஜெயலலிதா) பிறகு சின்னம்மா தான்" என்றவரிடம் "அவர் பொறுப்பே செல்லாதுன்னு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னாரே'' என்றேன். " அம்மா கூடவே இருந்து அவங்கள 32 வருஷமா பார்த்துக்கிட்டவங்க சின்னம்மா. எடப்பாடியை உருவாக்குனவங்களே சின்னம்மாதான். பதவி வந்ததும் துரோகம் செஞ்சுட்டுப் போறாங்க. உண்மையான ரெட்டை எலை நாங்கதான் " என்றார் உறுதியான குரலில்.

சரி, நாம் சசிகலா கார் பயணத்துக்குச் செல்வோம். உண்மையில், தற்போது சசிகலா கார் போரூர் தாண்டி, கிண்டியைக் கடந்தது. வழியெங்கும் உற்சாக வரவேற்பை அவரின் ஆதரவாளர்கள் கொடுத்தபடியே இருந்தனர். கார்கள் அணிவகுப்பு அதிகமாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வீடு திரும்பும் சென்னைவாசிகள் பலர் சிரமப்பட்டனர். இதை அறியாத தொண்டர்கள், அபிபுல்லா சாலை நோக்கி பல்வேறு ரூட்டுகளில் அணிதிரண்டு கொண்டிருந்தனர்.

அபிபுல்லா சாலை முனையில் சசிகலாவுக்கு புகழாரம் சூட்டும் தட்டிகளைத் தூக்கியபடியே பெண்கள், முதியவர்கள் திரண்டனர். சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் காரினுள் அமர்ந்து சசிகலா வருகையை எதிர்நோக்கியிருந்தார். சசிகலா நெருங்கிவிட்டார் என்ற தகவல் அறிந்து, ஒரு கையில் தமது மகனை சுமந்தபடியே நின்றிருந்த ஒரு தாய், ''சின்னம்மா வாழ்க, டி.டி.வி தினகரன் வாழ்க'' என முழங்க ஆரம்பித்தார். கூடவே, தனது மகனையும் முழங்கும்படி கூறினார் . அச்சிறுவனோ, பின்பக்கமாக 'டைஃபி' அமைப்பு நிறுத்தி வைத்திருந்த, அனிதா தற்கொலைக்கு நீதி கேட்கும் பெரிய தட்டியை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். அனிதா வீட்டுக்குச் சென்ற தினகரன், ''நம்ம குழந்தைகள் எல்லோரும் படித்து முன்னேற வேண்டும். அவர்கள் கல்வியை யார் தடுக்கவும் நாம் விடக்கூடாது'' என்று பேசியதுதான் எனது நினைவுக்கு வந்தது. அந்த நினைவை வழக்கம்போலவே 'பூந்தமல்லி தாண்டிட்டாங்களாம் ' என்ற குரல் திசைதிருப்பியது. அந்தக் கணநிமிடத்தில் தூரத்தில் சசிகலா கார் கான்வாய் கண்ணில் தெரிந்தது. முன்னால் வந்த ஜீப்பில் தங்க தமிழ்ச்செல்வன் தொங்கியபடியே கூட்டத்தை விலக்கியபடியே வர, பின்னால் காரின் பின்சீட்டில் அமர்ந்தபடி அனைவருக்கும் வணக்கம் சொல்லியபடியே வந்தார் சசிகலா. நேரம் அப்போது 10 மணியைக் கடந்தது.

சசிகலா ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் போலீஸ் வேனில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி காமிராக்கள் காட்சிகளாகப் பதிவாக்கியபடியிருந்தன.

''சின்னம்மா வாழ்க'' என்ற உற்சாக முழக்கம் ஓங்க சசிகலா வீட்டுக்குள் செல்ல, "பரோல் கிடைக்க தாமதத்துக்கு பல வேலைகள் செய்தனர். போயஸ் இல்லம் போகும் எண்ணமே இல்லை. இருந்தாலும் போயஸ் போய்விடுவோமோ என்று பயந்து தடுக்கும் வேலைகளில் ஈடுபட்டனர்" என்றார் தினகரன். யார் தடுத்தனர் என செய்தியாளர்கள் கேட்க, "யாரு, எல்லாம் நம்ம அண்ணன் எடப்பாடி பழனிசாமியும், புலிகேசிகளும்தான் " என்றார் சிரித்தபடி.

சசிகலாவைப் பார்த்துவிட்டு உற்சாகமாக பெண்கள் திரும்ப அவர்களிடம் பேச முற்பட்ட நேரம் பழகிய குரல் ஒன்று இடைமறித்தது . "என்னது சின்னம்மா பூந்தமல்லி தாண்டிட்டாங்களா?" அதேகுரல், அதே நபர் ஆனால், அவர் பொடனியில் ஒரு போடு போட்ட பெண்கள், ''மண்டு சின்னம்மா வீட்டுக்கு வந்து பத்து நிமிஷம் ஆகுது. உன்ன மாதிரி ஆளெல்லாம் வச்சுக்கிட்டு கட்சி நடத்த வேண்டியிருக்கு " என்றபடியே அதட்டி அனுப்பியவர்கள் நம் பக்கம் திரும்பினர் .



