Wednesday, January 9, 2019


திருவாரூருக்கும் ரூ.1,000 உண்டு

Added : ஜன 08, 2019 23:43


சென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அம்மாவட்டத்தில் உள்ள, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசு வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அம்மாவட்டம் தவிர, மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க, அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் உள்ள, 3.92 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும், தலா, 1,000 ரூபாய், பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Cockroach in AI Delhi-NY flight meal

Cockroach in AI Delhi-NY flight meal  New Delhi : A passenger flying Air India from Delhi to New York complained about a cockroach in her me...