Saturday, April 22, 2017


மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு கிடைக்க தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2017-04-22@ 00:48:46




சென்னை : தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமாக எவ்வித நடவடிக்கை யும் எடுக்காமல் அதிமுக அரசு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. கடிதம் எழுதி விட்டால் தன் கடமை முடிந்து விட்டது என்று கருதி, முதல்வரும் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் படும் இன்னல்கள் பற்றி பாராமுகமாக இருக்கிறார். அதிமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு நீட் தேர்விலி ருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாவிற்கு இதுவரை அதிமுக அரசால் சட்ட அந்தஸ்தை பெற முடிய வில்லை.

தமிழக சட்டமன்ற மசோதாவிற்கு உரிய அழுத்தம் கொடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்பு தலை பெறவில்லை என்பதால் மருத்துவ மேற்படிப்பில் சேர வேண்டிய அரசு மருத்துவர் கள் இன்றைக்கு வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளில் அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள் சேர்ந்து படிக் கும் வாய்ப்பு பறிபோயிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பால் இன்றைக்கு பல்வேறு பிரிவுகளில் மருத்துவ மேற்படிப்பிற்கான 1225 இடங்களில் சேருவதற்கான வாய்ப்பு கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும், மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் உருவாகி விட்டது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்பு தலை அதிமுக அரசு குறித்த காலத்தில் பெற்றிருந்தால் இப்படியொரு அவல நிலைமை ஏற்பட்டிருக்காது.

அனைவருக்கும் தரமான சிகிச்சையை உறுதி செய்ய வேண்டிய அரசு இப்படி அலட்சிய மனப்பான்மையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்பட்டு, அரசு மருத்துவர்களின் நலனைக் காக்கத் தவறி, அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் முழுப்பயனும் சென்றடையாத வண்ணம் செய்து விட்டது. அதிமுக அரசு உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களை சேர்க்கவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகள் இதில் மிக முக்கியம் என்பதால் அரசு மருத்து வர்களின் போராட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி, அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடை க்க அதிமுக அரசு அதி வேகமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 06.07.2026