"எங்க சின்னம்மா மீண்டும் வந்துட்டாங்க. அவசர பரோல்தான் என்றாலும் இந்த அஞ்சு நாளும் அவங்கள (எடப்பாடி பழனிசாமி ) என்ன ஆட்டு ஆட்டுவிக்கப் போறாங்க பாருங்க. இந்த கூட்டத்தை பார்த்தீங்க இல்ல. சின்னம்மா பலம் புரிஞ்சுருக்கும். அப்போ போட்டதெல்லாம் சபதமில்ல. இப்போ போடுறதுதான் சபதம். அவர முதல்வர் பதவியில் இருந்து கீழ இறக்காம விடமாட்டாங்க." என்றவர்களிடம் ''எப்படி'' என்றோம். "அம்மா, பரப்பன அக்கிரகார சிறைக்கு போயிட்டுத் திரும்பிய பிறகுதான் தொடர்ச்சியா எம்.ஜி.ஆர் மாதிரி ஆட்சியைப் பிடிச்சாங்க. இப்போ சின்னம்மாவும் ஜெயில்லருந்து பரோல்ல திரும்பியிருக்காங்க. இனி எல்லாம் நல்லபடியா நடக்கும். அந்த ஜெயில் ராசி அப்படி " என்றபடியே ''வருங்கால முதல்வர் சசிகலா'' என்று முழங்கியபடியே கலைந்து சென்றனர்.

எப்போதும் தோற்கடிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பது மக்களின் இரக்கப் பண்பு. தம்மால் பதவி பெற்றவர்களே தமக்கு துரோகம் செய்துவிட்டதாக தோற்றம் உருவாக, அது சசிகலாவுக்கு சிம்பதியை உருவாக்கியுள்ளது. இதையே பரோலில் திரும்பிய பயணத்தில் திரண்ட கூட்டம் வெளிப்படுத்துகிறது.

சென்டிமென்ட்கள் சாமானிய மக்களுக்கு கை கொடுக்குமோ கொடுக்காதோ... ஆனால், சசிகலாவுக்கு கைகொடுக்கும்போல் தெரிகிறது!


வாக்கி டாக்கி ஊழல் ஓவர் ஓவர்' - மவுனம் காக்கும் தமிழக அரசு

vikatan.com



தமிழகத்தில், அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது வைக்கப்படும் முறைகேடு புகாரில் இது லேட்டஸ்ட்! 'காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் வாக்கி டாக்கி கொள்முதல் செய்த விவகாரத்தில், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டிருக்கிறார்.


உள்துறை செயலர் கடிதம்

ஊடகத்தில் வந்த செய்தியை அடுத்து இப்போது இந்த விவகாரம் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் செய்யும் அளவுக்கு சென்றிருக்கிறது. ஏற்கெனவே, குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட டி.கே. ராஜேந்திரன் மீது மீண்டும் ஒரு புகார் கூறப்பட்டிருக்கிறது.

உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, செப்டம்பர் 23 ஆம் தேதியிட்டு டி.ஜி.பி-க்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 11 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டிருக்கிறார்.

காவல்துறையை நவீன மயமாக்குவதற்கு அரசு சார்பில், 47.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், வாக்கி டாக்கி வாங்குவதற்கு 83.45 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது ஏன்? ஒதுக்கப்பட்ட நிதியைவிட இரண்டு மடங்கு தொகைக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டது ஏன்? டெண்டரில் பங்கேற்ற 'மோட்ரெல்லா இந்தியா' என்ற ஒரே ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டிருப்பது இதன் உண்மைத் தன்மையை சந்தேகிப்பதாக இருக்கிறது. இந்த நிறுவனம் டெண்டருக்கு விண்ணப்பிக்கும்போது, வாக்கி டாக்கி கருவிகளை இறக்குமதி செய்வதற்கு உரிய முகவர் உரிமை லைசென்ஸ் பெற்றிருக்கவில்லை. எனினும் அந்த நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

டெண்டர் விதிமுறை மீறல்


இதன் தொடர்ச்சியாக ஜூலை மாதக் கடைசியில்தான், 'இந்த லைசென்ஸை நாங்கள் வாங்கி விடுகிறோம்' என்று உறுதி செய்யும் ஆவணத்தைத் தாக்கல் செய்திருக்கின்றனர். எனவே, டெண்டர் விண்ணப்பம் செய்பவர்கள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் இல்லாமல் எப்படி இந்த நிறுவனத்துக்கு டெண்டர் தரப்பட்டது என்பது குறித்தெல்லாம் விளக்கம் அளிக்க வேண்டும்.டெண்டருக்கு விண்ணப்பித்த மோட்ரெல்லா நிறுவனம், டெண்டருக்கான விதிமுறைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருக்கிறார்களா? அந்த நிறுவனத்துக்கு டெண்டர் இறுதி செய்யும் முன்பு அரசிடம் தெரிவிக்கப்பட்டதா... என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். டெண்டருக்கு விண்ணப்பித்த ஒரே ஒரு நிறுவனத்துக்கு எந்த விதிமுறையின் கீழ் டெண்டர் வழங்கப்பட்டது என்றும் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், இந்த டெண்டரில், ஜி.எஸ்.டி வரியால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி டி.ஜி.பி-க்கு விளக்கம் கேட்டு உள்துறை செயலாளர் கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தில் உள்ள தகவல்கள் லீக் ஆனதால்தான் இந்த விவகாரமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடரும்

இந்நிலையில், புதிய ஆளுநர் புரோஹித்தை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'வாக்கி டாக்கி முறைகேடு தொடர்பாக டி.ஜி.பி-மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான ஆர்.எஸ் பாரதியிடம் பேசினோம். "தளபதி மு.க ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில், 'தேவையான நடவடிக்கை எடுக்கவும்' என்று கவர்னர், தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். அதன்பின்னர், 'என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம்' என்ற தகவலை தலைமைச் செயலாளர், ஆளுநருக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இதுபோன்று ஆளுநருக்கு விளக்கம் அளிக்காது என்றே நினைக்கிறேன். அடுத்தக்கட்டமாக தி.மு.க இது குறித்து நீதிமன்றத்தில் முறையிடும். நீதிமன்றத்தில், வழக்குத் தொடரும்போது, 'நீங்கள் ஆளுநரிடம் புகார் செய்திருக்கிறீர்களா...' என்று கேட்பார்கள். அதனால்தான் இப்போது ஆளுநரிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அரசுத் தரப்பில் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், உள்துறையைக் கையில் வைத்திருப்பவர் என்ற முறையில், எடப்பாடி பழனிசாமி தலையிட்டாரா என்பதையும் அரசு விளக்க வேண்டும்" என்றார்.

