Tuesday, November 27, 2018

'ஹெல்மெட்' அணியாத 3,400 பேருக்கு அபராதம்

Added : நவ 27, 2018 02:44


சென்னை: 'ஹெல்மெட்' அணியாமல், டூ - வீலரில் பயணித்த, 3,430 பேருக்கு, கடந்த ஒரு வாரத்தில் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அதிகரிக்கும் விபத்துகளை குறைக்க, போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.அந்த வகையில், இந்த மாதம், 12ம் தேதியில் இருந்து, 18ம் தேதி வரை, ஹெல்மெட் அணியாமல் பயணித்த, 3,430 பேருக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.அவர்களில், 2,677 பேர், டிரைவர்; 753 பேர் பின்னால் அமர்ந்திருந்தவர்கள்.அதே போல, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய, 1,081 பேர்; அதிக எடையுடன் வாகனம் ஓட்டிய, 668 பேர்; சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிய, 228 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், அதிக ஆட்களை ஏற்றிய, 562 பேர்; அதிவேகத்தில் பயணித்த, 324 பேர்; சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய, 1,320 பேர்; சிக்னலை மீறிய, 167 பேரிடமும், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.மேலும், டேஞ்சர் லைட் இல்லாத, 292; வெள்ளை, மஞ்சள் ரிப்ௌக்டர் ஒட்டாத, 440; பாதுகாப்பு கம்பிகள் இல்லாத, 99 வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...