Sunday, February 3, 2019

ஓட்டாக மாறுமா, 1,000 ரூபாய் பரிசு?

ரேஷன் கடைகளில் அ.தி.மு.க., 'சர்வே'


பொங்கல் பரிசுடன், 1,000 ரூபாய் வழங்கியது, லோக்சபா தேர்தலில், ஓட்டுக்களாக மாறுமா என, ரேஷன் கடைகளில், அ.தி.மு.க.,வினர், ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர்.






விரைவில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதனுடன், தமிழகத்தில், 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான், அ.தி.மு.க., ஆட்சி நீடிக்கும். இதனால், எப்படியும் வெற்றி பெற, அக்கட்சி திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா, முதல்வராக இருந்த போது, கடலோர மாவட்டங்களை, 2004ல், சுனாமி தாக்கியது. சென்னையில்,

2005ல், கன மழையும் பெய்தது. இதையடுத்து, இடத்தில் கூட வெற்றிரேஷன் கார்டுதாரருக்கு, தலா, 4,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களுடன், 4,000 ரூபாய் ரொக்கம் என, மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் தான், 2004 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஒரு பெறாத நிலையிலும், அக்கட்சி, 2006 சட்டசபை தேர்தலில், 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில், வெற்றி பெற்று, பலமான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
ஆட்சியை பிடித்த, தி.மு.க.,விற்கு, 'மெஜாரிட்டி' கிடைக்கவில்லை.தற்போது, ஜெயலலிதா மறைவாலும், தினகரன் கட்சியாலும், அ.தி.மு.க., ஓட்டுகள் குறைந்து உள்ளன. இது, எதிர்க்கட்சியான, தி.மு.க.,விற்கு சாதகமாக அமையும் என, தெரிகிறது. அதை தடுக்க, 2006 தேர்தலை போல், தோல்வி கிடைத்தாலும், படுதோல்வி அடையக் கூடாது என, அ.தி.மு.க., கருதுகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், தமிழக அரசு, திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காகவே, யாரும் எதிர்பார்க்காத வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும், பொங்கல் பரிசுடன், 1,000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இதன் விளைவாக, முதல்வர்,

இ.பி.எஸ்., பெயர், அனைத்து மக்களையும் சென்றடைந்து உள்ளது.
அது, ஓட்டுகளாக மாறுமா என்பதற்காக, ரேஷன் கடைக்கு வரும் மக்களிடம், 'லோக்சபா தேர்தலில், யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?' என, கேட்குமாறு, ஊழியர்களிடம், கூட்டுறவு சங்க நிர்வாக பொறுப்புகளில் உள்ள ஆளுங்கட்சியினர் கூறியுள்ளனர். அதன்படி, அவர்களும், மக்களிடம் பேச்சு கொடுத்து, அவர்களின் மன நிலையை கேட்கின்றனர். கருத்து தெரிவித்த பலரும், 'எங்கள் பணத்தை எங்களுக்கு, அரசு கொடுத்தது; யாருக்கு ஓட்டு என்பதை, தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்' என்று தான் கூறியுள்ளனர். இதனால், மக்கள் மனநிலையை அறிவதில், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Changes in varsities Act opposed

Changes in varsities Act opposed The Hindu Bureau MADURAI 13.09.2026 The members of the Madurai Kamaraj, Manonmaniam Sundaranar, Mother Tere...