மூன்று மடங்கு அதிக விலை

இது குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோவிடம் கேட்டோம். "உள்துறை செயலாளர் தெளிவாக கேட்டிருக்கிறார்.டெண்டரில் ஒன்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்காவிட்டால், ரத்து செய்து விட்டு மீண்டும் டெண்டர்விட வேண்டும். அந்த நிறுவனத்துக்கு லைசென்ஸ் இல்லை. லைசென்ஸ் இல்லாத நிறுவனத்துக்கு ஏன் கொடுக்க வேண்டும்? வாக்கி டாக்கியின் விலை அதிகபட்சமே 47 ஆயிரம் ரூபாய்தான். 50 ஆயிரம் என்று வைத்துக்கொண்டால்கூட, ஒரு வாக்கி டாக்கியை 2.08 லட்சம் ரூபாய்க்கு இவர்கள் வாங்கியிருக்கின்றனர். மொத்தம் 4 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கியிருக்கின்றனர். இந்தக் கூடுதல் தொகைக்கு 16 ஆயிரம் வாக்கி டாக்கிகளை வாங்கியிருக்கலாம்.

அடிப்படையான விஷயங்களைக் கேட்கிறார் உள்துறைச் செயலாளர். ஆனால், இப்போது உள்துறை செயலாளரையே மாற்றப்போவதாகச் சொல்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களுக்கு வளைந்து கொடுப்பதால்தான் டி.ஜி.பி-க்கு பணி நீட்டிப்புக் கொடுக்கின்றனர். அவருடைய கேடரில், அவரைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் டி.ஜி.பி-யாக ஆகக்கூடிய தகுதியில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை எல்லாம் மீறித்தான் இவருக்கு பதவியைக் கொடுத்திருக்கின்றனர்.

ஜெயலலிதா ஆட்சியில் உளவுத்துறையில் கண்ணப்பன் இருந்தார். அவருக்கு பணி நீட்டிப்பு கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், அவரோ 'தனக்கு பணி நீட்டிப்பு வேண்டாம்' என்று சொல்லிவிட்டார். ஆனால், இவருடைய நேர்மையை என்னவென்று சொல்வது? ஆளுநர் முறைப்படி, எதிர்க்கட்சிக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். உள்துறைச் செயலாளர் கேள்வி கேட்டிருக்கிறார். டி.ஜி.பி தலைமையில் இதை விசாரணை செய்யக்கூடாது. ஏனெனில், இந்த மாதிரி சூழலில், சம்பந்தப்பட்டவரே விசாரணை நடத்தினால் உண்மை எப்படி வெளியே வரும்?

'ஏன் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது?' என்று தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் கேட்க வேண்டும். ஆனால், ஆளுநர் தன்னிச்சையாக அப்படிச் செய்வாரா என்று தெரியவில்லை. தலைமைச் செயலாளரிடம் அனுமதி வாங்கித்தான் டெண்டர் விட வேண்டும். இப்படி இருக்கும் சூழலில், தமிழக அரசே இதுகுறித்து விசாரணை செய்யக்கூடாது. மக்கள் வரிப்பணம்தான் இதில் கொள்ளயடிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

வழக்கம்போல இந்த விவகாரத்திலும் தமிழக அரசு, இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனமாக இருக்கிறது!

சேலத்தில் அதிக டெங்கு உயிரிழப்புகள் குறித்து அமைச்சர் விளக்கம்!

October 09, 2017




மிகப்பெரிய மாவட்டம் என்பதனால்தான், முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில், அதிக டெங்கு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில், 296 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் காமராஜ் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

அப்போது, சேலத்தில் டெங்கு உயிரிழப்புகள் அதிகரித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த காமராஜ், சேலம் மிகப்பெரிய மாவட்டம் என்பதுதான், அதிக உயிரிழப்புக்கு காரணம் என விளக்கம் அளித்தார்.

டெங்கு காய்ச்சல் பிரச்னையை மையமாக வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
உலகின் ஆக விலையுயர்ந்த அரிசி அடுத்த மாதம் சிங்கப்பூரில் அறிமுகம்

5/10/2017 19:33

உலகின் ஆக விலையுயர்ந்த அரிசி விரைவில் சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவுள்ளது.

கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில், கடந்தாண்டு, உலகின் ஆக விலையுயர்ந்த அரிசியாக Kinmemai Premium blend இடம்பெற்றது. ஒரு கிலோகிராம் அரிசிக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய விலை 149 வெள்ளி.

இணையம் மூலமாக அந்த அரிசியை நீங்கள் நம்பவர் முதல் தேதியிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஆறு 140 கிராம் பொட்டலங்களின் விலை 155 வெள்ளி.

ஜப்பானுக்கு வெளியே அந்த அரிசி கிடைக்கும் முதல் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. மற்ற அரிசி வகைகளை விட இந்த அரிசி சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

seithimedia corps
டெங்கு கிருமிகள் முன்பைவிட பல மடங்கு வீரியம் பெற்றுள்ளன! - மருத்துவர் கு. கணேசன் பேட்டி

Published : 08 Oct 2017 11:25 IST

வெ.சந்திரமோகன்





கடந்த சில மாதங்களாகவே டெங்கு குறித்த அச்சம் பரவிவரும் நிலையில்,டெங்கு காய்ச்சல் பற்றியும்,டெங்கு அச்சுறுத்தலை எதிர்கொள்வது பற்றியும் விளக்குகிறார் மருத்துவர் கு.கணேசன்.

டெங்கு இத்தனைப் பேரைப் பலிவாங்குகிறதே? 2013-க்குப் பிறகு இப்போதுதான் அதிகமான பேர் இறந்திருக்கிறார்கள். என்ன காரணம்?

