Saturday, March 3, 2018

சாட்டை சுழற்றுகிறார் கவர்னர் புரோஹித்;துணைவேந்தர்களுக்கு அவசர அழைப்பு 

03.03.2018

உயர்கல்வித் துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பது குறித்து, கவர்னர் மாளிகையில், இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், பல்கலை துணைவேந்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், துணைவேந்தர் நியமனம், கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் நியமனம், பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்குவது, பிஎச்.டி., வழங்குவது உட்பட, பல்வேறு பணிகளில் சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. இதை வெளிச்சமிட்டு காட்டுவது போல்,


கோவை பாரதியார் பல்கலையில், பேராசிரியர் பணிக்கு, தலா, 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக பேரம் பேசிய விவகாரம், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல்கலை துணைவேந்தர் கணபதி, கையும் களவுமாக பிடிபட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, பாரதியார் பல்கலை அதிகாரிகள் மற்றும் உயர்கல்வி அதிகாரிகளை அழைத்து, ஒரு மாதத்திற்குப் பின், கவர்னர் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், பல்கலைகளின் வேந்தரான கவர்னர், பன்வாரிலால் புரோஹித், பல்கலைகளின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு, அவசர ஆலோசனை கூட்டத்தை அறிவித்துள்ளார். கவர்னர் மாளிகையின் தர்பார் அரங்கில், இன்று காலை, 10:30 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில், 20 பல்கலைகளின் பிரதிநிதிகள், பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில், ஊழல், முறைகேடுகளை களைந்து, தரமான உயர்கல்வி நிறுவனங்களாக மாற்ற, துணைவேந்தர்களுக்கு கவர்னர் உத்தரவிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பல்கலைகளின் ஓராண்டு நடவடிக்கை குறித்த, கோப்புகளை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Issuing of driving licence and registration certificate online begins across State

  Issuing of driving licence and registration certificate online begins across State The move comes after Chief Minister C. Joseph Vijay’s a...