Saturday, March 3, 2018

பெரியார் பல்கலையில் அடிதடி, மல்லுக்கட்டு : பேராசிரியர்களின் மோதலால் மாணவர்கள் அதிர்ச்சி

Added : மார் 03, 2018 03:31

சேலம்: சேலம் பெரியார் பல்கலை, இயற்பியல் துறை பேராசிரியர்கள், செருப்பால் அடித்துக்கொண்டு, ஆபாச வார்த்தைகளில், சண்டையிட்ட சம்பவம், மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரியார் பல்கலையில், கடந்த, 2004 டிசம்பரில், குமாரதாஸ், 2005 மார்ச்சில், அன்பரசன் ஆகியோர், இணை பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தனர். அன்பரசன் ஏற்கனவே அரசு நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்ததால், 2009 ஜனவரியில், பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். பெரியார் பல்கலையில், இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன் சேர்ந்திருந்தாலும், 2010 டிசம்பரில் தான், குமாரதாஸ் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு இயற்பியல் துறை தலைவராக இருந்த கிருஷ்ணகுமாருக்கு, டீன் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால், குமாரதாஸ் துறைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இதில், உடன்பாடில்லாத அன்பரசன், பல்வேறு புகார்களை கூறி வந்தார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. துறை வருகை பதிவேட்டில், அன்பரசன் தனது சீனியாரிட்டியை குறிப்பிட்டு, கையொப்பம் இட்டுள்ளார். இதுபோல் இனி செய்யக்கூடாது என, குமாரதாஸ் மெயில் அனுப்பியுள்ளார். இதுகுறித்து பேசுவதற்காக, குமாரதாஸ் அறைக்குள், நேற்று காலை, அன்பரசன் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலில் முடிந்துள்ளது. ஆபாச அர்ச்சனை, செருப்பில் தாக்கிக்கொண்டது என அப்பகுதி களேபரமானது. இதையடுத்து, குமாரதாஸ், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்பரசன் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளார். இச்சம்பவம், பெரியார் பல்கலை மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மீது, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்த்துறையிலும் இதே பிரச்னை பெரியார் பல்கலையில், 2004ல், இணை பேராசிரியர்களாக, பெரியசாமி, தமிழ்மாறன் ஆகியோர் பணியில் சேர்ந்தனர். பெரியசாமி, போலி அனுபவ சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தமிழ்த்துறை தலைவர், மாதையன், 2013 ல் ஓய்வு பெற்றார். அப்பணியிடத்துக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. அதில், புதிதாக விண்ணப்பித்து, பேராசிரியராக பெரியசாமி பணியில் சேர்ந்தார். இதனால், தொடர் பணிக்காலத்தை கணக்கிட்டு, தனக்கு துறைத்தலைவர் பொறுப்பு வழங்க வேண்டும் என, தமிழ்மாறன் கோரி வருகிறார். ஆனால், தொடர்ந்து பெரியசாமியே தலைவராக இருந்து வருகிறார்.

அச்சம் ஏன்? கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக, பலரும் தொடர்ந்து துறைத்தலைவராக இருந்து வருகின்றனர். பல்கலை மானியக்குழு விதிமுறைப்படி, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, துறைத்தலைவர் பொறுப்பு, சுழற்சி முறையில் வழங்கியிருப்பின், இப்பிரச்னை எழுந்திருக்காது. துறைத்தலைவர் பொறுப்பு, வேறு ஒருவருக்கு போனால், தங்கள் ஊழல், முறைகேடு, தகுதியின்மை வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில், பல துறைத்தலைவர்கள் இதை தடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Issuing of driving licence and registration certificate online begins across State

  Issuing of driving licence and registration certificate online begins across State The move comes after Chief Minister C. Joseph Vijay’s a...