சுற்றுச்சூழல் மோசமாகிவிட்டது. தெருச் சுத்தம் பேணுவதில்லை. திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் அகற்றுதல் போன்ற சுகாதார விஷயங்கள் மிகவும் மோசமாகிவருவது முதல் காரணம். நாட்டின் தட்பவெப்பநிலை மாற்றம் அடுத்த காரணம். டெங்குவை ஏற்படுத்தும் கிருமிகள் மரபுரீதியில் முன்பைவிட பல மடங்கு வீரியம் பெற்றுள்ளது முக்கியக் காரணம். முன்பெல்லாம் டெங்கு பாதிப்பின் காரணமாக, நோயாளி ஒரு வாரத்துக்குப் பிறகு மோசமான நிலைக்குத் தள்ளப்படுவது வழக்கம். ஆனால், இப்போதோ மூன்றாம் நாளில் பலரும் ஆபத்தான கட்டத்துக்குச் சென்றுவிடுகின்றனர்.

டெங்கு கிருமிகள் மொத்தம் நான்கு வகை. சாதாரண வைரஸ் காய்ச்சல்போல் ஒரு வாரத்துக்கு வந்து செல்லும் வகையும் உண்டு. ஆபத்தான கட்டத்துக்கு இழுத்துச்செல்லும் வகையும் உண்டு. முன்பு ஏதேனும் ஒரு வகை கிருமிதான் நோயை ஏற்படுத்தும். இப்போதோ ஒருவருக்கே இரண்டு வகை கிருமிகள் நோயை உண்டுபண்ணுகின்றன. முன்பு ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் இந்தக் கிருமிகளால் வாழ முடியாது. இப்போதோ அந்த இடங்களிலும் வாழ்வதற்கான மரபியல் மாற்றங்கள் இந்தக் கிருமிகளுக்கு ஏற்பட்டுள்ளன.

டெங்கு வந்திருக்கிறது என்பதை எப்படி அறிந்துகொள்வது?

கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும். குழந்தைகள், பெரியவர்கள் என வயது வேறுபாடின்றி அனைவரையும் இந்த நோய் தாக்கக்கூடியது. பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் டெங்கு காய்ச்சல் அவர்களை அவ்வளவாக பாதிப்பதில்லை. இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே.

திடீரென்று கடுமையான காய்ச்சலுடன் நோய் ஆரம்பிக்கும். தொடர்ச்சியான வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, களைப்பு, இருமல் ஆகிய அறிகுறிகள் சேர்ந்துகொள்ளும். மூட்டுவலி அதிகமாகும். எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். அடுத்து உடலில் அரிப்பு இருப்பதோடு, சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். டெங்கு வைரஸ் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், அவற்றில் துளை விழுந்து ரத்தத்தைக் கசியவிடும். இதன் விளைவால் ஏற்படும் சிவப்புப் புள்ளிகளே இவை.

ஆபத்து எப்போது?

பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இவர்களுக்கு ஆபத்து அதிகம். கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்க சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்பு மூட்டுகள் ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். உரிய சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிரிழப்பு ஏற்படுவதுண்டு.


சிகிச்சை முறைகள் பற்றிச் சொல்லுங்கள்…

டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் குறைக்கவும், உடல்வலியைப் போக்கவும் மட்டுமே மருந்துகள் தரப்படும். சாதாரண டெங்கு உள்ளவர்கள் வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்கலாம். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; உப்பும் சர்க்கரையும் கலந்த கரைசல், பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இந்தச் சிகிச்சையில் பெரும்பாலோருக்கு நோய் கட்டுப்பட்டுவிடும்; சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் ஏற்றப்பட வேண்டும். அப்போது மட்டுமே நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது வரும்.

இன்னும் சிலருக்கு தட்டணுக்கள் மோசமாக குறைந்துவிடும். அதை ஈடுகட்டத் தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்த வேண்டும் இதற்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

எப்படித் தற்காத்துக்கொள்வது?

டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு கொசுக்களை ஒழிப்பது ஒன்றே தலையாய வழி. டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் முட்டையிடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச் சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, கொசு ஸ்பிரே போன்றவையும் பலன் கொடுக்கும். கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம்.

வீட்டைச் சுற்றியுள்ள சாக்கடையை மட்டுமல்ல, கொசுக்கள் வாழும் இடங்களான மேல்நிலைத் தொட்டிகளையும், கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடி வைக்க வேண்டும். தண்ணீரைத் திறந்த பாத்திரங்களில் ஊற்றிவைக்காமல், மூடி உள்ள பாத்திரங்களில் ஊற்றிவைப்பது பாதுகாப்பானது. குப்பைத்தொட்டிகள், தேங்காய் மூடிகள் ஆகியவற்றில் கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டிலுள்ள தண்ணீர்த் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காயவைக்க வேண்டும். சிமெண்ட் தொட்டிகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர், ஏர்கண்டிசனர் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையும் இவ்வாறே சுத்தப்படுத்த வேண்டும்.

தடுப்பு மருந்துகளுக்கு வாய்ப்பில்லையா?

டெங்கு கிருமிகளில் நான்கு வகைகள் உள்ளதால் நான்கு வகைகளுக்கும் சேர்த்துத் தடுப்பூசி கண்டுபிடிப்பதும் சிரமமாக உள்ளது. உலக அளவில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் அதற்கான ஆராய்ச்சிகளுக்கு ஆக்கபூர்வமாக எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை. கொசுக்களை ஒழிப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் புதுப்புது வழிகளைத் தேடுவதில் அதிக முனைப்பு காட்டுகின்றன. இந்தியாவில் அப்படியான ஏற்பாடுகள் துளியும் இல்லை.

