Wednesday, April 10, 2019

மாரியம்மன் கோயிலில் பூக்குழி

Added : ஏப் 10, 2019 05:20


ராஜபாளையம்:ராஜபாளையம் முகவூர் தெற்கு தெரு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பூக்குழி விழா நடந்தது.

கடந்த 6 ம்தேதி தொடங்கிய இவ்விழாவில் மறுநாள் அதிகாலை 4 :00மணிக்கு பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. 3ம் நாள் மாலை அக்கினி சட்டி, ஆயிரங்கண் பானை, முளைப்பாரி, பூப்பெட்டி வீதி உலா நடைபெற்றது.விழாவின் சிறப்பு நிகழ்ச்சியானபூக்குழி விழாவை முன்னிட்டுநேற்று காலை 10:00 மணிக்கு மாரியம்மன் குடை சப்பரத்தில் வீதி உலா வர 11:00 மணிக்கு பூவளர்க்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு காளியம்மன் பூஞ்சப்பரத்தில் உலா வந்ததை தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பூக்குழி விழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.10.2024