Monday, August 5, 2019

ஆய்வு சான்றுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் மேலுார் கல்லுாரி பேராசிரியர் கைது

Added : ஆக 04, 2019 23:13

நாகர்கோவில் : மாணவியின் முனைவர் பட்ட ஆய்வு கட்டுரை சான்றுக்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை மேலுார் அரசு கலைக்கல்லுாரி வரலாற்று பேராசிரியர் ரசல்ராஜ் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மார்த்தாண்டத்தை சேர்ந்த ரசல்ராஜ் மேலுார் கல்லுாரியில் பணிபுரிகிறார். கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்சந்தை பகுதியை சேர்ந்த மாணவி கிளாடிஸ் புளோரா இவரிடம் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்து வந்தார்.ஆய்வுக் கட்டுரையை கிளாடிஸ் புளோரா சமர்ப்பிக்க ரசல்ராஜ் சான்று அளிக்க வேண்டும். இதற்கு ரூ. 50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத கிளாடிஸ் புளோரா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி நேற்று பகல் 11:00 மணிக்கு மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் இருந்த ரசல்ராஜிடம் ரூ.25 ஆயிரத்தை கிளாடிஸ் புளோரா கொடுத்தார். இதை கண்காணித்த டி.எஸ்.பி., மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

MBBS/BDS application portal to reopen

MBBS/BDS application portal to reopen  TIMES NEWS NETWORK 26.07.2026 Chennai : The Tamil Nadu Selection Committee will reopen the online app...