Tuesday, November 27, 2018


விமானத்தில் இளைஞர் விபரீத விளையாட்டு

Added : நவ 26, 2018 20:10




கோல்கட்டா,: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவை சேர்ந்தவர், யோகவேதாந்த் போத்தார், 21. கோல்கட்டாவிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை செல்வதற்காக, ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் முன் பதிவு செய்து இருந்தார்.

நேற்று காலை, 8:15 க்கு விமானம் புறப்பட வேண்டும். காலை, 7:30க்கு, விமானத்திற்குள் ஏறிய போத்தார், தன் முகத்தை, கைக்குட்டையால் மூடினார். பின், மொபைலில் ஒரு, 'செல்பி' எடுத்து, அதன் பட விளக்கத்தில், 'விமானத்தில் பயங்கரவாதி; பெண்களை கொல்லப்போகிறேன்' என எழுதி, தன் நண்பர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பினார்.

இதை கவனித்த, போத்தாரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண், இது குறித்து, உடனடியாக, விமான பணிப் பெண்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள், விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதைஅடுத்து, அங்கு வந்த, சி.ஐ.எஸ்.எப்., எனப்டும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், போத்தாரை கைது செய்தனர்.

அவர்களிடம், தான் விளையாட்டிற்காக அப்படி செய்ததாகவும், தன்னை விடுவிக்கும்படியும், போத்தார் கெஞ்சினார். இதையடுத்து, போத்தாரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அதிகாரிகள், அவரிடம் இருந்த, அடையாள ஆவணங்களை ஆராய்ந்த பின், அவரை விடுவித்தனர்.இதையடுத்து, அந்த விமானம், தாமதமாக புறப்பட்டு சென்றது. போத்தாரும், அதே விமானத்தில், மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...