Saturday, March 3, 2018

விமானம் ரத்தால் பயணியர் அவதி

Added : மார் 03, 2018 03:25

சென்னை: கொச்சிக்கு இயக்கப்படும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர். ஜெர்மன் நாட்டின், பிராங்க்பர்ட் நகரிலிருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:10க்கு, சென்னை வந்து, மீண்டும், அதிகாலை, 1:50 மணிக்கு, பிராங்க்பார்ட் செல்லும், லுாப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவை, நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது.பயணியருக்கு முன்பே, தகவல் கொடுக்கப்பட்டதால், அவர்கள், விமான நிலையம் வந்து காத்திருக்கவில்லை சென்னையில் இருந்து, கொச்சிக்கு, நேற்று காலை, 7:40, பிற்பகல், 2:05 மற்றும் இரவு, 8:40 மணிக்கு இயக்கப்பட வேண்டிய, 'கோ ஏர்' விமான சேவைகள், நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணியர்சிரமத்திற்கு ஆளாகினர்.

No comments:

Post a Comment

Issuing of driving licence and registration certificate online begins across State

  Issuing of driving licence and registration certificate online begins across State The move comes after Chief Minister C. Joseph Vijay’s a...