அரசுகள் என்ன செய்ய வேண்டும்?

இதுபோன்ற சூழலில் போர்க்கால நடவடிக்கைகள் தேவை. திடக்கழிவு மேலாண்மையும் கொசு ஒழிப்பு இயக்கங்களும் மேம்படவில்லை. அதில் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவோடு ஒப்பிடும்போது, ஐரோப்பிய நாடுகளில் டெங்குவின் பாதிப்பு அதிகமில்லை. இதற்கே அந்த நாடுகள் பதற்றமடைந்து, டெங்குவைத் தடுப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டுகின்றன. ஆனால், ஒரு கொள்ளைநோய் தாக்கும்போது, மக்களுக்கு முழுவதுமாக சிகிச்சை தருவதற்கும் வழியில்லை; நோயின் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதற்குத் தடுப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் முடியவில்லை எனும் நிலைமை உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து முனைப்புடன் செயல்பட்டால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்!

- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

Implement Pay panel report, say revenue department pensioners

The Revenue Department pensioners have appealed to the State Government to implement the Pay Commission Report with effect from January 1, 2016 and give 20% interim relief.
A resolution to this effect was passed in their 18th district-level conference held here on Saturday.
The meeting said the anomalies plaguing the new cashless health insurance scheme should be weeded-out and the contributory pension scheme withdrawn. Pensioners should be given monthly medical allowance of Rs. 1,000. The Tamil Nadu Administrative Tribunal should be created to probe government employees’ service-related cases.
Besides increasing the family protection assistance from Rs. 50,000 to Rs. 1 lakh, the government should give Rs. 25,000 for performing the last rituals of the pensioners. The retired government employees should be given 50% fare concession while travelling in government buses.
Like the Union Government, full pension should be given to those who have served for 20 years and 10% additional pension given to the beneficiaries who have crossed the age of 75. The existing 30% family pension should be increased to 40%.
Former Revenue Secretary K. Dhanavel participated in the meeting.

oct 8, 2017

AIRTEL - New Recharge Plan Offers

Airtel புதிய ஐந்து ரிசார்ஜ் சலுகைகள்....



ஏர்டெல்லும் மலிவு விலை ஆஃபர்களை அளிக்க துவங்கியுள்ள நிலையில்,புதிய ஐந்து ரிசார்ஜ் திட்டங்களை வழங்கியுள்ளது.

# ரூ.399 பேக்: 1 ஜிபி/ஒரு நாள் & அன்லிமிடெட் வாய்ஸ் கால், 70 நாட்கள் வேலிடிட்டி.
# ரூ.199 பேக்: 1 ஜிபி/ஒரு நாள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டி.
# ரூ.149 பேக்: 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டி.
# ரூ.90 பேக்: ரூ.88 டாக்டைம் அன்லிமிடெட் வேலிடிட்டி.
# ரூ.60 பேக்: ரூ.53 டாக்டைம் அன்லிமிடெட் வேலிடிட்டி.

விஐபி கலாசாரத்துக்கு முடிவு கட்டிய ரயில்வே

By DIN | Published on : 09th October 2017 02:07 AM |



ரயில்வே வாரியத் தலைவரை வரவேற்கவும், வழியனுப்பவும் மூத்த அதிகாரிகள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விஐபி கலாசாரத்துக்கு ரயில்வே அமைச்சகம் முடிவு கட்டியுள்ளது.
துறைசார்ந்த பணி காரணமாக வருகை புரியும் ரயில்வே வாரியத் தலைவர், உயரதிகாரிகள் ஆகியோரை அவர்களுக்கு அடுத்த நிலையில் பணிபுரியும் அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்று அவர்கள் பணிமுடிந்து திரும்புகையில் வழியனுப்பவும் வேண்டும் என்பது கடந்த 36 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது.

கடந்த 1981-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ரயில்வே சட்ட விதிகள் இதற்கு துணை புரிந்தது. இந்நிலையில், இந்த நடைமுறைக்கு முடிவு கட்டும் வகையில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதிய வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில்வே வாரியத் தலைவரை விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்துக்குச் சென்று உயரதிகாரிகள் இனி வரவேற்கத் தேவையில்லை. அதேபோல், அவர் பணி முடிந்து வீடு திரும்பிச் செல்லும்போது ரயில் நிலையம் அல்லது விமான நிலையத்துக்குச் சென்று உயரதிகாரிகள் வழியனுப்பவும் தேவையில்லை. 

அந்த நடைமுறையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
ரயில்வே அதிகாரிகள் நீண்ட நாள்கள் விடுப்பில் இருக்கக் கூடாது. பணி காரணமாக வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டால் சொகுசு வசதிகளை எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரும் மலர்க்கொத்து அல்லது பரிசுப் பொருள்கள் அளித்து தன்னை வரவேற்க வேண்டாம் என்று ரயில்வே வாரியத்தின் தலைவர் அஸ்வனி லோஹனியும் தெரிவித்துள்ளார்.

புதிய வழிகாட்டுதல்கள் குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், "ரயில்வேயில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களை உயரதிகாரிகள் தங்களது வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.
Plea seeks transfer of medicos
Chennai: A writ plea has been made in the Madras High Court to transfer 146 second year students of Annai Medical College and Hospital at Sriperumbudur to some other government colleges. Justice N Kirubakaran, before whom the petitions from Hari Prasad of Arcot and 145 others came up on Friday, adjourned the matter till October 10. According to A Sirajjudin, a senior advocate, the petitioner students were admitted in the first year MBBS course during 2016-17 under the government as well as management quota. They were in the second year now.
However, by an order dated August 10, 2017, the Union Health Ministry had debarred the college from admitting students for two years i.e. for 2017-18 and 2018-19 as the college did not rectify the deficiencies pointed out by Medical Council of India. The order also authorised MCI to encash the bank guarantee of D2 crore. The students feared that the same deficiencies would prevent them from getting quality education. The hospital attached to the college was also locked and there was no staff at present, as they had left jobs following the August 10 order.
The college was run by Sri Devi Karumari Amman Educational Trust, which had borrowed D86 crore from Central Bank of India and another D60 crore from Bank of India. Now, the whole loan had become NPA and Central Bank of India had taken possession of the land and building. It was also bringing a part of the land for auction. Loss of this property in the auction would create further deficiency in the infrastructure. Hence, the present petition for a directive to the State Health department to transfer the petitioner students to other medical colleges run by the department, counsel said.

