Sunday, February 3, 2019

ம.பி., தலைமை செயலகத்தில் மீண்டும், 'வந்தே மாதரம்'

Added : பிப் 03, 2019 00:21


போபால்:மத்திய பிரதேச மாநில தலைமை செயலகத்தில், 'வந்தே மாதரம்' தேச பக்திப் பாடல் பாடும் நடைமுறை, நேற்று முன்தினம் மீண்டும் துவங்கப்பட்டது.

ம.பி.,யில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இம் மாநிலத்தில், முந்தைய, பா.ஜ., ஆட்சி யின் போது, ஒவ்வொரு மாதமும், முதல் வேலை நாளில், மாநில தலைமை செயலகத்தில், வந்தே மாதரம் பாடல் பாடும் வழக்கத்தை, முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் செயல்படுத்தினார்.முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., அரசு, ஆட்சிக்கு வந்த பின், வந்தே மாதரம்பாடுவது நிறுத்தப்பட்டது.
இதற்கு, பா.ஜ., கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தலைமை செயலக வளாகத்தில், முன்னாள் முதல்வர்சவுகான் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், வந்தே மாதரம் பாடலை பாடினர்.இந்நிலையில், பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து, மந்திராலயம் எனப்படும் தலைமை செயலகம் வரை, முதல்வர் கமல்நாத் தலைமையில், அமைச்சர்கள், தலைமைசெயலக ஊழியர்கள், பொது மக்கள் ஊர்வலமாகவந்தனர்.

தலைமை செயலக வளாகத்தில் உள்ள பூங்காவில், அனைவரும் வந்தே மாதரம் பாடலை பாடினர். போலீஸ் வாத்தியகுழுவினர், தேசபக்தி பாடல்களை இசைத்தனர்.

No comments:

Post a Comment

Changes in varsities Act opposed

Changes in varsities Act opposed The Hindu Bureau MADURAI 13.09.2026 The members of the Madurai Kamaraj, Manonmaniam Sundaranar, Mother Tere...