Thursday, January 17, 2019


வடலூரில் 21ம் தேதி தைப்பூச ஜோதி தரிசன விழா

Added : ஜன 16, 2019 22:24

வடலுார்: வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 148வது தைப்பூச ஜோதி தரிசன விழா, 21ம் தேதி நடக்கிறது.கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா, விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, 148வது தைப்பூச ஜோதி தரிசன விழா, 21ம் தேதி நடைபெறுகிறது.

விழாவையொட்டி, 20ம் தேதி காலை, 5:00 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவற் பாராயணம், 7:30 மணிக்கு தருமசாலை, வள்ளலார் பிறந்த மருதுார், வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்கக் கொடியேற்றுதல் நடைபெறும். காலை, 10:00 மணிக்கு பார்வதிபுரம் கிராமவாசிகள் சார்பில், ஞானசபையில் சன்மார்க்க கொடியேற்றம், இரவு, 7:00 மணிக்கு திரு அருட்பா கருத்தரங்கம் நடைபெறும்.தொடர்ந்து, 21ம் தேதி புதன்கிழமை தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி, காலை, 6:00 மணி, 10:00 மணி, மதியம், 1:00 மணி, இரவு, 7:00 மணி, 10:00 மணி; மறுநாள், 22ம் தேதி காலை, 5:30 மணிக்கு என, ஆறு காலங்கள் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.பின், 11:00 மணிக்கு தருமசாலை பிரசங்கமேடையில் சன்மார்க்கக் கருத்தரங்கம் நடைபெறும். அதை தொடர்ந்து, 23ல் வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெறும்.அன்று காலை, 10:00 மணிக்கு வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்படும். வள்ளலார் நடந்து சென்ற பாதை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வள்ளலார் சித்தி பெற்ற அறை முன் வைத்து மாலை, 6:00 மணி வரை திருஅறை தரிசனம் நடைபெறும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.09.2024