Sanitary worker turns ‘nurse’, administers saline at Madurai's Government Rajaji Hospital


By K K Sundar & Lalitha Ranjani  |  Express News Service  |   Published: 08th October 2017 03:14 AM  |  

Worker turns nurse: ​A sanitary worker administering saline to a patient at Madurai's Government Rajaji Hospital. (Express Photo | KK Sundar)
MADURAI: In a shocking incident, a contractual sanitary worker was spotted administering saline to a patient at Government Rajaji Hospital (GRH) on Friday night. It’s a duty to be performed either by a house surgeon or a nurse.
The worker concerned was administering saline to a patient admitted in the Urology Ward (Number 307). More shocking was her revelation that she was working under the instruction of the house surgeon, since there was no nurse in the ward at that time. The patient had undergone surgery a few days ago and was in semi-conscious state. The worker was appointed by Padmavathi Hospitality and Facilities Management Services.
When Express contacted the Dean (in-charge) of GRH, Dr D Maruthupandian, he said he did not have details and added, “The sanitary worker is completely at fault. She should not have administered saline even if the doctor had instructed her, as it was not her duty.”
Medical Council of India (MCI) guidelines say that for every eight patients in the general ward, there should be one nurse. But at GRH, around 60 patients are taken care of by one. One attendant said that Friday night’s was no stray incident, which throws light on a number of issues plaguing the hospital administration. It raises the question that when it is the duty of either the house surgeon or the nurse to administer saline to a patient in the hospital, how could they pass it on to someone who is not trained to handle such jobs.
The GRH, which has a total of 440 nurses (340 permanent and 100 temporary) on its payroll, has been largely understaffed in this aspect, considering that it has about 2,600 beds.
Blaming the administrative inefficiency of the State Health and Family Welfare Department for non-recruitment of nurses for years, C Anand Raj, a Madurai-based health rights activist, said, “An RTI response received a couple of years ago revealed that Madurai tops the list of Government Medical College Hospitals in the State that are facing shortage of nurses. At least 1,200-1,300 nurses are required at GRH which has a daily inflow of about 13,000 patients.”
He added that about 800 nurses should be appointed to tackle the imbalance in the patient-nurse ratio.
A senior nurse, on condition of anonymity, stated that a hospital like GRH should have at least 1,300 nurses. But at present, only 440 are working in three shifts.
She added that seven-hour shifts sometimes get extended to 12 hours due to the shortage of nurses.

Court takes a cue from child's cry, grants aunt his custody

TNN | Oct 8, 2017, 09:45 IST

Representative imageRepresentative image
CHENNAI: It is not always statutes that a court relies upon to render justice. A two-year-old child's cry was all that was needed for the Madras HC recently to take a cue and decide on the boy's custody .
It was the first working day after Dasara holidays. Court hall no.-6 was reverberating with arguments between the paternal grandmother and maternal aunt of the two-year-old baby boy , whose mother was killed by his father and grandfather. The arguments were on the habeas corpus petition moved by the grandmother seeking custody of the child.

In 2014, T Arun, a differently abled man from Udayarpalayam, Ariyalur, got married to R Kanagavalli of Kallangulam, Jayankondam. Within years, the couple parted ways and their son Bharani lived with his mother.

In August 2016, Kanagavalli went missing and hence Bharani started living with his mother's sister Latha.


Almost after a year, police ma de a breakthrough in the Kanagavalli missing case. They found that her husband had murdered her and buried the body with the help of his father.

TOP COMMENT

Remembering King soloman''s verdictMahadevan Lakshman

While Arun and his father are behind the bars for the murder, Arun's mother filed a habeas corpus plea in the high court seeking custody of her grandson. When the plea came up for hearing before a division bench of Justice Rajiv Shakdher and Justice N Sathishkumar, she contended that her grandson Bharani was forcibly taken away from her. In the presence of the judges, when the police took the child from his maternal aunt and handed over to his grandmother, the child refused to go and instead started crying inconsolably . It stopped sobbing instantly once his aunt took hold of him.


Taking a cue from the child's behaviour, expressing his desire to be with his aunt, the bench directed his custody to Latha till orders are passed by a competent court on the issue. The court also directed the police to provide adequate security to Latha and the child.
இந்திய - சர்வதேச அறிவியல் விழா சென்னையில் 13ம் தேதி துவக்கம்
பதிவு செய்த நாள்08அக்
2017
22:25

சென்னை:''இந்திய - சர்வதேச அறிவியல் விழா, சென்னையில், 13ல் துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது. ''பப்பாளி பழத்தில் இருந்து, டி.என்.ஏ., பிரித்தெடுக்கும் முயற்சியில், ௧,௦௦௦ மாணவர்கள் பங்கேற்று, கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர்,'' என, மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சர், ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்.

கின்னஸ் சாதனை

சென்னையில், நேற்று அவர் கூறியதாவது:இந்திய - சர்வதேச அறிவியல் விழா, சென்னையில், வரும், 13 முதல், 16ம் தேதி வரை நடக்கிறது. சென்னை, அண்ணா பல்கலை, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகிய, ஐந்து இடங்களில் இந்த விழா நடக்கிறது.

