Thursday, November 15, 2018

தாம்பரம் - கொல்லம் ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு

Added : நவ 14, 2018 22:36

ஸ்ரீவில்லிபுத்துார்: தாம்பரம் - கொல்லம் சிறப்பு கட்டண ரயில் சேவையை, ஜனவரி வரை நீட்டித்து, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தாம்பரத்திலிருந்து, ஜனவரி 2,4,7,9,16,18,21,23,25 ஆகிய தேதிகளில், மாலை, 5:15 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலுார், கொட்டாரக்கரா வழியாக கொல்லத்திற்கு மறுநாள் காலை, 9:20 மணிக்கு சென்றடைகிறது. அன்றே, மறுமார்க்கத்தில் கொல்லத்திலிருந்து,காலை, 11:30 மணிக்கு புறப்பட்டு, அதே வழித்தடத்தில், மறுநாள் அதிகாலை, 3:30 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இதற்கான முன்பதிவு, நேற்று துவங்கியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024