Friday, March 26, 2021

சென்னை:மதுரை, கோவை, புதுச்சேரி, நாகர்கோவில் உட்பட, 11 நகரங்கள் இடையே, 18 எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Added : மார் 26, 2021 02:47

சென்னை:மதுரை, கோவை, புதுச்சேரி, நாகர்கோவில் உட்பட, 11 நகரங்கள் இடையே, 18 எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, வரும், ஏப்., 10 முதல், சனிக்கிழமைகளில் காலை, 6:05 மணிக்கு இயக்கப்படும் கரீப்ரத் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 10:30 மணிக்கு, ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்றடையும்

* ஹஜ்ரத் நிஜாமுதீனில் இருந்து, ஏப்.,12 முதல், திங்கள்கிழமைகளில், மாலை, 3:35 மணியில் இருந்து, மறுநாள் இரவு, 8:50 மணிக்கு, சென்னை எம்.ஜி.ஆர்.,சென்ட்ரல் வந்தடையும்

* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, ஏப்., 10 முதல், செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களில், தினமும் காலை, 7:10 மணிக்கு இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ், மதியம், 2:15 மணிக்கு கோவை சென்றடையும்

* கோவையில் இருந்து, மாலை, 3:05 மணிக்கு புறப்பட்டு இரவு, 10:15 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்தடையும்l கோவையில் இருந்து, ஏப்., 10 முதல், புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் அதிகாலை, 5:45 மணிக்கு இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ், நண்பகல், 12:40 மணிக்கு கர்நாடகா மாநிலம், பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் சென்றடையும்

* கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து, மதியம், 2:15 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:00 மணிக்கு கோவை சென்றடையும்

* மதுரையில் இருந்து, ஏப்., 20 முதல், ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில், அதிகாலை, 12:50 மணிக்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், சென்னை எழும்பூர் வழியாக, இரண்டாவது நாள் மாலை, 6:35 மணிக்கு டில்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்றடையும்

*ஹஜ்ரத் நிஜாமுதீனில் இருந்து, ஏப்., 22 முதல் செவ்வாய், வியாழக்கிழமைகளில் அதிகாலை, 5:20 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூன்றாவது நாள் அதிகாலை, 12:05 மணிக்கு மதுரை சென்றடையும்

* மதுரையில் இருந்து, ஏப்., 17 முதல், வியாழன், சனிக்கிழமைகளில் இரவு, 8:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்

* எழும்பூரில் இருந்து, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இரவு,10:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:10 மணிக்கு மதுரை சென்றடையும்

*கோவையில் இருந்து, ஏப்.,16 முதல் வெள்ளிக்கிழமைகளில், இரவு, 11:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:20 மணிக்கு, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்தடையும்

*சென்ட்ரலில் இருந்து, ஏப்., 17 முதல், சனிக்கிழமைகளில் இரவு, 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:30 மணிக்கு கோவை சென்றடையும்

* புதுச்சேரியில் இருந்து, ஏப்., 15 முதல், வியாழக்கிழமைகளில், மாலை, 4:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 10:00 மணிக்கு கர்நாடகா மாநிலம், மங்களூர் சென்ட்ரல் சென்றடையும்

*மங்களூர் சென்ட்ரலில் இருந்து, ஏப்., 16 முதல் வெள்ளிக்கிழமைகளில, மாலை, 4:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 9:50 மணிக்கு புதுச்சேரி சென்றடையும்

* புதுச்சேரியில் இருந்து, ஏப்., 11 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில், பகல், 12:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள்அதிகாலை, 3:10 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்

* கன்னியாகுமரியில் இருந்து. ஏப்., 12ல் முதல் திங்கள்கிழமைகளில், மதியம், 1:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:40 மணிக்கு புதுச்சேரி சென்றடையும்

* தாம்பரத்தில் இருந்து, ஏப்., 26 முதல், தினமும் இரவு, 11:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 2:20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்

* நாகர்கோவிலில் இருந்து, ஏப்., 27 முதல் தினமும் மாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை, 7:25 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.இந்த ரயில்களுக்கு முன்பதிவு இன்று துவங்குகிறது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...