பப்பாளி பழத்தில் இருந்து, டி.என்.ஏ.,வை பிரித்தெடுப்பதில், 1,000மாணவர்கள் பங்கேற்று, கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர். இது போன்று, 15 துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. 

புதிய படைப்புகள்மத்திய அரசின் சுற்றுச் சூழல் சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்தும், விவரிக்கப்பட உள்ளன.தொழில்நுட்ப ரீதியான பல்வேறு பிரச்னைகளுக்கு, அறிவியல் முறையில் தீர்வு காணவும், கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து, புதிய படைப்புகளை உருவாக்கவும், இந்த விழா வழி வகுக்கும். இதில், நாட்டின் சிறந்த நிறுவனங்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்பர்.இவ்வாறு ஹர்ஷ வர்த்தன் கூறினார்.

'டெங்கு தடுக்க புதிய மருந்து?'

அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறுகையில், ''உலக தரத்திற்கேற்ப, அறிவியல் தொழில்நுட்ப துறையில், நம்நாடு மேம்பட்டு வருகிறது. இந்திய விஞ்ஞானிகள், பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட, மக்களை அச்சுறுத்தும் நோய்களுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில், நல்ல முடிவு கிடைக்கும்,'' என்றார்.
பங்களிப்பு ஓய்வூதிய நிதி 18 ஆயிரம் கோடி எங்கே? ஆளுக்கொரு பதில் தரும் அரசு செயலர்கள்

பதிவு செய்த நாள்08அக்
2017
22:21

திண்டுக்கல்:பங்களிப்பு ஓய்வூதிய நிதி, 18 ஆயிரம் கோடிரூபாய் எங்குள்ளது என்பதில், அரசு செயலர்களின் குளறுபடியான பதிலால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தவிப்பில் உள்ளனர்.

திண்டுக்கல், எரியோடு ஆசிரியர் பிரெடெரிக் எங்கெல்ஸ், ஆகஸ்டில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய நிதி குறித்து விளக்கம் கோரினார்.அவரது கேள்வியில், '2017 - 2018 சட்டசபை மானிய கோரிக்கை, கொள்கை விளக்க குறிப்பில், 1.4.2003க்கு பின் நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்பு தொகை மற்றும் வட்டி உட்பட, 18 ஆயிரத்து, 16 கோடி ரூபாய், தமிழக அரசின் ஓய்வூதிய பொது கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என, குறிப்பிடப்பட்டுள்ளது.

'கடந்த மார்ச் 31ம் தேதி நிலையில், ஓய்வூதிய பொதுக் கணக்கில் வைக்கப்பட்டுள்ள மொத்த தொகை எவ்வளவு, அது எந்தெந்த கணக்கு தலைப்புகளில் உள்ளது' என்ற விபரம் கோரி இருந்தார்.இதற்கு, செப்., 5ல், அரசு சார்பு செயலர் பாஸ்கரன் அளித்த பதிலில், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்பு தொகை, வட்டியுடன் ஒட்டுமொத்த தொகை, 18 ஆயிரத்து, 16 கோடி ரூபாய், மத்திய அரசின் கருவூலப் பட்டியலில் முதலீடு செய்யப்படுகிறது' என, பதில் அளித்துள்ளார்.

பொதுக் கணக்கில் முதலீடு

பின், செப்., 21ல் அரசின் கூடுதல் தலைமை நிதித் துறை செயலர் அளித்த பதிலில், '1.4.2003 அல்லது அதற்கு பின், தமிழக அரசு பணியில் சேர்ந்துள்ள பணியாளர்கள், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.'அரசு பணியாளர்களிடம் இருந்து புதிய
ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பாக, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில், அரசும் சமபங்கு தொகை செலுத்துகிறது.
'அரசு தகவல் தொகுப்பு விபர மைய உதவியுடன், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்குகள்
பராமரிக்கப்படுகிறது.

இந்த நிதி, 18 ஆயிரத்து, 16 கோடி ரூபாய், அரசின் பொது கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

பங்களிப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய நிதி, மத்திய அரசின் கருவூலப் பட்டியலில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, அரசு செயலர் பதில் வழங்கிஉள்ளார். அரசு கூடுதல் தலைமை நிதி துறை செயலர் பதிலில், அரசின் பொது கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது, அரசு ஊழியர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்திஉள்ளது.
'தாமதமாக மனு செய்ததால் இன்சூரன்ஸ் மறுக்க முடியாது

பதிவு செய்த நாள்09அக்
2017
01:30

புதுடில்லி:'காப்பீடு கேட்டு மனு செய்வதற்கு தாமதம் ஆனது என்ற காரணத்தால், அந்த மனுவை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

'தாமதமாக மனு செய்தால், அதை நிராகரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அதிகாரம் உள்ளது' என, தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்திருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால், எஸ். அப்துல் நசீர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

ஒருவர் இன்சூரன்ஸ் கேட்டு மனு தாக்கல் செய்வதற்கு தாமதமானால், அதற்கான காரணம் ஏற்புடையதாக இருந்தால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அந்த மனுவை நிராகரிக்க முடியாது. இவ்வாறு செய்தால், மக்களின் நம்பிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழந்துவிடும். அதனால், ஹரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்த மனுதாரருக்கு, காணாமல் போன அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு, 8.35 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குழந்தையை காப்பாற்ற பணமின்றி பரிதவிக்கும் சேலம் பெண் போலீஸ்

பதிவு செய்த நாள்  09அக்
2017
00:25




சேலம்:குடிகார கணவரின்ஆதரவு இல்லாத பெண் காவலர், மகனை காப்பாற்ற பணமின்றி தவித்து வருகிறார்.

