Tuesday, March 13, 2018

ஏர்செல்லில் பிரச்னை ஏற்பட்ட பிறகு 10 லட்சம் வாடிக்கையாளர்கள் வோடபோனில் இணைந்துள்ளனர்: வர்த்தக பிரிவு தலைவர் பேட்டி

2018-03-13@ 00:19:52



சென்னை: வோடபோன் நிறுவனத்தில் புதிதாக 10 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக வோடபோன் தமிழ்நாடு வர்த்தக பிரிவு தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இது குறித்து வோடபோன் நிறுவனத்தின் தமிழ்நாடு வர்த்தக பிரிவு தலைவர் முரளி ெசன்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வோடபோன் நிறுவனத்தில் 27 சதவீதம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு வருவாய் 21.8 சதவீதமாக உள்ளது. மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சென்னையில் ரூ.150 கோடி உட்பட தமிழகம் முழுவதும் ரூ.450 கோடி முதலீடு செய்துள்ளோம். இதன் மூலம், வாடிக்கையாளர்களின் வருகைக்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

4ஜி டவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி மக்களின் சிறப்பான சேவைகள் கிடைக்க வழிவகை செய்து வருகிறோம். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதற்கு எம்என்பி எண் கட்டாயம். எனவே, எம்என்பி கிடைக்காதவர்கள் அதனை பெறுவதற்கு எங்களால் முடிந்த வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறோம். ஏர்செல் சேவையில் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு, 10 லட்சம் வாடிக்கையாளர்கள் வோடபோனில் இணைந்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...