Friday, November 16, 2018


'கஜா' புயல் சின்னம் எதிரொலி புதுச்சேரிக்கு விமான சேவை ரத்து

Added : நவ 16, 2018 04:52

புதுச்சேரி:'கஜா' புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரியில் விமான சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.ஐதராபாத், பெங்களூ ரில் இருந்து, புதுச்சேரிக்கு நாள்தோறும் 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், வங்கக் கடலில் 'கஜா' புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை மற்றும் பலத்த காற்று வீசும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வானிலை மாற்றம் காரணமாக, புதுச்சேரிக்கு இயக்கப்படும் இரண்டு விமானங்களும் நேற்று காலை ரத்து செய்யப்பட்டன.விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது குறித்து, புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கு செல்ல இருந்த 57 பயணிகள், பெங்களுருக்கு செல்ல இருந்த 47 பயணி களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024