சேலம் மாவட்டம், சித்தனுாரைச் சேர்ந்தவர் சுதா, 30; மாநகர ஆயுதப்படை பெண் காவலர். கணவர் ரமேஷ், 33, ஜவுளி கடையில் பணிபுரிகிறார். 8 வயதில் மகள், சஞ்சய், 6, என்ற மகன் உள்ளனர். மது பழக்கம் உடைய ரமேஷ், குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பது இல்லை. சுதா சம்பளத்தில், குடும்பம் ஓடியது.

மஞ்சள் காமாலை

ஜூலை மாதம், டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சுதா, தற்போது தான் அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். அடுத்து, இவரது மகன் சஞ்சய், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டான். 6ம் தேதி, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மஞ்சள் காமாலை கிருமி யின் தாக்கம், 16 புள்ளிகளாக உயர்ந்ததால், கல்லீரல் பாதிக்கப்பட்டு, அதன் தாக்கம், மூளையை பாதித்து, சிறுவன் சுயநினைவை இழந்துள்ளான் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

செயற்கை சுவாசம் அளிக்க, 35 ஆயிரம் ரூபாய், அவசர சிகிச்சை பிரிவில், 15 ஆயிரம், மருந்து, மாத்திரைகளுக்கு, 30 ஆயிரம் என, தினமும் சராசரியாக, 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்.சுதாவுக்கு வழங்கப்பட்டுள்ள, காவலர் இன்சூரன்சில், 'அறுவை சிகிச்சைக்கு மட்டுமே பணம் வழங்க முடியும்' என, இன்சூரன்ஸ் நிறுவனம் கைவிரித்து விட்டது.

கடந்த மூன்று நாட்களாக, சஞ்சய்க்கு அளித்த சிகிச்சைக்கு, இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ள சுதா, தன், 4 சவரன் தங்க சங்கிலியை விற்று விட்டார்.சக போலீசார் பலரிடம் கடன் வாங்கி, மகனை காப்பாற்ற போராடி வருகிறார். வரும் நாட்களில், மருந்து, மாத்திரை கூட வாங்க முடியாத நிலையில் உள்ளார்.

மருத்துவ விடுப்பு

அவரது மூன்று மாத மருத்துவ விடுப்பு, இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நாளை, அவர் பணியில் இணைய வேண்டும். உதவ நினைப்பவர்கள், 94981 - 66461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.''என் கணவர் உதவ மறுத்து விட்டார். முதல்வர் பழனிசாமி, போலீஸ் உயர் அதிகாரிகள் தான், என் குழந்தையை காப்பாற்ற வேண்டும்,'' என, சுதாகண்ணீர் மல்க தெரிவித்தார்.
போதையில் பஸ் ஓட்டிய அரசு டிரைவர் மீது வழக்கு
பதிவு செய்த நாள்08அக்
2017
20:36

விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே, மது போதையில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு அரசு டவுன் பஸ், 50க்கும் மேற்பட்ட பயணியருடன் உளுந்துார்பேட்டை புறப்பட்டது. டிரைவர் வேல்முருகன், 37, ஓட்டிச் சென்றார்.டிரைவர், மது போதையில் பஸ்சை தாறுமாறாக ஓட்டியதால், அச்சமடைந்த பயணியர் சிலர், விஜயமாநகரத்தில் பஸ்சை நிறுத்தச் சொல்லி, இறங்கினர்.

தொடர்ந்து, பஸ்சை ஓட்டிய வேல்முருகன், போதை அதிகமானதும், கோ.பூவனுாரில் பஸ்சை ஓரம் கட்டி நிறுத்தினார். மங்கலம்பேட்டை போலீசார் சென்று விசாரித்ததில், டிரைவர் வேல்முருகன், மது போதையில் இருந்தது தெரிந்தது. டிரைவர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதி; தகவல் தெரிவித்தோர் மீது தாக்குதல்
பதிவு செய்த நாள்09அக்
2017
03:51




பெங்களூரு: பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டது குறித்து, தகவல் தெரிவித்தவர்களை, சிறை அதிகாரிகள் தாக்கியுள்ளது, மனித உரிமை ஆணைய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

'சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டது. இதற்காக, கர்நாடக சிறைத் துறை, டி.ஜி.பி.,க்கு, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது' என, சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா பகிரங்கமாக புகார் கூறினார். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது குறித்த தகவல்கள் தெரிவித்த கைதிகள், ஜூலை 16ல், வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். அப்போது, அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் தாக்கியதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து, கர்நாடக மாநில மனித உரிமை ஆணை யம், தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மனித உரிமை ஆணையத்தின், ஐ.ஜி., சோமேந்து முகர்ஜி, சிறையில் நேரடியாக விசாரணை நடத்தி, 72 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர், மீரா சக்சேனா கூறியதாவது: பரப்பன அக்ரஹாரா சிறை மற்றும் மற்ற சிறைகளில் நடத்தப்பட்ட விசாரணைகள், கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் உள்ளிட்டவற்றில், சிறையில் சில கைதிகள் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு சிலர் மிகவும் பலமாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த அறிக்கை, மாநில அரசுக்கு அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
'ஸ்டிரைக்' நாட்களை ஈடுகட்ட 9 வாரம் சனியன்றும் வகுப்பு
பதிவு செய்த நாள்08அக்
2017
21:00

அனைத்து அரசு பள்ளிகளிலும், ஒன்பது வாரம், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு, செப்.,ல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தியது. அதனால், பள்ளிகள் இயங்காமல் பாதிக்கப்பட்டன. பல பள்ளிகள் திறந்திருந்தாலும், தலைமை
ஆசிரியர் முதல், வகுப்பு ஆசிரியர் வரை,'ஸ்டிரைக்'கில் பங்கேற்றதால், வகுப்புகள் நடைபெறவில்லை.

இந்நிலையில், ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடுகட்டி, வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம் முதல், டிச., வரை, ஒன்பது சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த வேண்டும் என, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள், உத்தரவிட்டு உள்ளனர்.

- நமது நிருபர் -

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...