Monday, October 9, 2017

போதையில் பஸ் ஓட்டிய அரசு டிரைவர் மீது வழக்கு
பதிவு செய்த நாள்08அக்
2017
20:36

விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே, மது போதையில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு அரசு டவுன் பஸ், 50க்கும் மேற்பட்ட பயணியருடன் உளுந்துார்பேட்டை புறப்பட்டது. டிரைவர் வேல்முருகன், 37, ஓட்டிச் சென்றார்.டிரைவர், மது போதையில் பஸ்சை தாறுமாறாக ஓட்டியதால், அச்சமடைந்த பயணியர் சிலர், விஜயமாநகரத்தில் பஸ்சை நிறுத்தச் சொல்லி, இறங்கினர்.

தொடர்ந்து, பஸ்சை ஓட்டிய வேல்முருகன், போதை அதிகமானதும், கோ.பூவனுாரில் பஸ்சை ஓரம் கட்டி நிறுத்தினார். மங்கலம்பேட்டை போலீசார் சென்று விசாரித்ததில், டிரைவர் வேல்முருகன், மது போதையில் இருந்தது தெரிந்தது. டிரைவர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...