Thursday, April 20, 2017

50 சதவீத ஒதுக்கீடு கோரி டாக்டர்கள் போராட்டம்

பதிவு செய்த நாள்19ஏப்  2017   22:51

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 1,225 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், 'இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள்படி, இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை கோரி, டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், சென்னை, டி.எம்.எஸ்., வளாகம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை உட்பட பல இடங்களில், நேற்று தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இன்று முதல், காலையில், இரண்டு மணி நேரம், புறநோயாளிகள் பிரிவில், பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...